என் மலர்
நீங்கள் தேடியது "private school"
- ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நீர்ஜா மோடி என்ற பிரபல பள்ளி இயங்கி வருகிறது.
- ஆசிரியரிடம் இதுபற்றி கேட்டபோது , அவர் அலட்சியமாக, "இது ஒரு இருபாலர் பள்ளி, அவர்கள் ஆண்களிடமும் பேசக் கற்றுக்கொள்ள வேண்டும்" என்று கூறியுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நீர்ஜா மோடி என்ற பிரபல பள்ளி இயங்கி வருகிறது.
கடந்த நவம்பர் 1 ஆம் தேதி பள்ளியில் 6ஆம் வகுப்பு படிக்கும் அமய்ரா 9 வயது சிறுமி பள்ளி கட்டிடத்தின் நான்காவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். அமய்ரா மாடியில் இருந்து குடித்தும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அமய்ரா கடந்த 1 வருடமாக சக மாணவர்களால் பாலியல் வக்கிரத்துடன் மோசமான வார்த்தைகளால் வாய்மொழியாக துன்புறுத்தப்பட்டு வந்ததாக பெற்றோர் குற்றம்சாட்டி உள்ளனர்.
1 வருடதிற்கு முன்பு, "நான் பள்ளி செல்ல மாட்டேன்.. என்னை அனுப்பாதீர்கள்' என தன்னிடம் கூறியதை பதிவு செய்து அந்த ஆடியோவை அமய்ராவின் வகுப்பு ஆசியருக்கு தாயார் ஷிவானி மீனா அனுப்பி உள்ளார்.

மேலும் தனது மகளின் அச்சம் குறித்து பல முறை பள்ளி நிர்வாகத்திடம் புகாரளித்தும் அது அலட்சியம் செய்யப்பட்டதாக சிறுமியின் தாயார் தெரிவித்துள்ளார்.
அமய்ராவின் தந்தை விஜய் மீனா கூறுகையில், பெற்றோர்-ஆசிரியர் சந்திப்பின் போது, சில மாணவர்கள் எனது மகளையும் மற்றொரு பையனையும் நோக்கி சைகைகளைச் செய்தனர். இது அமய்ராவை பயமுறுத்தி, தனது பின்னால் ஒளிந்து கொள்ள வைத்தது.
ஆசிரியரிடம் இதுபற்றி கேட்டபோது, அவர் அலட்சியமாக, இது ஒரு இருபாலர் பள்ளி, அவர்கள் ஆண்களிடமும் பேசக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று பதிலளித்தார்" என தெரிவித்தார்.
தற்கொலை செய்வதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, அமய்ரா தனது வகுப்பு ஆசிரியரிடம் இரண்டு முறை சென்று பேசுவது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.
இருப்பினும், சிபிஎஸ்இ விதிகளின்படி வகுப்பறை சிசிடிவிகளில் ஆடியோ பதிவு கட்டாயமாக இருந்தாலும், இந்த காட்சிகளில் எந்த ஒலியும் இல்லை. இதனால் அவர் ஆசிரியரிடம் என்ன பேசினார் என்பது தெரியவில்லை.
ஆறு மாடி கட்டிடத்திற்கு குறைந்தபட்ச பாதுகாப்பாக கிரில் அல்லது வலைகள் ஏன் நிறுவப்படவில்லை? சிசிடிவி காட்சிகளில் ஏன் ஆடியோ இல்லை? லட்சக்கணக்கில் கட்டணங்களை வசூலிக்கும் நிர்வாகத்திற்கு எந்த பொறுப்பும் இல்லையா?" என்று அமய்ராவின் உறவினர் சாஹில் கேள்வி எழுப்பி உள்ளார்.
இந்த குற்றச்சாட்டுகள் குறித்து பள்ளி நிர்வாகம் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. பெற்றோரிடமிருந்து வாக்குமூலங்களை எடுத்து அனைத்து கோணங்களிலும் விசாரித்து வருவதாக ஜெய்ப்பூர் டிசிபி ராஜர்ஷி ராஜ் வர்மா தெரிவித்துள்ளார்.
- ஜெய்ப்பூரில் உள்ள பிரபல பள்ளியில் அமிரா என்ற 9 வயது சிறுமி 6ம் வகுப்பு படித்து வந்தார்.
