search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "knife attack"

    • சுதாரித்துக் கொண்ட அந்த ஆசாமிகள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
    • ஐந்து பேரை இரண்டு மர்ம நபர்கள் வெட்டியது இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மதுரை:

    மதுரை அவனியாபுரத்தை அடுத்த பெருங்குடியில் நேற்று இரவு அதே பகுதியை சேர்ந்த கணபதி (வயது 28), விஜய் குட்டி (25), அஜித் (24) உட்பட இன்னும் சிலர் ஊருக்குள் உள்ள நாடகமேடை அருகே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இருவர் அஜித் என்பவரிடம் கண்ணா எங்கிருக்கிறார் என்று கேட்டுள்ளனர்.

    அதற்கு அவர்கள் தங்களுக்கு தெரியாது என்று கூறியதையடுத்து வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது திடீரென்று அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அங்கிருந்தவர்களை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதனால் பதட்டமடைந்த ஒரு சிலர் தப்பியோடினர். இதில் அஜித், விஜய் குட்டி, கணபதி ஆகியோர் அரிவாள் வெட்டில் படுகாயம் அடைந்தனர்.

    இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த பெரியசாமி (48) என்னும் கூலித் தொழிலாளி உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட தனது பேரன் சார்வின் (6) என்பவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்வதற்காக அந்த வழியாக வந்து கொண்டிருந்தார்.

    அந்த சமயம் அங்கு கூச்சல் சத்தம் கேட்டதால் நாடகமேடை அருகே சென்றார். அப்போது அந்த 2 பேரும் பெரியசாமி மற்றும் அவரது பேரனையும் அரிவாளால் வெட்டியுள்ளனர். சத்தம் கேட்டு அக்கம்பக் கத்தினர் திரண்டு ஓடி வந்தனர். இதனால் சுதாரித்துக் கொண்ட அந்த ஆசாமிகள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    இந்த சம்பவம் குறித்து பெருங்குடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் திருமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தகுமார் மற்றும் இன்ஸ்பெக்டர் லதா உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற் கொண்டனர்.

    அரிவாளால் வெட்டிய இருவரும் யார், அவர்கள் விசாரித்த கண்ணன் என்பவர் யார், ஜாதி பிரச்சினை காரணமா, அவர்களுக்குள் எதாவது முன்பகை உள்ளதா, இல்லை வந்தவர்கள் எதுவும் போதையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டார் ளா? என போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரையில் ஊருக்குள் புகுந்து முன்பின் தெரியாத ஐந்து பேரை இரண்டு மர்ம நபர்கள் வெட்டியது இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • பள்ளிக்கு வெளியே நடைபெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நான்கு பேர் படுகாயம்.
    • இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அயர்லாந்து நாட்டின் தலைநகர் டப்ளின். இங்குள்ள ஒரு பள்ளிக்கூடத்திற்கு வெளியே திடீரென கத்திக்குத்து சம்பவம் நடைபெற்றது. மர்ம நபர் கண்ணில் தென்பட்டவர்களை கத்தியால் குத்தி தாக்கினார்.

    இந்த சம்பவத்தில் ஐந்து வயது சிறுமி, மேலும் இரு சிறுவர்கள், 30 வயது பெண் உள்பட நான்கு பேர் படுகாயம் அடைந்தனர். இதில் ஐந்து வயது சிறுமி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மற்றவர்கள் பலத்த காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இந்த செய்தி காட்டுத்தீயாக பரவ, சம்பவ இடத்தில் 100-க்கும் அதிகமானோர் கூடினர். அவர்கள் போராட்டத்தில ஈடுபட்டனர். அவர்களை கட்டுப்படுத்த போலீசார் குவிக்கப்பட்டனர்.

    குழந்தைகள் மீது தாக்குதல் நடத்திய கோபத்தில், அவர்கள் வாகனங்களை தீயிட்டு எரித்தனர். மேலும், அருகில் உள்ள கடைகளை சூறையாடினர். சூழ்நிலை மோசமானதைத் தொடர்ந்து போலீசார் அவர்களை கட்டுப்படுத்தும் முயற்சியில் இறங்கினர். இதனால் அசாதாரண சூழ்நிலை நிலவியது.

