என் மலர்
நீங்கள் தேடியது "மாணவன்"
- பள்ளி நிர்வாகம் தவறை ஒப்புக்கொண்டுள்ளது
- குழந்தை உடல் ரீதியாக காயமடையவில்லை என்றாலும், உளவியல்ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கலாம் என பெற்றோர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
சத்தீஸ்கரில், வீட்டுப்பாடம் முடிக்காததால் 4 வயது மாணவன் மரத்தில் கட்டி தொங்கவிடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கரின் சூரஜ்பூர் நகரில் உள்ள நாராயண்பூர் கிராமத்தில், தனியார் பள்ளி ஒன்றில் நடந்த இந்த சம்பவம் தொடர்பான வீடியோ, சமூக ஊடகங்களில் வைரலானதை தொடர்ந்து பெரும் சீற்றத்தை தூண்டியுள்ளது. நர்சரி முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள ஹான்ஸ் வாஹினி வித்யா மந்திர் பள்ளி திங்கள்கிழமை காலை வழக்கம்போல திறக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் பள்ளிக்கு வந்தநிலையில், நர்சரி வகுப்பில் ஆசிரியர் காஜல் சாஹு வீட்டுப்பாடங்களை சரிப்பார்த்துள்ளார்.
அப்போது அதில் ஒரு மாணவன் மட்டும் வீட்டுப்பாடத்தை முடிக்காநிலையில், அவரை வகுப்பிலிருந்து வெளியேற்றியுள்ளார். பின்னர் மற்றொரு ஆசிரியரின் உதவியோடு மாணவனின் சட்டையில் கயிற்றால் கட்டி, பள்ளி வளாகத்தில் இருந்த ஒரு மரத்தில் அவனை தொங்கவிட்டுள்ளார். நான்கு வயது சிறுவன் மணிக்கணக்கில் மரத்தில் தொங்கிய நிலையில், அழுது, கூச்சலிட்டுள்ளான். குழந்தையின் அழுகுரலை அலட்சியப்படுத்திய ஆசிரியர் அங்கேயே நின்றுள்ளார். இதனை அருகில் இருந்த வீடியோ எடுத்துள்ளார். அதனை தடுக்க முயன்றுள்ளனர்.

சம்பவம் நடைபெற்ற தனியார் பள்ளி
இருப்பினும் அவர் அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். வீடியோ வைரலானதை தொடர்ந்து வட்டார கல்வி அதிகாரி (BEO) டி.எஸ். லக்ரா உடனடியாக பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். விசாரணை அறிக்கை மேல் நடவடிக்கைக்காக மூத்த அதிகாரிகளுக்கு அனுப்பப்படும் என்று அவர் கூறினார். இந்த சம்பவம் தனது கவனத்திற்கு வந்துள்ளதாக மாவட்ட கல்வி அதிகாரி (DEO) அஜய் மிஸ்ரா உறுதிப்படுத்தினார்.
தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும்நிலையில், பள்ளி நிர்வாகம் தவறை ஒப்புக்கொண்டுள்ளது. பள்ளி நிர்வாகி பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார். குழந்தை உடல் ரீதியாக காயமடையவில்லை என்றாலும், உளவியல்ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கலாம் என பெற்றோர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் இந்த சம்பவத்திற்கு உள்ளூர்வாசிகளும், சமூக ஆர்வலர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
- 26 வயது ஆசிரியையை ஒருதலைபட்சமாக காதலித்துள்ளான்.
- ஆசிரியை புகார் அளித்ததால் வேறு பள்ளிக்கு மாறி படித்து வந்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலத்தில் 26 வயது ஆசிரியையை ஒருதலையாக காதலித்த மாணவன், அந்த ஆசிரியை மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் நரசிங்கபூர் மாவட்டத்தில் உள்ள கோட்வாலி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பள்ளியில் 18 வயது மாணவன் சூர்யான்ஸ் கோச்சார் படித்து வந்துள்ளான். இதே பள்ளியில் 26 வயதான ஆசிரியை ஒருவர் பணியாற்றி வந்துள்ளார்.
கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பு, ஆசிரியை மீது அந்த மாணவனுக்கு ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆசிரியையிடம், தாங்களை விரும்புவதாக தெரிவித்துள்ளான். ஆனால் ஆசிரியை அதை ஏற்கவில்லை. அந்த மாணவன் மீது புகார் அளித்ததாக தெரிகிறது. இதனால் அந்த பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்டு, மற்றொரு பள்ளியில் சேர்ந்துள்ளான்.
கடந்த 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று, அந்த ஆசிரியை சேலை அணிந்து பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது அந்த மாணவன் அருவருக்கத்தக்க வகையில் பேசியுள்ளார். இதனால் அந்த ஆசிரியை புகார் அளித்துள்ளார். இதனால் கோபம் அடைந்த அந்த மாணவன், பாட்டிலில் பெட்ரோல் வாங்கிக் கொண்டு நேராக அந்த ஆசிரியை வீட்டிற்கு சென்றுள்ளான்.
ஆசிரியை சுதாரிப்பதற்குள் அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளான். அருகில் உள்ளவர்கள் தீயை அணைத்து மருத்துவமனையில் சேர்த்தனர். ஆசிரியை உடலில் 10 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை தீக்காயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் உயிருக்கு ஆபத்தான நிலை இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதி செய்து அநத் மாணவனை கைது செய்துள்ளனர்.
- ஆட்சியர் பள்ளிக்கு சென்று, மாணவர் விஜய் படிக்கும் வகுப்பறையில் அவரை சந்தித்து கலந்துரையாடினார்.
- மாணவன், ஆட்சியரிடம் போட்டித் தேர்வுகளை எந்த மொழியில் எழுதினீர்கள்? என கேட்டான்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியில் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவர் விஜய், ஆட்சியர் துர்காமூர்த்திக்கு கோரிக்கை கடிதம் ஒன்று அனுப்பி இருந்தார்.
அதில் 'வாட்ஸ்-அப் குழுக்களில் பகிரப்பட்ட குறுஞ்செய்தி மூலம் ஆட்சியர் பணிக்கு நீங்கள் எவ்வளவு கடினமாக உழைத்து வந்துள்ளீர்கள் என்பதை நான் அறிந்தேன். எனவே தாங்கள் எங்களது பள்ளிக்கு வரவேண்டும்' என்று கோரிக்கை விடுத்து இருந்தார்.
அந்த மாணவரின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், நேற்று எருமப்பட்டி பேரூராட்சியில் ஆய்வு பணிகளை மேற்கொண்ட ஆட்சியர், அங்குள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு சென்று, மாணவர் விஜய் படிக்கும் வகுப்பறையில் அவரை சந்தித்து கலந்துரையாடினார்.
ஆட்சியர் துர்காமூர்த்தி, மாணவன் எழுதிய கடிதத்தை படித்தபோது கண்கலங்கினார்.
மழைக்காக காத்திருக்கும் பயிர்களைப்போல உங்கள் வருகைக்காக காத்திருக்கிறோம் என்று மாணவன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதை வாசித்த அவர், மாணவனை பாராட்டி புத்தகத்தை பரிசாக வழங்கினார்.
அப்போது மாணவன், ஆட்சியரிடம் போட்டித் தேர்வுகளை எந்த மொழியில் எழுதினீர்கள்? என கேட்டான். அதற்கு ஆட்சியர், ஆங்கிலத்தில் எழுதினேன் என்றார்.
உடனே ஏன் தமிழில் எழுத முடியாதா? என மாணவர் கேள்வி எழுப்பினார். அதற்கு ஆட்சியர், 'தாராளமாக தமிழில், நமது தாய்மொழியில் எழுதலாம். இந்திய ஆட்சிப்பணிக்கு தேர்வு பெற்றவர்கள், பலர் தங்கள் தாய்மொழியில் எழுதி உள்ளார்கள். அதிலும் தமிழில் எழுதியவர்கள் அதிகமானவர்கள் உள்ளனர்' என்றார். இவ்வாறு மாணவர் மற்றும் ஆட்சியர் இடையே கலந்துரையாடல் சுவாரசியமாக நடந்தது.
தொடர்ந்து மாணவர்களுடன் கலந்துரையாடிய ஆட்சியர், நீங்கள் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு, பல்வேறு சாதனையாளர்களாக வரவேண்டும் என அறிவுரைகள் வழங்கினார். மேலும் தன்னை பள்ளிக்கு அழைத்த மாணவருக்கு ஆட்சியர் புத்தகம் ஒன்றை பரிசாக வழங்கியும் பாராட்டினார்.