- சிறுமி தற்கொலை செய்துகொண்டது குறித்த தகவலை பள்ளி நிர்வாகம் மறைத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள பிரபல பள்ளியில் அமிரா என்ற 9 வயது சிறுமி 6ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், மாணவி அமிரா கடந்த வெள்ளிக்கிழமை மாலை பள்ளியின் 4வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
போலீசார் விசாரணையில், ஆசிரியர்கள் தொடர்ந்து துன்புறுத்தியதால் சிறுமி தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. சிறுமி தற்கொலை செய்துகொண்டது குறித்த தகவலை பள்ளி நிர்வாகம் மறைத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சிறுமி பள்ளியின் 4வது மாடிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- என்ன நடக்கிறது என்று தெரியாமல் இருந்த அவரது தந்தை, இறுதியாகச் சிறுமி நடந்தவற்றை சொன்னபோது அதிர்ச்சியில் உரைந்தார்.
- வெளியே சொன்னால் தேர்வில் தோல்வியடையச் செய்வேன், உன் குடும்பத்திற்கு தீங்கு விளைவிப்பேன்
உத்தரப் பிரதேசத்தில் 8 ஆம் வகுப்பு மாணவியை பள்ளி மேலாளர் தொடர் பாலியல் துன்புறுத்தல் செய்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
தியோரியா மாவட்டத்தில் சதார் கோட்வாலி பகுதியை சேர்ந்த அந்த சிறுமி அங்குள்ள தனியார் பள்ளியொன்றில் பயின்று வந்தார்.
அண்மை காலமாக சிறுமி பள்ளியிலும் வீட்டிலும் விநோதமாக நடந்துகொண்டிருக்கிறார். என்ன நடக்கிறது என்று தெரியாமல் இருந்த அவரது தந்தை, இறுதியாகச் சிறுமி நடந்தவற்றை சொன்னபோது அதிர்ச்சியில் உரைந்தார்.
பள்ளி மேலாளர் தேவேந்திர குஷ்வாஹா தன்னை அவருடைய அலுவலகத்திற்கு அழைத்து, கதவைப் பூட்டி, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும், வெளியே சொன்னால் தேர்வில் தோல்வியடையச் செய்வேன், உன் குடும்பத்திற்கு தீங்கு விளைவிப்பேன் என்று மிரட்டியதாகவும் சிறுமி தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார். மேலும் பல மாதங்களாக இந்த துன்புறுத்தல் தொடர்ந்தது என்று சிறுமி நடுக்கத்துடன் கூறியுள்ளார்.
சிறுமியின் தந்தை அளித்த புகாரைத் தொடர்ந்து, காவல்துறை பள்ளி மேலாளர் தேவேந்திர குஷ்வாஹாவை கைது செய்து விசாரித்து வருகிறது. அவர் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
- எட்டாம் வகுப்பு மாணவன், சக வகுப்பு மாணவனை அரிவாளால் வெட்டி தாக்குதல் நடத்தியிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
- மாணவர்களிடையே இதுபோன்ற வன்முறை கலாச்சாரம் தலையெடுத்திருப்பது, ஒரு சமூகமாக நாம் எவ்வளவு தோல்வியடைந்திருக்கிறோம் என்பதற்கு எடுத்துக்காட்டு.
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
திருநெல்வேலி மாவட்டம் பாளையம்கோட்டை தனியார் பள்ளி ஒன்றில், எட்டாம் வகுப்பு மாணவன், சக வகுப்பு மாணவனை அரிவாளால் வெட்டி தாக்குதல் நடத்தியிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
தொடர்ச்சியாக பள்ளி மாணவர்களிடையே இதுபோன்ற வன்முறை கலாச்சாரம் தலையெடுத்திருப்பது, ஒரு சமூகமாக நாம் எவ்வளவு தோல்வியடைந்திருக்கிறோம் என்பதற்கு எடுத்துக்காட்டு. தவறான மனிதர்களை முன்மாதிரிகளாகக் கொண்டு, இத்தனை சிறு வயதிலேயே அரிவாளைக் கையில் எடுக்கும் அளவுக்கு, நமது குழந்தைகள் மனதில் வன்முறை எண்ணம் தலைதூக்கியிருக்கிறது என்றால், பெற்றோர்கள், ஆசிரியர்கள், சமூகம், அரசு என அனைவருமே இதற்கு பொறுப்பு.
