search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Divorce case"

    • கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
    • பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்த அகில்ராஜை போலீசார் கைது செய்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கொட்டாரக்கரா பகுதியைச் சேர்ந்தவர் ஐஸ்வர்யா (வயது 26).

    இவரது கணவர் அகில்ராஜ். இவர்களுக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 4 வயதில் பெண் குழந்தை உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

    இதனால் 2 பேரும் பிரிந்து வாழ்ந்தனர். இந்த நிலையில் விவாகரத்து கேட்டு கோர்ட்டில் வழக்கும் தொடர்ந்தனர். கொட்டாரக்கரா ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு விசாரணைக்காக அகில்ராஜ் மற்றும் ஐஸ்வர்யா ஆஜரானார்கள்.

    அதன்பிறகு ஐஸ்வர்யா கோர்ட்டில் இருந்து ஸ்கூட்டரில், வீட்டுக்குப் புறப்பட்டார். அப்போது பின் தொடர்ந்த அகில்ராஜ், தனது மோட்டார் சைக்கிளால், ஸ்கூட்டரை இடித்துள்ளார்.

    இதனால் ஐஸ்வர்யா தனது வாகனத்தை நிறுத்தி விட்டு கீழே இறங்கினார். அப்போது அவர் மீது பெப்பர் ஸ்பிரேயை பயன்படுத்தி பெட்ரோலை அகில்ராஜ் ஊற்றியுள்ளார். பின்னர் அவர் மீது லைட்டரை பற்ற வைத்து நெருப்பை வீசினார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ஐஸ்வர்யா, அபயக்குரல் எழுப்பியவாறு சாலையில் ஓடினார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர்,விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர். இருப்பினும் தோள் மற்றும் கழுத்து பகுதியில் ஐஸ்வர்யாவுக்கு தீக்காயம் ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து வந்து அகில்ராஜை கைது செய்தனர். சம்பவ இடத்தில் இருந்து பெட்ரோல் பாட்டில் மற்றும் பொருட்களை போலீசார் கைப்பற்றினர்.

    ஜீவனாம்சம் வழக்கில் கணவர் ரூ.25 ஆயிரத்தை சில்லரையாக மூட்டையில் கட்டி நீதிமன்றத்திற்கு வந்து மனைவியிடம் வழங்கினார். அதை ஏற்க அவரது மனைவி மறுத்து விட்டார். #Divorcecase
    சண்டிகார்:

    பஞ்சாப்-அரியானா மாநில ஐகோர்ட்டில் வக்கீலாக பணிபுரிபவருக்கும் அவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்கிறார்கள். இருவரும் விவாகரத்து கேட்டு கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளனர்.

    இந்த நிலையில் வக்கீலின் மனைவி ஜீவனாம்சம் கேட்டு மனுதாக்கல் செய்து இருந்தார். இதையடுத்து மனைவிக்கு மாதம் ரூ.25 ஆயிரம் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது.

    இதை எதிர்த்து வக்கீல் ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள், மாதம் ரூ.25 ஆயிரம் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்ற கீழ்க்கோர்ட்டு உத்தரவை உறுதி செய்ததுடன், ஏற்கனவே வழங்காமல் இருந்த 2 மாதத்துக்கான ஜீவனாம்சத்தையும் சேர்த்து மொத்தம் ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

    இதையடுத்து வக்கீல் ரூ.25 ஆயிரத்தை சில்லரையாக மூட்டையில் கட்டி கோர்ட்டுக்கு வந்து மனைவியிடம் வழங்கினார். அதை ஏற்க அவரது மனைவி மறுத்து விட்டார். தனக்கு அவசரமாக பணம் தேவைப்படும் நிலையில் இப்படி சில்லரையாக தருவதும் ஒரு வகையில் கொடுமைதான், சில்லரையை வங்கியில் வாங்க மறுக்கிறார்கள் என்றார்.

    உடனே வக்கீல் இந்த சில்லரைகளை எனது ஜூனியர்களை விட்டு எண்ணித் தரச்சொல்கிறேன். பின்னர் அதை ரூபாய் நோட்டுகளாக மாற்றித் தருகிறேன் என்றார். #Divorcecase
    விவாகரத்து வழக்கில் கோர்ட்டில் ஆஜரான மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவர் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    தேனி:

    தேனி பாரஸ்ட் ரோடு 5-வது தெருவை சேர்ந்த துரைப்பாண்டி மகள் ராஜபாலா (வயது27). இவருக்கும் தூத்துக்குடி மாவட்டம் திருவேங்கடம் பிள்ளைமார் தெருவை சேர்ந்த திருப்பதிராஜ் (36) என்பவருக்கும் கடந்த 7.9.2014-ந் தேதி திருமணம் நடந்தது.

    திருமணத்தின்போது 28 பவுன் நகை, ரொக்க பணம் மற்றும் சீர்வரிசைகள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. திருமணமான சில மாதங்களிலேயே அவர் அணிந்த அனைத்து நகைகளையும் திருப்பதி ராஜ் குடும்பத்தினர் பறித்து வைத்துக்கொண்டனர். மேலும் கூடுதல் நகை வாங்கி வரச்சொல்லி கொடுமைப்படுத்தி வந்தனர்.

    இதனால் ராஜபாலா தனது கணவரை விட்டு பிரிந்து தேனியில் உள்ள தனது தந்தை வீட்டுக்கு வந்து விட்டார். இதனையடுத்து சங்கரன்கோவில் சப்-கோர்ட்டில் விவாகரத்து கேட்டு கணவர் திருப்பதிராஜ் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த விசாரணையில் ராஜபாலா மற்றும் அவரது தந்தை ஆஜராகி கணவருக்கு எதிராக சாட்சியம் அளித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த திருப்பதிராஜ் குடும்பத்தினர் துரைப்பாண்டி வீட்டிற்கு வந்து இனிமேல் கோர்ட்டில் ஆஜராக வந்தால் கொலை செய்து விடுவதாக மிரட்டி சென்றனர். இது குறித்து தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம் புகார் அளிக்கப்பட்டது. அவரது உத்தரவின் பேரில் தேனி அனைத்து மகளிர் போலீசார் கொலை மிரட்டல் விடுத்த கணவர் திருப்பதிராஜ், மாமியார் சுப்புலட்சுமி, நாத்தனார் கனகவள்ளி உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    ×