- மாணவன் தனது வீட்டிற்கு சென்று புத்தகப்பைக்குள் அரிவாளை எடுத்து வைத்துக்கொண்டான்.
- போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவர்களை அழைத்து விசாரித்துள்ளனர்.
சுரண்டை:
தென்காசி மாவட்டம் சுரண்டையை அடுத்த சேர்ந்தமரம் அருகே உள்ள வெள்ளாளங்குளம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இதில் பிளஸ்-2 படிக்கும் மாணவன் ஒருவன் சம்பவத்தன்று சக மாணவனை விளையாட்டாக தலையில் தட்டியுள்ளான். இதைப்பார்த்து அந்த மாணவன் கோபம் அடைந்து திட்டியுள்ளான்.
அதன் பின்னர் சக மாணவர்கள் அவர்களை சமாதானப்படுத்தி உள்ளனர். ஆனாலும் தன்னை தலையில் தட்டிய மாணவர் மீது தொடர்ந்து ஆத்திரத்தில் இருந்த அந்த மாணவன் தனது வீட்டிற்கு சென்று புத்தகப்பைக்குள் அரிவாளை எடுத்து வைத்துக்கொண்டான்.
பின்னர் மறுநாள் பள்ளிக்கு வந்தபோது, தனது தலையில் தட்டிய சக மாணவனை அவன் கொண்டு வந்திருந்த அரிவாளை காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவன் தனது ஆசிரியரிடம் தகவலை தெரிவித்துள்ளான்.
இதுகுறித்து உடனடியாக சேர்ந்தமரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவர்களை அழைத்து விசாரித்துள்ளனர். மேலும் சம்பவம் குறித்து அரிவாள் வைத்திருந்த மாணவன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆண்டு விழா நடனத்திற்கு தயார் செய்யும்போது மாணவன் மீது ஒரு ஈர்ப்பு.
- அந்த மாணவனை தன் வலையில் வீழ்த்தி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 40 வயது ஆசிரியை, 16 வயது மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மும்பையில் உள்ள ஒரு பள்ளியில் ஆங்கிலம் ஆசிரியையாக ஒருவர் பணிபுரிந்து வந்துள்ளார். அவருக்கு வயது 40. குழந்தைகள் உள்ளன.
2023-ஆம் ஆண்டு அந்த மாணவன் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளான். அந்த வருடம் டிசம்பர் மாதம் பள்ளி ஆண்டு விழாவில் நடனம் ஆடுவதற்கான குழுவை அமைக்கும் பணியில் ஆசிரியை ஈடுபட்டுள்ளார். அப்போது அந்த மாணவனால் ஈர்க்கப்பட்டுள்ளார். அதனைத்தொடர்ந்து 2024 ஜனவரி மாதம் அந்த மாணவவை நோக்கி பாலியல் சைகைகளும் காட்டியுள்ளார்.
இதனால் அந்த மாணவன், பயந்து ஒதுங்கியுள்ளான். ஆசிரியையை சந்திப்பதை தவிர்த்துள்ளான். ஆனால் ஆசிரியை அந்த மாணவின் பெண் தோழிகளை பிடித்து (இவர்கள் பள்ளியில் படிக்கவில்லை) பேசுவதற்கு உதவி கேட்டுள்ளார்.
மேலும், அந்த மாணவரிடம், ஆசிரியையின் நண்பர்கள் வயதான பெண்களுடன், இளம் பையன்கள் தொடர்பு வைத்துக் கொள்வது தற்போது சகஜம் எனத் தெரிவித்துள்ளனர். மேலும், அவருக்கு நீ, உனக்கு நீ என இருவரும் படைக்கப்பட்டவர்கள் எனத் தெரிவித்துள்ளனர். இதனால் ஆசிரியையை சந்திக்க மாணவன் முடிவு செய்துள்ளான்.
இதனைத் தொடர்ந்து தொடர்ச்சியாக அந்த மாணவனை ஆசிரியை காரில் ஏற்றி ஒதுக்குப்புறமான இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அவனது ஆடைகளை கழற்றி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அடுத்த சில நாட்களில் அந்த மாணவன் பதற்றமான நிலையை உணரும்போது, அதற்கான மாத்திரிகைள் வழங்கியுள்ளார்.
