என் மலர்
நீங்கள் தேடியது "சீரியல் நடிகை"
- நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 தொடங்கி நடைபெற்று வருகிறது.
- பிக்பாஸ் நிகழ்ச்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று விமர்சனம் எழுந்துள்ளது.
சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் பல்வேறு மொழிகளிலும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. 15 போட்டியாளர்கள் பல்வேறு டாஸ்க்குகளுடன் 100 நாட்கள் தங்கியிருப்பார்கள். டாஸ்க்குகளை கடந்து வெற்றியாளர்கள் இறுதியில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை அதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்யவேண்டும் என்று எதிர்ப்பு குரல்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய சின்னத்திரை நடிகை பவித்ரா, "சின்னத்திரை நடிகர்களுக்கு சினிமாவில் எளிதில் வாய்ப்பு கிடைப்பதில்லை. பிக்பாஸ் வீடு பெண்களுக்கு பாதுகாப்பான இடம், நாட்டில் எவ்வளவோ சீரழிவுகள் நடக்கும் நிலையில், பிக்பாஸ் மீது மட்டும் குற்றம் சாட்டுவது ஏற்புடையது அல்ல" என்று தெரிவித்தார்.
- மான்யா ஆனந்த் தனது சீரியல் மற்றும் திரைத்துறை அனுபங்களை குறித்து நேர்காணல் கொடுத்துள்ளார்.
- தனுஷ் என்றாலும் அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய மாட்டீர்களா என்று அந்த நபர் மெசேஜ் அனுப்பினார்.
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வானத்தை போல சீரியல் மூலமாக நடிகை மான்யா ஆனந்த் பிரபலமானார். இதனை தொடர்ந்து அவர் நடித்த கயல், அன்னம், மருமகள் சீரியல்களும் மக்களிடையே நல்ல கவனம் பெற்றது.
மான்யா ஆனந்த் தனது சீரியல் மற்றும் திரைத்துறை அனுபங்களை குறித்து நேர்காணல் கொடுத்துள்ளார். அந்த நேர்காணலில் பேசிய மான்யா ஆனந்த், "தனுஷின் மேனேஜர் ஷ்ரேயஸ் என்பவரிடம் இருந்து அழைப்பு வந்தது. தனுஷ் படத்தில் நீங்க நடிக்க முடியுமா... அப்படியெனில் அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய வேண்டும் என்று கூறினார்.
நான் அது எல்லாம் பண்ண மாட்டேன் என்று கூறினேன். அதற்கு தனுஷ் என்றாலும் அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய மாட்டீர்களா என்று அந்த நபர் மெசேஜ் அனுப்பினார். தனுஷாக இருந்தாலும் நான் அட்ஜஸ்ட் பண்ண மாட்டேன் என்று கூறிவிட்டேன்.
அதே மாதிரி அண்மையில், ஷ்ரேயஸ் எனக்கு தனுஷ் படத்தின் ஸ்க்ரிப்ட் அனுப்பி நடிக்க வேண்டுமா என்று கேட்டார். ஆனால் நான் அந்த கதையை கூட படிக்கவில்லை. நாங்கள் நடிகர்கள் வேறு தொழில் செய்பவர்கள் இல்லை" என்று தெரிவித்திருந்தார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி, விமர்சனத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் நடிகையின் குற்றச்சாட்டை ஷ்ரேயாஸ் மறுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "என் பெயரில் அல்லது வுண்டர்பார் பிலிம்ஸ் பெயரில் வந்த "Casting call" முற்றிலும் பொய்யானது" என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து நடிகை மான்யா ஆனந்த் விளக்கம் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், "நான் தனுஷ் மீது குற்றச்சாட்டு சுமத்தியதாக ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. அது தொடர்பாக விளக்கம் அளிக்கிறேன். நான் அண்மையில் ஒரு நேர்காணல் கொடுத்திருந்தேன். அதில் ஷ்ரேயாஸ் என்பவற்றின் பெயரை பயன்படுத்தி ஒருவர் எனக்கு போன் செய்திருந்தார் என்று கூறினேன். அதாவது தனுஷ் சார் பெயரை தவறாக பயன்படுத்துகிறார்கள் என்று தான் கூறியுள்ளேன். விழிப்புணர்வுக்காக நான் கூறியதை தவறாக பயன்படுத்தியுள்ளார்கள். இணையத்தில் பரவும் தகவல் பொய்யானது என்று நேற்று நான் பதிவிட்டிருந்தேன். என்னுடைய பெயரை பயன்படுத்தி தனுஷ் சார் புகழுக்கு களங்கம் விளைவிக்கிறார்கள். இது மிகவும் தவறு. ஆகவே பொய்யான தகவலை பரப்பாதீர்கள்" என்று தெரிவித்தார்.
