search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Alexander Zverev"

    • 2வது அரையிறுதியின் முதல் 2 செட்டை ஸ்வரேவ் எளிதில் வென்றார்.
    • அடுத்த 3 செட்களை மெத்வதேவ் போராடி கைப்பற்றினார்.

    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.

    இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது அரையிறுதிச் சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், ஜெர்மனி வீரர் அலெக்சாண்ட ஸ்வரேவுடன் மோதினார்.

    முதலில் சிறப்பாக ஆடிய ஸ்வரேவ் முதல் இரு செட்களை எளிதில் வென்றார். இதனால் சுதாரித்துக் கொண்ட மெத்வதேவ் அடுத்த 3 செட்களையும் சிறப்பாக ஆடி கைப்பற்றி அசத்தினார்.

    இறுதியில், மெத்வதேவ் 5-7, 3-6, 7-6 (7-4), 7-6 ( 7-5), 6-3 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

    நாளை மறுதினம் நடைபெறும் இறுதிப்போட்டியில் ரஷியாவின் மெத்வதேவ், இத்தாலி வீரரான சின்னரை எதிர்கொள்கிறார்.

    • முதல் இரு செட்களை அலெக்சாண்டர் ஸ்வரேவ் வென்றார்.
    • மூன்றாவது செட்டை கார்லோஸ் அல்காரஸ் போராடி கைப்பற்றினார்.

    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவுடன் மோதினார்.

    இதில் அல்காரஸ் 1-6, 3-6, 7-6 (7-2), 4-6 என்ற செட் கணக்கில் ஸ்வரேவிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். இதன்மூலம் ஸ்வரேவ் அரையிறுதிக்கு முன்னேறினார்.

    இதேபோல், பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த காலிறுதிப் போட்டியில் உக்ரைனின் டயானா யாஸ்ட்ரீம்கா, செக் வீராங்கனை லிண்டா நோஸ்கோவாவுடன் மோதினார். இதில் யாஸ்ட்ரீம்கா 6-3, 6-4 என்ற நேர் செட்களில் நோஸ்கோவாவை எளிதில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் சீனாவின் குயின்வென் ஷெங், ரஷிய வீராங்கனை அன்னா கலின்ஸ்கயாவுடன் மோதினார். இதில் ஷெங் 6-7 (4-7), 6-3, 6-1 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    • ஆஸ்திரேலிய ஓபன் 2வது சுற்றில் முன்னணி வீரர் அலெக்சாண்டர் ஸ்வரேவ் போராடி வென்றார்.
    • ஜோகோவிச், காஸ்பர் ரூட் ஆகியோர் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினர்.

    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் தொடங்கி 28-ம் தேதி வரை நடக்கிறது. இதில் பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற 2வது சுற்று ஆட்டத்தில் முன்னணி வீரரான ஜெர்மன் வீரரான அலெக்சாண்டர் ஸ்வரேவ், ஸ்லோவோக்கியா வீரர் லூகாசுடன் மோதினார்.

    இதில் ஸ்வரேவ் முதல் செட்டை 7-5 என கைப்பற்றினார். அடுத்த இரு செட்களை லூகாஸ் 6-3, 6-4 என கைப்பற்றி அதிர்ச்சி அளித்தார்.

    இதனால் சுதாரித்துக் கொண்ட ஸ்வரேவ் 4-வது 7-6 (7-5) என வென்றார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 5-வது செட்டிலும் ஸ்வரேவ் 7-6 (10-7) என போராடி வென்றார்.

    இறுதியில் ஸ்வரேவ் 7-5, 3-6, 4-6, 7-6 (7-5), 7-6 (10-7) என கைப்பற்றி அசத்தினார். இந்தப் போட்டி சுமார் நான்கரை மணி நேரம் நடைபெற்றது.


