என் மலர்
நீங்கள் தேடியது "refugees"
- பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு வந்து தஞ்சம் புகுந்த சிறுபான்மையினருக்கு சலுகை வழங்கப்பட்டுள்ளது.
- இப்போது அது 10 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டு டிசம்பர் 31, 2024 வரை தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
குடியுரிமை திருத்தக்க சட்டம் (CAA) மற்றும் புதிதாக செயல்படுத்தப்பட்ட வெளிநாட்டினர் சட்டம் ஆகியவற்றின்கீழ் குடியுரிமை விதிமுறைகளை தளர்த்தி மத்திய அரசு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, டிசம்பர் 31, 2024 க்கு முன்பு பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து பல்வேறு காரணங்களுக்காக இந்தியாவிற்கு வந்த இந்துக்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், ஜைனர்கள் மற்றும் பார்சிகள், பாஸ்போர்ட் அல்லது பிற ஆவணங்கள் இல்லாவிட்டாலும் இந்தியாவில் தங்க அனுமதிக்கப்படுவார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் அவர்கள் இங்கு குடியுரிமைக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்களாக கருதப்படுவார்கள்.
முன்னதாக CAA-வில், இந்த வரம்பு டிசம்பர் 31, 2014 வரை நிர்ணயிக்கப்பட்டது, ஆனால் இப்போது அது 10 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டு டிசம்பர் 31, 2024 வரை தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
மத ரீதியான தாக்குதல்கள் காரணமாக இந்தியாவிற்கு வந்து இதுவரை தங்கள் எதிர்காலம் குறித்து குழப்பத்தில் இருந்த அகதிகளுக்கு இதன் மூலம் நேரடி பலன் கிடைக்கும்.
- ஒரு படகில் நீர் கசியத் தொடங்கியதால், அனைவரும் மற்றொரு படகிற்கு மாறியுள்ளனர்.
- மத்தியதரைக் கடலைக் கடக்க முயன்றதில் இதுவரை 675 பேர் உயிரிழந்துள்ளனர்.
இத்தாலியின் தெற்குப் பகுதியில் உள்ள லம்பேடுசா தீவுக்கு அருகே அகதிகள் சென்ற படகு கவிழ்ந்ததில் குறைந்தது 26 பேர் உயிரிழந்தனர்.
மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
லிபியாவில் இருந்து இரண்டு படகுகளில் அகதிகள் பயணித்துள்ளனர். ஒரு படகில் நீர் கசியத் தொடங்கியதால், அனைவரும் மற்றொரு படகிற்கு மாறியுள்ளனர்.
ஆனால், அந்தப் படகு கடல் சீற்றம் காரணமாக கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இத்தாலிய கடலோர காவல்படையினர் ஐந்து கப்பல்கள், இரண்டு விமானங்கள் மற்றும் ஒரு ஹெலிகாப்டர் மூலம் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
ஐ.நா. அகதிகள் முகமையின் (UNHCR) தகவல்படி, படகில் சுமார் 92 முதல் 97 பேர் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதுவரை 60 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இந்த ஆண்டு மத்தியதரைக் கடலைக் கடக்க முயன்றதில் இதுவரை 675 பேர் உயிரிழந்துள்ளதாக UNHCR-ன் இத்தாலிய செய்தித் தொடர்பாளர் பிலிப்போ உங்காறோ தெரிவித்தார்.
- 12 பேர் மட்டுமே பாதுகாப்பாக கரையை அடைந்தனர்.
- கடந்த சில மாதங்களில் மட்டும், நூற்றுக்கணக்கான அகதிகள் படகு கவிழ்ந்த சம்பவங்களில் இறந்துள்ளனர்.
ஏமனில் செங்கடலில் படகு கவிழ்ந்ததில் 76 அகதிகள் உயிரிழந்தனர். ஞாயிற்றுக்கிழமை, ஏமனின் அப்யான் மாகாணம் அருகே 157 அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கடலில் கவிழ்ந்தது.
இதன் விளைவாக, 157 பேர் தண்ணீரில் விழுந்தனர். இவர்கள் பெரும்பாலானோர் கிழக்கு ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவை சேர்த்தவர்கள் ஆவர்.
