என் மலர்tooltip icon

    நெதர்லாந்து

    • வோல்கெல் விமானப் படைதளம் மீது டிரோன்கள் பறந்தது தெரியவந்தது.
    • இதையடுத்து, அவற்றை சுட்டு வீழ்த்த வான் பாதுகாப்பு படையினர் முயன்றனர்.

    ஆம்ஸ்டர்டாம்:

    ஐரோப்பிய நாடுகளில் சமீப காலமாக விமான நிலையம், ராணுவ தளம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் டிரோன்கள் பறப்பது, பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.

    இந்நிலையில், நெதர்லாந்தின் வோல்கெல் விமானப் படைதளம் மீது டிரோன்கள் பறந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவற்றை சுட்டு வீழ்த்த வான் பாதுகாப்பு படையினர் முயன்றனர். ஆனால் அந்த டிரோன்கள் தப்பிச் சென்றன.

    இதனையடுத்து, ஐன்ட்ஹோவன் விமான நிலைய வான் பகுதியிலும் சில டிரோன்கள் பறந்தன. எனவே பாதுகாப்பு கருதி விமான சேவை சில மணி நேரம் துண்டிக்கப்பட்டது. அடுத்தடுத்து பறந்த டிரோன்களால் அங்கு பரபரப்பு நிலவியது.

    இதுகுறித்து ராணுவ மந்திரி ரூபன் பிரெக்கல்மன்ஸ் கூறுகையில், இனி வரும் காலங்களில் டிரோன் அச்சுறுத்தலை சமாளிக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

    • இஸ்ரேலிய கடற்படைக் கப்பல்களுக்கான பொருட்களை ஏற்றுமதி செய்வதை தடை செய்யவும் காஸ்பர் முன்மொழிந்தார்.
    • காசாவில் 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கடுமையான பசியை எதிர்கொண்டுள்ளனர்.

    காசாவை ஆக்கிரமித்ததற்காக இஸ்ரேலுக்கு எதிராக தடைகளை விதித்து நடவடிக்கை எடுக்க முடியாததால் நெதர்லாந்து நாட்டு வெளியுறவு அமைச்சர் காஸ்பர் வெல்ட்காம்ப் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    பெசல் ஸ்மோட்ரிச் மற்றும் இடாமர் பென்-கிர் போன்ற தீவிர வலதுசாரிக் கொள்கைகளைப் பின்பற்றும் இஸ்ரேலிய அமைச்சர்கள் டச்சு நாட்டுக்குள் நுழைவதையும், இஸ்ரேலிய கடற்படைக் கப்பல்களுக்கான பொருட்களை ஏற்றுமதி செய்வதை தடை செய்யவும் காஸ்பர் முன்மொழிந்தார்.

    இருப்பினும், அமைச்சரவையில் எதிர்ப்பு காரணமாக இது நடக்கவில்லை. இதனால் காஸ்பர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

    வெளியுறவு அமைச்சர் ராஜினாமாவைத் தொடர்ந்து, சமூக ஒப்பந்த அமைச்சர் மற்றும் அரசு செயலாளர்களும் ராஜினாமா செய்துள்ளனர்.  

    முன்னதாக, ஐக்கிய நாடுகள் சபையின் ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு நிலை வகைப்பாடு (IPC) காசாவில் பஞ்சம் நிலவுவதாக அறிவித்தது. காசாவில் 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கடுமையான பசியை எதிர்கொண்டுள்ளதாகக் அதன் அறிக்கை கூறியது.   

    • நெதர்லாந்தில் மர்ம நபர் கண்ணில் பட்டவர்களை கத்தியால் குத்தினார்.
    • தகவலறிந்து வந்த போலீசார் அந்த நபரை சுற்றி வளைத்து மடக்கிப் பிடித்தனர்.

    தி ஹோக்:

    நெதர்லாந்தின் மத்திய ஆம்ஸ்டர்டாமில் உள்ள டாம்ஸ்கொயர் என்ற இடம் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி.

    இந்நிலையில், இங்கு வந்த மர்ம நபர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கண்ணில் பட்டவர்களை திடீரென சரமாரி குத்தினார். இதில் 5-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். பலர் கத்திக்குத்தில் காயமடைந்தனர்.

    காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்தால் டாம்ஸ்கொயர் உள்ளிட்ட சில பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது.

    தகவலறிந்து அங்கு வந்த போலீசார் தாக்குதல் நடத்திய அந்த நபரை மடக்கிப் பிடித்தனர். மேலும், போலீசார் அவனை மடக்கிப் பிடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.

    • ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் நெதர்லாந்தில் நடைபெற்றது.
    • ஆண்கள் இரட்டையர் பிரிவில் இத்தாலி ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.

    ரோட்டர்டாம்:

    ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் நெதர்லாந்தில் நடைபெற்றது.

    இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் இறுதிச்சுற்றில் இத்தாலியின் சிமோனே பொலேலி, ஆன்ட்ரியா வவசோரி ஜோடி,

    போலந்தின் ஜேன் ஜைன்ஸ்கி, பெல்ஜியத்தின் சாண்டர் கில்லி ஜோடி உடன் மோதியது.

    இதில் முதல் செட்டை 6-2 என வென்ற இத்தாலி ஜோடி இரண்டாவது செட்டை 4-6 என இழந்தது.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3-வது செட்டை இத்தாலி ஜொடி 10-6 என கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்றது.

    • ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் நெதர்லாந்தில் நடைபெற்றது.
    • இதில் ஸ்பெயின் வீரர் அல்காரஸ் இறுதிச்சுற்றில் வெற்றி பெற்றார்.

    ரோட்டர்டாம்:

    ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் நெதர்லாந்தில் நடந்து வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிச்சுற்றில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் உடன் மோதினார்.

    இதில் முதல் செட்டை 6-4 என அல்காரஸ் வென்றார். இரண்டாவது செட்டை டி மினார் 6-3 என வென்றார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3-வது செட்டை அல்காரஸ் 6-2 என கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்றார்.

    • ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் நெதர்லாந்தில் நடந்து வருகிறது.
    • இதில் ஸ்பெயின் வீரர் அல்காரஸ் அரையிறுதி சுற்றில் வெற்றி பெற்றார்.

    ரோட்டர்டாம்:

    ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் நெதர்லாந்தில் நடந்து வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்றில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், போலந்தின் ஹியூபர்ட் ஹர்காக்ஸ் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய அல்காரஸ் 6-4 என முதல் செட்டை வென்றார். இரண்டாவது செட்டை ஹர்காக்ஸ் 7-6 (7-5) என வென்றார்.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3-வது செட்டை அல்காரஸ் 6-3 என கைப்பற்றி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் கார்லோஸ் அல்காரஸ், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் உடன் மோதுகிறார்.

    • ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் நெதர்லாந்தில் நடந்து வருகிறது.
    • இதில் ஆஸ்திரேலிய வீரர் டி மினார் அரையிறுதிச் சுற்றில் வெற்றி பெற்றார்.

    ரோட்டர்டாம்:

    ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் நெதர்லாந்தில் நடந்து வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதிச் சுற்றில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார், இத்தாலி வீரர் மேட்டி பெல்லூசி உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய டி மினார் 6-1, 6-2 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.


    • ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் நெதர்லாந்தில் நடந்து வருகிறது.
    • இதில் ரஷிய வீரர் ரூப்லெவ் காலிறுதி சுற்றில் தோல்வி அடைந்தார்.

    ரோட்டர்டாம்:

    ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் நெதர்லாந்தில் நடந்து வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதிச் சுற்றில் ரஷிய வீரர் ஆண்ட்ரே ரூப்லெவ், போலந்து வீரர் ஹ்யூபர்ட் ஹர்காக்ஸ் உடன் மோதினார்.

    இதில் ஹர்காக்ஸ் 6-7 (5-7), 6-3, 6-4 என வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். ரூப்லெவ் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

    அரையிறுதியில் ஹர்காக்ஸ் ஸ்பெயினின் அல்காரசுடன் மோதுகிறார்.

    • ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் நெதர்லாந்தில் நடந்து வருகிறது.
    • இதில் ரஷிய வீரர் ரூப்லெவ் காலிறுதி சுற்றில் வெற்றி பெற்றார்.

    ரோட்டர்டாம்:

    ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் நெதர்லாந்தில் நடந்து வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், ஸ்பெயினின் பெட்ரோ மார்டின் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய அல்காரஸ் 6-2, 6-1 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

    அரையிறுதியில் கார்லோஸ் அல்காரஸ் போலந்தின் ஹியூபர்ட் ஹர்காக்ஸ் உடன் மோதுகிறார்.

    • ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் நெதர்லாந்தில் நடந்து வருகிறது.
    • இதில் கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் காலிறுதி சுற்றில் தோல்வி அடைந்தார்.

    ரோட்டர்டாம்:

    ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் நெதர்லாந்தில் நடந்து வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதிச் சுற்றில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், இத்தாலி வீரர் மேடியா பெல்லூசி உடன் மோதினார்.

    இதில் சிட்சிபாஸ் 4-6, 2-6 என அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

    மேடியா பெல்லூசி அரையிறுதியில் இத்தாலி வீரர் அலெக்ஸ் டி மினாருடன் மோதுகிறார்.

    • ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் நெதர்லாந்தில் நடந்து வருகிறது.
    • இதில் ஸ்பெயின் வீரர் அல்காரஸ் 2வது சுற்றில் வெற்றி பெற்றார்.

    ரோட்டர்டாம்:

    ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் நெதர்லாந்தில் நடந்து வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், இத்தாலியின் வவாசோரி உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய அல்காரஸ் 6-2, 6-1 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், நெதர்லாந்தின் கிரீக்ஸ்பூர் உடன் மோதினார்.

    இதில் சிட்சிபாஸ் 6-7 (5-7) என இழந்தார். இதில் சுதாரித்துக் கொண்ட அவர் அடுத்த இரு செட்களை 7-6 (8-6), 7-5 என வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    • ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் நெதர்லாந்தில் நடந்து வருகிறது.
    • இதில் ரஷிய வீரர் ரூப்லெவ் 2வது சுற்றில் வெற்றி பெற்றார்.

    ரோட்டர்டாம்:

    ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் நெதர்லாந்தில் நடந்து வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவ், ஹங்கேரி வீரர் பேபியன் மாரசோன் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய ரூப்லெவ் 7-6 (7-2), 7-6 ( 9-7) என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார், செக் நாட்டின் ஜாகுப் மென்சிக் உடன் மோதினார்.

    இதில் டி மினார் 6-4, 6-4 என வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    ×