    இதற்கிடையே, கத்தியால் தாக்குதல் நடத்தப்பட்டது உண்மைதான். ஆனால் பயங்கரவாத செயலுக்கான ஆதாரம் இல்லை. இருந்தபோதிலும் முழு விசாரணை நடத்தப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    போராட்டம் நாடு முழுவதும விரிவடைந்து விடக்கூடாது என போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பாராளுமன்றத்தை சுற்றி போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.

    • காயமடைந்த மாணவியை அருகிலிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர்.
    • கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய இளைஞரை போலீசார் மடக்கிப்பிடித்து கைதுசெய்தனர்.

    சென்னை:

    சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்துவரும் மாணவி ஒருவர், கல்லூரி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

    அப்போது, தன்னை காதலிக்க வேண்டும் என்று நவீன் என்ற இளைஞர் அவரை வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் மாணவி அதனை ஏற்க மறுத்தார்.

    இந்நிலையில் நவீன் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவியின் கழுத்தில் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த மாணவியை அருகிலிருந்தவர்கள்மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

    கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய இளைஞரை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • மகளும், மனைவியும் மாடியில் தூங்க விரும்புவதாகத் தெரிவித்தனர்.
    • அதற்கு அவர் வீட்டின் அறையில்தான் தூங்க வேண்டும் என அனுமதி மறுத்துள்ளார்.

    அகமதாபாத்:

    குஜராத் மாநிலத்தின் சூரத்தில் வசித்து வருபவர் ராமானுஜ சாஹு. இவர் தனது குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்.

    இந்நிலையில், கடந்த 18-ம் தேதி இரவு இவரின் மகளும், மனைவியும் மாடியில் தூங்க விரும்புவதாகத் தெரிவித்தனர். அதற்கு அவர், வீட்டின் அறையில்தான் தூங்க வேண்டும் என அனுமதி மறுத்துள்ளார். இதனால் 3 பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ராமானுஜ சாஹு, வீட்டின் சமையலறையிலிருந்த கத்தியை எடுத்துவந்து மகளைக் குத்தியிருக்கிறார்.

    தடுக்க வந்த குடும்பத்தினரையும் கத்தியால் தாக்கியிருக்கிறார். இதில் அனைத்துக் குடும்ப உறுப்பினர்களுக்கும் கத்திக்காயம் ஏற்பட்டிருக்கிறது. மகளையும், மனைவியையும் கடுமையாகத் தாக்கியிருக்கிறார்.

    ஆத்திரத்தில் மகளை மட்டும் ஏறத்தாழ 25 முறை கத்தியால் குத்திக் கொலைசெய்திருக்கிறார். இந்தக் காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருக்கின்றன.

    இதுதொடர்பாக காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

    வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த தந்தை மகளை 25 முறை கத்தியால் குத்திக் கொன்றது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
    • தாக்குதலுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெர்லின்:

    ஜெர்மனியில் கடந்த சில ஆண்டுகளாக கத்தி தாக்குதல் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. சில தாக்குதல் தீவிரவாதிகளாலும் மற்றவை தீவிர மனநோயால் பாதிக்கப்பட்ட நபர்களாலும் நடத்தப்பட்டன.

    இந்நிலையில ஜெர்மனியின் வடக்கு பகுதியில் ஓடும் ரெயிலில் பயணிகளை குறிவைத்து இன்று கத்தி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஹம்பர்க்-கீல் வழித்தடத்தில் ப்ரோக்ஸ்டெட் ரெயில் நிலையத்தை ரெயில் நெருங்கியபோது மர்ம நபர் தாக்குதல் நடத்தினான். இதில் 2 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார். தாக்குதலுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த தாக்குதலைத் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்துவதற்காக, ஹம்பர்க்-கீல் இடையிலான வழித்தடத்தில் சில ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. 

    • தகாத வார்த்தைகளால் திட்டியதை தட்டி கேட்டதால் ஆத்திரம்
    • ஜெயிலில் அடைக்கப்பட்டனர்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டையை அடுத்த மூக்கனூர் அடியத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி சித்ரா (வயது 45), இவர் சம்பவத்தன்று இரவு 7 மணியளவில் வீட்டுக்கு வெளியே நின்று உறவினர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.