    மற்றொரு போட்டியில் நார்வே வீரர் காஸ்பர் ரூட், ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ் பர்செலுடன் மோதினார். இருவரும் தலா 2 செட்களைக் கைப்பற்றினர். வெற்றியாளரை நிர்ணயிக்கும் கடைசி செட்டை ரூட் கைப்பற்றினார். இறுதியில் ரூட் 6-3, 6-7, 6-3, 3-6, 7-6 (10-7) என்ற செட் கணக்கில் வென்றார்.

    • கார்லோஸ் அல்காரஸ் கால்இறுதியில் அலெக்சாண்டர் சுவரேவை எதிர் கொண்டார்.
    • அல்காரஸ் அரைஇறுதியில் மெட்வதேவை 9-ந் தேதி சந்தித்தார்.

    நியூயார்க்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. உலகின் முதல் நிலை வீரரும், நடப்பு சாம்பியனுமான கார்லோஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) கால்இறுதியில் ஜெர்மனியை சேர்ந்த 12-வது வரிசையில் இருக்கும் அலெக்சாண்டர் சுவரேவை எதிர் கொண்டார். இதில் அல்காரஸ் 6-3, 6-2 6-4 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றார்.


    இந்நிலையில் காலிறுதியில் அல்காரஸ் மற்றும் அலெக்சாண்டர் சுவரேவ் மோதிய ஆட்டத்தை இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சிஎஸ்கே அணியின் கேப்டனுமான எம்எஸ் டோனி கண்டு களித்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    அல்காரஸ் அரைஇறுதியில் மெட்வதேவை 9-ந் தேதி சந்தித்தார். 

    • இந்த ஆட்டம் 4 மணி நேரம் 41 நிமிடம் நடந்தது.
    • காலிறுதியில் அலெக்சாண்டர் நம்பர் ஒன் வீரரான அல்காரஸை எதிர் கொள்கிறார்.

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் மற்றும் ஜனிக் சின்னர் ஆகியோர் மோதினர். இதில் ஸ்வெரெவ் முதல் செட்டை 6-4 என்ற கணக்கில் வீழ்த்தினார். 2-வது செட்டை சின்னர் 6-3 என்ற கணக்கில் கைப்பற்றினார்.

    இதனையடுத்து நடந்த 3 செட்டை அலெக்சாண்டர் 6-2 என்ற கணக்கிலும் 4-வது செட்டை சின்னர் 6-4 என்ற கணக்கிலும் கைப்பற்றினர். வெற்றியை நிர்ணயிக்கும் கடைசி செட்டை அலெக்சாண்டர் 6-3 என்ற கணக்கில் வீழ்த்தினார்.

    இதன்மூலம் 6-3, 3-6, 6-2, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் அலெக்சாண்டர் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றார். இந்த ஆட்டம் 4 மணி நேரம் 41 நிமிடம் நடந்தது. இந்த ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.

    காலிறுதியில் அலெக்சாண்டர் நம்பர் ஒன் வீரரான அல்காரஸை எதிர் கொள்கிறார்.

    • விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்று போட்டி நடந்தது.
    • இதில் இத்தாலி வீரர் பெரெட்டினி, ஜெர்மனி வீரர் ஸ்வரேவை தோற்கடித்தார்.

    லண்டன்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டன் நகரில் நடைபெற்று வருகிறது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவின் மூன்றாவது சுற்றில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் சுவரேவ், இத்தாலி வீரர் மேட்டி பெரெட்டினியை எதிர் கொண்டார்.

    இதில் பெரெட்டினி 6-3, 7-௬ (7-4), 7-6 (7-5) என்ற செட் கணக்கில் எளிதில் வென்று நான்காவது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    • சுவரேவ் 6-1, 6-4 6-3 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று கால்இறுதிக்கு தகுதி பெற்றார்.
    • எட்செவரி 4-வது சுற்றில் 27-வது வரிசையில் உள்ள நிஷிகோவை (ஜப்பான்) 7-6 (10-8), 6-0, 6-1 என்ற நேர் செட் கணக்கில் அதிர்ச்சிகரமாக தோற்கடித்தார்.

    பாரீஸ்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.

