என் மலர்tooltip icon

    ஆஸ்திரியா

    • வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியாவில் நடைபெற்றது.
    • ஒற்றையர் பிரிவின் இறுதியில் இத்தாலியின் சின்னர் வெற்றி பெற்றார்.

    வியன்னா:

    வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியாவில் நடைபெற்றது.

    ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் இத்தாலியின் ஜானிக் சின்னர், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் உடன் மோதினார்.

    இதில் சின்னர் 3-6 என முதல் செட்டை இழந்தார். இதில் சுதாரித்துக் கொண்ட சின்னர் அடுத்த இரு செட்களை 6-3, 7-5 என வென்று சாம்பியன் பட்டம் வென்றார். வியன்னா ஓபன் தொடரில் இவரது 2வது பட்டமாகும்.

    • வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியாவில் நடந்து வருகிறது.
    • ஒற்றையர் பிரிவில் இத்தாலியின் ஜானிக் சின்னர் வெற்றி பெற்றார்.

    வியன்னா:

    வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியாவில் நடந்து வருகிறது.

    ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் அரையிறுதிப் போட்டியில் இத்தாலியின் ஜானிக் சின்னர், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக விளையாடிய சின்னர் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு அரையிறுதியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் 6-4, 7-5 என்ற செட் கணக்கில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் சின்னர், ஸ்வரேவை எதிர்கொள்கிறார்.

    • கரன்பீர் சிங் இந்த ஆண்டில் 32 ஆட்டத்தில் ஆடி 2 சதம், 13 அரைசதம் உள்பட 1,488 ரன்கள் சேர்த்துள்ளார்.
    • ஓராண்டில் அதிக ரன் குவித்த வீரர்களின் பட்டியலில் முதல் இடம் பிடித்து உலக சாதனை படைத்தார்.

    வியன்னா:

    ஆஸ்திரியா அணி ருமேனியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேற்று நடந்த 4வது டி20 போட்டியில் ஆஸ்திரியா வெற்றி பெற்றதுடன், 3-1 என தொடரைக் கைப்பற்றியது.

    இதில் முதலாவது ஆட்டத்தில் 57 ரன் எடுத்த ஆஸ்திரிய தொடக்க ஆட்டக்காரர் கரன்பீர் சிங் 2-வது ஆட்டத்தில், 90 ரன்னும், 3-வது ஆட்டத்தில் 74 ரன்னும், கடைசி ஆட்டத்தில் 27 ரன்னும் எடுத்து அசத்தினார்.

    இந்நிலையில், கரன்பீர் சிங் இந்த ஆண்டில் இதுவரை 32 ஆட்டத்தில் ஆடி 2 சதம், 13 அரைசதம் உள்பட 1,488 ரன்கள் சேர்த்துள்ளார்.

    இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஓராண்டில் அதிக ரன் குவித்த வீரர்களின் பட்டியலில் முதல் இடம் பிடித்து உலக சாதனை

    படைத்துள்ளார்.

    முதல் இரு இடத்தில் இருந்த பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் (2021-ம் ஆண்டில் 1,326 ரன்), இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் (2022-ம் ஆண்டில் 1,164 ரன்) ஆகியோரின் சாதனைகளை முறியடித்தார்.

    • வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியாவில் நடந்து வருகிறது.
    • இரட்டையர் பிரிவு காலிறுதியில் யூகி பாம்ப்ரி ஜோடி வெற்றி பெற்றது.

    வியன்னா:

    வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியாவில் நடந்து வருகிறது.

    ஆண்களுக்கான இரட்டையர் பிரிவின் காலிறுதி போட்டியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி- குரோஷியாவின் ஆண்ட்ரியா கோரெசன் ஜோடி, குரோஷியாவின் பவிக்-எல் சால்வடாரின் மார்செலோ ஜோடி உடன் மோதியது.

    இதில் பாம்ப்ரி ஜோடி 6-7, 6-4 என சமனிலையில் இருந்தபோது எதிர் ஜோடி காயத்தால் விலகியது. இதையடுத்து, பாம்ப்ரி ஜோடி அரையிறுதிக்குள் நுழைந்தது.

    • வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியாவில் நடந்து வருகிறது.
    • ஒற்றையர் பிரிவில் இத்தாலியின் ஜானிக் சின்னர் வெற்றி பெற்றார்.

    வியன்னா:

    வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியாவில் நடந்து வருகிறது.

    ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றுப் போட்டியில் இத்தாலியின் ஜானிக் சின்னர், கஜகஸ்தானின் அலெக்சாண்டர் பப்ளிக் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக விளையாடிய சின்னர் 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு காலைறுதியில் நெதர்லாந்தின் கிரீக்ஸ்பூர் விலகியதால் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    • வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியாவில் நடந்து வருகிறது.
    • ஒற்றையர் பிரிவில் இத்தாலியின் ஜானிக் சின்னர் வெற்றி பெற்றார்.

    வியன்னா:

    வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியாவில் நடந்து வருகிறது.

    ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றுப் போட்டியில் இத்தாலியின் ஜானிக் சின்னர், சக நாட்டு வீரர் பிளேவியோ கோபாலி உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக விளையாடிய சின்னர் 6-2, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் 6-4, 6-4 என்ற செட் கணக்கில் இத்தாலியின் மேட்டியோ அர்னால்டை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    • வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியாவில் நடந்து வருகிறது.
    • ஒற்றையர் பிரிவில் ரஷியாவின் மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    வியன்னா:

    வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியாவில் நடந்து வருகிறது.

    ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றுப் போட்டியில் ரஷியாவின் மெத்வதேவ், பிரான்சின் கொரண்டின் மவுடெட் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய பிரான்ஸ் வீரர் 7-6 ( 7-3), 6-4 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் மெத்வதேவ் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

    • வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியாவில் நடந்து வருகிறது.
    • ஒற்றையர் பிரிவில் இத்தாலியின் ஜானிக் சின்னர் ஸ்வரேவ் வெற்றி பெற்றார்.

    வியன்னா:

    வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியாவில் நடந்து வருகிறது.

    ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றுப் போட்டியில் இத்தாலியின் ஜானிக் சின்னர், ஜெர்மனியின் டேனியல் அல்டைமர்

    உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக விளையாடிய சின்னர் 6-0, 6-2 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் ரஷியாவின் மெத்வதேவ் 6-4, 6-7 (7-9), 6-2 என்ற செட் கணக்கில் போர்ர்சுகலின் நியூனோ போர்ஜசை வீழ்த்தி

    அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியாவில் நடந்து வருகிறது.
    • இரண்டாவது சுற்றில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் வெற்றி பெற்றார்.

    வியன்னா:

    வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியாவில் நடந்து வருகிறது.

    ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு 2வது சுற்றுப் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், இங்கிலாந்தின் ஜேக்கப் பேர்ன்லி உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக விளையாடிய ஸ்வரேவ் 6-4, 1-6, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் இத்தாலியின் லாரன்சோ முசெட்டி 6-4, 6-3 என்ற செட் கணக்கில் செர்பியாவின் மெஜோடோவிக்கை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

    • ஆஸ்திரியாவின் கிராஸ் நகரில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தது.
    • இந்தச் சம்பவத்தில் குறைந்தது எட்டு பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது.

    வியன்னா:

    ஆஸ்திரியாவின் கிராஸ் நகரில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் இன்று துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது. இந்தச் சம்பவத்தில் குறைந்தது எட்டு பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது.

    துப்பாக்கிச் சூடு நடத்தியவர் அதன்பின் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக, அந்நாட்டு உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், தகவலறிந்து காலை 10 மணிக்கு (உள்ளூர் நேரம்) சிறப்புப் படையினர் அனுப்பி வைக்கப்பட்டனர். பள்ளியிலிருந்து மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக தெரிவித்தனர். பலியானோர் விவரங்கள் பற்றிய தகவல் வெளியாகவில்லை.

    300,000 க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் கிராஸ் நகரம், ஆஸ்திரியாவின் இரண்டாவது பெரிய நகரம் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    • கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதி ஆப்கனிஸ்தானை சேர்ந்த 24 வயது வாலிபர் ஜெர்மனியில் கூட்டத்தில் காரை மோதினார்.

    ஆஸ்திரியாவில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் 14 வயது சிறுவன் உயிரிழந்தான். மேலும் ஐந்து பேர் காயமடைந்தனர்.

    இத்தாலி மற்றும் ஸ்லோவேனியாவின் எல்லைக்கு அருகிலுள்ள வில்லாச் நகரில் நேற்று [சனிக்கிழமை] சாலையில் சென்றுகொண்டிருத்தவர்களை இளைஞன் ஒருவர் சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளான்.

    ஆஸ்திரியாவுக்கு புலம்பெயர்ந்த 23 வயது சிரியா நாட்டு வாலிபர் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தாக்குதலுக்குப் பின்னால் உள்ள நோக்கத்தை போலீசார் இன்னும் கண்டறியவில்லை. மேலும் அந்த நபரின் பின்னணி குறித்த தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    பலியானவர்களில் நான்கு பேர் 14 முதல் 32 வயதுக்குட்பட்ட ஆண்கள், அதில் ஒருவர் துருக்கையை சேர்ந்தவர் என்று காவல்துறை   தெரிவித்துள்ளது. இருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்ற இருவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளன.

     தாக்குதல் நடத்தியவருக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இடையே ஏதேனும் தொடர்பு இருந்ததா அல்லது பயங்கரவாத செயலா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.

    புலம்பெயர்ந்தவரால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதால் அந்நாட்டுக்கு படையெடுக்கும் அகதிகள் குறித்த விமர்சனத்தை எதிர்க்கட்சிகள் முன்வைக்கின்றன.

     

    ஆஸ்திரியாவின் உள்துறை அமைச்சக அறிக்கைப்படி, 2024 ஆம் ஆண்டில் 24,941 வெளிநாட்டினர் அந்நாட்டில் புகலிடம் கோரி விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்தவர்களில் சிரியாவிலிருந்தும், ஆப்கானிஸ்தானிலிருந்தும் வந்தவர்களே அதிகம்.

    முன்னதாக கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதி ஆப்கனிஸ்தானை சேர்ந்த 24 வயது வாலிபர் ஆஸ்திரியாவுக்கு அருகில் உள்ள ஜெர்மனி நாட்டின் முனீச்சில் நடந்த கூட்டத்திற்குள் காருடன் புகுந்ததில் 28 பேர் படுகாயம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.

    • வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியாவில் நடந்தது.
    • இதில் ரஷிய வீரர் கரன் கச்சனாவ் தோல்வி அடைந்தார்.

    வியன்னா:

    வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியாவில் நடைபெற்றது. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றுப் போட்டி நேற்று நடைபெற்றது.

    பிரிட்டனின் ஜாக் டிராபர், ரஷியாவின் கரன் கச்சனாவ் உடன் மோதினார்.

    இதில் ஜாக் டிராபர் 6-4, 7-5 என்ற செட் கணக்கில் வென்று கோப்பையை வென்றார்.

    ×