என் மலர்
நீங்கள் தேடியது "போபண்ணா ஜோடி"
- மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.
- போபண்ணா ஜோடி 2வது சுற்றில் தோல்வி அடைந்தது.
மாட்ரிட்:
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
ஆண்கள் இரட்டையர் பிரிவில் நடைபெற்ற 2வது சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-அமெரிக்காவின் பென் ஷெல்டன் ஜோடி, அர்ஜெண்டினாவின் ஆண்ட்ரஸ் மால்டேனி-மேக்சிமோ கோஜாலே ஜோடி உடன் மோதியது.
இதில் போபண்ணா ஜோடி 4-6, 7-6 (7-5), 11-9 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.
- மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.
- போபண்ணா ஜோடி முதல் சுற்றில் வெற்றி பெற்றது.
மாட்ரிட்:
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
ஆண்கள் இரட்டையர் பிரிவில் நடைபெற்ற முதல் சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-அமெரிக்காவின் பென் ஷெல்டன் ஜோடி, அமெரிக்காவின் ஜேக்சன் வித்ரோவ்-லேமன்ஸ் ஜோடி உடன் மோதியது.
இதில் போபண்ணா ஜோடி 6-7 (5-7), 7-5, 10-7 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
- மாண்டே கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடைபெறுகிறது.
- இரட்டையர் பிரிவில் ரோகன் போபண்ணா ஜோடி காலிறுதியில் தோல்வி அடைந்தது.
மாண்டே கார்லோ:
மாண்டே கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடைபெற உள்ளது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று உள்ளனர்.
ஆண்கள் இரட்டையர் பிரிவின் காலிறுதியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-அமெரிக்காவின் பென் ஷெல்டன் ஜோடி, பிரான்சின் மேனுவல் கினார்டு-மொனாக்கோவின் ரோமைன் அர்னியோடோ ஜோடியுடன் மோதியது.
இதில் முதல் செட்டை 2-6 என இழந்த போபண்ணா ஜோடி, அடுத்த செட்டை 6-4 என கைப்பற்றியது.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது சுற்றில் போபண்ணா ஜோடி 7-10 என்ற கணக்கில் செட்டை இழந்து தோல்வி அடைந்து
தொடரில் இருந்து வெளியேறியது.
- மான்டே கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடைபெறுகிறது.
- இரட்டையர் பிரிவில் ரோகன் போபண்ணா ஜோடி மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியது.
மாண்டே கார்லோ:
மாண்டே கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடைபெற உள்ளது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று உள்ளனர்.
ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-அமெரிக்காவின் பென் ஷெல்டன் ஜோடி, இத்தாலியின் சிமொனே பொலேலி-ஆண்ட்ரியா வவசோரி ஜோடியுடன் மோதியது.
இதில் முதல் செட்டை 2-6 என இழந்த போபண்ணா ஜோடி, அடுத்த இரு செட்களை7-6 (7-4), 10-7 என வென்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியது.
- மான்டே கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடைபெறுகிறது.
- இரட்டையர் பிரிவில் ரோகன் போபண்ணா ஜோடி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
மாண்டே கார்லோ:
மாண்டே கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடைபெற உள்ளது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று உள்ளனர்.
ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-அமெரிக்காவின் பென் ஷெல்டன் ஜோடி, அர்ஜெண்டினாவின் பிரான்சிஸ்கோ-சிலியின் அலெஜாண்ட்ரோ ஜோடியுடன் மோதியது.
இதில் போபண்ணா ஜோடி 6-3, 7-5 என எளிதில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
நாளை மறுதினம் நடைபெறும் 2வது சுற்றில் போபண்ணா ஜோடி, இத்தாலி ஜோடியுடன் மோதுகிறது.
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் அந்நாட்டின் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.
- ஆண்கள் இரட்டையர் பிரிவின் 2வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் போபண்ணா ஜோடி வென்றது.
நியூயார்க்:
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் 2வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டென் ஜோடி, ரஷியாவின் ரோமன் சபியுலின் - கஜகஸ்தானின் ஆண்ட்ரூ கொலுபேவ் ஜோடியுடன் மோதியது.
இதில் போபண்ணா ஜோடி 6-3, 6-3 என்ற நேர்செட்டில் எளிதில் வென்று 3-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தது.
- ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
- இதில் போபண்ணா ஜோடி அதிர்ச்சி தோல்வி அடைந்தது.
