search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pavithra"

    • சில தினங்களுக்கு முன்பு நரேஷ்-பவித்ரா லோகேஷ் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.
    • இவர்களின் திருமணம் தெலுங்கு பட உலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

    கர்நாடக மாநிலம் மைசூருவைச் சேர்ந்தவர் பவித்ரா லோகேஷ். திரைப்பட நடிகையான இவர் தெலுங்கு, கன்னடம், தமிழ் உள்ளிட்ட மொழிப்படங்களில் நடித்துள்ளார். நடிகை பவித்ரா ஏற்கனவே 2 முறை திருமணமாகி விவாகரத்து பெற்றவர். அதுபோல் தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகர்களில் ஒருவரும், நடிகர் மகேஷ் பாபுவின் சகோதரருமான நரேஷ், 2 பெண்களை திருமணம் செய்து விவாகரத்து ஆனவர். அவர் 3-வதாக ரம்யா ரகுபதி என்பவரை திருமணம் செய்திருந்தார். தற்போது அவரையும் விவாகரத்து செய்ய விண்ணப்பித்துள்ளார்.


    இதையடுத்து பவித்ரா லோகேஷ் முதல் கணவரை விட்டு பிரிந்து, நடிகர் நரேசை ரகசிய திருமணம் செய்து கொண்டு ஒன்றாக வசித்து வருவதாக நரேசின் மனைவி ரம்யா ரகுபதி குற்றம்சாட்டியிருந்தார். இதை இருவரும் மறுத்த நிலையில் மைசூருவில் உள்ள ஓட்டலில் இருவரும் தங்கியிருந்தபோது ரம்யா ரகுபதியிடம் வசமாக சிக்கிக்கொண்டனர். இருவரையும் ரம்யா ரகுபதி செருப்பால் அடிக்கபாய்ந்தார் பின்னர் அவரை போலீசார் சமாதானப்படுத்தினர். சில தினங்களுக்கு முன்பு நரேஷ்-பவித்ரா லோகேஷ் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்ட வீடியோவை பகிர்ந்திருந்தனர். இவர்களின் திருமணம் கடந்த சில மாதங்களாக தெலுங்கு பட உலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.


    இந்த நிலையில் பவித்ரா- நரேஷ் இணைந்து நடித்த 'மல்லி பெல்லி' படம் கடந்த மே மாதம் திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் இவர்களின் காதல் கதையை படமாக்கி இருந்ததாக கூறப்படுகிறது. படத்திற்கு பெரிய அளவில் வரவேற்பு இல்லாததால் பிரபல ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது. இதையடுத்து இந்த படத்தில் தன்னை இழிவுப்படுத்தும் காட்சிகள் உள்ளதாகவும் ஓடிடியில் இருந்து படத்தை நீக்க வேண்டும் என்றும் நரேஷின் மூன்றாவது மனைவி ரம்யா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதைத்தொடர்ந்து 'மல்லி பெல்லி' திரைப்படம் ஓடிடியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    பிர்லா, பவித்ரா நடிப்பில் ஆர்.ஏ.ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஊர காணோம்’ படத்தில் பெண் இசையமைப்பாளர் சந்திரா சத்யராஜ் அறிமுகமாக இருக்கிறார். #OoraKanom
    மேற்கு தொடர்ச்சி மலை கிராமத்தில் நடந்த உண்மையான காதல் கதையை “ஊர காணோம்” என்ற பெயரில் திரைப்படமாக்கி வருகிறார்கள். வேலவர் பிலிம்ஸ் என்ற நிறுவனம் சார்பில் கே.எஸ்.சரவணகுமார் என்பவர் இப்படத்தை தயாரித்து வருகிறார்.

    இந்தப் படத்தை செவிலி, மோகனா போன்ற படத்தை இயக்கிய ஆர்.ஏ.ஆனந்த் இயக்கிவருகிறார். மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள ஒரு குக்கிராமத்தில் நடந்த உண்மையான காதல் கதையை, அதிர்ச்சியூட்டும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தத் திரைப்படத்தை உருவாக்கி வருகிறார்கள். நவம்பர் மாத பனிபொழிவில் இந்தப்படத்தின் முக்கியமான காட்சிகள் மலைகிராமத்தில் படமாக்கப்பட்டது.

    இந்த படத்திற்கான இசையை ஒரு புதிய பெண் இசையமைப்பாளர் சந்திரா சத்யராஜ் அமைக்கிறார். பாடல்களை - பிரியாகிருஷ்ணன், பரிமளாதேவி என்ற இரண்டு பெண் கவிஞர்கள் எழுதியிருக்கிறார்கள்.


    பிர்லா - பவித்ரா

    இதில் பிர்லா, ஷா, பவித்ரா, நெல்லைசிவா, தவசி, தங்கதுரை, மும்பைசீனுஜி, சசி, மகேஷ் ஏட்டா, “பிச்சைக்காரன் ஜான்”, குணாஜி, வெங்கல்ராவ், கீதா, ஜெயக்குமார் மற்றும் பலர் நடித்து வருகிறார்கள்.
    மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள ஒரு குக் கிராமத்தில் நடந்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி உருவாகி வரும் `ஊர காணோம்' என்ற படத்தை செவிலி, மோகனா படங்களை இயக்கிய ஆர்.ஏ.ஆனந்த் இயக்கி வருகிறார். #OoraKanom
    மேற்கு தொடர்ச்சி மலை கிராமத்தில் நடந்த உண்மையான காதல் கதையை `ஊர காணோம்' என்ற பெயரில் திரைப்படமாக்கி வருகிறார்கள்.

    கே.எஸ்.சரவணகுமார் வேலவர் பிலிம்ஸ் என்ற நிறுவனம் சார்பில் `ஊர காணோம்' என்ற வித்தியாசமான பெயரில் புதிய படமொன்றை தயாரித்து வருகிறார்.

    இந்தப் படத்தை செவிலி, மோகனா போன்ற படத்தை இயக்கிய ஆர்.ஏ.ஆனந்த் இயக்கிவருகிறார். மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள ஒரு குக்கிராமத்தில் நடந்த உண்மையான காதல் கதையை, அதிர்ச்சியூட்டும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தத் திரைப்படத்தை உருவாக்கி வருகிறார்கள். நவம்பர் மாத பனிபொழிவில் இந்தப்படத்தின் முக்கியாமான காட்சிகள் மலைகிராமத்தில் படமாக்கப்பட்டது.



    பிர்லா, ஷா, பவித்ரா, நெல்லைசிவா, தவசி, தங்கதுரை, மும்பைசீனுஜி, சசி, மகேஷ் ஏட்டா, `பிச்சைக்காரன் ஜான்', குணாஜி, வெங்கல்ராவ், கீதா, ஜெயக்குமார் மற்றும் பலர் நடித்து வருகிறார்கள். 

    சந்திரா சத்யராஜ் என்ற பெண் இசையமைப்பாளர் இசையமைக்கும் இந்த படத்தில், பிரியா கிருஷ்ணன், பரிமளாதேவி என இரண்டு பெண் கவிஞர்கள் பாடல்களை எழுதியிருக்கிறார்கள். #OoraKanom

    ×