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வானத்தை போல சீரியல் மூலமாக நடிகை மான்யா ஆனந்த் பிரபலமானார். இதனை தொடர்ந்து அவர் நடித்த கயல், அன்னம், மருமகள் சீரியல்களும் மக்களிடையே நல்ல கவனம் பெற்றது.
மான்யா ஆனந்த் தனது சீரியல் மற்றும் திரைத்துறை அனுபங்களை குறித்து நேர்காணல் கொடுத்துள்ளார். அந்த நேர்காணலில் பேசிய மான்யா ஆனந்த், "தனுஷின் மேனேஜர் ஷ்ரேயஸ் என்பவரிடம் இருந்து அழைப்பு வந்தது. தனுஷ் படத்தில் நீங்க நடிக்க முடியுமா... அப்படியெனில் அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய வேண்டும் என்று கூறினார்.
நான் அது எல்லாம் பண்ண மாட்டேன் என்று கூறினேன். அதற்கு தனுஷ் என்றாலும் அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய மாட்டீர்களா என்று அந்த நபர் மெசேஜ் அனுப்பினார். தனுஷாக இருந்தாலும் நான் அட்ஜஸ்ட் பண்ண மாட்டேன் என்று கூறிவிட்டேன்.
அதே மாதிரி அண்மையில், ஷ்ரேயஸ் எனக்கு தனுஷ் படத்தின் ஸ்க்ரிப்ட் அனுப்பி நடிக்க வேண்டுமா என்று கேட்டார். ஆனால் நான் அந்த கதையை கூட படிக்கவில்லை. நாங்கள் நடிகர்கள் வேறு தொழில் செய்பவர்கள் இல்லை" என்று தெரிவித்திருந்தார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி, விமர்சனத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் நடிகையின் குற்றச்சாட்டை ஷ்ரேயாஸ் மறுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "என் பெயரில் அல்லது வுண்டர்பார் பிலிம்ஸ் பெயரில் வந்த "Casting call" முற்றிலும் பொய்யானது. +91 75987 56841 இந்த நம்பர் என்னுடைய நம்பர் கிடையாது. என்னுடைய படத்துடன் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
- வானத்தை போல சீரியல் மூலமாக நடிகை மான்யா ஆனந்த் பிரபலமானார்.
- மான்யா ஆனந்த் நடித்த கயல், அன்னம் , மருமகள் சீரியல்களும் மக்களிடையே நல்ல கவனம் பெற்றது.
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வானத்தை போல சீரியல் மூலமாக நடிகை மான்யா ஆனந்த் பிரபலமானார். இதனை தொடர்ந்து அவர் நடித்த கயல், அன்னம், மருமகள் சீரியல்களும் மக்களிடையே நல்ல கவனம் பெற்றது.
தற்போது ஜிம்முக்கு சென்று பிட்னெஸ் விஷயங்களில் கவனம் செலுத்தி வரும் மான்யா ஆனந்த் தனது சீரியல் மற்றும் திரைத்துறை அனுபங்களை குறித்து நேர்காணல் கொடுத்துள்ளார்.
அந்த நேர்காணலில் தனுஷின் மேனேஜர் தன்னை தனுஷ் படத்தில் நடிக்க அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்று கூறினார் என்று குற்றம் சாட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நேர்காணலில் பேசிய மான்யா ஆனந்த், "தனுஷின் மேனேஜர் ஷ்ரேயஸ் என்பவரிடம் இருந்து அழைப்பு வந்தது. தனுஷ் படத்தில் நீங்க நடிக்க முடியுமா... அப்படியெனில் அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய வேண்டும் என்று கூறினார். நான் அது எல்லாம் பண்ண மாட்டேன் என்று கூறினேன். அதற்கு தனுஷ் என்றாலும் அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய மாட்டீர்களா என்று அந்த நபர் மெசேஜ் அனுப்பினார். தனுஷாக இருந்தாலும் நான் அட்ஜஸ்ட் பண்ண மாட்டேன் என்று கூறிவிட்டேன்.
