search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேனியில் மைனர் பெண்ணை திருமணம் செய்து பாலியல் கொடுமை
    X

    கோப்பு படம்.

    தேனியில் மைனர் பெண்ணை திருமணம் செய்து பாலியல் கொடுமை

    • தனது மனைவியை உடலாலும், மனதாலும் சித்ரவதை செய்து வந்துள்ளார்.
    • திருமணத்தின்போது 12 பவுன் நகை, ரூ.2லட்சம் ரொக்கம் மற்றும் சீர்வரி சைகள் கொடுக்கப்பட்டு ள்ளது.

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் வெள்ளையம்மாள்புரம் ரைஸ்மில் தெருவை சேர்ந்தவர் கவிதா(26). இவருக்கு 16 வயது இருக்கும் போதே கார்த்திக்(35) என்பவருடன் திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணத்தின்போது 12 பவுன் நகை, ரூ.2லட்சம் ரொக்கம் மற்றும் சீர்வரி சைகள் கொடுக்கப்பட்டு ள்ளது.

    இவர்களுக்கு 2 வயதில் ஒரு மகள் உள்ளார். திருமணத்தில் இருந்தே கணவர் சரிவர வேலைக்கு செல்லாமல் குடும்ப தேவைக்கும் பணம் கொடுக்காமல் இருந்து வந்துள்ளனர். மேலும் தனது மனைவியை உடலாலும், மனதாலும் சித்ரவதை செய்து வந்துள்ளார். மேலும் அவரது நகைகளையும் பறித்து வைத்துக்கொண்டு தராமல் இருந்துள்ளார்.

    இதுகுறித்து உத்தம பாளையம் அனைத்து மகளிர் போலீசில் கவிதா புகார் அளித்தார். அதன்பே ரில் கார்த்திக், அவரதுதந்தை சோனைமுத்து, தங்கை சோபனா(28) ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×