search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Madrid Open Tennis"

    • பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது.
    • இதில் பெலாரசின் அரினா சபலென்கா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

    ஸ்பெயின்:

    மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயின் நாட்டில் நடைபெற்றது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது.

    இதில் பெலாரஸ் வீராங்கனை சபலென்கா, நம்பர் 1 வீராங்கனை போலந்தின் இகா ஸ்வியாடெக்குடன் மோதினார்.

    இதில் சபலென்கா 6-3, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

    • மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் இறுதிப்போட்டி நடைபெற்றது.
    • இதில் போபண்ணா, மேத்யூ எப்டென் ஜோடி தோல்வி அடைந்தது.

    மாட்ரிட்:

    மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயின் நாட்டில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் ரோகன் போபண்ணா (இந்தியா)- மேத்யூ எப்டென் (ஆஸ்திரேலியா) ஜோடி, ரஷியாவின் கச்சனாவ், ரூப்லவ் ஜோடியுடன் மோதியது.

    முதல் செட்டை 6-3 என ரஷியா வென்றது. இரண்டாவது செட்டை போபண்ணா ஜோடி 6-3 என கைப்பற்றியது.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது சுற்றில் ரஷிய ஜோடி சிறப்பாக ஆடி 10-3 என்ற கணக்கில் வென்றது.

    இறுதியில், ரஷிய ஜோடி 6-3, 3-6, 10-3 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்றது.

    • மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதி சுற்று இன்று நடைபெற்றது.
    • இதில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ் வென்று இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றார்.

    பாரீஸ்:

    மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயின் நாட்டில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதலாவது அரையிறுதி ஆட்டம் ஒன்றில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், குரோசிய வீரர் போர்னா கொரிக்குடன் மோதினார்.

    இதில் 6-4, 6-3 என்ற நேர்செட்டில் வென்று அல்காரஸ் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.

    • சான்டியாகோ கான்செலஸ் (மெக்சிகோ)- ரோஜர் வாஸ்செலின் (பிரான்ஸ்) இணையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
    • சபலென்கா 6-4, 6-1 என்ற செட் கணக்கில் எளிதில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயின் நாட்டில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவில் அரை இறுதி ஆட்டம் ஒன்றில் ரோகன் போபண்ணா (இந்தியா)- மேத்யூ எப்டென் (ஆஸ்திரேலியா) ஜோடி சரிவில் இருந்து மீண்டு வந்து 5-7, 7-6 (7-3), 10-4 என்ற செட் கணக்கில் சான்டியாகோ கான்செலஸ் (மெக்சிகோ)- ரோஜர் வாஸ்செலின் (பிரான்ஸ்) இணையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

    அதேபோல், மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில் பெலாரஸ் வீராங்கனை சபலென்கா, கிரேக்க வீராங்கனை மரியா சக்காரியுடன் மோதினார்.

    இதில் சபலென்கா 6-4, 6-1 என்ற செட் கணக்கில் எளிதில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    • பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது.
    • இதில் பெலாரசின் அரினா சபலென்கா வென்று இறுதிக்கு முன்னேறினார்.

    ஸ்பெயின்:

    மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயின் நாட்டில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில் பெலாரஸ் வீராங்கனை சபலென்கா, கிரேக்க வீராங்கனை மரியா சக்காரியுடன் மோதினார்.

    இதில் சபலென்கா 6-4, 6-1 என்ற செட் கணக்கில் எளிதில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    • பெண்கள் ஒற்றையர் பிரிவில் இகா ஸ்வியாடெக் அரையிறுதிக்கு முன்னேறினார்.
    • ஏற்கனவே பெலாரசின் அரினா சபலென்கா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

    ஸ்பெயின்:

    மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயின் நாட்டில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக், குரோசியா வீராங்கனை பெட்ரோ மாட்ரிக்குடன் மோதினார்.

    இதில் இகா ஸ்வியாடெக் 6-0, 6-3 என்ற செட் கணக்கில் எளிதில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் கிரேக்க வீராங்கனை மரியா சக்காரி, ரோமானிய வீராங்கனை இரினா கமாலியா பிகுவுடன் மோதினார்.

    இதில், முதல் செட்டை இழந்த சக்காரி அடுத்த இரு சுற்றுகளை கைப்பற்றி அசத்தினார். இறுதியில், சக்காரி 6-7, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    • மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயின் நாட்டில் நடந்து வருகிறது.
    • ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ் 6-4, 7-5 என்ற நேர்செட்டில் ரஷியாவின் கரன் கச்சனோவை வெளியேற்றி அரைஇறுதிக்கு முன்னேறினார்.

    மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயின் நாட்டில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் கால் இறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ் 6-4, 7-5 என்ற நேர்செட்டில் ரஷியாவின் கரன் கச்சனோவை வெளியேற்றி அரைஇறுதிக்கு முன்னேறினார். இரட்டையர் பிரிவின் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் ரோகன் போபண்ணா (இந்தியா)-மேத்யூ எப்டென் (ஆஸ்திரேலியா) ஜோடி 6-3, 6-2 என்ற நேர்செட்டில் வெஸ்லி கோல்ஹோப் (நெதர்லாந்து)-நீல் ஸ்குப்ஸ்கி (இங்கிலாந்து) இணையை தோற்கடித்து அரைஇறுதிக்குள் நுழைந்தது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் ரஷிய வீராங்கனை வெரோனிகா குடெர்மிடோவா 6-4, 0-6, 6-4 என்ற நேர்செட்டில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலாவுக்கு அதிர்ச்சி அளித்து அரை இறுதியை எட்டினார்.

