என் மலர்
நீங்கள் தேடியது "Navjot Singh Sidhu"
- கடந்த ஆண்டு மே 20-ந் தேதி, பாட்டியாலாவில் உள்ள கோர்ட்டில் சரண் அடைந்தார்.
- இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரர் நவ்ஜோத்சிங் சித்து, காங்கிரசில் பணியாற்றி வருகிறார்.
சண்டிகார்:
இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரர் நவ்ஜோத்சிங் சித்து, காங்கிரசில் பணியாற்றி வருகிறார்.
அவர் 1988-ம் ஆண்டு சாலையில் ஏற்பட்ட தகராறில் 65 வயது முதியவரை தாக்கியதில், முதியவர் உயிரிழந்தார். இதன் மேல்முறையீட்டு வழக்கில், சித்துவுக்கு சுப்ரீம் கோர்ட்டு ஓராண்டு சிறைத்தண்டனை விதித்தது.
அதைத்தொடர்ந்து, அவர் கடந்த ஆண்டு மே 20-ந் தேதி, பாட்டியாலாவில் உள்ள கோர்ட்டில் சரண் அடைந்தார். பிறகு, பாட்டியாலா சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறையில் நன்னடத்தையுடன் செயல்படுபவர்களுக்கு தண்டனை குறைப்பு அளிக்க பஞ்சாப் சிறைத்துறை விதிமுறை வகை செய்கிறது. அதன்படி, சித்து தண்டனை குறைப்பு பெற்று இன்று (சனிக்கிழமை) பாட்டியாலா சிறையில் இருந்து விடுவிக்கப்படுவார் என்று அவருடைய வக்கீல் வர்மா தெரிவித்தார்.
- சாலையில் காரை நிறுத்துவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் குர்ணாம்சிங் என்பவரை நவ்ஜோத்சிங் சித்து தாக்கினார்.
- கடந்த ஆண்டு மே மாதம் சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு வழங்கியது.
பாட்டியாலா:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பஞ்சாப் மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவருமான நவ்ஜோத் சிங் கடந்த 1988-ம் ஆண்டு கொலை வழக்கில் சிக்கினார்.
சாலையில் காரை நிறுத்துவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் குர்ணாம்சிங் என்பவரை நவ்ஜோத்சிங் சித்து தாக்கினார். படுகாயம் அடைந்த குர்ணாம்சிங் உயிரிழந்தார். இந்த வழக்கில் நவ்ஜோத்சிங் சித்துக்கு பஞ்சாப் ஐகோர்ட்டு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சித்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார்.
பல ஆண்டுகளாக விசாரணை நடந்து வந்த நிலையில், கடந்த ஆண்டு மே மாதம் சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு வழங்கியது. இதில் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஒரு ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து உத்தர விட்டது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்ட பாட்டியாலா சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கிடையே தண்டனை காலம் வருகிற மே 16-ந் தேதி வரை உள்ள நிலையில் நன்னடத்தை காரணமாக முன்கூட்டியே நவ்ஜோத்சிங் சிறையில் இருந்து விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
- டெக்னாலஜியை பயன்படுத்தி தவறு செய்யும் போது, ஏன் டெக்னாலஜியை பயன்படுத்த வேண்டும்.
- டெக்னாலஜியை பயன்படுத்துவதை ஸ்டாப் பண்ண வேண்டும்.
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 221 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி 201 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் டெல்லி கேபிடல்ஸ் 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு நடுவர்கள் கொடுத்த தவறான முடிவால் தான் ராஜஸ்தான் அணி தோல்வி தழுவியது என ரசிகர்கள் மட்டுமின்றி முன்னாள் வீரர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சஞ்சு சாம்சனுக்கு அவுட் கிடையாது. நடுவர்கள் தவறான முடிவு எடுத்துள்ளனர் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
கேட்ச் பிடிக்கும் போது பீல்டர் பவுண்டரி லைனை 2 முறை தொட்டுவிட்டார். ரிப்ளேவில் சில வினாடிகள் மட்டுமே பார்த்துவிட்டு மூன்றாவது நடுவர் முடிவை எடுத்துவிட்டார். பல கோணங்களில் பீல்டரின் கால் பவுண்டரி ரோப்பை தொட்டதா இல்லையா என்பதை தெளிவாக பார்த்திருக்க வேண்டும்.
டெக்னாலஜியை பயன்படுத்தி தவறு செய்யும் போது, ஏன் டெக்னாலஜியை பயன்படுத்த வேண்டும். டெக்னாலஜியை பயன்படுத்துவதை ஸ்டாப் பண்ண வேண்டும்.
- இவரது கருத்துக்கள் தற்போது சர்ச்சையாகி இருக்கிறது.
- அவருக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.
இந்திய அணியின் முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு சத்தீஸ்கர் சிவில் சொசைட்டி ரூ. 850 கோடி இழப்பீடு கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. முன்னதாக நவ்ஜோத் சிங் சித்து தனது மனைவி நவ்ஜோத் கவுர் சித்து கடின உணவு முறையை பின்பற்றி 40 நாட்களுக்குள் 4-ம் நிலை புற்றுநோயை சரி செய்ய முடிந்தது என்று கூறியிருந்தார். இவரது கருத்துக்கள் தற்போது சர்ச்சையாகி இருக்கிறது.
நவ்ஜோத் சிங் சித்து கூறியது உண்மைக்கு முரணான தகவல் என்று கூறும் சத்தீஸ்கர் சிவில் சொசைட்டி சார்பில் அவருக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.
இது குறித்து சொசைட்டி உறுப்பினரும் மருத்துவருமான குல்தீப் சோலங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், நவ்ஜோத் சித்து தனது மனைவி 4-ஆம் நிலை புற்றுநோயில் இருந்து அலோபதி மருந்துகளின்றி அற்புதமாக குணமடைந்துவிட்டதாக கூறுவது சந்தேகத்திற்குரியது மற்றும் தவறானது.
இது புற்றுநோயுடன் போராடுபவர்களிடம் அலோபதி மருந்துகள் மீதுள்ள நம்பிக்கையை இழக்க செய்து, அவர்களின் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும். சித்து தெரிவித்த கருத்துக்களை தொடர்ந்து அவர் மீது சொசைட்டி சார்பில் ரூ. 850 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அந்த நோட்டீசில் அவர் கூறும் கருத்துக்களை நிரூபிக்கும் மருத்துவ ஆதாரங்களை ஒருவார காலத்திற்குள் சமர்பிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. மேலும், அவர் தான் கூறிய கருத்துக்களுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும். இவற்றுக்கு பதில் அளிக்காத பட்சத்தில் ரூ. 850 கோடி இழப்பீடு கொடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
"எலுமிச்சை நீர், துளசி இலை, மஞ்சள், வேப்பிலை உள்ளிட்டவைகளை எடுத்துக் கொண்டு வந்தால் புற்றுநோயில் இருந்து விடுபடலாம் என்று கூறும் உங்களது கணவரின் புற்றுநோய் சிகிச்சை முறையை ஆதரிக்கின்றீர்களா? என்று நோட்டீசில் நவ்ஜோத் கவுரிடம் கேட்டுள்ளது.
இமாச்சலப்பிரதேசத்தில் வரும் 19ம் தேதி பாராளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதையடுத்து பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் முக்கிய தலைவர்கள், பிரமுகர்கள் தேர்தல் பிரசாரம், செய்தியாளர் சந்திப்பு போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்றனர்.

