என் மலர்
செய்திகள்

X
விவாகரத்து வழக்கில் கோர்ட்டில் ஆஜரான மனைவிக்கு கொலை மிரட்டல்
By
மாலை மலர்24 July 2018 4:58 PM IST (Updated: 24 July 2018 4:58 PM IST)

விவாகரத்து வழக்கில் கோர்ட்டில் ஆஜரான மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவர் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேனி:
தேனி பாரஸ்ட் ரோடு 5-வது தெருவை சேர்ந்த துரைப்பாண்டி மகள் ராஜபாலா (வயது27). இவருக்கும் தூத்துக்குடி மாவட்டம் திருவேங்கடம் பிள்ளைமார் தெருவை சேர்ந்த திருப்பதிராஜ் (36) என்பவருக்கும் கடந்த 7.9.2014-ந் தேதி திருமணம் நடந்தது.
திருமணத்தின்போது 28 பவுன் நகை, ரொக்க பணம் மற்றும் சீர்வரிசைகள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. திருமணமான சில மாதங்களிலேயே அவர் அணிந்த அனைத்து நகைகளையும் திருப்பதி ராஜ் குடும்பத்தினர் பறித்து வைத்துக்கொண்டனர். மேலும் கூடுதல் நகை வாங்கி வரச்சொல்லி கொடுமைப்படுத்தி வந்தனர்.
இதனால் ராஜபாலா தனது கணவரை விட்டு பிரிந்து தேனியில் உள்ள தனது தந்தை வீட்டுக்கு வந்து விட்டார். இதனையடுத்து சங்கரன்கோவில் சப்-கோர்ட்டில் விவாகரத்து கேட்டு கணவர் திருப்பதிராஜ் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த விசாரணையில் ராஜபாலா மற்றும் அவரது தந்தை ஆஜராகி கணவருக்கு எதிராக சாட்சியம் அளித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த திருப்பதிராஜ் குடும்பத்தினர் துரைப்பாண்டி வீட்டிற்கு வந்து இனிமேல் கோர்ட்டில் ஆஜராக வந்தால் கொலை செய்து விடுவதாக மிரட்டி சென்றனர். இது குறித்து தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம் புகார் அளிக்கப்பட்டது. அவரது உத்தரவின் பேரில் தேனி அனைத்து மகளிர் போலீசார் கொலை மிரட்டல் விடுத்த கணவர் திருப்பதிராஜ், மாமியார் சுப்புலட்சுமி, நாத்தனார் கனகவள்ளி உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
தேனி பாரஸ்ட் ரோடு 5-வது தெருவை சேர்ந்த துரைப்பாண்டி மகள் ராஜபாலா (வயது27). இவருக்கும் தூத்துக்குடி மாவட்டம் திருவேங்கடம் பிள்ளைமார் தெருவை சேர்ந்த திருப்பதிராஜ் (36) என்பவருக்கும் கடந்த 7.9.2014-ந் தேதி திருமணம் நடந்தது.
திருமணத்தின்போது 28 பவுன் நகை, ரொக்க பணம் மற்றும் சீர்வரிசைகள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. திருமணமான சில மாதங்களிலேயே அவர் அணிந்த அனைத்து நகைகளையும் திருப்பதி ராஜ் குடும்பத்தினர் பறித்து வைத்துக்கொண்டனர். மேலும் கூடுதல் நகை வாங்கி வரச்சொல்லி கொடுமைப்படுத்தி வந்தனர்.
இதனால் ராஜபாலா தனது கணவரை விட்டு பிரிந்து தேனியில் உள்ள தனது தந்தை வீட்டுக்கு வந்து விட்டார். இதனையடுத்து சங்கரன்கோவில் சப்-கோர்ட்டில் விவாகரத்து கேட்டு கணவர் திருப்பதிராஜ் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த விசாரணையில் ராஜபாலா மற்றும் அவரது தந்தை ஆஜராகி கணவருக்கு எதிராக சாட்சியம் அளித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த திருப்பதிராஜ் குடும்பத்தினர் துரைப்பாண்டி வீட்டிற்கு வந்து இனிமேல் கோர்ட்டில் ஆஜராக வந்தால் கொலை செய்து விடுவதாக மிரட்டி சென்றனர். இது குறித்து தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம் புகார் அளிக்கப்பட்டது. அவரது உத்தரவின் பேரில் தேனி அனைத்து மகளிர் போலீசார் கொலை மிரட்டல் விடுத்த கணவர் திருப்பதிராஜ், மாமியார் சுப்புலட்சுமி, நாத்தனார் கனகவள்ளி உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
Next Story
×
X