search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    தென்காசி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை- முதியவருக்கு வலைவீச்சு

    செங்கோட்டை அருகே உள்ள கட்டளைகுடியிருப்பில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை போலீசார் தேடி வருகின்றனர்.
    நெல்லை:

    செங்கோட்டை அருகே உள்ள கட்டளைகுடியிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் காங்கேயன்(வயது 60). இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 7-ம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமியை பாலியல் சீண்டல்கள் செய்துள்ளார்.

    உடனே அந்த சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் காங்கேயனை எச்சரித்துள்ளனர்.

    இந்நிலையில் கடந்த 25-ந்தேதி சிறுமியை மீண்டும் காங்கேயன் அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் தென்காசி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.

    அதன்பேரில் போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதில் காங்கேயன் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது.

    இதற்கிடையே காங்கேயன் போலீசாருக்கு பயந்து தலைமறைவானார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    Next Story
    ×