கான்பார் மாவட்டத்தில் கடற்கரையில் 54 உடல்கள் கரை ஒதுங்கியுள்ளன. மேலும் சில உடல்கள் வேறொரு பகுதியில் கண்டெடுக்கப்பட்டன. இதுவரை 32 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
உலகம் முழுவதும், அதிக சுமை காரணமாக அகதிகள் பயணிக்கும் படகுகள் தொடர்ந்து விபத்துக்குள்ளாகும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கடந்த சில மாதங்களில் மட்டும், நூற்றுக்கணக்கான அகதிகள் படகு கவிழ்ந்த சம்பவங்களில் இறந்துள்ளனர்.
- பொருளாதார, அரசியல், சுற்றுச்சூழல் காரணங்களால் உலகின் எட்டு பேரில் ஒருவர் தற்போது இடம்பெயர்ந்துள்ளனர்.
- இந்திய அதிகாரிகளால் சுமார் 40 பேர் கண்கள் கட்டப்பட்டு கடலில் விடப்பட்ட செய்தி உலக அளவில் கண்டனத்தை குவித்தது.
உலகளவில் ஆண்டுதோறும் இன்று (ஜூன் 20) அகதிகள் தினம் கொண்டாடப்படுகிறது. உயிர்தப்பி, உடைமைகளை இழந்து, வேறொரு நாட்டுக்கு நிச்சயமில்லாத எதிர்காலத்தை நோக்கி அகதிகள் ஆபத்தான முறையில் புலம்பெயர்ந்த வண்ணம் உள்ளனர்.
கடலில் படகு கவிழ்ந்து நூற்றுக்கணக்கான அகதிகள் உயிரிழப்பு என்ற செய்திகளை அடிக்கொருமுறை பார்க்க நேரிடுகிறது. சட்டவிரோத குடியேறிகள் என்று கூறி அவர்கள் மீண்டும் மரணத்தை பிழைத்து தப்பி வந்த அவர்களின் நாட்டுக்கே திருப்பி நாடுகடத்தப்படும் சம்பவங்களும் அதிகரித்த வண்ணம் உள்ளன.
அகதிகளை ஏலியன்கள் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வரையறுக்கிறார். அவரை பின்பற்றியே இந்தியா உள்ளிட்ட நாடுகளின் செயல்களும் சமீப காலமாக இருந்து வருகின்றன. இதற்கு சமீப காலமாக அசாம், டெல்லி உள்ளிட்ட ஆகிய மாநிலங்களில் நடந்து வரும் போலீஸ் வேட்டைகளே சாட்சி.
வங்கதேசத்தினர் என்ற சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டவர்கள் வங்கதேச எல்லையில் கொண்டு விடப்பட்டதும், பின்னர் அவர்கள் இந்தியர்கள்தான் என நிரூபணமாகி வங்கதேச அதிகாரிகள் அவர்களை மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைத்த சம்பவங்கள் குறித்த செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த மாதம், இந்திய அதிகாரிகள் டெல்லியில் வசிக்கும் டஜன் கணக்கான ரோஹிங்கியா அகதிகளை கைது செய்தனர். அவர்களில் பலர் அகதி அடையாள ஆவணங்களை வைத்திருந்தனர்.
இந்தக் குழுவில் உள்ள சுமார் 40 பேர் கண்கள் கட்டப்பட்டு அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு விமானத்தில் கொண்டு செல்லப்பட்டு, பின்னர் இந்திய கடற்படைக் கப்பலுக்கு மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.
படகு அந்தமான் கடலைக் கடந்த பிறகு, அகதிகளுக்கு லைஃப் ஜாக்கெட்டுகள் வழங்கப்பட்டு, அதிகாரிகள் கடலுக்குள் வலுக்கட்டாயமாக அவர்களை விட்டு வந்ததாக எழுந்த குற்றச்சாட்டு உலகளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
உலகெங்கிலும் அதிகரித்து வரும் தேசியவாதம் மற்றும் பெரும்பான்மைவாதம் காரணமாக, அகதிகளும் புலம்பெயர்ந்தோரும் முன்னெப்போதும் இல்லாத அழுத்தங்களை எதிர்கொள்கின்றனர்.