    உலக தரவரிசையில் 22-வது இடத்தில் இருப்பவரான அலெக்சாண்டர் சுவரேவ் (ஜெர்மனி) 4-வது சுற்று ஆட்டத்தில் பல்கேரியாவை சேர்ந்த 28-ம் நிலை வீரரான டிமிட்ரோவை எதிர் கொண்டார்.

    இதில் சுவரேவ் 6-1, 6-4 6-3 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று கால்இறுதிக்கு தகுதி பெற்றார். அவர் கால்இறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா வீரர் தாமஸ் மார்ட்டின் எட்செவரியுடன் மோதுகிறார்.

    எட்செவரி 4-வது சுற்றில் 27-வது வரிசையில் உள்ள நிஷிகோவை (ஜப்பான்) 7-6 (10-8), 6-0, 6-1 என்ற நேர் செட் கணக்கில் அதிர்ச்சிகரமாக தோற்கடித்தார். 23 வயதான அவர் முதல் முறையாக கிராண்ட் சிலாம் போட்டியில் கால்இறுதிக்கு முன்னேறி உள்ளார்.

    மற்ற 4-வது சுற்று ஆட்டங்களில் 4-ம் நிலை வீரரான கேஸ்பர் ரூட் (நார்வே), 6-வது வரிசையில் உள்ள ஹோல்கர் ருனே (டென்மார்க்) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஒன்ஸ் ஜபீர் (துனிசியா) ஹாதத்மையா (பிரேசில்) ஆகியோர் வெற்றி பெற்று கால் இறுதியில் நுழைந்தனர்.

    • ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2-ம் சுற்று ஆட்டம் ஒன்றில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ்- ஸ்லோவோக் கியாவின் அலெக்ஸ் மோல்கன் மோதினர்.
    • கனடா வீராங்கனை பியான்கா ஆண்ட்ரிஸ்ரு 6-1, 6-4 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் எம்மா நவரோவை வீழ்த்தினார்.

    பாரீஸ்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் பாரீஸ் நகரில் நடந்து வருகிறது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2-ம் சுற்று ஆட்டம் ஒன்றில் 22-ம் நிலை வீரரான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ்- ஸ்லோவோக் கியாவின் அலெக்ஸ் மோல்கன் மோதினர்.

    இதில் ஸ்வெரேவ் 6-4, 6-2, 6-1 என்ற கணக்கில் வென்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். அவர் அடுத்த சுற்றில் அமெரிக்க வீரர் பிரான்சிஸ் தியாபோவுடன் மோதுகிறார்.

    அதுபோல டெய்லர் பிரிட்ஸ் (அமெரிக்கா), பிரான்சிஸ்கோ செருண்டோலோ (அர்ஜெண்டினா), மார்கோஸ் ஜிரோன் (அமெரிக்கா) நிக்கோலஸ் ஜாரி (சிலி) ஆகியோரும் 3-வது சுற்றுக்கு முன்னேறினர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-ம் சுற்று ஆட்டம் ஒன்றில் அமெரிக்காவின் கோகோ காப் 6-2, 6-3 என்ற நேர்செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் ஜூலியா கிராபரை வென்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    கனடா வீராங்கனை பியான்கா ஆண்ட்ரிஸ்ரு 6-1, 6-4 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் எம்மா நவரோவை வீழ்த்தினார். மற்றொரு ஆட்டத்தில் துனிசியா வீராங்கனை ஒன்ஸ் ஜபீர் 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்கில் பிரான்சின் ஓசியன் டோடினை தோற்கடித்து 3-வது சுற்றுக்குள் நுழைந்தார்.

    ஏடிபி டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஜோகோவிச்சை வீழ்த்தி ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் சுவேரேவ் சாம்பியன் பட்டம் பெற்றார். #AlexanderZverev #ATPFinals #NovakDjokovic
    லண்டன்:

    ஏ.டி.பி. டூர் டென்னிஸ் இறுதி சுற்று லண்டனில் நடந்தது. ‘டாப் 8’ வீரர்கள் பங்கேற்ற இந்தப்போட்டியில் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் சுவேரேவ் சாம்பியன் பட்டம் பெற்றார்.