பீஜிங்:
ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவு 2வது ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-குரோசியாவின் இவான் டோடிக் ஜோடி, குரோசியாவின் நிகோலோ மெடிக்-நெதர்லாந்தின் வெஸ்லி ஜோடியுடன் மோதியது.
இதில் முதல் செட்டை போபண்ணா ஜோடி 6-7 (5-7) என போராடி தோற்றது. இதில் சுதாரித்துக் கொண்ட போபண்ணா ஜோடி 2வது செட்டை 6-2 என எளிதில் கைப்பற்றியது.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் போபண்ணா ஜோடி 12-14 என்ற புள்ளிக்கணக்கில் தோற்று தொடரில் இருந்து வெளியேறியது.
- வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியாவில் நடைபெற்று வருகிறது.
- இதில் போபண்ணா ஜோடி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
ஆஸ்திரியா:
வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியாவில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா- ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி, நெதர்லாந்தின் ராபின் ஹாஸ்-ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் ஜோடி உடன் மோதியது.
இதில் போபண்ணா ஜோடி 2-6, 7-5, 10-5 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறியது.
நாளை நடைபெறும் காலிறுதியில் போபண்ணா ஜோடி அமெரிக்காவின் நீல் கப்ஸ்கி-நியூசிலாந்தின் மைக்கேல் வீனஸ் ஜோடியுடன் மோதுகிறது.
- வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியாவில் நடைபெற்று வருகிறது.
- இதில் போபண்ணா ஜோடி காலிறுதி சுற்றில் தோல்வி அடைந்தது.
ஆஸ்திரியா:
வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியாவில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா- ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி, அமெரிக்காவின் நீல் கப்ஸ்கி-நியூசிலாந்தின் மைக்கேல் வீனஸ் ஜோடி உடன் மோதியது.
இதில் போபண்ணா ஜோடி 7-6 (9-7) 4-6, 8-10 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.
- பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது.
- இதில் போபண்ணா ஜோடி அதிர்ச்சி தோல்வி அடைந்தது.
பாரீஸ்:
பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் பிரான்சில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா- ஆஸ்திரேலியாவின் மேத்யூ ஹெப்டன் ஜோடி, குரோசியாவின் நிகோலா மெக்டிக்- நெதர்லாந்தின் வெஸ்லி கூலுப் ஜோடியுடன் மோதியது.
இதில் போபண்ணா ஜோடி 6-7 (13-15), 5-7 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தது. இதன்மூலம் தொடரில் இருந்தும் வெளியேறியது.
கடந்த அக்டோபரில் நடந்த வியன்னா ஓபன் டென்னிஸ் தொடரிலும் போபண்ணா ஜோடி காலிறுதியில் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.
- கலப்பு இரட்டையர் பிரிவில் போபண்ணா ஜோடி வென்றது.
சிட்னி:
ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இதற்கிடையே, மெல்போர்னில் நடந்த ஆஸ்திரேலிய ஓபன் கலப்பு இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா- சீனாவின் ஷுவாய் ஜாங் ஜோடி, குரோசியாவின் இவான் டோடிக்-பிரான்சின் கிறிஸ்டினா மிலாடெனோவிச் ஜோடியுடன் மோதியது.
இதில் போபண்ணா ஜோடி 6-4, 6-4 என்ற செட் கணக்கில் எளிதில் வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது. இந்தப் போட்டி சுமார் ஒரு மணி நேரம் 12 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.
- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.
- கலப்பு இரட்டையர் பிரிவில் போபண்ணா ஜோடி அதிர்ச்சி தோல்வி அடைந்தது.
மெல்போர்ன்:
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதி சுற்று போட்டிகள் மெல்போர்னில் நடந்து வருகின்றன.
இதில் ஆண்கள் கலப்பு இரட்டையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-சீனாவின் ஷுவாய் ஜாங் ஜோடி, ஆஸ்திரேலியாவின் ஜான் பியர்ஸ்-ஒலிவியா ஜோடியுடன் மோதியது.
இதில் போபண்ணா ஜோடி முதல் செட்டை 6-2 என வென்றது. ஆனால் அடுத்த இரு செட்களை 4-6, 9-11 என இழந்து தோல்வி அடைந்து, தொடரில் இருந்து வெளியேறியது.