சமீபத்தில், 'தி லான்செட்' ஆய்விதழ் வெளியிட்ட தகவலின்படி, பொருளாதார, அரசியல், சுற்றுச்சூழல் காரணங்களால் உலகின் எட்டு பேரில் ஒருவர் தற்போது இடம்பெயர்ந்துள்ளனர். இருப்பினும், அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோரின் உரிமைகளும் வாழ்க்கையும் மனிதாபிமானமற்ற அழுத்தங்களுக்கு உள்ளாகி வருகின்றன.
பிரிவினை கால அகதிகள் நெருக்கடியால் பாதிக்கப்பட்டிருந்தாலும், இந்தியா 1951 அகதிகள் மாநாடு அல்லது 1967 நெறிமுறை எதிலும் இதுவரை கையெழுத்திடவில்லை. இந்த ஒப்பந்தங்கள், 1948 ஆம் ஆண்டின் மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தின் அடிப்படையில் உருவானவை.
ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்கள் மீறப்படுவதும், அதன் பொதுச் செயலாளரின் எச்சரிக்கைகள் புறக்கணிக்கப்படுவதும், அதன் முகமைகளுக்கான நிதிகள் குறைக்கப்படுவதும் ஐ.நா. அமைப்பை பலவீனப்படுத்தி வருவதாக 'தி லான்செட்' சுட்டிக்காட்டியுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் 'சுகாதாரம் மற்றும் இடம்பெயர்வு திட்டம்' மூடப்படும் அபாயத்தில் உள்ளதாகவும் இது உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான அகதிகளுக்கு பேரழிவு தரும் விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்தியா தற்போது 80,000 க்கும் மேற்பட்ட திபெத்திய அகதிகளுக்கும், அதே அளவு மியான்மர் அகதிகளுக்கும் அடைக்கலம் வழங்கியுள்ளது.
இந்தியா "சட்டவிரோத குடியேறிகள்" என்று அடையாளம் காணப்படுபவர்களை நாடு கடத்தும் அதேவேளையில், அதிக எண்ணிக்கையிலான இந்தியர்களும் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படுகிறார்கள்.
2009 மற்றும் 2024 க்கு இடையில், அமெரிக்காவிலிருந்து மொத்தம் 15,564 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இவை அனைத்தும், உலகப் போருக்குப் பிந்தைய உலக நாடுகளின் அடிப்படையாக இருந்த அன்பு மற்றும் சகோதரத்துவ உணர்வு குறைந்து வரும் ஒரு உலகைச் சுட்டிக்காட்டுகின்றன. 56000 பேரை பலிகொண்ட பாலஸ்தீன போர் பற்றிய உலக நாடுகளின் மௌனம் இதற்கு உதாரணம்.
உலக தலைவர்கள் சர்வதேச மாநாடுகளில் கை குலுக்கி, கட்டி அணைத்துக்கொள்ளும் புகைப்படங்கள் உலா வரும் அதே வேளையில் எதார்த்தம் நேர் எதிராகவே இருந்து வருகிறது.
உலக தலைவர்கள், 'ஒரே உலகம், ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்' என்ற உணர்வில் தங்கள் எல்லைகளுக்கு அப்பால் உள்ளவர்களின் யதார்த்தங்களை கருத்தில் கொள்ள வேண்டும் என்பதே நாடுகள் என்ற வரையறையை கடந்து மனிதநேயத்திற்காக குரல் கொடுப்பவர்களின் கோரிக்கையாக உள்ளது.
- ஜம்முவில் மியான்மரை சேர்ந்த ரோகிங்கியா அகதிகள் சட்டவிரோதமாக தங்கி இருப்பதாக ரகசிய தகவல் வெளியானது.
- ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 அகதிகளை போலீசார் கைது செய்தனர்.
பல்வேறு நாடுகளை சேர்ந்த அகதிகள் சட்டவிரோதமாக எல்லை வழியாக இந்தியாவுக்குள் நுழைந்து வருகின்றனர். இவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில், இந்தியாவிற்குள் நுழையும் அகதிகள் பல்வேறு மாநிலங்களுக்கு சட்டவிரோதமாக சென்று புதிய அடையாளங்களை உருவாக்கி வசித்து வருகின்றன.
