என் மலர்
டென்னிஸ்

மாண்டே கார்லோ மாஸ்டர்ஸ்: காலிறுதியில் போபண்ணா ஜோடி தோல்வி
- மாண்டே கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடைபெறுகிறது.
- இரட்டையர் பிரிவில் ரோகன் போபண்ணா ஜோடி காலிறுதியில் தோல்வி அடைந்தது.
மாண்டே கார்லோ:
மாண்டே கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடைபெற உள்ளது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று உள்ளனர்.
ஆண்கள் இரட்டையர் பிரிவின் காலிறுதியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-அமெரிக்காவின் பென் ஷெல்டன் ஜோடி, பிரான்சின் மேனுவல் கினார்டு-மொனாக்கோவின் ரோமைன் அர்னியோடோ ஜோடியுடன் மோதியது.
இதில் முதல் செட்டை 2-6 என இழந்த போபண்ணா ஜோடி, அடுத்த செட்டை 6-4 என கைப்பற்றியது.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது சுற்றில் போபண்ணா ஜோடி 7-10 என்ற கணக்கில் செட்டை இழந்து தோல்வி அடைந்து
தொடரில் இருந்து வெளியேறியது.
Next Story






