என் மலர்

    நீங்கள் தேடியது "sexual abuse"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தனது மனைவியை உடலாலும், மனதாலும் சித்ரவதை செய்து வந்துள்ளார்.
    • திருமணத்தின்போது 12 பவுன் நகை, ரூ.2லட்சம் ரொக்கம் மற்றும் சீர்வரி சைகள் கொடுக்கப்பட்டு ள்ளது.

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் வெள்ளையம்மாள்புரம் ரைஸ்மில் தெருவை சேர்ந்தவர் கவிதா(26). இவருக்கு 16 வயது இருக்கும் போதே கார்த்திக்(35) என்பவருடன் திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணத்தின்போது 12 பவுன் நகை, ரூ.2லட்சம் ரொக்கம் மற்றும் சீர்வரி சைகள் கொடுக்கப்பட்டு ள்ளது.

    இவர்களுக்கு 2 வயதில் ஒரு மகள் உள்ளார். திருமணத்தில் இருந்தே கணவர் சரிவர வேலைக்கு செல்லாமல் குடும்ப தேவைக்கும் பணம் கொடுக்காமல் இருந்து வந்துள்ளனர். மேலும் தனது மனைவியை உடலாலும், மனதாலும் சித்ரவதை செய்து வந்துள்ளார். மேலும் அவரது நகைகளையும் பறித்து வைத்துக்கொண்டு தராமல் இருந்துள்ளார்.

    இதுகுறித்து உத்தம பாளையம் அனைத்து மகளிர் போலீசில் கவிதா புகார் அளித்தார். அதன்பே ரில் கார்த்திக், அவரதுதந்தை சோனைமுத்து, தங்கை சோபனா(28) ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அங்கு வந்த தர்மராஜ் எனக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக புகரில் சிறுமி தெரிவித்துள்ளார்.
    • போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து தர்மராஜை தேடி வருகின்றனர்.

    திருச்செந்தூர்:

    நாசரேத் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    நான் 10-ம் வகுப்பு படித்து வருகிறேன். எங்கள் பகுதிக்கு நாசரேத் பிரகாசபுரத்தை சேர்ந்த வியாபாரியான தர்மராஜ் என்பவர் அடிக்கடி வருவார்.

    இதனால் அவர் என்னிடம் சகஜமாக பேசி பழகி வந்தார். அதே போன்று சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அங்கு வந்த தர்மராஜ் எனக்கு பாலியல் தொந்தரவு செய்தார்.

    தொடர்ந்து அவர் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த சிறுமி கூறியிருந்தார்.

    இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட திருச்செந்தூர் அனைத்து மகளிர் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தர்மராஜை தேடி வருகிறார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    செங்கோட்டை அருகே உள்ள கட்டளைகுடியிருப்பில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை போலீசார் தேடி வருகின்றனர்.
    நெல்லை:

    செங்கோட்டை அருகே உள்ள கட்டளைகுடியிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் காங்கேயன்(வயது 60). இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 7-ம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமியை பாலியல் சீண்டல்கள் செய்துள்ளார்.

    உடனே அந்த சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் காங்கேயனை எச்சரித்துள்ளனர்.

    இந்நிலையில் கடந்த 25-ந்தேதி சிறுமியை மீண்டும் காங்கேயன் அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் தென்காசி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.

    அதன்பேரில் போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதில் காங்கேயன் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது.

    இதற்கிடையே காங்கேயன் போலீசாருக்கு பயந்து தலைமறைவானார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பீகார் மாநிலம் புத்த கயா கிராமத்தில் இயங்கிவரும் புத்தமத பள்ளியின் குரு, சிறுவர்களை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். #Bihar #SexualAbuse
    பாட்னா:

    பீகார் மாநிலம் புத்த கயா கிராமத்தில் இயங்கி வரும் பிரஜ்னா ஜோதி புத்த ஆரம்ப பள்ளி மற்றும் தியான மையத்தின் குருவாக செயல்படுபவர் பந்த் சுஜோய் அக சங்பிரியா பண்டே. இவர் சமீபத்தில் தியான மையத்தில் சிறுவர்களை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்வதாக புகார் எழுந்துள்ளது.

    அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சிறுவரின் பாதுகாவலர்கள் அளித்துள்ள இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் புத்த மதகுருவை கைது செய்துள்ளனர். மேலும், அவரிடம் தீவிரமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    நாட்டின் பல்வேறு இடங்களில் சிறுவர், சிறுமியர் மீதான பாலியல் துஷ்பிரயோகம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கைது செய்யப்படும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என அரசுக்கு பலரும் வலியுறுத்தி வருகின்றனர். #Bihar #SexualAbuse
    ×