அதே மாதிரி அண்மையில், ஷ்ரேயஸ் எனக்கு தனுஷ் படத்தின் ஸ்க்ரிப்ட் அனுப்பி நடிக்க வேண்டுமா என்று கேட்டார் . ஆனால் நான் அந்த கதையை கூட படிக்கவில்லை. நாங்கள் நடிகர்கள் வேறு தொழில் செய்பவர்கள் இல்லை" என்று தெரிவித்தார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது,
மராட்டியத்தை சேர்ந்த பிரபல இந்தி நடிகை பிரியா மராத்தே (வயது 38). இவர் இந்தியில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். மேலும், பல்வேறு சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். இவர் பவித்ரா ரிஷ்டா மற்றும் கசம் சே சீரியல்களின் மூலம் பிரபலமானாவர்.
இதனிடையே, பிரியா மராத்தேவுக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் கடந்த சில மாதங்களாக மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பிரியா மராத்தே நேற்று உயிரிழந்தார். மும்பை மிரா சாலையில் உள்ள தனது வீட்டில் பிரியா மராத்தே உயிரிழந்தார். அவரது மறைவிற்கு ரசிகர்கள், திரை பிரபலங்கள் உள்பட பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அவருடைய சகோதரர், இணை நடிகர்கள் என அவருக்கு ஆழ்ந்த இரங்கல் செய்தியை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
- கணவருடன் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக நீண்ட நாட்களாக மன அழுத்தத்தில் இருந்துள்ளதாக தகவல்.
- தற்கொலை முயற்சி தொடர்பாக விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.
சென்னை சாலிகிராம் பகுதியை சேர்ந்தவர் சின்னத்திரை துணை நடிகை அமுதா (வயது 28). இவர் பிரபல தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பாகும் பல்வேறு சீரியல்களில் நடித்துள்ளார். தற்போது 'கயல்' என்ற சீரியலில் நடித்து வருகிறார்.
சின்னத்திரை நடிகை அமுதா தன் கணவருடன் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக நீண்ட நாட்களாக மன அழுத்தத்தில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று வீட்டில் தனியாக இருந்த அமுதா கழிவறையை சுத்தம் செய்ய பயன்படுத்தும் திரவத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதை அறிந்த அமுதாவின் தோழி, அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.
இதற்கிடையே, அமுதா தற்கொலை முயற்சி செய்த விவகாரம் தொடர்பாக விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், அமுதாவின் கணவரிடமும் விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் கிடைத்துள்ளது. பிரபல சின்னத்திரை நடிகை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது சின்னத்திரை நடிகர், நடிகைகள் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- ஐந்து நபர்கள் மீது மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
- பிரபல கேஸ்டிங் நிறுவனம் ஒன்றின் மேலாளர் அளித்த புகாரை அடுத்து போலீஸ் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
உற்சாக பானம் (எனர்ஜி டிரிங்க்) விளம்பரத்தில் நடிக்க வைக்கப்பட்டு இந்தி தொலைக்காட்சி பிரபலங்கள் மீது நடந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
உற்சாக பானம் விற்பனை செய்யும் நிறுவனத்தின் விளம்பரம் எனக் கூறி நடிக்க வைத்துவிட்டு அதற்கு எந்த சம்பளமும் தராமல் 25 பிரபலங்கள் ஏமாற்றப்பட்டிருக்கின்றனர். அதில் பிரபல இந்தி சீரியல் நடிகை அங்கிதா லோகண்டேவும் ஒருவர்.
அங்கிதா லோகண்டே, ஆயுஷ் சர்மா மற்றும் அட்ரிஜா ராய் உட்பட 25 நடிகர்களிடம் கிட்டத்தட்ட 1.50 கோடி ரூபாய் மோசடி செய்ததாக ஐந்து நபர்கள் மீது மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
விளம்ரபரங்களுக்கு ஆள் பிடித்து கொடுக்கும் பிரபல கேஸ்டிங் நிறுவனம் ஒன்றின் மேலாளர் அளித்த புகாரை அடுத்து போலீஸ் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
- 2019ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானி வெற்றி பெற்றார்.
