search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    நாணயங்களை வாங்க மறுக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை
    X

    கோப்பு படம்.

    நாணயங்களை வாங்க மறுக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை

    • மக்கள் வாழ்வுரிமை இயக்கம் வலியுறுத்தல்
    • நாணயங்கள் செல்லாது என பொதுமக்களை அலைக்கழித்து வருகின்றன.

    புதுச்சேரி:

    மக்கள் வாழ்வுரிமை இயக்க செயலாளர் ஜெகன் நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்திய ரிசர்வ் வங்கி ரூ 1, 2 , 5 ,10 மற்றும் 20 நாணயங்களை அடித்து சந்தைகளில் புழக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்திய நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் மேற்கண்ட சில்லறை நாணயங்கள் அனைத்து வணிக நிறுவனங்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு அதற்கான பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

    புதுவை மாநிலத்தில் 10ரூபாய், 20ரூபாய் நாணயங்கள் வணிக நிறுவனங்கள் மற்றும் அரசு சார்பு நிறுவனங்கள் என எந்த ஒரு கடைகளிலும் மேற்கண்ட நாணயங்கள் பொது மக்களிடம் வாங்காமல் மறுத்து வருகின்றன.

    இந்த நாணயங்கள் செல்லாது என பொதுமக்களை அலைக்கழித்து வருகின்றன.

    எனவே புதுவை அரசும், மாவட்ட நிர்வாகமும், வணிகவரித்துறையும், ரூ10 மற்றும் ரூ20 நா ணயங்கள் அனை த்தையும் பெற வேண்டும் என கடை மற்றும் அனை த்து வணிக நிறுவன ங்களுக்கும், குறிப்பாணை அனுப்ப வேண்டும். நாணயங்களை வாங்க மறுக்கும் தனி நபர் மற்றும் வணிக நிறுவனங்கள் மீது கடும் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×