மேலும், நட்சத்திர ஓட்டலுக்கு அழைத்துச் சென்று, மது அருந்த வைத்து, பாலியல் தொல்லைக்கு உட்படுத்தியிருக்கலாம் எனவும் விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மாணவனின் செயல்பாட்டில் சந்தேகம் வர, பெற்றோர் அவனிடம் விசாரித்துள்ளனர். அப்போது, மாணவன் தனக்கு நடந்த அவல நிலையை விவரித்துள்ளான். பையன் விரைவில் பள்ளி படிப்பை முடிக்கப் போகிறான். இந்த விசயத்தை அப்படியே மறைத்து விடுவோம். அதன்பின் ஆசிரியை பையனை தொடரமாட்டார் என நினைத்துள்ளனர்.
ஆனால் நிலையை மேலும் மோசமானது. மாணவன் 12ஆம் வகுப்பு முடித்து வெளியேறிய பின்னரும், அந்த ஆசிரியை தொடர்ந்து தொடர்பு கொண்டுள்ளார். அவருடைய வீட்டு வேலைக்காரர் மூலம் அந்த மாணவனை தொடர்பு கொண்டுள்ளார். இதனால் அந்த மாணவின் பெற்றோர், போலீசை அணுகி புகார் அளித்துள்ளனர்.
போலீசார் போக்சோ சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் கல்லேரிபட்டு கிராமத்தை வசீகரன் என்ற மாணவனும் பஸ்சில் வந்து இறங்கினார்.
- காயமடைந்த மாணவன் சதீஷ்குமாரை மீட்டு ஆரணி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் கோட்டை வீதியில் அரசு உதவி பெறும் சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது.
இந்தப் பள்ளியில் ஆரணி மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
ஆரணி அருகே உள்ள சுந்தரீகம்பட்டு கிராமத்தை சேர்ந்த நெசவுத் தொழிலாளி மேகநாதன் மகன் சதீஷ்குமார் (வயது 15) என்பவர் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இன்று காலை வழக்கம் போல் சதீஷ்குமார் அரசு பஸ்சில் ஏறி பள்ளிக்கு புறப்பட்டு வந்தார். இதே பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் கல்லேரிபட்டு கிராமத்தை வசீகரன் என்ற மாணவனும் பஸ்சில் வந்து இறங்கினார்.
இவர்கள் இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பஸ்சில் இருந்து இறங்கிய சதீஷ்குமார் பள்ளியில் இருந்து 150 மீட்டர் தொலைவில் உள்ள ஆரணி சார் பதிவாளர் அலுவலகம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கும் வசீகரனுக்கும் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த வசீகரன் கத்தியால் சதீஷ்குமாரின் பின்பக்க கழுத்தில் பக்கவாட்டில் குத்தினார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது .அதனை தடுக்க முயன்றபோது சதீஷ்குமாரின் கைவிரல்களிலும் கத்தி வெட்டு விழுந்தது.
இதனை கண்ட சக மாணவர்கள் அலறி அடித்தபடி ஓடினர். அங்கிருந்த பொதுமக்கள் மாணவர்களை விலக்கி விட்டனர்.
காயமடைந்த மாணவன் சதீஷ்குமாரை மீட்டு ஆரணி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த மோதலில் மாணவர் வசீகரனுக்கும் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவரும் அதே ஆஸ்பத்திரியில் சேர்ந்து சிகிச்சை பெற்றார்.
நடுரோட்டில் மாணவர்கள் மோதிக்கொண்ட சம்பவம் ஆரணி நகர பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து ஆரணி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக பள்ளி நிர்வாகத்தினர் கூறுகையில்:-
மோதலில் ஈடுபட்ட 2 மாணவர்களும் இந்த ஆண்டுதான் பள்ளியில் சேர்ந்தனர். அவர்களுக்கு இடையே என்ன தகராறு என்பது தெரியவில்லை. இது குறித்து விசாரித்து வருகிறோம் என்றனர்.
- கடந்த மூன்று ஆண்டுகளாக இவரிடம் அந்த மாணவன் டியூஷன் பயின்று வந்துள்ளார்.
