என் மலர்
நீங்கள் தேடியது "murder Threat"
- இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் கொலை மிரட்டல் பதிவு வெளியிட்டுள்ளதாக புகார்.
- நாதக ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டி நிலவும் என பதிவிடப்பட்டது.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு நேற்று கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.
சீமானுக்கு விடுத்த கொலை மிரட்டல் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை சார்பில் சென்னை மாநகர காவல் ஆணையருக்கு புகார் கடிதம் அனுப்பப்பட்டது.
அதில், தேனியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் சீமானுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவு வெளியிட்டுள்ளதாக புகார் எழுந்தது.
அந்த இன்ஸ்டா ஸ்டோரி பதிவில், சீமானின் தலை விரைவில் துண்டிக்கப்படும், விரைவில் நாதக ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டி நிலவும் என பதிவிடப்பட்டது.
இந்த நிலையில், சீமானுக்கு கொலை மிரட்டல் விடுத்த சந்தோஷ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
- இளைஞர் பாசறை சார்பில் சென்னை மாநகர காவல் ஆணையருக்கு புகார் கடிதம்.
- விரைவில் நாதக ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டி நிலவும் என கொலை மிரட்டல்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சீமானுக்கு விடுத்த கொலை மிரட்டல் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை சார்பில் சென்னை மாநகர காவல் ஆணையருக்கு புகார் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அதில், தேனியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் சீமானுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவு வெளியிட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
அந்த இன்ஸ்டா ஸ்டோரி பதிவில், சீமானின் தலை விரைவில் துண்டிக்கப்படும், விரைவில் நாதக ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டி நிலவும் என பதிவிட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
- பணம் வாங்கியவர்கள் கொலை மிரட்டல் விடுத்தனர்.
- சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எனது பணத்தை திருப்பி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஈரோடு:
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஈரோடு சாஸ்திரி நகர் 3-வது விதியைச் சேர்ந்த முகமது அலி ஜின்னா (46) என்பவர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.
அப்போது அவர் தான் மறைத்து வைத்திருந்த தண்ணீர் பாட்டிலில் இருந்த பெட்ரோலை எடுத்து தனது உடலில் ஊற்றி தீ குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பெட்ரோல் பாட்டிலை அவரிடம் இருந்து பிடுங்கி தண்ணீரை எடுத்து அவர் மீது பீய்ச்சி அடித்தனர். பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது முகமது அலி ஜின்னா கூறியதாவது:-
எனக்கு திருமணம் ஆகி ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். நான் திருப்பூரில் கடந்த 12 வருடமாக கார்மெண்ட்ஸ் நடத்தி வருகிறேன். இந்நிலையில் எனக்கு அறிமுகமான 3 பேர் என்னிடம் துணிகளை வாங்கினர் அதற்கு உண்டான பணம் கொடுக்க வில்லை. மேலும் தொழில் சம்பந்தமாக அவர்கள் என்னிடம் பணம் கேட்டனர். அதில் ஒருவர் 15 லட்சமும், மற்ற 2 பேர் ரூ.3.80 பணமும் தராமல் ஏமாற்றி வந்தனர்.
பலமுறை அவர்களிடம் பணம் கேட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. இது குறித்து திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தேன். மேலும் முதலமைச்சர் தனிப்பிரிவுக்கும் மனு அனுப்பினேன். ஆனாலும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மேலும் பணம் வாங்கியவர்கள் கொலை மிரட்டல் விடுத்தனர். இதனால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எனது பணத்தை திருப்பி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
- மண் கடத்தும் கும்பலுக்கும், பேராச்சி செல்விக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகேஷ், செல்லத்துரையை கைது செய்தனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அருகே உள்ள சீவலப்பேரியில் கிராம நிர்வாக அதிகாரியாக பேராச்சி செல்வி (வயது 35) என்பவர் வேலை பார்த்து வருகிறார்.
இவர் நேற்று பணியில் இருந்தபோது அங்குள்ள மறுகால்தலை பரும்பு பகுதியில் அனுமதியின்றி சிலர் சரள் மண் எடுப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
உடனே அவர் வருவாய்த்துறை ஊழியர்களுடன் அங்கு சென்றார். அப்போது மண் கடத்தும் கும்பலுக்கும், பேராச்சி செல்விக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.
