என் மலர்
நீங்கள் தேடியது "தற்கொலை முயற்சி"
- வழக்கமாக ரூ.1000 முதல் 1,500 வரை மின் கட்டணம் செலுத்திய நிலையில் தற்போது ரூ.8 ஆயிரம் மின்கட்டணம்.
- அதிகாரிகள் மின் கட்டணம் கண்டிப்பாக கட்டித்தான் ஆக வேண்டும் என்றனர்.
கோவில்பட்டி சங்கரலிங்கபுரத்தை சேர்ந்த 4-வது வார்டு தி.மு.க. கிளைச் செயலாளர் சபரி ராஜன். இவர் டீக்கடை நடத்தி வருகிறார். இவரது வீட்டின் கீழ்பகுதியில் இவரும், மேல் பகுதியில் இவரது மகளும் தனித்தனியாக வசித்து வருகின்றனர்.
இருவருக்கும் தனித்தனி மின் இணைப்பு இருந்த நிலையில் அதை கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரே மின் இணைப்பாக மின்வாரிய அதிகாரிகள் மாற்றி உள்ளனர். இதனால் வழக்கமாக செலுத்தும் கட்டணத்தைவிட அதிகமாக வந்து உள்ளது. இதனை மாற்ற வலியுறுத்தி சபரி ராஜன் ஆன்லைன் மூலமாக விண்ணப்பம் செய்துள்ளார். அதிகாரிகளும் ஆய்வு செய்து சென்றதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் இந்த மாதம் வீட்டுக்கு ரூ.8 ஆயிரம் மின் கட்டணம் வந்துள்ளது. வழக்கமாக ரூ.1000 முதல் 1,500 வரை மின் கட்டணம் செலுத்திய நிலையில் தற்போது ரூ.8 ஆயிரம் வந்து இருப்பது சபரிராஜனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தனது மகள் வெளியூர் சென்றுள்ளதால், மின்சாரம் பயன்படுத்தாத நிலையிலும் மின் கட்டணம் அதிகரித்து உள்ளதாகவும் , வழக்கம்போல இரு மின் இணைப்பு வழங்க ஆன்லைன் மூலமாக தேவையான ஆவணங்கள் அளித்திருப்பதாகவும், அதன் மீது எதுவும் நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் அலட்சியமாக இருப்பதாக சபரிராஜன் புகார் கூறினார்.
மேலும், டீக்கடை நடத்தி வரும் தன்னால் ரூ.8 ஆயிரம் மின்கட்டணம் செலுத்த முடியாத நிலை இருப்பதாக கூறி சபரிராஜன் இன்று காலை தனது மனைவியுடன் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தின் வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டார்.
அவரிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அதிகாரிகள் மின் கட்டணம் கண்டிப்பாக கட்டித்தான் ஆக வேண்டும். எங்களால் எதுவும் செய்ய முடியாது என்று கூறினர். இதைக்கேட்ட சபரி ராஜன் ஆவேசமடைந்து தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.
சம்பவ இடத்திற்கு கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் விரைந்து வந்து சபரி ராஜனிடம் இருந்து மண்ணெண்ணை கேனை பறித்ததோடு, அவர் மீது தண்ணீர் ஊற்றினர். பின்னர் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சாரதாம்மாள், லட்சுமணமூர்த்தி ஆகியோர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
- மீனவர்கள் உதவியோடு ஜோதி, தீபிகாவை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம், கே.ஆர்.பி. அணையில் குதித்து 4 பேர் தற்கொலைக்கு முயன்றனர். இதில் 2 பேர் பலியானார்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டம் கே.ஆர்.பி. அணையில் இன்று காலை சிறிய மதகுகள் அருகில் இருந்து 4 பேர் குதித்து தற்கொலைக்கு முயன்றனர். அவர்கள் ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியை சேர்ந்த சாரதாம்மாள் (வயது 75), அவரது மருமகன் லட்சுமணமூர்த்தி (50), மகள் ஜோதி (45), பேத்தி தீபிகா (20) என தெரியவந்தது.
