search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    அயர்லாந்தில் குழந்தைகள் மீது கத்திக்குத்து: போராட்டம், வாகனங்களுக்கு தீவைப்பு
    X

    அயர்லாந்தில் குழந்தைகள் மீது கத்திக்குத்து: போராட்டம், வாகனங்களுக்கு தீவைப்பு

    • பள்ளிக்கு வெளியே நடைபெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நான்கு பேர் படுகாயம்.
    • இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அயர்லாந்து நாட்டின் தலைநகர் டப்ளின். இங்குள்ள ஒரு பள்ளிக்கூடத்திற்கு வெளியே திடீரென கத்திக்குத்து சம்பவம் நடைபெற்றது. மர்ம நபர் கண்ணில் தென்பட்டவர்களை கத்தியால் குத்தி தாக்கினார்.

    இந்த சம்பவத்தில் ஐந்து வயது சிறுமி, மேலும் இரு சிறுவர்கள், 30 வயது பெண் உள்பட நான்கு பேர் படுகாயம் அடைந்தனர். இதில் ஐந்து வயது சிறுமி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மற்றவர்கள் பலத்த காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இந்த செய்தி காட்டுத்தீயாக பரவ, சம்பவ இடத்தில் 100-க்கும் அதிகமானோர் கூடினர். அவர்கள் போராட்டத்தில ஈடுபட்டனர். அவர்களை கட்டுப்படுத்த போலீசார் குவிக்கப்பட்டனர்.

    குழந்தைகள் மீது தாக்குதல் நடத்திய கோபத்தில், அவர்கள் வாகனங்களை தீயிட்டு எரித்தனர். மேலும், அருகில் உள்ள கடைகளை சூறையாடினர். சூழ்நிலை மோசமானதைத் தொடர்ந்து போலீசார் அவர்களை கட்டுப்படுத்தும் முயற்சியில் இறங்கினர். இதனால் அசாதாரண சூழ்நிலை நிலவியது.

    இதற்கிடையே, கத்தியால் தாக்குதல் நடத்தப்பட்டது உண்மைதான். ஆனால் பயங்கரவாத செயலுக்கான ஆதாரம் இல்லை. இருந்தபோதிலும் முழு விசாரணை நடத்தப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    போராட்டம் நாடு முழுவதும விரிவடைந்து விடக்கூடாது என போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பாராளுமன்றத்தை சுற்றி போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×