ஒரு கட்டத்தில் மண் கடத்தல் கும்பல் வி.ஏ.ஓ.வை கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்து அங்கிருந்து செல்லுமாறு எச்சரித்துள்ளனர். இதுகுறித்து பேராச்சி செல்வி சீவலப்பேரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
தகவலறிந்து சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அங்கு மண் அள்ளிக்கொண்டிருந்த கும்பலை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் சீவலப்பேரியை சேர்ந்த செல்லத்துரை மகன் முருகேஷ் (30), அவினாப்பேரியை சேர்ந்த உலகநாதன் மகன் செல்லத்துரை (32) என்பது தெரிய வந்தது. மேலும் அவர்கள் அனுமதியின்றி ஜே.சி.பி. எந்திரம் மூலம் டிப்பர் லாரியில் மண் கடத்த முயன்றதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து ஜே.சி.பி. மற்றும் டிப்பர் லாரியை போலீசார் பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.
இச்சம்பவம் குறித்து கிராம நிர்வாக அதிகாரி பேராச்சி செல்வி கொடுத்த புகாரின்பேரில் கொலை மிரட்டல் மற்றும் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகேஷ், செல்லத்துரையை கைது செய்தனர்.
- ஜீஷன் சித்திக் அலுவலகத்திற்கு கொலை மிரட்டல் வந்துள்ளது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் 20 வயது வாலிபர் கைது.
பாலிவுட் நடிகரான சல்மான் கான் மற்றும் சமீபத்தில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட பாபா சித்திக்கின் மகன் ஜீஷான் சித்திக் ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்த நபரை தேடிவந்தனர். இந்த நிலையில் மும்பை போலீசார். நொய்டாவின் செக்டார் 39-ல் இருந்து மிரட்டல் விடுத்த முகமது தையப் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அவரிடம் தீவிர விசாரணை நடத்திய நிலையில், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க போலீசார் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
கடந்த வெள்ளிக்கிழமை மாலை பந்த்ராவில் உள்ள ஜீஷான் சித்திக் அலுவலகத்திற்கு, தாங்கள் கேட்கும் பணம் தரவில்லை என்றால் கொலை செய்யப்படுவாரக்ள் என சல்மான் கானுக்கு மிரட்டல் வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து அலுவலகத்தில் உள்ள ஸ்டாஃப் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பின்னர் மிரட்டல் விடுத்த நபர் முகமது தையப் என போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பிரதமர் மோடியை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
- குறுஞ்செய்தி ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் இருந்து அனுப்பப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மகாராஷ்டிரா மாநிலம், மும்பை போலீஸ் போக்குவரத்து பிரிவின் உதவி எண்ணிற்கு நேற்று வாட்ஸ்ஆப் மூலம் பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது.
அதில், 2 ஐ.எஸ்.ஐ. பயங்கரவாதிகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், பிரதமர் மோடியை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இதைதொடர்ந்து, போலீசார் உடனடியாக குறுஞ்செய்தி அனுப்பியவரை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த குறுஞ்செய்தி ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் இருந்து அனுப்பப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட நபரை பிடிப்பதற்காக தனிப்படை போலீசார் ராஜஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த குறுஞ்செய்தியை அனுப்பியவர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம், அல்லது மதுபோதையில் இருந்து இருக்கலாம் என சந்தேகிப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் சிலரை முக்கிய பிரமுகர்கள் சிலர், கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொடுமைப்படுத்தியதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் நாம் தமிழர் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயலாளரும், வக்கீலுமான அருள் பெரம்பலூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ., ஒருவர் சம்பந்தப்பட்டிருப்பதால் மேல் நடவடிக்கை எடுப்பதில் போலீசார் தயக்கம் காட்டுவதாக வக்கீல் அருள் புகார் தெரிவித்திருந்தார். மேலும் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், புகார் தொடர்பாக தன்னுடன் செல்போனில் 6 நிமிடம் 48 வினாடி பேசிய ஆடியோவினை நிருபர்கள் முன்னிலையில் வக்கீல் அருள் வெளியிட்டார்.இதனால் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் வக்கீல் அருள் நேற்று பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், பெரம்பலூரில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பந்தமாக பாதிக்கப்பட்ட பெண், என்னுடன் செல்போனில் பேசிய ஆடியோவை வெளியிட்டதில் இருந்து, அந்த சம்பவத்தில் தொடர்புடைய அ.தி.மு.க. பிரமுகர் தூண்டுதலின் பேரில், அரசு வக்கீல் மற்றும் சிலர் என்னிடம் கொடுத்த புகாரை வாபஸ் பெற வேண்டும். இல்லையென்றால் என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டி வருகின்றனர். எனவே எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும், என்று கூறியிருந்தார்.