மேலும் அவர்கள் குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இதில் சாரதாம்மாள், லட்சுமணமூர்த்தி ஆகியோர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்நிலையில் அருகில் இருந்த மீனவர்கள் உதவியோடு ஜோதி மற்றும் தீபிகாவை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்து கிருஷ்ணகிரி டேம் போலீசார் விரைந்து சென்று இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
- பெண்ணின் தந்தை திருக்கனூர் போலீஸ் நிலையத்தில் முறையிட்டார்.
- அதிர்ச்சியடைந்த போலீசார் உடனே அவரை மீட்டு புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி அருகே உள்ள கூனிச்சம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் கீர்த்திவாசன் (வயது30). இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்தார். இருவரும் செல்போனில் பேசி காதலை வளர்த்து வந்தனர். நாளடைவில் கீர்த்திவாசனின் நடவடிக்கை பிடிக்காததால் அந்த பெண் அவருடன் பேசுவதை நிறுத்திக் கொண்டார்.
இதற்கிடையே அந்த பெண்ணுக்கு வேறொருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த கீர்த்திவாசன் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளார். மேலும் ஆத்திரமடைந்த கீர்த்திவாசன் அப்பெண்ணின் புகைப்படத்தை வாட்ஸ்-அப்பில் அனுப்பியதாக கூறப்படுகிறது.
இதுபற்றி அப்பெண் தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். உடனே அந்த பெண்ணின் தந்தை திருக்கனூர் போலீஸ் நிலையத்தில் முறையிட்டார்.
இதையடுத்து கீர்த்திவாசனை அழைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது காதலியை தன்னுடன் சேர்த்து வைக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என கூறி மிரட்டினார்.
இதனிடையே போலீசார் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும்போதே கீர்த்திவாசன் தான் மறைத்து வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) எடுத்து குடித்து விட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அதிர்ச்சியடைந்த போலீசார் உடனே அவரை மீட்டு புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே கீர்த்திவாசன் கவலைக்கிடமாக இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது.
- மாநில போலீஸ் தலைமையகத்துக்கு தகவலை பரிமாற்றம் செய்து தற்கொலை முயற்சியை தடுக்க எச்சரிக்கை செய்தது.
- மாணவியின் பெற்றோரிடம் பேசிய போலீசார், மாணவிக்கு மருத்துவ கவுன்சிலிங் வழங்கினர்.
உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி அருகே உள்ள தேவானந்த்பூர் நயி பஸ்தி பகுதியை சேர்ந்த ஒரு மாணவி முதுநிலை இறுதியாண்டு படித்து வருகிறார். 21 வயதான அவருக்கு வீட்டில் திருமணம் நடத்த ஏற்பாடு செய்து வந்துள்ளனர். இதில் அவருக்கு உடன்பாடு இல்லை என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில் "குட்பை ஸாரி அம்மா அப்பா" என்று பதிவிட்டு இருந்தார். 16-ந்தேதி இரவில் 7.42 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த பதிவு குறித்து, இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான மெட்டாவுக்கு, தொழில்நுட்ப முறையில் எச்சரிக்கை அறிவிப்பு சென்றது. உடனே அந்த நிறுவனம், அந்த பதிவு குறித்து மாநில போலீஸ் தலைமையகத்துக்கு தகவலை பரிமாற்றம் செய்து தற்கொலை முயற்சியை தடுக்க எச்சரிக்கை செய்தது.

தகவல் கிடைத்ததும் போலீஸ் டிஜி.பி. அலுவலகம், சம்பந்தப்பட்ட பகுதி போலீஸ் நிலையத்துக்கு தகவலை கடத்தி இளம்பெண்ணின் தற்கொலை முயற்சியை தடுக்கும் நடவடிக்கையில் இறங்கினர்.
தகவல் வந்த 8 நிமிடங்களில் மில் பகுதி போலீஸ் நிலைய போலீசார் சம்பந்தப்பட்ட பெண்ணின் வீட்டை சென்றடைந்தனர். உடனே அந்த மாணவியின் பெற்றோரிடம் பேசிய போலீசார், மாணவிக்கு மருத்துவ கவுன்சிலிங் வழங்கினர்.