- மருத்துவப் பரிசோதனையில் அந்தப் பெண் ஐந்து மாத கர்ப்பிணி என்பது தெரியவந்துள்ளது.
குஜராத் மாநிலம் சூரத்தில், 14 வயது மாணவனால் 23 வயது டியூஷன் ஆசிரியை கர்ப்பமாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மாதம் 25 ஆம் தேதி டியூஷன் ஆசிரியையும் மாணவரும் வீட்டை விட்டு ஓடியுள்ளனர். நான்கு நாள் தேடுதலுக்குப் பிறகு செல்போன் சிக்னல் மூலம் குஜராத்-ராஜஸ்தான் எல்லைக்கு அருகே இருவரையும் போலீசார் கண்டுபிடித்தனர்.
டியூஷன் ஆசிரியை சூரத்தில் உள்ள அவரது வீட்டிலும், கைது செய்யப்படுவதற்கு முன்பு அவர்கள் சென்ற இடங்களிலும், சிறுவனுடன் பலமுறை உடல் உறவில் ஈடுபட்டுள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
கடந்த மூன்று ஆண்டுகளாக இவரிடம் அந்த மாணவன் டியூஷன் பயின்று வந்துள்ளார். கடந்த ஓராண்டாக இவர்கள் மிக நெருக்கமாக இருந்ததாகவும் இருவரும் பல மாதங்களாக உடல் ரீதியான உறவில் ஈடுபட்டதாக அப்பெண் ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்நிலையில், மருத்துவப் பரிசோதனையில் அந்தப் பெண் ஐந்து மாத கர்ப்பிணி என்பது தெரியவந்துள்ளது. 14 வயது சிறுவன் தான் அந்த குழந்தையின் தந்தை என்று அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய போலீசார், "தனக்கும் அந்த சிறுவனுக்கும் சிறந்த வாழ்க்கை அமைய, கருவை கலைக்க அப்பெண் விருப்பம் தெரிவித்துள்ளார். நீதிமன்றம் அனுமதி அளித்தவுடன் கருவை கலைக்க நாங்கள் நடவடிக்கை எடுப்போம். கருக்கலைப்புக்குப் பிறகு டிஎன்ஏ பரிசோதனை நடத்தப்படும்" என்று தெரிவித்தனர்.
- ஆசிரியரான லால் நவீன் பிரதாப் சிங், மது குடித்துவிட்டு பள்ளிக்கு வந்துள்ளார்.
- வகுப்பறையில் மாணவர்களுக்கு ஆசிரியர் மது ஊற்றி குடிக்க கொடுத்துள்ளார்.
மத்தியபிரதேச மாநிலத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர் ஒருவர் மது ஊற்றி குடிக்க கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசு தொடக்க பள்ளி ஆசிரியரான லால் நவீன் பிரதாப் சிங், மது குடித்துவிட்டு பள்ளிக்கு வந்துள்ளார். பின்னர் வகுப்பறையில் மாணவர்களுக்கு மது ஊற்றி குடிக்க கொடுத்துள்ளார். இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.
வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சம்பந்தப்பட்ட ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக, உத்தரப் பிரதேசத்தில் சளி, இருமலுக்கு சிகிச்சை பெற வந்த சிறுவனை மருத்துவர் சிகரெட் பிடிக்க வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
- ஒரு மாணவனை இன்னொரு மாணவன் அரிவாளால் வெட்டியுள்ளார்.
- காயமடைந்த மாணவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் எட்டாம் வகுப்பு மாணவனை சக மாணவன் அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பாளையங் கோட்டை வ.உ.சி. மைதானத்தின் பின்புறம் இயங்கி வரும் தனியார் மெட்ரிக் பள்ளியில் ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் 8-ம் வகுப்பு பிரிவு ஒன்றில் ஆசிரியை ரேவதி பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது மேலப்பாளையம் பகுதியை சேர்ந்த ஒரு மாணவனுக்கும், கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த ஒரு மாணவனுக்கும் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த கிருஷ்ணாபுரம் மாணவர் தனது பையில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சக மாணவனை சரிமாரியாக வெட்டினார். இதில் அந்த மாணவனின் கை, தோல்பட்டை, முதுகு உள்ளிட்ட இடங்களில் வெட்டு விழுந்தது. இதனால் படுகாயம் அடைந்த அந்த மாணவன் அலறி துடித்தான்.