    அப்போது பெரிய முக்கனூர் பகுதியைச் சேர்ந்த குழந்தைவேலு மகன் கவியரசன் (20), புதுப்பேட்டை அருகே உள்ள கல்நார்சம் பட்டி கிழக்கு மேடு பகுதியைச் சேர்ந்த சிவகுமார் மகன் கார்த்திக் ( 18 ), கோவிந்தன் மகன் விஜய் (20) மற்றும் சந்தைத் தோப்பு பகுதியைச் சேர்ந்த தண்டபாணி மகன் பிரதீப் குமார் ( 20 ) ஆகிய 4 பேர் சித்ராவின் உறவினர்களிடம் தகாத வார்த் தைகளால் திட்டினர்.

    இதனை சித்ரா கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கவியரசன் தான் வைத்திருந்த கத்தியால் சித்ராவின் தலை மீது தாக்கியதில் கீழே விழுந்தார். அதன்பின்னர் அனைவரும் சேர்ந்து சித்ராவை காலால் எட்டி உதைத்து காயப்படுத்தினர். படுகாயம் அடைந்த சித்ரா சி கிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    இது சம்பந்தமாக சித்ரா கொடுத்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீஸ் சப் - இன்ஸ்பெக்டர் ஜெயச்சந் திரன் வழக்குப்பதிவு செய்து கவியரசன், விஜய் , மற்றும் பிரதீப் குமார் ஆகிய 3 பேரை கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.

    இவர்களில் கார்த்திக் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • இதில் ஆத்திரம் அடைந்த அந்த நபர் தகாத வார்த்தைகளால் திட்டி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பரத்குமாரை குத்தினார்.
    • நண்பர் ரமேஷ் என்பவருடன் எஸ்.என். பாளையம் அருகே உள்ள டாஸ்மாக் கடைக்கு மதுகுடிக்க சென்றார்

    கோவை:

    கோவை துடியலூர் ஜி.என்.மில் அடுத்த எஸ்.என். பாளையம் பட்டத்தரசி யம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் பரத்குமார் (வயது 24). தொழிலாளி.

    சம்பவத்தன்று இவர் தனது நண்பர் ரமேஷ் என்பவருடன் எஸ்.என். பாளையம் அருகே உள்ள டாஸ்மாக் கடைக்கு மதுகுடிக்க சென்றார். அங்கு தனது நண்பருடன் அமர்ந்து மதுகுடித்தார்.

    அப்போது பரத்குமார் அருகில் அமர்ந்து குடித்து கொண்டு இருந்த நபரின் மது பாட்டிலை தெரியாமல் தட்டி விட்டார். இதனால் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.அங்கிருந்தவர்கள் 2 பேரையும் சமாதானம் செய்தனர்.

    பின்னர் பரத்குமார் தனது நண்பரை அழைத்து கொண்டு அங்கிருந்து சென்றார். இதனை பார்த்த அந்த நபர் அவர்களது பின்னால் வந்து மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த அந்த நபர் தகாத வார்த்தைகளால் திட்டி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பரத்குமாரை குத்தினார். பின்னர் மிரட்டல் விடுத்து அங்கிருந்து சென்றார்.

    பலத்த காயம் அடைந்த பரத்குமாரை அவரது நண்பர் ரமேஷ் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தார். இதுகுறித்து பரத்குமார் துடியலூர் போலீசில் புகார் தெரிவித்தார்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த நபர் அதே பகுதியை சேர்ந்த ரவிக்குமார் (42). தொழிலாளி என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • படுகாயம் அடைந்த அவர்கள் 2 பேரும் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • வெள்ளவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரை கைது செய்தனர்.

    திருவள்ளூர்:

    பூந்தமல்லி அருகே உள்ள கூடப்பாக்கம், குடிசை மாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் சசிகுமார்(25), இவர் அதே பகுதியை சேர்ந்த நண்பரான அஜித் என்பவருடன் செல்போனில் பப்ஜி விளையாட்டை விளையாடினார்.

    அப்போது சசிகுமாருக்கும் அஜித்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் இது கோஷ்டி மோதலாக மாறியது. இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.