பள்ளி மாணவர்கள் தங்கள் சுற்றத்தாரையே முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு வளர்கிறார்கள். அப்படிப்பட்ட சூழலில், கடுமையான குற்றங்களைச் செய்யும் குற்றவாளிகள் மீது கூட நடவடிக்கை எடுக்க அனுமதிக்காமல், காவல்துறையின் கைகளைக் கட்டிப் போட்டிருக்கிறது திமுக அரசு. மேலும், உச்ச வரம்பு வைத்து அரசே மது விற்பனை செய்வதாலும், பெருகிவரும் போதைப்பொருள் புழக்கத்தாலும், தமிழ்ச் சமுதாயம் நிலைதடுமாறிக் கொண்டிருக்கிறது. இதனால் மாணவ சமுதாயத்தில் ஏற்பட்டிருக்கும் எதிர்விளைவுகளை முதலமைச்சர் மு.க. இனியாவது உணர வேண்டும்.
பள்ளி ஆசிரியர்களால் தங்கள் பணிச்சுமைகளைக் கடந்து, அத்தனை குழந்தைகளையும் கண்காணிப்பது என்பது இயலாதது. எனவே, பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை எப்போதும் தங்கள் கண்காணிப்பில் வைத்திருப்பது சமூகத்திற்கே நல்லது. சரியான வழியில் வளர்க்கப்படும் ஒவ்வொரு குழந்தையும், எதிர்காலத்தில் நூறு குற்றவாளிகள் உருவாவதைத் தடுக்கிறார்கள். பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளைத் தங்கள் கண்காணிப்பில் வளர்ப்பது, சமூகத்திற்குச் செய்யும் முக்கியமான கடமை என்பதை உணர்வது நன்று.
இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
- தென் மாவட்டங்களில் பல்வேறு காரணங்களால் மாணவர்கள் சக மாணவர்களால் தாக்கப்படுவது அதிகரித்து வருகிறது.
- மாணவர்கள் தான் நாட்டின் எதிர்காலத் தூண்கள்.
சென்னை:
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள பதிவில்,
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள ரோஸ் மேரி பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்த மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட சண்டையில், ஒரு மாணவரை இன்னொரு மாணவர் அரிவாளால் வெட்டியிருப்பதும், அதைத் தடுக்கச் சென்ற ஆசிரியருக்கு லேசான காயம் ஏற்பட்டிருப்பதும் அதிர்ச்சியளிக்கிறது. கல்வியும், ஒழுக்கமும் கற்பிக்கப்பட வேண்டிய பள்ளியில் இத்தகைய நிகழ்வுகள் நடப்பது நல்லதல்ல.
இரு மாணவர்களுக்கும் இடையே பென்சில் வாங்குவதில் தான் மோதல் ஏற்பட்டிருக்கிறது. இது மறந்து, கடந்து போக வேண்டிய மோதல் தான். ஆனால், அதற்கான அரிவாளை வீட்டில் இருந்து பையில் மறைத்து எடுத்து வந்து சக மாணவரை வெட்டும் அளவுக்கு ஒரு மாணவரின் மனநிலை வெறுப்படைந்திருக்கிறது என்றால், அது மாணவர்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த சமுதாயத்திலும் அதிகரித்து வரும் சீரழிவையே காட்டுகிறது. இந்தப் போக்கு சரி செய்யப்பட வேண்டும்.
தமிழகத்தில், குறிப்பாக தென் மாவட்டங்களில் பல்வேறு காரணங்களால் மாணவர்கள் சக மாணவர்களால் தாக்கப்படுவது அதிகரித்து வருகிறது. நாங்குநேரியில் கடந்த 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12-ஆம் வகுப்பு மாணவர் சின்னத்துரை வீடு புகுந்து வெட்டப்பட்டது, தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டத்தில் பேருந்தை மறித்து அதில் பயணம் செய்த மாணவர் வெட்டப்பட்டது என வன்முறை நிகழ்வுகள் தொடர்கின்றன. இத்தகைய நிகழ்வுகளை பார்க்கும் போது தமிழகம் எங்கே செல்கிறது? என்ற கவலை தான் ஏற்படுகிறது.