உடனே ஆசிரியை ரேவதி ஓடி சென்று வெட்டிய மாணவனை தடுக்க முயன்றார். இதில் ஆசிரியைக்கும் வெட்டு விழுந்தது. இதைப்பார்த்து சக மாணவர்கள் அலறல் சத்தம் போட்டனர்.
உடனே வெட்டிய மாணவன் சட்டையில் ரத்தம் சொட்ட சொட்ட அரிவாளுடன் வெளியேறி அருகே உள்ள பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்துக்கு சென்றான். அங்கிருந்த போலீசார் மாணவனிடம் இருந்த அரிவாளை கைப்பற்றி விசாரித்தபோது சக மாணவனை அரிவாளால் வெட்டியதாக கூறி உள்ளான்.
இதைக்கேட்டு அதிர்ச்சிய டைந்த போலீசார் மாணவனை கைது செய்ததோடு, உடனடியாக பள்ளிக் கூடத்துக்கு விரைந்து சென்றனர். மேலும் படுகாயம் அடைந்த மாணவனையும், வெட்டுப்பட்ட ஆசிரியையும் அருகே உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.அங்கு படுகாயம் அடைந்த மாணவனுக்கும், ஆசிரியைக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தனியார் பள்ளியில் மாணவன் வெட்டப்பட்ட சம்பவம் பற்றி அறிந்ததும் போலீஸ் அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பள்ளியில் இந்த 2 மாணவர்களுக்கும் இடையே பென்சில் வாங்கியது தொடர்பாக தகராறு ஏற்பட்டது தெரியவந்தது.
அப்போது ஆசிரியை தலையிட்டு 2 மாணவர்களையும் கண்டித்து பிரச்சினையை தீர்த்துள்ளார். மேலும் இதுகுறித்து 2 மாணவர்களின் பெற்றோருக்கும் தகவல் கூறி அவர்களை வரவழைத்து மாணவர்களை கண்டித்து அனுப்பி உள்ளார்.
ஆனால் வெட்டிய மாணவன் இந்த பிரச்சினையை மனதில் வைத்துக்கொண்டு இன்று அரிவாளை பையில் மறைத்து வைத்து எடுத்து வந்து வெட்டியது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே மாணவன் வெட்டுப்பட்ட தகவல் அறிந்து அவனது பெற்றோர் மட்டுமல்லாதது ஏராளமான மாணவர்களின் பெற்றோர் பள்ளிக்கு திரண்டு வந்தனர்.இதைத்தொடர்ந்து பள்ளி முன்பு 20-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக போலீஸ் உதவி கமிஷனர் சுரேஷ் கூறுகையில், பென்சில் கொடுக்கல், வாங்கல் பிரச்சினையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
சம்பந்தப்பட்ட பள்ளி மற்றும் மாணவனின் பெற்றோரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குழந்தைகள் பாதுகாப்பு குழுவினர் பாதிக்கப்பட்ட மாணவன் மற்றும் சம்பவத்தில் ஈடுபட்ட மாணவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே பள்ளி வகுப்பறையில் சுழற்சி முறையில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இன்றும் பள்ளியில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. எதிர்பாராத விதமாக புத்தக பையில் இருந்த அரிவாள் கண்டறியப்படவில்லை என்றார்.
- கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
- கலெக்டரின் பதிலை சமூக வலைதங்களில் பலர் பகிர்ந்து வருகிறார்கள்.
சிவகாசி
விருதுநகர் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினமும் மாலை நேரத்தில் மழை பெய்தது. இதனால் பல இடங்களில் பள்ளி சென்று திரும்பிய மாணவ, மாணவிகள் மழையில் நனைந்தபடி வீட்டிற்கு திரும்பினர். இந்தநிலையில், இரவு 10.10 மணிக்கு சிவகாசியை சேர்ந்த ஒரு மாணவன், விருதுநகர் கலெக்டர் மேகநாதரெட்டியின் டுவிட்டரில் "சார், சிவகாசியில் மாலை முதல் மழை வந்த வண்ணம் இருக்கிறது. நாளை (அதாவது நேற்று) பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை கிடைக்குமா?" என கேள்வி எழுப்பி இருந்தான்.
