search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாசரேத் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை  கொடுத்த வியாபாரி- போக்சோவில்  வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை
    X

    நாசரேத் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வியாபாரி- போக்சோவில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை

    • வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அங்கு வந்த தர்மராஜ் எனக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக புகரில் சிறுமி தெரிவித்துள்ளார்.
    • போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து தர்மராஜை தேடி வருகின்றனர்.

    திருச்செந்தூர்:

    நாசரேத் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    நான் 10-ம் வகுப்பு படித்து வருகிறேன். எங்கள் பகுதிக்கு நாசரேத் பிரகாசபுரத்தை சேர்ந்த வியாபாரியான தர்மராஜ் என்பவர் அடிக்கடி வருவார்.

    இதனால் அவர் என்னிடம் சகஜமாக பேசி பழகி வந்தார். அதே போன்று சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அங்கு வந்த தர்மராஜ் எனக்கு பாலியல் தொந்தரவு செய்தார்.

    தொடர்ந்து அவர் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த சிறுமி கூறியிருந்தார்.

    இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட திருச்செந்தூர் அனைத்து மகளிர் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தர்மராஜை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×