மாணவர்கள் தான் நாட்டின் எதிர்காலத் தூண்கள். அவர்களுக்கு நல்வழி காட்டுவது தான் பள்ளிகள் மற்றும் சமூகத்தின் கடமை ஆகும். இதை மனதில் கொண்டு பள்ளிகளில் நீதிபோதனை பாடவேளைகளை மீண்டும் அறிமுகம் செய்ய வேண்டும்; விளையாட்டுப் பாடவேளையை அதிகரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
- ஒரு மாணவனை இன்னொரு மாணவன் அரிவாளால் வெட்டியுள்ளார்.
- காயமடைந்த மாணவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் எட்டாம் வகுப்பு மாணவனை சக மாணவன் அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பாளையங் கோட்டை வ.உ.சி. மைதானத்தின் பின்புறம் இயங்கி வரும் தனியார் மெட்ரிக் பள்ளியில் ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் 8-ம் வகுப்பு பிரிவு ஒன்றில் ஆசிரியை ரேவதி பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது மேலப்பாளையம் பகுதியை சேர்ந்த ஒரு மாணவனுக்கும், கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த ஒரு மாணவனுக்கும் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த கிருஷ்ணாபுரம் மாணவர் தனது பையில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சக மாணவனை சரிமாரியாக வெட்டினார். இதில் அந்த மாணவனின் கை, தோல்பட்டை, முதுகு உள்ளிட்ட இடங்களில் வெட்டு விழுந்தது. இதனால் படுகாயம் அடைந்த அந்த மாணவன் அலறி துடித்தான்.
உடனே ஆசிரியை ரேவதி ஓடி சென்று வெட்டிய மாணவனை தடுக்க முயன்றார். இதில் ஆசிரியைக்கும் வெட்டு விழுந்தது. இதைப்பார்த்து சக மாணவர்கள் அலறல் சத்தம் போட்டனர்.
உடனே வெட்டிய மாணவன் சட்டையில் ரத்தம் சொட்ட சொட்ட அரிவாளுடன் வெளியேறி அருகே உள்ள பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்துக்கு சென்றான். அங்கிருந்த போலீசார் மாணவனிடம் இருந்த அரிவாளை கைப்பற்றி விசாரித்தபோது சக மாணவனை அரிவாளால் வெட்டியதாக கூறி உள்ளான்.
இதைக்கேட்டு அதிர்ச்சிய டைந்த போலீசார் மாணவனை கைது செய்ததோடு, உடனடியாக பள்ளிக் கூடத்துக்கு விரைந்து சென்றனர். மேலும் படுகாயம் அடைந்த மாணவனையும், வெட்டுப்பட்ட ஆசிரியையும் அருகே உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.அங்கு படுகாயம் அடைந்த மாணவனுக்கும், ஆசிரியைக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தனியார் பள்ளியில் மாணவன் வெட்டப்பட்ட சம்பவம் பற்றி அறிந்ததும் போலீஸ் அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பள்ளியில் இந்த 2 மாணவர்களுக்கும் இடையே பென்சில் வாங்கியது தொடர்பாக தகராறு ஏற்பட்டது தெரியவந்தது.
அப்போது ஆசிரியை தலையிட்டு 2 மாணவர்களையும் கண்டித்து பிரச்சினையை தீர்த்துள்ளார். மேலும் இதுகுறித்து 2 மாணவர்களின் பெற்றோருக்கும் தகவல் கூறி அவர்களை வரவழைத்து மாணவர்களை கண்டித்து அனுப்பி உள்ளார்.
ஆனால் வெட்டிய மாணவன் இந்த பிரச்சினையை மனதில் வைத்துக்கொண்டு இன்று அரிவாளை பையில் மறைத்து வைத்து எடுத்து வந்து வெட்டியது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே மாணவன் வெட்டுப்பட்ட தகவல் அறிந்து அவனது பெற்றோர் மட்டுமல்லாதது ஏராளமான மாணவர்களின் பெற்றோர் பள்ளிக்கு திரண்டு வந்தனர்.இதைத்தொடர்ந்து பள்ளி முன்பு 20-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக போலீஸ் உதவி கமிஷனர் சுரேஷ் கூறுகையில், பென்சில் கொடுக்கல், வாங்கல் பிரச்சினையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
சம்பந்தப்பட்ட பள்ளி மற்றும் மாணவனின் பெற்றோரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குழந்தைகள் பாதுகாப்பு குழுவினர் பாதிக்கப்பட்ட மாணவன் மற்றும் சம்பவத்தில் ஈடுபட்ட மாணவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே பள்ளி வகுப்பறையில் சுழற்சி முறையில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இன்றும் பள்ளியில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. எதிர்பாராத விதமாக புத்தக பையில் இருந்த அரிவாள் கண்டறியப்படவில்லை என்றார்.