இதற்கிடையே அ.தி.மு.க. வக்கீல் அணி சார்பில் பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரில், வக்கீல் ஒருவர் அ.தி.மு.க. முக்கிய பிரமுகர்களை பற்றி எந்தவித அடிப்படை ஆதாரங்களும் இன்றி ஆடியோ ஒன்றை வெளியிட்டு, தவறான செய்தியையும் பரப்பி வருகிறார். மேலும் கட்சிக்கு அவப்பெயரையும், அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து செய்தியினை அவர் வெளியிட்டு வருகிறார். அதனை தடுத்து நிறுத்துவதோடு மட்டுமின்றி, அந்த வக்கீல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறப்பட்டிருந்தது.
இந்தநிலையில் பெரம்பலூர் பாலியல் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்ககோரி வருகிற 4-ந்தேதி பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த பெரம்பலூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் முடிவு செய்தனர். மேலும் பல்வேறு அமைப்புகளும் போராட்டம் நடத்த உள்ளன. இதனால் பொள்ளாச்சி சம்பவம் போன்று பெரம்பலூர் பாலியல் சம்பவமும் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என தெரிகிறது.
பாகூர்:
பாகூர் அருகே குருவிநத்தம் புறாக்குளம் கோவில் தெருவை சேர்ந்தவர் சங்கர் (வயது29). கட்டிட தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பெயிண்டர் ஆறுமுகம் (31) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. கடந்த தீபாவளி பண்டிகையின் போது இவர்கள் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த ஆறுமுகம் கத்தியால் சங்கரை வெட்டினார்.
இதுதொடர்பாக பாகூர் போலீசார் விசாரணை நடத்தி ஆறுமுகம் மீது வழக்குபதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த நிலையில் வழக்கில் சாட்சி சொல்ல கோர்ட்டுக்கு வரக்கூடாது என சங்கரை மிரட்ட ஆறுமுகம் எண்ணினார்.
அதன்படி நேற்று சங்கரிடம் ஆறுமுகம் மீண்டும் தகராறு செய்துள்ளார். மேலும் தடியால் தாக்கி கோர்ட்டில் சாட்சி சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் சங்கரை ஆறுமுகம் மிரட்டினார்.
இதுகுறித்து சங்கர் பாகூர் போலீசில் புகார் செய்தார். போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் சபரி வழக்குபதிவு செய்து ஆறுமுகத்தை கைது செய்தார்.
வில்லியனூர் அருகே அரியூர்பேட்- ஆனந்தபுரம் ரோட்டை சேர்ந்தவர் சிவா (வயது 37). இவர், அதே பகுதியில் உள்ள தனியார் மதுக்கடையில் பொறுப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.
நேற்று இவர் வேலை பார்க்கும் மதுக்கடைக்கு கண்டமங்கலம் அருகே நவமால்மருதூரை சேர்ந்த மைக்கேல் (வயது 31), ஜெயக்குமார் (30). மற்றும் சூர்யா ஆகியோர் மது குடிக்க வந்தனர். அவர்கள் மதுவாங்கி குடித்து விட்டு அதற்கான தொகையை கொடுக்க மறுத்தனர். இதனை சிவா தட்டிக் கேட்டார்.
இதில் இரு தரப்பினருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த மைக்கேல், ஜெயக்குமார், சூர்யா ஆகிய 3 பேரும் சேர்ந்து சிவாவை சரமாரியாக தாக்கினர். மேலும் கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு அங்கிருந்து சென்றனர்.
இதுகுறித்து சிவா வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்த குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மைக்கேல், ஜெயக்குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். சூர்யாவை தொடர்ந்து தேடி வருகிறார்கள். #tamilnews