    அவர் 6-4, 6-3 என்ற நேர்செட் கணக்கில் ‘நம்பர் ஒன்’ வீரரான ஜோகோவிச்சை (செர்பியா) அதிர்ச்சிகரமாக வீழ்த்தினார். #AlexanderZverev #ATPFinals #NovakDjokovic
    ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் அலெக்ஸாண்டர் ஸ்வரேவ்-ஐ வீழ்த்தியதன் மூலம் ஜோகோவிச் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். #Djokovic
    டென்னிஸ் விளையாட்டில் நடால், ரோஜர் பெடரர், நோவக் ஜோகோவிச் ஆகியோர் முன்னணி வீரர்களாக திகழ்ந்து வருகிறார்கள். டென்னிஸ் தரவரிசையில் நடால் முதல் இடத்திலும், ரோஜர் பெடரர் 2-வது இடத்திலும், நோவக் ஜோகோவிச் 3-வது இடத்திலும் உள்ளனர்.

    தற்போது ஷாங்காய் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. அரையிறுதி ஒன்றில் நோவக் ஜோகோவிச் அலெக்ஸாண்டர் ஸ்வரேவ்-ஐ எதிர்கொண்டார். இதில் ஜோகோவிச் 6-2, 6-1 என நேர்செட் கணக்கில் வீழ்த்தினார்.



    இதன்மூலம் ஜோகோவிச் தரவரிசையில் 2-வது இடத்தில் இருந்த ரோஜர் பெடரரை பின்னுக்குத் தள்ளி 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். திங்கட்கிழமை அதிகாரப்பூர்வ தரவரிசை வெளியிடப்பட இருக்கிறது.
    பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி நட்சத்திரங்கள் டொமினிக் திம், மேடிசன் கீஸ் அரைஇறுதிக்கு முன்னேறியுள்ளனர். #FrenchOpen2018 #DominicThiem
    பாரீஸ்:

    பாரீஸ் நகரில் நடந்து வரும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த கால்இறுதியில் 3-ம் நிலை வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவும் (ஜெர்மனி), தரநிலையில் 8-வது இடத்தில் உள்ள டொமினிக் திம்மும் (ஆஸ்திரியா) மோதினர்.

    ஆக்ரோஷமான ஷாட்டுகள் மூலம் தொடக்கத்தில் இருந்தே முழுமையாக ஆதிக்கம் செலுத்திய டொமினிக் திம் அடுத்தடுத்து செட்டுகளை தனதாக்கி அசத்தினார். ஆனால் இடது தொடையில் ஏற்பட்ட தசைப்பிடிப்பால் இயல்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்த முடியாமல் தவித்த ஸ்வெரேவ், எதிர்ப்பின்றி பணிந்து போனார். டொமினிக் திம் 6-4, 6-2, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரைஇறுதிக்குள் நுழைந்தார்.

    பின்னர் டொமினிக் திம் கூறுகையில், ‘பிரெஞ்ச் ஓபனில் தொடர்ந்து 3-வது முறையாக அரைஇறுதியை எட்டியிருப்பது வியப்பளிக்கிறது. எனது இளம் வயதில் இந்த மாதிரியான நிலையை அடைவேன் என்று ஒரு போதும் நினைத்தது இல்லை. இந்த ஆண்டில் மேலும் ஒரு படி முன்னேற வேண்டும்’ என்றார்.

    முன்னதாக நேற்று முன்தினம் இரவு நடந்த 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் குரோஷிய வீரர் மரின் சிலிச் 6-4, 6-1, 3-6, 6-7 (4-7), 6-3 என்ற செட் கணக்கில் இத்தாலியின் போக்னினியை தோற்கடித்தார். இந்த வெற்றியை பெற சிலிச் 3 மணி 37 நிமிடங்கள் போராட வேண்டி இருந்தது.



    பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் 13-ம் நிலை வீரர் அமெரிக்காவின் மேடிசன் கீஸ், தரவரிசையில் 98-வது இடத்தில் உள்ள யுலியா புதின்ட்செவாவை (கஜகஸ்தான்) எதிர்கொண்டார். 1 மணி 24 நிமிடங்கள் நடந்த ஆட்டத்தின் முடிவில் மேடிசன் கீஸ் 7-6 (7-5), 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றியை ருசித்து, அரைஇறுதிக்கு முன்னேறினார். இதுவரை எந்த செட்டையும் இழக்காத 23 வயதான மேடிசன் கீஸ் பிரெஞ்ச் ஓபனில் அரைஇறுதியை எட்டுவது இதுவே முதல் முறையாகும்.

    மற்றொரு கால்இறுதியில் அமெரிக்க ஓபன் சாம்பியனான ஸ்லோனே ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா) 6-3, 6-1 என்ற நேர் செட் கணக்கில் ரஷியாவின் கசட்கினாவை விரட்டியடித்து அரைஇறுதிக்கு தகுதி பெற்றார்.

    ஸ்டீபன்ஸ் அரைஇறுதியில் சக நாட்டவர் மேடிசன் கீஸ்சுடன் மோத உள்ளார். இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு அமெரிக்க ஓபன் இறுதிஆட்டத்தில் சந்தித்து அதில் ஸ்டீபன்ஸ் வெற்றி கண்டது நினைவு கூரத்தக்கது.  #FrenchOpen2018 #DominicThiem  #tamilnews 
    2-ம் நிலை வீரரான அலெக்சாண்டர் ஸ்வேரேவ் 4 மணி நேரம் போராடி ஐந்தாவது செட் முடிவில் போஸ்னியா வீரரை வீழ்த்தியுள்ளார். #FrenchOpen
    பிரெஞ்ச் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் பாரிஸில் நடைபெற்று வருகிறது. இன்று ஆண்களுக்கான 3-வது சுற்று ஆட்டம் நடைபெற்றது. ஒரு ஆட்டத்தில் 2-ம் நிலை வீரரான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வேரேவ் - 26-ம் நிலை வீரரான டமிர் டிஜும்ஹர்-ஐ எதிர்கொண்டார்.

    இந்த ஆட்டத்தில் 2-ம் நிலை வீரரான அலெக்சாண்டருக்கு போஸ்னியா வீரர் டமிர் கடும் சவாலாக விளங்கினார். முதல் செட்டை அலெக்சாண்டர் 6-2 என எளிதில் கைப்பற்றினார். ஆனால் 2-வது செட்டை 3-6 என இழந்தார். 3-வது செட்டையும் 4-6 என இழந்தார்.

    இதனால் 1-2 என அலெக்சாண்டர் பின்தங்கியிருந்தார். 4-வது செட்டில் தோற்றால் தொடரை விட்டு வெளியேறிய வேண்டியதுதான் என்பதால் சுதாரித்து விளையாடினார். இதற்கு போஸ்னியா வீரர் டமிர் கடும் எதிர்வினை ஆற்றினார்.



    இருவரும் சளைக்காமல் விளையாட செட் டைபிரேக்கர் வரை சென்றது. இறுதியில் கடும்பாடுபட்டு அலெக்சாண்டர் 7(7) - 6(3) எனக் கைப்பற்றினார். இதனால் ஆட்டம் கடைசி செட்டிற்கு சென்றது. கடைசி செட்டிலும் போஸ்னியா வீரர் நெருக்கடி கொடுத்தால் இறுதியில அலெக்சாண்டர் 7-5 என கைப்பற்றி வெற்றி பெற்றார்.

    இந்த வெற்றியை பெற அலெக்சாண்டர் ஸ்வேரேவிற்கு 3 மணி நேரம் 54 நிமிடங்கள் தேவைப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் அலெக்சாண்டர் காலிறுதிக்கு முந்தைய 4-வது சுற்றிற்கு முன்னேறியுள்ளார்.
    ×