இந்நிலையில், இதுபோல் ஜம்முவில் மியான்மரை சேர்ந்த ரோகிங்கியா அகதிகள் சட்டவிரோதமாக தங்கி இருப்பதாக ரகசிய தகவல் வெளியானது.
இதையடுத்து நர்வல் பகுதியில் போலீசார் சோதனை நடத்தியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 அகதிகளை கைது செய்தனர்.
- கண்டக்டரை தாக்கிய அகதிகள் கைது செய்யப்பட்டனர்.
- சந்திரன் டிக்கெட் எடுக்கும்படி கேட்டார்.
மதுரை
தேனி பாரஸ்ட் ரோட்டை சேர்ந்தவர் சந்திரன் (53). அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக உள்ளார். நேற்று இரவு இவர் பணியில் இருந்த பஸ் பழங்காநத்தத்திற்கு வந்தது. அங்கு 2 பேர் ஏறினர். அவர்களிடம் சந்திரன் டிக்கெட் எடுக்கும்படி கேட்டார். அவர்கள் மறுத்தனர். இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த இருவரும் கண்டக்டரை தாக்கினர். இது குறித்த புகாரின்பேரில் சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து கூத்தியார்குண்டு இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த துரைராஜ் மகன் அரவிந்தன் (22), திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த சைந்தன் (31) ஆகியோரை கைது செய்தனர்.
- பாலாட்டா அகதிகள் முகாமில் இன்று அதிகாலை இஸ்ரேல் ராணுவம் அதிரடி சோதனை நடத்தினர்.
- 3 பாலஸ்தீனர்களை இஸ்ரேல் ராணுவம் சுட்டுக் கொன்றதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு இருந்து வருகிறது. இதில் இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் போராளி அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரை பகுதியில் உள்ள பாலாட்டா அகதிகள் முகாமில் இன்று அதிகாலை இஸ்ரேல் ராணுவம் அதிரடி சோதனை நடத்தினர்.
அவர்கள் முகாமுக்குள் புல்டோசர் களுடன் புகுந்தனர். இதனால் இஸ்ரேல் ராணுவத்துக்கும்-பாலஸ்தீனர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் 3 பாலஸ்தீனர்களை இஸ்ரேல் ராணுவம் சுட்டுக் கொன்றதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.
- அதிகாரிகளின் பேச்சை நம்பி வீட்டை இழந்து இலங்கை அகதிகள் தவிக்கிறார்கள்.
- கலெக்டர் ஆஷா அஜீத்தை சந்தித்து மனு கொடுத்தனர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள மூங்கிலூரணியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இங்கு 32 ஆண்டுகளுக்கு மேலாக 186 குடும்பங்களை சேர்ந்த இலங்கை தமிழர்கள் வீடு கட்டி வசித்து வருகின்றனர்.
கடந்த பிப்ரவரி மாதம் அங்கு வந்த அதிகாரிகளிடம் முதல்-அமைச்சரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் புதிய வீடுகள் கட்டி தரப்படும் என இலங்கை அகதிகள் தெரிவித்துள்ளனர். எனவே தற்போதுள்ள வீட்டை இடித்து விட்டு சிறிது காலம் வெளியே தங்க வேண்டும் என கூறியுள்ளனர்.
புதிய வீடு கிடைக்கும் என்று அதிகாரிகள் கூறிய உறுதிமொழியால் முகாமில் இருந்த 52 குடும்பங்களை ேசர்ந்தவர்கள்புதிய வீடு கட்டுவதற்கு தங்கள் வீட்டை இடித்தனர். இதன் காரணமாக அவர்கள் வாடகை வீட்டில் குடியேறினர்.
இந்த நிலையில் அதிகாரிகள் கூறியபடி தற்போது வரை வீடுகள் கட்டி தரப்படவில்லை. இது தொடர்பாக கேட்டால் உரிய பதிலும் இல்லை. இதனால் அதிர்ச்சியடைந்த இலங்கை அகதிகள் தங்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என கலெக்டர் ஆஷா அஜீத்தை சந்தித்து மனு கொடுத்தனர்.