- பள்ளி நிர்வாகம் அலட்சியமாக பதில் அளித்துள்ளது.
- தனியார் பள்ளியில் பொள்ளாச்சி காவல் உதவி கண்காணிப்பாளர் நேரில் விசாரணை செய்தார்.
கோவை கிணத்துக்கடவில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி கடந்த 5-ந்தேதி பூப்படைந்துள்ளார். முழு ஆண்டு தேர்வு எழுதிய மாணவியை மாதவிலக்கை காரணம் காட்டி, வகுப்பறையை பூட்டி வெளியில் அமர வைத்து தேர்வு எழுத வைத்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மாணவி வெளியில் அமர வைத்து தேர்வெழுத வைக்கப்பட்டுள்ளதால் அவரது தாய் நேரில் சென்று பள்ளி நிர்வாகத்திடம் இது தொடர்பாக கேட்டுள்ளார்.
இதற்கு பள்ளி நிர்வாகம் அலட்சியமாக பதில் அளித்துள்ளது. எங்களது பள்ளியில் இப்படிதான் நடக்கும். முடியாது எனில் வேறு பள்ளியில் சேர்த்து கொள்ளுங்கள் என கூறி உள்ளது.
மாணவி வகுப்பறைக்கு வெளியில் அமர்ந்து தேர்வு எழுதும் வீடியோ வெளியான நிலையில், பள்ளி நிர்வாகத்தின் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
இதையடுத்து பள்ளியின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தனியார் பள்ளியில் பொள்ளாச்சி காவல் உதவி கண்காணிப்பாளர் நேரில் விசாரணை செய்தார்.
காவல் உதவி கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங், பள்ளி முதல்வர் ஆனந்தி, பள்ளி கண்காணிப்பாளர் சிவகாமி இருவரிடம் விசாரணை நடத்தினார்.
இந்த நிலையில், மாணவிக்கு நடந்த கொடுமை தொடர்பாக கல்வித்துறை சார்பில் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
பள்ளியிலும், மாணவியிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக முதன்மை கல்வி அலுவலர் தகவல் தெரிவித்துள்ளார். தவறு உறுதியானால் விசாரணையின் முடிவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதி அளித்தார்.
- தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள கல்யாணிபுரத்தை சேர்ந்தவர் சிவா.
- இவர் அந்த பகுதியில் நண்பர்களுடன் பட்டாசு வெடித்துக்கொண்டிருந்தார்.
நெல்லை:
தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள கல்யாணிபுரத்தை சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மகன் சிவா. கடந்த 31-ந்தேதி இவர் அந்த பகுதியில் நண்பர்களுடன் பட்டாசு வெடித்துக்கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக அம்பையில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் பள்ளி பஸ் வந்து கொண்டிருந்தது. அந்த பஸ் மீது பட்டாசை கொளுத்தி போடுமாறு சிவா தனது நண்பர்களிடம் தெரிவித்துள்ளார். உடனே அவர்கள் அனைவரும் பட்டாசை கொளுத்தி அந்த பஸ்சின் டயரில் வீசி உள்ளனர்.
இந்த சம்பவங்கள் குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுதொடர்பாக ஆழ்வார்குறிச்சி போலீசார் சிவா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தனியார் பள்ளிக்கு இன்று முதல் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது.
- மாணவர்கள், பெற்றோரிடம் போலீசார் பலமணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
திருநின்றவூர் :
ஆவடியை அடுத்த திருநின்றவூர் இ.பி. காலனி பகுதியில் ஏஞ்சல் என்ற தனியார் மெட்ரிகுலேஷன் மேல் நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளியின் தாளாளரான வினோத் (வயது 34), பிளஸ்-2 படிக்கும் 2 மாணவிகளுக்கு கவுன்சிலிங் கொடுப்பதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள், தங்கள் பெற்றோரிடம் கூறினர். அவர்கள் இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் புகார் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று காலை பள்ளிக்கு வந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள், பள்ளி தாளாளர் வினோத் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பள்ளி முன்பு திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவ-மாணவிகளின் பெற்றோரும், அந்த பகுதி பொதுமக்களும் அவர்களுடன் சேர்ந்து போராட்டத்தில் பங்கேற்றனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் பட்டாபிராம் சரக போலீஸ் உதவி கமிஷனர் சதாசிவம் தலைமையில் திருநின்றவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் உட்பட 50-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.