நான் பிரதமர் நரேந்திர மோடியிடம் ஒன்றை மட்டும் கூறிக் கொள்ள விரும்புகிறேன். மோடி, ரபேல் ஒப்பந்தத்தில் ஊழல் செய்தாரா இல்லையா என்பது குறித்து நாட்டின் எந்த பகுதிக்கு வேண்டுமானாலும் சென்று அவருடன் வாக்குவாதம் செய்ய நான் தயார். இதில் ஒரு வேளை நான் தோற்றால் அரசியலை விட்டு விலகவும் தயார்.
கடந்த 2014ம் ஆண்டு கங்கையின் புதல்வனாக மோடி வந்தார். இப்போது ரபேல் ஏஜென்டாக வெளியேற போகிறார். ஆனால், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சிறந்தவர் மற்றும் உயர்வானவர். அவர் பீரங்கி, நான் ஏகே 47.
இவ்வாறு அவர் கூறினார்.
பஞ்சாப் மாநில மந்திரியும், காங்கிரஸ் நட்சத்திர பேச்சாளருமான நவ்ஜோத் சிங் சித்து சர்ச்சைக்கு பெயர் போனவர். கடந்த மாதம் தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதால் அவருக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
நேற்று முன்தினம் இந்தூரில் பேட்டி அளித்த சித்து, ‘ திருமணம் முடிந்த மணப்பெண் மற்றவர்கள் தன்னை உற்றுநோக்க வேண்டும் என்பதற்காக கை வளையலை குலுக்கி சைகை செய்வார். இதேபோல் பிரதமர் மோடியும் மற்றவர்கள் தன்னை கவனிக்கும்படி பேசி வருகிறார்’ என்றார்.
சித்துவின் இந்த சர்ச்சைக்குரிய பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. பெண்கள் குறித்து தவறாக கருத்து தெரிவித்த சித்து அதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என மத்திய பிரதேச பா.ஜனதா மகளிர் அணி தலைவி இந்து கோஸ்வாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘ இந்திய பெண்கள் தற்போது எல்லா துறைகளிலும் கால்பதித்து சாதித்து வருகின்றனர். ஆனால் சித்துவோ இதுபற்றி கவனத்தில் கொள்ளாமல் பெண்களுக்கு எதிரான மனநிலையில் உள்ளார். இந்த கருத்து தொடர்பாக சித்துவும், காங்கிரஸ் கட்சியும் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்றார்.
பஞ்சாப் மாநில மந்திரியும், காங்கிரஸ் நட்சத்திர பேச்சாளருமான நவ்ஜோத் சிங் சித்து மத்திய பிரதேசத்தில் கடந்த மாதம் 29-ந்தேதி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது, பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக பா.ஜ.க. தரப்பில் தேர்தல் கமிஷனில் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தேர்தல் கமிஷன் அவரது பேச்சுக்கு விளக்கம் கேட்டு, 24 மணி நேரத்துக்குள் பதிலளிக்க வேண்டும் என சித்துவுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இந்தநிலையில் இந்தூரில் நேற்று சித்து அளித்த பேட்டியில், திருமணம் முடிந்ததும் மணப்பெண் தன்னை மற்றவர்கள் உற்று நோக்க வேண்டும் என்ற எண்ணத்தில், கை வளையலை குலுக்கி சைகை செய்வார்.
அதுபோல பிரதமரும் தனது பேச்சை மற்றவர்கள் கவனிக்க வேண்டும் என்பதுபோல பேசி வருகிறார் என்று மீண்டும் பிரதமர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார்.
அரியானா மாநிலம் ரோத்தக் பாராளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரான தீபேந்தர் ஹூடாவை ஆதரித்து பஞ்சாப் மாநில மந்திரி நஜ்ஜோத் சிங் சித்து பிரசாரம் செய்தார். நேற்று முன்தினம் ரோத்தக்கில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் சித்து பேசியபோது, மத்திய பாஜக அரசை தாக்கி பேசினார்.