மேலும் அதிகாரிகள் கூறியபடி முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ் உடனே வீடு கட்டி தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- இலங்கை தமிழர்களை அகதிகளாக அங்கரிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
- வெளியே சென்று வேலை செய்தால் மட்டுமே தொடர்ந்து இங்கு வாழ முடியும்.
ராமநாதபுரம்
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் உணவு பொருட்களின் தட்டுப்பாடு, விலையேற்றம் காரணமாக கடந்த மார்ச் மாதம் 22-ந் தேதி முதல் இன்று வரை 200-க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வந்து மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தமிழகம் வந்துள்ள இலங்கை தமிழர்களை தற்போது வரை அகதிகளாக பதியாமல் அவர்களுக்கு தமிழக அரசு உணவு, தங்குமி டம் மட்டும்வழங்கி வருகிறது.இலங்கையில் இருந்து வந்துள்ள தங்களை அகதிகளாக பதிய வேண்டும் என இலங்கை தமிழர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இது குறித்து முகாமில் உள்ள தனித்துணை ஆட்சியர் அலுவலகத்தில் கேட்டபோது, மத்திய அரசு சார்பில் தற்போது வரை அகதிகளாக பதிவு செய்ய எந்த விதமான அதிகாரப்பூர்வ உத்தரவும் வரவில்லை. எனவே மனிதாபிமான அடிப்படையில் தான் அவர்களை தற்போது இங்கு தங்க வைத்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.இதே நிலை நீடித்தால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும். அவர்களை மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்ப வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த மாதம் 24-ந் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை பார்வையிடுவதற்காக தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் அரசு உறுதிமொழி குழு தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. தலைமையில் சட்டப்பேரவை அரசு உறுதிமொழி குழு உறுப்பினர்கள் அண்ணா துரை, அருள், கருணாநிதி, மனோகரன், ராமலிங்கம், விசுவநாதன் உள்ளிட்டவர்கள் வந்து இருந்தனர். பின்னர் இந்த குழுவினர் மண்டபத்தில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமிற்கு சென்றனர்.
அங்கு வசிக்கக்கூடிய இலங்கை தமிழர்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தனர். இலங்கை தமிழர்களை அகதிகளாக பதிவு செய்ய கலெக்டருக்கு இக்குழு பரிந்துரை செய்தது.
தற்போது புதியதாக இலங்கையில் இருந்து வரும் மக்களுக்கான மாதாந்திர உதவித்தொகை பெற்றுத்தர இலங்கை தமிழர் நல ஆணையரிடம் குழுவினர் பரிந்துரை செய்யும் எனவும் தெரிவித்தனர். இருப்பினும் ஒரு மாதம் கடந்துள்ள நிலையில் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை.
இதுகுறித்து மண்டபம் இலங்கை தமிழர் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள புதிதாக வந்த இலங்கை தமிழர்கள் "மாலைமலர்" நிருபரிடம் கூறியதாவது:-