இதற்கு கலெக்டர் மேகநாதரெட்டி இரவு 10.45 மணிக்கு டுவிட்டரில் பதில் அளித்துள்ளார். அதில் விடுமுறை கிடையாது என்பதை சூசகமாக தெரிவித்து, "மாலையில் மழையை ரசித்த நீ, நாளை வழக்கம் போல் பள்ளிக்கு செல்" என்று ருசிகரமாக பதில் அளித்து இருந்தார். இந்த பதிலை சமூக வலைதங்களில் பலர் பகிர்ந்து வருகிறார்கள்.
+2
- தாய் சரண்யா தனது மகனை உள்ளே அனுப்பாததை கண்டித்து பள்ளி நுழைவாயில் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.
- சுமார் 2 மணிநேரத்திற்கு பின்பு மாணவன் உள்ளே சென்றார். இந்த சம்பவத்தால் பள்ளி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
கொடைக்கானல்:
கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியை சேர்ந்தவர் நாகேந்திரன். இவரது மனைவி சரண்யா. இவர்களது மகன் ரோகன். கீழ்பூமி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறான். இதே பள்ளியில் மாணவனின் தாய் சரண்யா 4 ஆண்டுகளாக அலுவலக கணக்காளராக பணிபுரிந்து வந்தார்.
ஆனால் இவருக்கு எந்தவித சலுகைகளும் வழங்கப்படாததால் பள்ளியை விட்டு நின்றுவிட்டார். இதனைதொடர்ந்து இவருக்கு வழங்கப்படவேண்டிய சம்பள பாக்கியில் இருந்து தனது மகனுக்கு தேவையான கல்வி கட்டணத்தை பிடித்தம் செய்து கொள்ளுமாறு கூறியிருந்தார். அதன்படி பள்ளி நிர்வாகமும் ரோகன் செலுத்தி வேண்டிய கல்வி கட்டணத்தை எடுத்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று பள்ளிக்கு வந்த மாணவனை காவலாளி வாசலிலேயே நிறுத்திவிட்டார். இதுகுறித்து கேட்டபோது கல்வி கட்டணம் செலுத்தாதால் உன்னை உள்ளே விடக்கூடாது என்று அறிவுரை வந்துள்ளது என தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவன் தனது தாயாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த தாய் சரண்யா தனது மகனை உள்ளே அனுப்பாததை கண்டித்து பள்ளி நுழைவாயில் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.
இதுகுறித்து கொடைக்கானல் வருவாய்த்துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் சரண்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கல்வி கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக வகுப்பறைக்குள் நுழையவிடாமல் இருப்பது எந்தவிதத்தில் நியாயம் என கேள்வி எழுப்பினார்.
இதனைதொடர்ந்து பள்ளி நிர்வாகத்திடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின்பு மாணவனை வகுப்பறைக்குள் செல்ல அனுமதித்தனர். இதனால் சுமார் 2 மணிநேரத்திற்கு பின்பு மாணவன் உள்ளே சென்றார். இந்த சம்பவத்தால் பள்ளி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
- வட்டு எறிதல் போட்டியில் மாவட்ட அளவில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.
- திருவண்ணாமலையில் நடைபெறஉள்ள மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
காங்கயம் :
தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை சார்பாக மாவட்ட அளவிலான தடகள போட்டி திருப்பூர் அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் பங்குபெற்ற காங்கயம் சிவன்மலை ஜேஸீஸ் பள்ளி 9-ம் வகுப்பு மாணவன் லிங்கேஷ் 14 வயதிற்குட்பட்ட மாணவர் பிரிவில் வட்டு எறிதல் போட்டியில் மாவட்ட அளவில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். மேலும் இம்மாத இறுதியில் திருவண்ணாமலையில் நடைபெறஉள்ள மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
மாவட்ட அளவில் சாதனை படைத்த மாணவனை பள்ளி பொருளாளர் பழனிச்சாமி, மோகனசுந்தரம், சாவித்திரிசுப்ரமணியம், முதல்வர் சுப்ரமணி,பள்ளியின் தாளாளர்,அகடமிக் டைரக்டர்ஆகியோர் பாராட்டி பரிசளித்தனர்.