- 2024 ஆம் ஆண்டு மீண்டும் அமேதி தொகுதியில் போட்டியிட்ட ஸ்மிருதி இரானி தோல்வி அடைந்தார்.
முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி மீண்டும் சீரியலில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜகவை சேர்ந்த ஸ்மிருதி இரானி, கடந்த 2019ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் அமேதி தொகுதியில் போட்டியிட்டு ராகுல்காந்தியை தோற்கடித்தார். அதன்பின் மத்திய அமைச்சராக அவர் பொறுப்பேற்றார்.
இதனையடுத்து 2024 ஆம் ஆண்டு மீண்டும் அமேதி தொகுதியில் போட்டியிட்ட ஸ்மிருதி இரானி காங்கிரஸ் வேட்பாளர் கிஷோர் லால் சர்மாவிடம் தோல்வி அடைந்தார்.
டிவி சீரியல் மூலம் பிரபலமாகி அரசியலில் நுழைந்த ஸ்மிருதி இராணி, சமீபத்தில் 'அனுபாமா' என்ற டிவி சீரியல் நடிகையுடன் இருக்கும் புகைப்படம் வெளியாக, அவர் மீண்டும் இந்தி டி.வி. சீரியலில் நடிக்க உள்ளதாக தகவல் பரவியது
இந்நிலையில், சீரியலில் நடிக்க இருப்பதாக வெளியான தகவல்களுக்கு பாஜக முன்னாள் எம்.பி. ஸ்மிருதி இராணி மறுப்பு தெரிவித்துள்ளார்.
- விஷம் அல்லது அளவுக்கு அதிகமான போதைப்பொருள் உட்கொண்ட அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளன.
- சாகரின் நண்பர்களான அனுஜ் மற்றும் சன்னி என அடையாளம் காணப்பட்ட இருவரை போலீஸ் கைது செய்துள்ளது.
ஹிந்தியில் பிரபல தொலைக்காட்சி சீரியல் நிகழ்ச்சியான கிரைம் பேட்ரோல் -இல் நடித்து நடித்து மக்களுக்கு பரீட்சயமான நடிகை சப்னா சிங். இவருக்கு14 வயதில் சாகர் கங்வார் என்ற மகன் இருந்த நிலையில் தற்போது அவர் மர்மான முறையில் உயிரிழந்தார்.

உத்தரப் பிரதேசம் பரேலியில் தனது தாய் மாமா ஓம் பிரகாஷுடன் தங்கியிருந்த 8ஆம் வகுப்பு படித்துவரும் சாகர், கடந்த டிசம்பர் 7ஆம் தேதி காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டது. இதற்கிடையே இசத்நகர் பகுதியில் உள்ள அடலாக்கியா கிராமத்திற்கு அருகே அவரது உடல் கடந்த ஞாயிற்றுக்கிழமை வாய்க்காலில் கண்டெடுக்கப்பட்டது.
பிரேத பரிசோதனை அறிக்கையில் மரணத்திற்கான சரியான காரணத்தை உறுதிப்படுத்த முடியவில்லை. ஆனால் விஷம் அல்லது அளவுக்கு அதிகமான போதைப்பொருள் உட்கொண்ட அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளன.
தனது மகனின் மரணத்துக்கு கேட்டு நடிகை சப்னா சிங் உறவினர்களுடன் பரேலி காவல் நிலையத்தின் முன் நேற்று வரை போராட்டம் நடத்தி வந்த நிலையில் போலீசாரின் வாக்குறுதியை போராட்டத்தை நிறுத்த உடன்பட்டார்.

இந்நிலையில் இன்று [புதன்கிழமை], சாகரின் நண்பர்களான அனுஜ் மற்றும் சன்னி என அடையாளம் காணப்பட்ட இருவரை, கொலைக் குற்றச்சாட்டின் பேரில் போலீஸார் கைது செய்தனர். அனுஜும் சன்னியும் சாகருடன் போதைப்பொருள் மற்றும் மது அருந்தியதாக விசாரணையின்போது ஒப்புக்கொண்டனர்.
அளவுக்கு அதிகமாக அருந்தியதால் சாகர் மயங்கி விழுந்தான் என்றும் பீதியடைந்த அவர்கள் அவனது உடலை வயல்வெளிக்கு இழுத்துச் சென்றுவிட்டனர் என்றும் வாக்குமூலம் அழித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.