"மாணவியும், அவரது பெற்றோரும் இந்த விஷயத்தில் அமைதி காப்பதாகவும் சுமூக முடிவு எடுப்பதாகவும் தெரிவித்தனர். மாணவியின் தற்கொலை முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டது" என்று போலீசார் தெரிவித்தனர்.
கடந்த 12-ந் தேதி டியோரியா மாவட்டத்தில் ஒரு வாலிபரின் தற்கொலை முயற்சி இதே பாணியில் தடுத்து நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
- ஒரே நாளில் அடுத்தடுத்து 4 மாணவிகள் தற்கொலைக்கு முயன்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள பேளாரஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். கட்டிட மேஸ்திரி.
இவருக்கு 2 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இளைய மகள் காசிகா (வயது15) அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் 10-ம் வகுப்பு தேர்வு எழுதி விட்டு தேர்வு முடிவுக்காக காத்திருந்தார்.
நேற்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் காசிகா கணித பாடத்தில் தேர்ச்சி பெறாததால் 10-ம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்தார்.
இதனால் விரக்தியடைந்த காசிகா நேற்று மாலை வீட்டின் அருகே உள்ள மாட்டு கொட்டகையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவலறிந்த பாலக்கோடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை க்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே 10,11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் பழைய தருமபுரியை சேர்ந்த சின்னப்பன் மகள் ஸ்ரீமதி, ரமேஷ் மகள் தர்சினி, சக்திவேல் மகள் சாய்மதி, விஜயகுமார் மகள் விஜயதர்சினி ஆகியோர் தேர்வில் மதிப்பெண்கள் குறைவாக வாங்கியுள்ளனர்.
இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர்கள் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளனர். இதனால் அவர்களை பெற்றோர்கள் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
ஒரே நாளில் அடுத்தடுத்து 4 மாணவிகள் தற்கொலைக்கு முயன்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- கணவருடன் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக நீண்ட நாட்களாக மன அழுத்தத்தில் இருந்துள்ளதாக தகவல்.
- தற்கொலை முயற்சி தொடர்பாக விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.
சென்னை சாலிகிராம் பகுதியை சேர்ந்தவர் சின்னத்திரை துணை நடிகை அமுதா (வயது 28). இவர் பிரபல தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பாகும் பல்வேறு சீரியல்களில் நடித்துள்ளார். தற்போது 'கயல்' என்ற சீரியலில் நடித்து வருகிறார்.
சின்னத்திரை நடிகை அமுதா தன் கணவருடன் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக நீண்ட நாட்களாக மன அழுத்தத்தில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று வீட்டில் தனியாக இருந்த அமுதா கழிவறையை சுத்தம் செய்ய பயன்படுத்தும் திரவத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதை அறிந்த அமுதாவின் தோழி, அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.
இதற்கிடையே, அமுதா தற்கொலை முயற்சி செய்த விவகாரம் தொடர்பாக விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், அமுதாவின் கணவரிடமும் விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் கிடைத்துள்ளது. பிரபல சின்னத்திரை நடிகை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது சின்னத்திரை நடிகர், நடிகைகள் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- யோகேஷ் குமார் என்ற 18 வயது இளைஞர் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார்.
- பலத்த காயமடைந்த ரேகா தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் மகன் இறந்த துக்கம் தாளாமல் மருத்துவமனையின் 2 ஆவது மாடியில் இருந்து குதித்து தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
யோகேஷ் குமார் என்ற 18 வயது இளைஞர் உடல்நிலை பாதிக்கப்பட்டு அஜ்மீர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் 4 நாட்களாக சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார்.
யோகேஷ் உயிரிழந்த துக்கத்தை தாங்கி கொள்ள முடியாமல் அவரது தாய் ரேகா (40) மருத்துவமனையின் 2 ஆவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ரேகா தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
- காதல் விவகாரத்தில் தந்தை கண்டித்ததன் காரணமாக ஆனந்தி தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.