    இதில் சசிக்குமார், அஜித் ஆகியோருக்கு கத்திக்குத்து விழுந்தது. படுகாயம் அடைந்த அவர்கள் 2 பேரும் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதுகுறித்து வெள்ளவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜித்தின் உறவினரான செல்வம், சசிகுமாரின் ஆதரவாளர்கள் விஜயகுமார், சாமுவேல், அபிலேஷ் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

    ஊரப்பாக்கம் அருகே அ.தி.மு.க. பிரமுகரின் தந்தைக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


    ஊரப்பாக்கம் அடுத்தகாரணைப் புதுச்சேரி கோகுலம் காலனி விரிவு பகுதி, ராஜி தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் மணிகண்டன் அ.தி.மு.க. மாவட்ட மாணவரணி துணை தலைவராக உள்ளார். நேற்று மாலை ராஜேந்திரன் வீட்டில் இருந்து காரை எடுத்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் திடீரென அவரிடம் தகராறில் ஈடுபட்டு அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்று விட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த ராஜேந்திரன் கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வேதாரண்யம் அருகே முன்விரோதம் காரணமாக மீனவருக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் மணியன் தீவு பகுதியை சேர்ந்தவர் சோமசுந்தரம் (வயது 57). மீனவர். இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த பெட்டிக்கடை வைத்து நடத்தி வரும் மணிராஜா (43) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று சோமசுந்தரம் இருசக்கர வாகனத்தில் அந்த பகுதியில் சென்று கொண்டிருந்த போது மணிராஜா வழிமறித்து தரக்குறைவாக திட்டி, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரை வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த சோமசுந்தரத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து அவரை மேல் சிகிச்சைக்காக நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பத்மசேகர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெட்டிக்கடைக்காரர் மணிராஜாவை கைது செய்தனர்.
    நிலப்பிரச்சினை தொடர்பாக ஏற்பட்ட தகராறில் 2 வாலிபர்களும் ஒருவரை ஒருவர் கத்தியால் குத்திக்கொண்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    கிருஷ்ணராயபுரம்:

    கிருஷ்ணராயபுரம் முதலியார் தெருவை சேர்ந்தவர் முருகதாஸ். இவருடைய மகன் பிரகாஷ் (வயது 29). மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நீலமேகம். இவருடைய மகன் கோபி (23). உறவினர்களான இவர்கள் 2 பேருக்கும் நிலப்பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

    இந்த நிலையில் நேற்று காலை கிருஷ்ணராயபுரம் பஸ் நிறுத்தம் அருகே அவர்கள் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த 2 பேரும் ஒருவரை ஒருவர் கத்தியால் குத்திக்கொண்டனர். இதில் படுகாயம் அடைந்த 2 வாலிபர்களையும் அப்பகுதி மக்கள் மீட்டு கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் 2 பேருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இந்த சம்பவம் குறித்து மாயனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    பாப்பாரப்பட்டி அருகே நிலத்தகராறில் பெண்ணை அரிவாளால் வெட்டிய விவசாயியை போலீசார் கைது செய்தனர்.
    பாப்பாரப்பட்டி:

    பாப்பாரப்பட்டி அருகே உள்ள தொட்டலாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி. இவருடைய தம்பி சின்ன கிருஷ்ணன். விவசாயிகள். அண்ணன், தம்பிக்கு இடையே நிலம் தொடர்பாக தகராறு இருந்து வந்தது. சம்பவத்தன்று சின்னகிருஷ்ணனின் கரும்பு தோட்டத்தை சின்னசாமி வளர்த்து வந்த நாய் சேதப்படுத்தியதாக கூறப்படு்கிறது.

    இதனால் அவர் தனது அண்ணன் மனைவிகண்ணம்மாவை (வயது55) திட்டி உள்ளார். இதனை அவரது மகன் முனியப்பன் தட்டி கேட்டுள்ளார். இதனால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சின்ன கிருஷ்ணன் அரிவாளால் கண்ணம்மாவைவெட்டினார்.

    இதில் அவருக்கு கை எலும்பு முறிந்தது. இந்த மோதலில் சின்ன கிருஷ்ணனின் மகன் விக்னேசுக்கு காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவர்கள் 2 பேரையும் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் பாப்பாரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்ன கிருஷ்ணனை கைது செய்தனர். மேலும் கண்ணம்மாள், முனியப்பன், விக்னேஷ் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×