என் மலர்
சினிமா செய்திகள்

பிக்பாஸ் வீட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையா? - சீரியல் நடிகை பவித்ரா விளக்கம்
- நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 தொடங்கி நடைபெற்று வருகிறது.
- பிக்பாஸ் நிகழ்ச்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று விமர்சனம் எழுந்துள்ளது.
சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் பல்வேறு மொழிகளிலும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. 15 போட்டியாளர்கள் பல்வேறு டாஸ்க்குகளுடன் 100 நாட்கள் தங்கியிருப்பார்கள். டாஸ்க்குகளை கடந்து வெற்றியாளர்கள் இறுதியில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை அதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்யவேண்டும் என்று எதிர்ப்பு குரல்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய சின்னத்திரை நடிகை பவித்ரா, "சின்னத்திரை நடிகர்களுக்கு சினிமாவில் எளிதில் வாய்ப்பு கிடைப்பதில்லை. பிக்பாஸ் வீடு பெண்களுக்கு பாதுகாப்பான இடம், நாட்டில் எவ்வளவோ சீரழிவுகள் நடக்கும் நிலையில், பிக்பாஸ் மீது மட்டும் குற்றம் சாட்டுவது ஏற்புடையது அல்ல" என்று தெரிவித்தார்.