- அவரை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் பழைய பஸ் நிலையம் காமராஜர் ரோட்டில் தனியார் நீட் மற்றும் போட்டி தேர்வு பயிற்சி மையம் உள்ளது. இந்த பயிற்சி மையமானது அங்குள்ள கட்டிடத்தின் 3வது மாடியில் உள்ளது. இங்கு 20-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயிற்சி பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் இங்கு படிக்கும் 17 வயதான ஆனந்தி என்ற மாணவியின் தந்தை இன்று மாலை பயிற்சி மையத்துக்கு வந்தார். மாணவி ஆனந்தியுடன் பேசிக் கொண்டிருந்த போது, தந்தை மணிகண்டனை தள்ளிவிட்டு சென்ற மாணவி ஆனந்தி 3-வது மாடியில் இருந்து ஜன்னல் வழியாக குதித்தார். இதில் அவருக்கு இடுப்பு மற்றும் தலையில் பலத்த காயங்கள்ஏற்பட்டது.ரத்த வெள்ளத்தில் அவர் உயிருக்கு போராடினார். உடனே அவரை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாணவி ஆனந்தி எதற்காக மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் என்று தெரியவில்லை. காதல் விவகாரத்தில் தந்தை கண்டித்ததன் காரணமாக ஆனந்தி தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. மேலும் நீட் தேர்வு பயிற்சியை சரியாக பயிலாததன் காரணமாக தந்தை திட்டியதால் தற்கொலைக்கு முயன்றாரா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போடிநாயக்கனூரைச் சேர்ந்த 17 வயது மாணவி முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
- விடுதியின் 2-வது தளத்துக்கு சென்ற மாணவி திடீரென கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார்.
சரவணம்பட்டி,
கோவை சரவணம்பட்டி விசுவாசபுரம் பகுதியில் தனியார் நர்சிங் கல்லூரி ஒன்று செயல்படுகிறது. இந்த கல்லூரியில் தேனி மாவட்டம் போடிநாயக்கனூரைச் சேர்ந்த 17 வயது மாணவி முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
இவர் கல்லூரி விடுதியில் தங்கியிருந்து வகுப்புக்கு சென்று வந்தார். நேற்று மாலை 5.45 மணி அளவில் விடுதியின் 2-வது தளத்துக்கு அந்த மாணவி சென்றார். அங்கிருந்து திடீரென அவர் கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். கீழே விழுந்ததில் மாணவி படுகாயம் அடைந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மாணவி, அவரது சொந்த ஊரைச் சேர்ந்த ஒருவரை கடந்த 3 ஆண்டுகளாக காதலித்ததாக கூறப்படுகிறது. காதல் விவகாரத்தில் ஏற்பட்ட மோதலில் மாணவி தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக சரவணம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
- தலைமறைவாக உள்ள சபரியை உடனடியாக கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும் என மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போலீசாருக்கு வேண்டு கோள்விடுத்துள்ளனர்.
- வாலிபர் சபரி மீது ஓமலூர் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் கொலை மிரட்டல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
ஓமலூர்:
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள காமராஜர் நகரை சேர்ந்தவர் சபரி (வயது 25). கூலி தொழிலாளி.
இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்தார். மேலும் அந்த மாணவியிடம் தன்னை காதலிக்குமாறு அடிக்கடி டார்ச்சர் கொடுத்துள்ளார். தொடர்ந்து தொந்தரவு செய்து வந்ததால் வேறு வழியின்றி மாணவி, அந்த நபரிடம் பேசியுள்ளார்.
இது மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்தது. சபரியுடன் பேசுவை நிறுத்தி விடு, இல்லையென்றால் கல்லூரி படிப்பு பாதிக்கப்படும் என பெற்றோர் மகளுக்கு அறிவுரை கூறினர். இதன் பிறகு சபரியுடன் பேசுவதை மாணவி நிறுத்தி விட்டார்.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாணவி திடீரென விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மகளை மீட்டு உடனடியாக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து பெற்றோர் ஓமலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார், ஆஸ்பத்திரிக்கு வந்து மாணவியிடம் நடந்த சம்பவம் குறித்து கேட்டனர். இதில் போலீசாருக்கு பகீர் தகவல் கிடைத்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சபரி, அந்த மாணவியிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது என்னை காதலிக்க வேண்டும். இல்லையென்றால் நீ என்னுடன் பேசி பழகிய படத்தை இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டி உள்ளார். மேலும், மாணவியின் தந்தைக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இவ்வாறு தொடர்ந்து டார்ச்சர் செய்ததால் மாணவி என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தார். மேலும் இது பற்றி வெளியே சொன்னால் சத்தம் போடுவார்கள் என பயந்தார். மனம் உடைந்த மாணவி ஒரு கட்டத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தது தெரியவந்தது.