இலங்கையில் நாங்கள் பட்ட கஷ்டத்தை காட்டிலும் இங்கு நிம்மதியாக இருக்கிறோம். இங்கு வந்த பிறகுதான் பிள்ளைகளை வளர்க்க முடியும் என்ற நம்பிக்கை வந்துள்ளது. எங்களை வெளியே வேலைக்கு செல்ல அனுமதிக்குமாறு அதிகாரிகளை கேட்கிறோம். ஆனால் எங்களை வெளியே செல்ல அனு மதிக்கவில்லை. எங்களை வேலைக்கு போக அனுமதித்தால் தானே எங்கள் பிள்ளைகளை நன்றாக வளர்க்க முடியும். தொடர்ந்து பதிவு இல்லாமல் எங்களால் எத்தனை மாதம் இப்படி இருக்க முடியும். இலங்கையை விட இங்கு காய்கறி, அத்தியாவசிய பொருட்களின் விலை மிகவும் குறைவாக இருக்கிறது. இருப்பினும் நாங்கள் வந்த நாள் முதல் இதுவரை வீட்டில் சமைக்கவில்லை. எங்களுக்கு 3 நேரமும் உணவு வழங்கப்படு கிறது. அந்த உணவை சாப்பிட்டு வருகிறோம். தற்போது அகதிகள் முகாமில் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகள் மழை பெய்தால் ஒழுகும் நிலையில் உள்ளது. இதுகுறித்து நாங்கள் அதிகாரியிடம் கூறியபோது, விரைவில் சரி செய்து தருவதாக தெரிவித்த னர். ஆனால் இதுவரை சரி செய்யவில்லை. எங்களுக்கு பாய், மின்விசிறி, தண்ணீர் குடம், உள்ளிட்ட பொருட்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதுமட்டும் எங்களுக்கு எப்படி போதுமானதாக இருக்கும். எங்களுடைய வாழ்க்கையை மேம்படுத்த நாங்கள் வெளியே சென்று வேலை செய்தால் மட்டுமே தொடர்ந்து இங்கு வாழ முடியும். எனவே எங்களை உடனடியாக அகதிகளாக பதிவு செய்ய அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- தாக்குதல் காரணமாக உக்ரைனியர்கள் ரஷியாவிற்குள் தஞ்சம் புகுந்து வருகின்றனர்
- அவர்கள் தவிப்பதை எங்களால் வேடிக்கை பார்க்க முடியாது என்றார் ஒரு ரஷிய பெண்மணி
2022 பிப்ரவரியில் ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்ரமித்தது. ரஷியாவை எதிர்த்து அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் உதவியுடன், உக்ரைன் கடுமையாக போரிட்டு வருகிறது.
ரஷியாவில் இப்போர் குறித்து ரஷியாவையோ, அதிபர் விளாடிமிர் புதினையோ விமர்சிப்பவர்கள் மீது ரஷிய அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
ஆனால் அரசுக்கு தெரியாமல், உக்ரைன் அகதிகளுக்கு ரஷியாவை சேர்ந்த பலர் மனிதாபிமான உதவிகளை செய்து வருகின்றனர்.
ராணுவ தாக்குதல் காரணமாக ரஷியாவிற்கோ அல்லது ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் பிராந்தியங்களுக்கோ, உக்ரைனின் பிற பகுதிகளிலிருந்து மக்கள் அகதிகளாக தினம் வந்திறங்குகின்றனர். தங்களது வீடு, உடைமைகள் மற்றும் செல்வம் அனைத்தையும் இழந்து அகதிகளாக எதிர்காலம் குறித்த அச்சத்துடன் வந்திறங்கும் உக்ரைனியர்களுக்கு ரஷிய மக்கள் தன்னார்வலர்களாக உதவி செய்து வருகின்றனர்.
"இந்த அகதிகளுக்காக இணையவழியாக நன்கொடை பெற்று உடைகள், மருந்துகள் மற்றும் உணவு வசதி போன்றவற்றை செய்து தருகிறேன். ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு ரெயிலில் வருபவர்களுக்கு வேலை வாய்ப்பு, தங்குமிடம் போன்றவற்றையும் ஏற்பாடு செய்கிறேன். என்னை போல் ஆயிரக்கணக்கான ரஷியர்கள் உதவி செய்கிறார்கள். பாதுகாப்பு காரணங்களால் இது குறித்து நாங்கள் வெளியில் பேசுவதில்லை," என கலினா அர்ட்யோமென்கோ (58) எனும் ரஷிய பெண்மணி தெரிவித்தார்.
"எங்களை விட மோசமான நிலைமைக்கு தள்ளப்பட்டவர்களை நாங்கள் வெறுமனே வேடிக்கை பார்த்து கொண்டு நிற்க முடியாது. நாங்கள் அவர்களுக்கு உதவியே ஆக வேண்டும்" என ல்யுட்மில்லா (43) எனும் மற்றொரு ரஷிய பெண் கூறினார்.