போராட்டத்தில் ஈடு பட்ட மாணவ- மாணவிகள் மற்றும் பெற்றோருடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சாலையில் நின்றிருந்த அனைவரையும் பள்ளி வளாகத்துக்குள் செல்ல வைத்தனர்.
அப்போது அவர்கள், தாளாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்யும் வரை எங்களின் போராட்டம் தொடரும் என்று கூறி பள்ளி வராண்டாவில் மாணவ-மாணவிகள் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து மாணவர்கள், பெற்றோரிடம் போலீசார் பலமணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். திருவள்ளூர் மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) ராதாகிருஷ்ணன், ஆவடி தாசில்தார் வெங்கடேசன் உள்ளிட்டோரும் அங்கு வந்தனர்.
மாலை 3 மணிவரை பேச்சுவார்த்தை நீடித்தது. பள்ளி தாளாளர் மீது வழக்குப்பதிவு செய்வதாக போலீசார் உறுதி அளித்ததால் மாணவர்கள் மற்றும் பெற்றோர் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு பள்ளியில் இருந்து கலைந்து சென்றனர்.
இது தொடர்பாக திருநின்றவூர் போலீசார், பள்ளி தாளாளர் வினோத் மீது போக்சோ சட்டத்தின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அவரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று மற்ற வகுப்பு மாணவர்களும் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் அந்த தனியார் பள்ளிக்கு இன்று(வியாழக்கிழமை) முதல் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. மீண்டும் திங்கட்கிழமை முதல் பள்ளி செயல்படும் என பள்ளி நிர்வாகம் சார்பில் மாணவர்களின் பெற்றோருக்கு 'வாட்ஸ் அப்' மூலம் தகவல் அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது.
- வில்லியனூர் அருகே அரியூர் பகுதியைச் சேர்ந்தவர் குப்பம்மாள் . இவர் பாகூர் திரவுபதி அம்மன் கோவில் அருகில் கடந்த 7ஆண்டுகளாக தனியார் பள்ளி நடத்தி வருகிறார்.
- மேலும் பள்ளியை மூடிவிட்டு வெளியேறுங்கள், இல்லை என்றால் உங்களை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்து விடுவேன் என்று மணிமாறன் மிரட்டல் விடுத்தார்.
புதுச்சேரி:
வில்லியனூர் அருகே அரியூர் பகுதியைச் சேர்ந்தவர் குப்பம்மாள். இவர் பாகூர் திரவுபதி அம்மன் கோவில் அருகில் கடந்த 7ஆண்டுகளாக தனியார் பள்ளி நடத்தி வருகிறார்.
இந்தப் பள்ளிக்கு அருகில் மணிமாறன்.என்பவர் வசித்து வருகிறார். இவர் லாஸ்பேட்டையில் உள்ள மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லூரியில் பேராசிரியராக பணி புரிந்து வருகிறார்.
இந்த நிலையில் பள்ளி வழக்கம் போல் செயல்பட்டிருந்த நிலையில் மணிமாறன் அத்துமீறி பள்ளிக்குள் புகுந்து அங்கிருந்த ஆசிரியர்கள் மற்றும் பள்ளி தாளாளரை தரக்குறைவாக திட்டினார்.
மேலும் பள்ளியை மூடிவிட்டு வெளியேறுங்கள், இல்லை என்றால் உங்களை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்து விடுவேன் என்று மணிமாறன் மிரட்டல் விடுத்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பள்ளி தாளாளர் குப்பம்மாள் பாகூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அவரது புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார், உதவி சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் ஆகியோர் வழக்கு பதிவு செய்து பேராசிரியர் மணிமாறனை தேடி வருகின்றனர்.
- தனியார் பள்ளிகளுக்கு இணையாக மாநகராட்சி பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகளும் உள்ளன.
- திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 139 அரசு பள்ளிகள் செயல்பட்டு வருவது கண்டறியப்பட்டது.
சென்னை:
சென்னை மாநகராட்சி மூலம் மழலைய பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை நடத்தப்பட்டு வருகிறது. சுமார் 1 லட்சம் மாணவ-மாணவிகள் மாநகராட்சி பள்ளியில் படித்து வருகிறார்கள்.
பள்ளி கட்டிடங்கள், அடிப்படை வசதிகளுடன் மாநகராட்சி பள்ளிகள் தன் பங்களிப்பை வழங்கி வருவதால் ஏழை, நடுத்தர குடும்பத்தை சேர்ந்த குழந்தைகள் அதிகளவில் படித்து வருகின்றனர். தனியார் பள்ளிகளுக்கு இணையாக ஸ்மார்ட் வகுப்பறைகளும் உள்ளன.
இந்நிலையில் சென்னை நகரின் விரிவாக்கப்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் கடந்த சில வருடங்களாக பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வருகின்றன.
மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இந்த பள்ளிகள் இருந்தாலும் கூட அரசு பள்ளிகளாக செயல்பட்டு வந்தன. இதனால் நிர்வாக ரீதியான பிரச்சினை உருவானது.
திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய வருவாய் மாவட்டங்களை உள்ளடக்கி இந்த பள்ளிகள் செயல்பட்ட வந்தன. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள இத்தகைய பள்ளிகளை மாநகராட்சி பள்ளிகளுடன் இணைக்க வேண்டும் என்று கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.
அதன் அடிப்படையில் எத்தனை பள்ளிகள் இதுபோன்று உள்ளன என ஆய்வு செய்யப்பட்டது. திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 139 அரசு பள்ளிகள் செயல்பட்டு வருவது கண்டறியப்பட்டது.
அந்த பள்ளிகளை மாநகராட்சியுடன் இணைக்க வேண்டு என மன்ற கூட் டத்திலும் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. அதன்படி 139 அரசு பள்ளிகள் சென்னை மாநகராட்சியுடன் சமீபத்தில் இணைக்கப்பட்டன.
அந்த பள்ளிகள் "சென்னை பள்ளிகள்" என பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அங்கு படித்த 35 ஆயிரம் மாணவ-மாணவிகள் தொடர்ந்து கல்வியை தொடர சென்னை மாநகராட்சி அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.
மாநகராட்சி கல்வி துறை மூலம் இனி இதற்கு நிதி ஒதுக்கப்பட்டு இப்பள்ளி களின் வளர்ச்சி பணிகள் செயல்படுத்தப்படும்.
- ஒரு வாலிபர் வெட்டுகாயத்துடன் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.
- இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள செண்பகபுதூர் கொப்பு வாய்க்கால் பகுதியில் இன்று அதிகாலை ஒரு வாலிபர் தலை,உடல் முழுவதும் வெட்டுகாயத்துடன் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.
மேலும் அவரது உடல் அருகே ஒரு மோட்டார் சைக்கிளும் கிடந்தது. இதுப்பற்றி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சத்தியமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு சத்தியமங்கலம் ஏ.எஸ்.பி.ஐமன் ஜமால் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது பிணமாக கிடப்பது சத்தியமங்கலம் செண்பகபுதூர் அருகே உள்ள சாணார் பதி பகுதியை சேர்ந்த மாரிமுத்து (35) என்பது தெரியவந்தது.
மேலும் இவருக்கு திருமணமாகி கல்யாணி (30) என்ற மனைவியும், 13 வயதில் ஒரு மகள் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரது குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து மாரிமுத்துவின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
மாரிமுத்து ஒரு தனியார் பள்ளியில் பஸ் டிரைவராக வேலைப்பார்த்து வந்தார். நேற்று மாலை வீட்டில் இருந்த அவரை அவரது நண்பர் ஒருவர் அழைத்து சென்றார்.
அதன் பின்னர் அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் தான் அவர் உடலில் வெட்டு காயத்துடன் பிணமாக மீட்கப்பட்டார்.
இது குறித்து போலீசார் மாரிமுத்துவின் நண்பரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அவர் கொலை செய்யப்பட்டாரா?அல்லது விபத்தில் இறந்தாரா? என்று பிரேத பரிசோதனையில் தான் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.