இதையடுத்து வாலிபர் சபரி மீது ஓமலூர் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் கொலை மிரட்டல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இதை அறிந்த சபரி தலைமறைவாகி விட்டார். அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை போலீசார் துரிதமாக மேற்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் இருந்து தப்பிப்பதற்காக சபரி முயற்சித்து வருகிறார். போலீஸ் நிலையத்தில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தெரிகிறது.
தலைமறைவாக உள்ள அவரை உடனடியாக கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும் என மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போலீசாருக்கு வேண்டு கோள்விடுத்துள்ளனர்.
- பெற்றோர் மகளிடம் சமரசம் பேசி கணவருடன் சேர்ந்து வாழும் படி கூறவே மனமுடைந்த மாணவி விஷம் குடித்து மயங்கி விழுந்தார்.
- சிறுமியை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
திருமங்கலம்:
மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகேயுள்ள சின்ன உலகாணியை சேர்ந்த பிளஸ்-2 வகுப்பு மாணவிக்கும் கேரள மாநிலம் வண்டி பெரியார் பகுதியை சேர்ந்த உறவினரான ராஜாவிற்கு (வயது27) கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்கு பின்பு மாணவி கணவருடன் கேரளாவில் குடியேறியுள்ளார். திருமணமான 4 மாதத்திற்குள் அவர்களுக்குள் கருத்து வேறு ஏற்படவே தற்போது மாணவி கணவருடன் கோபித்து கொண்டு கள்ளிக்குடியில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார்.
இங்கு அவரது பெற்றோர் மகளிடம் சமரசம் பேசி கணவருடன் சேர்ந்து வாழும் படி கூறவே மனமுடைந்த மாணவி விஷம் குடித்து மயங்கி விழுந்தார்.
உடனே அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு இவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சிறுமி 4 மாதம் கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளனர்.
மேலும் மைனர் பெண் என்பதால் இது குறித்து கள்ளிக்குடி சமூகநலத்துறை அலுவலர் ரூபிஅருள்மணிக்கு தகவல் கொடுத்தனர். அவர் சிறுமியிடம் விசாரணை நடத்தியதில் அவர் 17வயது மைனர் பெண் என்பது தெரியவந்தது. திருமங்கலம் மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் மகளிர் போலீசார் சிறுமியின் பெற்றோர் மற்றும் அவரது கணவர் ராஜா, அவரது பெற்றோர் சந்திரபோஸ், பேச்சியம்மாள் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அதே பகுதியை சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி ஒருவரை ஒரு தலையாக காதலித்து வந்தார்.
- தொடர்ந்து தொந்தரவு செய்து வந்ததால் வேறு வழியின்றி மாணவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
ஓமலூர்:
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள காமராஜர் நகரை சேர்ந்தவர் சபரி (வயது 25). கூலி தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி ஒருவரை ஒரு தலையாக காதலித்து வந்தார்.
மேலும் அந்த மாணவியிடம் தன்னை காதலிக்குமாறு அடிக்கடி டார்ச்சர் கொடுத்துள்ளார். தொடர்ந்து தொந்தரவு செய்து வந்ததால் வேறு வழியின்றி மாணவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மகளை மீட்டு உடனடியாக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்த புகாரின்பேரில் ஓமலூர் அனைத்து மகளிர் போலீசார் வாலிபர் சபரி மீது போக்சோ சட்டம், கொலை மிரட்டல், பெண்கள் வன் கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அவரை தேடி வந்தனர். உறவினர் வீட்டில் பதுங்கியிருந்ததை கண்டுபிடித்த போலீசார் நேற்று அங்கு சென்று சபரியை கைது செய்தனர். இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அவரை அடைத்தனர்.