2022 டிசம்பர் மாதமே ரஷியாவில் உக்ரைன் நாட்டு அகதிகள் 10 லட்சத்திற்கும் மேல் உள்ளனர் என ஐநா சபை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- நகோர்னோ-கராபாக் பிராந்தியத்திற்காக இரு நாடுகளும் சண்டையிட்டு வருகின்றன
- 2020ல் 6 வாரங்கள் நடைபெற்ற போரில் ஏராளமானவர்கள் கொல்லப்பட்டனர்
ஐரோப்பாவிலிருந்து ஆசிய கண்டம் வரை ஐக்கிய சோவியத் சோஷலிஸ குடியரசு எனும் பெயரில் ஒருங்கிணைந்த பல நாடுகளுடன் 1922ல் இருந்த வந்த கூட்டமைப்பு, 1991ல் 15 நாடுகளாக உடைந்தது.
இவற்றில் அஜர்பைஜான் மற்றும் அர்மேனியா ஆகிய இரு நாடுகளுக்கிடையே கருங்கடலுக்கும் கேஸ்பியன் கடலுக்குமிடையே உள்ள தெற்கு காகஸஸ் மலைப்பகுதியையொட்டி உள்ள நகோர்னோ-கராபாக் பிராந்தியத்திற்கு உரிமை கொண்டாடி போர் நடைபெற்று வருகிறது.
2020ல் 6 வாரங்களாக நடைபெற்ற மிக பெரிய போரில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் இப்பகுதியில் வசித்து வந்த 1 லட்சத்து 20 ஆயிரம் மக்களில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இப்பகுதியிலிருந்து அர்மேனியாவிற்குள் அகதிகளாக நுழைந்திருக்கின்றனர். கடந்த வாரம், இப்பகுதியை அஜர்பைஜான் கைப்பற்றியதிலிருந்து உயிருக்கு ஆபத்து ஏற்படும் அச்சத்தில் தங்கள் உடைமைகளை விட்டு விட்டு அர்மேனியாவிற்குள் நுழைந்திருக்கிறார்கள். அப்பகுதியில் காலங்காலமாக வசித்து வந்த அர்மேனியர்களை அஜர்பைஜான்வாசிகளாக மாற்ற போவதாக அஜர்பைஜான் எச்சரித்திருந்தது.
இவர்களுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்து தர அர்மேனியா முன் வந்திருக்கிறது.
- உரிய ஆவணங்களின்றி பாகிஸ்தானில் 17 லட்சம் ஆப்கானிஸ்தான் நாட்டவர்கள் தங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
- முடிவை பாகிஸ்தான் அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தலிபான்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இஸ்லாமாபாத்:
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. அங்கிருந்து ஏராளமானோர் அகதிகளாக அண்டை நாடான பாகிஸ்தானில் தஞ்சம் அடைந்து வருகிறார்கள்.
இந்நிலையில் பாகிஸ்தானில் அனுமதியில்லாமல் தங்கியுள்ள 17 லட்சம் ஆப்கானிஸ்தான் அகதிகள் வெளியேற அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானுடனான எல்லைப் பகுதியில் அதிகரித்து வரும் பயங்கரவாத தாக்குதல்களுக்கு அந்த நாட்டிலிருந்து வந்தவர்கள் தான் காரணம் என்று பாகிஸ்தான் அரசு குற்றம்சாட்டி வருகிறது. இதற்கிடையே தான் ஆப்கானிஸ்தான் அகதிகள், பாகிஸ்தானில் இருந்து வெளியேற உத்தரவிட்டு உள்ளது.
தற்போது உரிய ஆவணங்களின்றி பாகிஸ்தானில் 17 லட்சம் ஆப்கானிஸ்தான் நாட்டவர்கள் தங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் அனைவரையும் வெளியேற்றும் நடவடிக்கை மேற் கொள்ளப்படுகிறது. பாகிஸ்தானின் இந்த அறிவிப்புக்கு தலிபான்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த முடிவை பாகிஸ்தான் அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தலிபான்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த வாரம் மஸ்தூங் நகரில் நடந்த மத நிகழ்ச்சியில் தற்கொலைப்படை தாக்குதல் நடந்தது. இதில் 52 பேர் பலியானார்கள். இதுபோன்ற தாக்குதல்கள் நடத்தும் தீவிரவாதிகளுக்கு தலிபான்கள் புகலிடம் அளிப்பதாக பாகிஸ்தான் அரசு குற்றம் சாட்டி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.






