search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண்"

    • திடீரென அந்த வாலிபர் அவ்வழியே செல்பவர்களிடம் தகராறில் ஈடுபட்டு மிரட்டினார்.
    • கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிறையில் இருந்து வெளியே வந்த அவர் மீண்டும் வீடு புகுந்த ரகளையில் ஈடுபட்டு போலீசாரிடம் சிக்கிக்கொண்டார்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அருகே உள்ள ஏகனாம் பேட்டை செல்லியம்மன் நகர் பகுதியில் கஞ்சா போதையில் வாலிபர் ஒருவர் கையில் பட்டா கத்தியுடன் சுற்றினார். திடீரென அந்த வாலிபர் அவ்வழியே செல்பவர்களிடம் தகராறில் ஈடுபட்டு மிரட்டினார். இதனை கண்டு அங்கிருந்தவர்கள் ஓட்டம் பிடித்தனர்.

    இதற்கிடையே கஞ்சா வாலிபர் கையில் பட்டாகத்தியை வீசியபடி அங்குள்ள கலைவாணி என்பவரது வீட்டுக்குள் நுழைந்து மிரட்டினார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த கலைவாணி தனது குழந்தைகளை வெளியே அழைத்து வந்து அந்த கஞ்சா வாலிபரை வீட்டுக்குள் வைத்து கதவை வெளிப்பக்கம் பூட்டி சிறைவைத்தார்.

    இதனால் கோபம் அடைந்த போதை வாலிபர் வீட்டுக்குள் இருந்த பொருட்களை அடித்து உடைத்து சேதப்படுத்தினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து வாலாஜாபாத் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து வீட்டுக்குள் பூட்டி சிறைவைக்கப்பட்ட கஞ்சா போதை வாலிபரை மீட்டு, அவரிடம் இருந்த பட்டா கத்தியை பறிமுதல் செய்தனர்.

    நிற்க கூட முடியாத அளவுக்கு அவர் கஞ்சா போதையில் இருந்ததால் விசாரிக்க முடியாமல் போலீசார் திணறினர். விசாரணையில் அவர், வெண்குடி கிராமத்தைச் சேர்ந்த அஜித் என்பது தெரியவந்தது

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிறையில் இருந்து வெளியே வந்த அவர் மீண்டும் வீடு புகுந்த ரகளையில் ஈடுபட்டு போலீசாரிடம் சிக்கிக்கொண்டார். அவரை போலீசார் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ராஜபாளையம் அருகே கோர்ட்டில் சாட்சி சொல்ல வற்புறுத்தி பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    விருதுநகர்

    ராஜபாளையம் அருகே செட்டியாப்பட்டியை சேர்ந்தவர் சுப்புலட்சுமி (வயது 57). இவரது பேத்தியுடன் அதே பகுதியை சேர்ந்த கங்காதரன் 
    (வயது 30) என்பவர் பழகியுள்ளார். பின்னர் இருவரும் காதலித்துள்ளனர். அப்போது கங்காதரன் சுப்புலட்சுமியின் பேத்தியுடன் உல்லாசமாக இருந்ததில் அவர் கர்ப்பிணி ஆகிவிட்டார்.

    இதுபற்றி கடந்த 2021-ம் ஆண்டு தளவாய்புரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் கங்காதரனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். 

    இந்த நிலையில் ஜாமீனில் வெளியே வந்த கங்காதரன் சுப்புலட்சுமியை சந்தித்து உங்களது பேத்தியை திருமணம் செய்து கொள்கிறேன். எனக்கு சாதகமாக நீங்கள் சாட்சி சொல்ல வேண்டும். இதற்கு உடன்பாடாவிட்டால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார். 

    இதுபற்றி சுப்புலட்சுமி தளவாய்புரம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கங்காதரனை தேடி வருகின்றனர்.

    திருப்பரங்குன்றத்தில் குறைதீர் முகாமில் துணை மேயர் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்.
    திருப்பரங்குன்றம்

    மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட திருப்பரங்குன்றம் மேற்கு மண்டல அலுவ லகத்தில் மக்கள் குறைதீர் முகாம் இன்று நடைபெற்றது.

    மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமை வகித்தார். துணை மேயர் நாகராஜன், மேற்கு மண்டல தலைவர் சுவிதா விமல் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட 20-வார்டு பகுதிகளைச் சேர்ந்த அவனியாபுரம், ஹார்விபட்டி, திருநகர், வில்லாபுரம், மீனாட்சி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொது மக்கள் மனுக்கள் அளி த்தனர். இந்த நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர்கள் உசிலை சிவா, சிவசக்தி ரமேஷ், இந்திரா காந்தி, கருப்பசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியைத் தொடர்ந்து துணைமேயர் வெளியே புறப்பட முயன்ற போது திருப்பரங்குன்றம் பகுதியை சேர்ந்த மணி கண்டன் மனைவி பிரேமலதா என்பவர் கையில் மண்எண்ணை கேனுடன் வந்து தீக்குளிக்க முயன்றார் . உடனடியாக அருகிலிருந்த போலீசார் அந்த பெண்ணிடமிருந்து மண்ணெண்ணெய் கேனை பறித்து அவரை காப்பாற்றினர். 

    இதுகுறித்து துணைமேயர் நாகராஜன் சம்பந்தப்பட்ட பெண்ணிடம் கேட்டபோது, அவர் கடந்த 40 ஆண்டுகளாக திருப்பரங்குன்றம் வெயில் உகந்த அம்மன் கோயில் வாசலில் பூ கடை வைத்திரு ப்பதாகவும், தற்போது அந்த கோயில் நிர்வாகம் தனது கடையை காலி செய்த தாகவும் இதனால் தனது குடும்பம் வறுமையில் வாடுவதாகவும் அவர் தெரிவித்தார்.  

    உடனடியாக சம்பந்த ப்பட்ட அதிகாரிகளை அழைத்த துணைமேயர் நாகராஜன் சம்பந்தப்பட்ட வெயிலுகந்த அம்மன் கோவில் நிர்வாகத்திற்கும், திருப்பரங்குன்றம் கோவில் நிர்வாகத்துக்கும் இடையே நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ளது. 

    எனவே வழக்கு முடியும் வரை இந்த பெண்மணி அந்த பகுதியில் கடை வைக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார். இதையடுத்து அந்தப் பெண் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதுதொடர்பாக திருப்பரங்குன்றம் போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். 

    மாநகராட்சியின் மேற்கு மண்டல மக்கள் குறைதீர் கூட்டத்தில் திடீரென பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    வேலகவுண்டன்பட்டி அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டன் பட்டி அருகே இளநகர் அருந்ததியர் தெருவைச் சேர்ந்தவர் சுந்தரம் (வயது 50) .பெயிண்டர். இவருக்கு 2 மகள்கள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.  

    இதில் மூத்த மகள் நளினியை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மாசக்கல்பட்டி இளங்கோநகர் பகுதியை சேர்ந்த ரகுபதி என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். 2 ஆண்டுகளாக இவர்களுக்கு குழந்தைகள் இல்லை .இந்நிலையில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் நாளினி இருந்து உள்ளார். 

    கடந்த வாரம் ஞாயிற்றுக்கி–ழமை சுந்தரத்தின் உறவினர் பெருமாள் இறந்ததின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக நளினியும், ரகுபதியும் சொந்த ஊரில் இருந்து வந்துள்ளனர். நேற்று முன்தினம் சுந்தரத்தின் மனைவி வேலைக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்து பார்த்தபோது கதவு உள்பக்கமாக பூட்டு போடப்பட்டு இருந்தது.  

    கதவை தட்டியும் திறக்காததால்  சந்தேகம் அடைந்த தாய், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அங்கு மகள் நளினி சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதை கண்டு கதறி அழுதார்.  அக்கம்பக்கத்தினரை அழைத்து நளினி உடலை மீட்டனர். 