சித்து மீது தாக்குதல் நடப்பது இது முதல் முறையல்ல. கடந்த வெள்ளிக்கிழமையன்று அமேதியில் அவர் பிரசாரத்திற்காக சென்றபோது, அவருடன் வந்த வாகனங்கள் மீது தக்காளிகளை வீசி ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது. #Sidhu #LokSabhaElections
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத்சிங் சித்து. இவர் பா.ஜனதா கட்சியில் எம்.பி. ஆக இருந்தார். அதில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்தார். தற்போது இவர் பஞ்சாப் மாநிலத்தில் மந்திரியாக இருக்கிறார்.

இன்று காலை 10 மணி முதல் அறிக்கைகள் வெளியிட கூடாது. பிரசாரம் எதுவும் செய்யக் கூடாது என தேர்தல் கமிஷன் அறிவுறுத்தியுள்ளது. #Loksabhaelections2019 #NavjotSinghSidhu
சத்தீஷ்கார் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது குறித்து பஞ்சாப் மாநில மந்திரியும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்து தனியார் செய்தி சேனலுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மோடி அலை ஓய்ந்துவிட்டது. மோடி அலை என்பது சோடா பாட்டிலில் உள்ள வாயு போன்றது. பாட்டிலை திறந்த 2 அல்லது 3 நிமிடங்களில் அது ஆவியாகிவிடும். அதுபோல் தான் மோடி அலை தற்போது முடிவுக்கு வந்துவிட்டது.
இவ்வாறு அவர் கூறினார். #NavjotSinghSidhu #SodaBottle #Modi
ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் பிரசாரம் செய்ய சென்றிருந்த பஞ்சாப் மந்திரியும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத்சிங் சித்து ராம் கஞ்ச் என்ற இடத்தில் நடந்த கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.
அப்போது அவர் பிரதமர் நரேந்திர மோடியையும் உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தையும் மிகவும் தரக்குறைவாக விமர்சித்து பேசினார்.

சித்துவின் பேச்சு உத்தரபிரதேசத்தில் உள்ள யோகி ஆதித்யநாத் ஆதரவாளர்களிடம் கடும் கோபத்தை ஏற்படுத்தியது. சித்துவின் கொடும்பாவியை எரித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள்.

அந்த இந்து அமைப்பின் ஆக்ரா நகர செயலாளர் தருண்சிங் கூறுகையில், “சித்து ஆக்ராவுக்கு வந்தால் அவர் தலையை நானே வெட்டுவேன்” என்றார். #NavjotSinghSidhu #YogiAdityanath #PMModi