    • பெண்கள் ஒற்றையர் பிரிவின் கால் இறுதி ஆட்டத்தில் அரினா சபலென்கா அரையிறுதிக்கு முன்னேற்றம்.
    • ஆண்கள் ஒற்றையர் 4வது சுற்று ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 2வது இடத்தில் இருக்கும் ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ் கால் இறுதிக்கு முன்னேற்றம்.

    மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயின் நாட்டில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் கால் இறுதி ஆட்டம் நடைபெற்றது.

    இந்த ஆட்டத்தின் ஒன்றில் ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனும், தரவரிசையில் 2வது இடத்தில் இருப்பவருமான அரினா சபலென்கா (பெலாரஸ்) சரிவில் இருந்து மீண்டு வந்து 2-6, 6-2, 6-1 என்ற செட் கணக்கில் எகிப்தின் மேயர் ஷெரிப்பை வீழ்த்தி அரை இறுதியை எட்டினார்.

    அதேபோல் ஆண்கள் ஒற்றையர் 4வது சுற்று ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 2வது இடத்தில் இருக்கும் ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ் 6-1, 6-2 என்ற நேர்செட்டில் ஒலிம்பிக் சாம்பியன் அலெக்சாண்டர் ஸ்வெரேவை (ஜெர்மனி) வெளியேற்றி கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.

    • மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதிக்கு சிட்சிபாஸ் முன்னேறினார்.
    • ஏற்கனவே ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ் கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.

    பாரீஸ்:

    மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயின் நாட்டில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் கிரீஸ் வீரர் சிட்சிபாஸ், ஸ்பெயின் வீரர் பெர்னபே ஜபாடாவுடன் மோதினார்.

    இதில் 6-3, 6-1 என்ற நேர்செட்டில் வென்று சிட்சிபாஸ் காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

    மற்றொரு ஆட்டத்தில் ஜெர்மனி வீரர் ஜான் லெனார்ட் ஸ்டர்ப், அர்ஜென்டினா வீரர் பெடொ காசினுடன் மோதினார். இதில் ஸ்டர்ப் 7-6, 6-7, 6-3 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    ஏற்கனவே ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ், ரஷிய வீரர் கச்சனோவ் ஆகியோர் காலிறுதிக்கு தகுதி பெற்றனர்.

    • ஆண்கள் ஒற்றையர் 4வது சுற்று ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ் கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.
    • பெண்கள் ஒற்றையர் பிரிவின் கால் இறுதி ஆட்டம் ஒன்றில் எகிப்தின் மேயர் ஷெரிப்பை வீழ்த்தி அரினா சபலென்கா அரை இறுதிக்குள் நுழைந்தார்.

    மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயின் நாட்டில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் 4வது சுற்று ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ் 6-1, 6-2 என்ற நேர்செட்டில் ஒலிம்பிக் சாம்பியன் அலெக்சாண்டர் ஸ்வெரேவை (ஜெர்மனி) வெளியேற்றி கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவின் கால் இறுதி ஆட்டம் ஒன்றில் ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனும், தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான அரினா சபலென்கா (பெலாரஸ்) சரிவில் இருந்து மீண்டு வந்து 2-6, 6-2, 6-1 என்ற செட் கணக்கில் எகிப்தின் மேயர் ஷெரிப்பை வீழ்த்தி அரை இறுதியை எட்டினார்.

    மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் 3-ம் நிலை வீராங்கனையை வீழ்த்தி கிகி பெர்ட்டென்ஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.
    மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வருகிறது. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் தரநிலையில் 3-ம் பிடித்த ருமேனியாவின் சிமோனா ஹெலாப், தரநிலையில் 7-ம் இடத்தை பிடித்த நெதர்லாந்தின் கிகி பெர்ட்டென்ஸ்-ஐ எதிர்கொண்டார்.



    இதில் கிகி பெர்ட்டென்ஸ் ஆட்டத்திற்கு சிமோனா ஹாலெப்பால் ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் 6-4, 6-4 என நேர்செட் கணக்கில் பெர்ட்டென்ஸ் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை தட்டிச் சென்றார்.
    மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதி போட்டியில் ஸ்பெயின் நாட்டின் முன்னணி வீரர் ரபேல் நடால் தோல்வி அடைந்து வெளியேறினார்.
    மாட்ரிட்:

    ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.

    இதில், ஆடவர் ஒற்றையர் அரையிறுதி போட்டியில் ஸ்பெயின் நாட்டின் முன்னணி வீரரான ரபேல் நடால்,  கிரீஸ் நாட்டை சேர்ந்த ஸ்டெபானஸ் சிட்சிபாசை எதிர்கொண்டார். 

    ஆட்டத்தின் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஸ்டெபானஸ் சிட்சிபாஸ் 6-4, 2-6, 6-3 என்ற கணக்கில் ரபேல் நடாலை வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இறுதியில் இவர், நோவக் ஜோகோவிச்சை எதிர்கொள்கிறார். 
     
    ஏடிபி மாஸ்டர்ஸ் போட்டித் தொடர்களில் 70 முறை அரையிறுதிக்கு முன்னேறியவர் ரபேல் நடால் என்பது குறிப்பிடத்தக்கது.
    ×