     இதுகுறித்து சுந்தரம் வேலகவுண்டம்பட்டி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் குமரேசன் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்து தற்கொலை செய்து கொண்டது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
    நாமக்கல் மாவட்டம், புதுச்சத்தில் காரில் வந்து முகவரி கேட்பது போல் நடித்து மூதாட்டியிடம் நகை, பணம் பறித்தனர்.
    எருமப்பட்டி:

    நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் அடுத்த களங்காணி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கந்தாயி (வயது 77).

    இவர் நேற்று முன்தினம் மாலை வீட்டின் முன் கட்டிலில் அமர்ந்திருந்தார். அப்போது அவரது வீட்டின் முன்பு கார் ஒன்று வந்து நின்றது. அதில் இருந்து இறங்கிய 35 வயது மதிக்கத்தக்க பெண், கந்தாயியிடம் முகவரி கேட்டு பேச்சு கொடுத்தார். 

    அப்போது அந்த பெண், நான் ஏற்கனவே உங்களை பார்த்த போது, நீங்கள் நகை அணிந்திருந்தீர்கள், அதைப் போலவே நானும் செய்ய வேண்டும். எனவே அந்த நகையை காண்பியுங்கள் என கேட்டுள்ளார்.
     
    இதையடுத்து கந்தாயி, வீட்டிற்குள் அந்த பெண்ணை அழைத்து சென்று, அலமாரியில் வைத்திருந்த நகையை எடுத்து, அந்த பெண்ணிடம் காண்பித்தார்.

    பின்னர் இருவரும் வீட்டின் வெளியே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அந்த பெண் தண்ணீர் கேட்டதால், வீட்டிற்குள் சென்று தண்ணீர் எடுத்துக்கொண்டு வந்த கந்தாயி, அந்த பெண் அங்கு இல்லாததால் திடுக்கிட்டார். 

    பின்னர், வீட்டிற்குள் சென்று அலமாரியில் பார்த்த போது, அங்கு வைத்திருந்த 4½ பவுன் செயின் மற்றும்  35 ஆயிரம் பணத்தை அந்த பெண் திருடிச்சென்றது தெரிந்தது.

    இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசில் அவர் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, பணம் மற்றும் நகையை திருடிச்சென்ற பெண் குறித்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குமாரபாளையத்தில் மோட்டார்சைக்கிள் மோதி பெண் படுகாயம் அடைந்தார்.
    குமாரபாளையம்:

    குமாரபாளையம் நாராயண நகரில் வசிப்பவர் நாகம்மா(வயது 55),கூலி தொழிலாளி. இவர் கே.ஓ.என் தியேட்டர் பஸ் நிறுத்தம் பகுதியில் சாலையை  கடந்தார். 

    அப்போது வேகமாக வந்த மோட்டார்சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் நாகம்மா பலத்த காயமடைந்தார். இதைய–டுத்து அவர் சிகிச்சைக்காக குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். 

    இது குறித்து வழக்குப்பதிவு செய்த குமாரபாளையம் போலீசார், மோட்டார்சைக்கிளில் வந்த வட்டமலை பகுதியை சேர்ந்த ராஜா  என்பவரை கைது செய்தனர். 
    சிவகங்கை அருகே உள்ள பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றபள்ளி மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள கீழ மேல்குடி கிராமத்தில் 42 வயது பெண் வசித்து  வருகிறார். இவர் கடந்த 12 வருடங்களாக  கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். 

    நேற்று இரவு வீட்டில் அந்த பெண் தனியாக   தூங்கி கொண்டிருந்த போது அதே ஊரைச் சேர்ந்த பிளஸ்-1  படிக்கும் 2 மாணவர்கள், 9-ம் வகுப்பு   மாணவன் ஆகியோர் வீட்டின் கதவை உடைத்து   அத்துமீறி நுழைந்து அந்தப் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றனர். மேலும் இது குறித்து வெளியேசொல்லக்கூடாது என்றும் மாணவர்கள் மிரட்டினர். 

    இதுகுறித்து அந்தப் பெண்  நேற்று மானாமதுரை காவல் நிலையத்தில்   புகார் செய்தார். அதன் பேரில் கீழமேல்குடி கிராமத்தைச் சேர்ந்த மேற்கண்ட 3பள்ளி மாணவர்கள் மீதும் மானாமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×