என் மலர்
நீங்கள் தேடியது "சின்னத்திரை நடிகை"
- கணவருடன் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக நீண்ட நாட்களாக மன அழுத்தத்தில் இருந்துள்ளதாக தகவல்.
- தற்கொலை முயற்சி தொடர்பாக விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.
சென்னை சாலிகிராம் பகுதியை சேர்ந்தவர் சின்னத்திரை துணை நடிகை அமுதா (வயது 28). இவர் பிரபல தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பாகும் பல்வேறு சீரியல்களில் நடித்துள்ளார். தற்போது 'கயல்' என்ற சீரியலில் நடித்து வருகிறார்.
சின்னத்திரை நடிகை அமுதா தன் கணவருடன் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக நீண்ட நாட்களாக மன அழுத்தத்தில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று வீட்டில் தனியாக இருந்த அமுதா கழிவறையை சுத்தம் செய்ய பயன்படுத்தும் திரவத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதை அறிந்த அமுதாவின் தோழி, அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.
இதற்கிடையே, அமுதா தற்கொலை முயற்சி செய்த விவகாரம் தொடர்பாக விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், அமுதாவின் கணவரிடமும் விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் கிடைத்துள்ளது. பிரபல சின்னத்திரை நடிகை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது சின்னத்திரை நடிகர், நடிகைகள் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- அண்ணாசாலையில் போதை பொருள் விற்பனை செய்து வந்ததாக கிடைத்த தகவலை அடுத்து கைது.
- 5 கிராம் மெத்தபெட்டமைன் என்கிற போதைப் பொருளை பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னை அண்ணாசாலை பகுதியில் பிரபல சீரியலில் நடித்து வரும் சின்னத்திரை துணை நடிகை மீனா என்பவரை போலீசார் போதைப் பொருளுடன் கைது செய்துள்ளனர்.
இவர், அண்ணாசாலையில் போதை பொருள் விற்பனை செய்து வந்ததாக கிடைத்த தகவலை அடுத்து போலீசார் நடவிக்கை மேற்கொண்டுள்ளனர்.
துணை நடிகை மீனாவை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டதை அடுத்து, அவரிடம் இருந்து 5 கிராம் மெத்தபெட்டமைன் என்கிற போதைப் பொருளை பறிமுதல் செய்துள்ளனர்.
நடிகை மீனா, டெடி உள்ளிட்ட பல திரைப்படங்களில் துணை நடிகையாகவும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.






