என் மலர்

    நீங்கள் தேடியது "volunteers"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா ஆகிய நிகழ்ச்சிகள் பல்லடம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
    • தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட இணைச் செயலாளர் கலையரசி தலைமை தாங்கினார்.

    பல்லடம்:

    தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் பல்லடம், பொங்கலூர் ஒன்றிய கிளைத் துவக்க விழா மற்றும் பள்ளிக்கல்வித்துறையின் வானவில் மன்ற கருத்தாளர்கள் சமுதாய பங்கேற்பாக கோடை விடுமுறையில் நடத்திய ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழாவில் உறுதுணையாக செயல்பட்ட இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா ஆகிய நிகழ்ச்சிகள் பல்லடம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட இணைச் செயலாளர் கலையரசி தலைமை தாங்கினார்.

    மாவட்ட இணை செயலாளர் ராணி ராமமூர்த்தி முன்னிலை வகித்தார்.பல்லடம் கிளை செயலாளர் சரண்யா வரவேற்றார்.இந்தநிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக பல்லடம் ரெயின்போ ரோட்டரி சங்க தலைவர் சுந்தர்ராஜன், ரோட்டரி உதவி ஆளுநர் கவிதா சுந்தர்ராஜன் மற்றும் ஆசிரிய பயிற்றுனர் மாரியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கினார்கள்.

    தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் கௌரிசங்கர் இயக்க செயல்பாடுகள் குறித்து பேசினார். மாநில செயற்குழு உறுப்பினர் ராமமூர்த்தி பல்லடம், பொங்கலூர் கிளை பொறுப்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து வாழ்த்துரை வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில் இல்லம் தேடி கல்வித் தன்னார்வலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தாக்குதல் காரணமாக உக்ரைனியர்கள் ரஷியாவிற்குள் தஞ்சம் புகுந்து வருகின்றனர்
    • அவர்கள் தவிப்பதை எங்களால் வேடிக்கை பார்க்க முடியாது என்றார் ஒரு ரஷிய பெண்மணி

    2022 பிப்ரவரியில் ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்ரமித்தது. ரஷியாவை எதிர்த்து அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் உதவியுடன், உக்ரைன் கடுமையாக போரிட்டு வருகிறது.

    ரஷியாவில் இப்போர் குறித்து ரஷியாவையோ, அதிபர் விளாடிமிர் புதினையோ விமர்சிப்பவர்கள் மீது ரஷிய அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

    ஆனால் அரசுக்கு தெரியாமல், உக்ரைன் அகதிகளுக்கு ரஷியாவை சேர்ந்த பலர் மனிதாபிமான உதவிகளை செய்து வருகின்றனர்.

    ராணுவ தாக்குதல் காரணமாக ரஷியாவிற்கோ அல்லது ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் பிராந்தியங்களுக்கோ, உக்ரைனின் பிற பகுதிகளிலிருந்து மக்கள் அகதிகளாக தினம் வந்திறங்குகின்றனர். தங்களது வீடு, உடைமைகள் மற்றும் செல்வம் அனைத்தையும் இழந்து அகதிகளாக எதிர்காலம் குறித்த அச்சத்துடன் வந்திறங்கும் உக்ரைனியர்களுக்கு ரஷிய மக்கள் தன்னார்வலர்களாக உதவி செய்து வருகின்றனர்.

    "இந்த அகதிகளுக்காக இணையவழியாக நன்கொடை பெற்று உடைகள், மருந்துகள் மற்றும் உணவு வசதி போன்றவற்றை செய்து தருகிறேன். ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு ரெயிலில் வருபவர்களுக்கு வேலை வாய்ப்பு, தங்குமிடம் போன்றவற்றையும் ஏற்பாடு செய்கிறேன். என்னை போல் ஆயிரக்கணக்கான ரஷியர்கள் உதவி செய்கிறார்கள். பாதுகாப்பு காரணங்களால் இது குறித்து நாங்கள் வெளியில் பேசுவதில்லை," என கலினா அர்ட்யோமென்கோ (58) எனும் ரஷிய பெண்மணி தெரிவித்தார்.

    "எங்களை விட மோசமான நிலைமைக்கு தள்ளப்பட்டவர்களை நாங்கள் வெறுமனே வேடிக்கை பார்த்து கொண்டு நிற்க முடியாது. நாங்கள் அவர்களுக்கு உதவியே ஆக வேண்டும்" என ல்யுட்மில்லா (43) எனும் மற்றொரு ரஷிய பெண் கூறினார்.

    2022 டிசம்பர் மாதமே ரஷியாவில் உக்ரைன் நாட்டு அகதிகள் 10 லட்சத்திற்கும் மேல் உள்ளனர் என ஐநா சபை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 22 பெண் சுகாதார தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
    • மக்களை தேடி மருத்துவ உதவி மையத்தை தொடர்பு கொள்ளலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாநகராட்சி பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை சார்பில் தமிழகத்தில் முதல் முறையாக மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்திற்காக உதவி மையத்தை மேயர் சண். ராமநாதன் திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் துணை மேயர் டாக்டர். அஞ்சுகம் பூபதி, மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் மற்றும் மாநகர்நல அலுவலர் டாக்டர். சுபாஷ்காந்தி, மண்டல குழு தலைவர்கள், உறுப்பினர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் கவுன்சி லர்கள், டாக்டர்கள், செவிலியர்கள், ஆய்வக நுட்புநர் மற்றும் 22 பெண் சுகாதார தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

    முடிவில் தொற்றா நோய் பிரிவு செவிலியர்கள், ஆய்வக நுட்புணர்கள் மற்றும் 22 பெண் சுகாதார தன்னார்வலர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. தஞ்சாவூர் மாநகராட்சியின் இந்த மக்களை தேடி மருத்துவ உதவி மையத்தை 78458 49867 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மதுரையில் நடைபெறும் வரலாற்று சிறப்புமிக்க மாநாட்டிலும் அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும்.
    • உரிமைத்தொகை தகுதியானவர்களுக்கு மட்டும் என்பது ஒரு கண்ணிலே வெண்ணெய், மற்றொரு கண்ணிலே சுண்ணாம்பு வைப்பது போன்று அரசு மக்களை வஞ்சித்துள்ளது.

    திருப்பூர்:

    அ.தி.மு.க., திருப்பூர் மாநகர் மாவட்டம், வடக்கு சட்டமன்ற தொகுதி, நெருப்பெரிச்சல் பகுதிக்குட்பட்ட பாண்டியன்நகரில் உறுப்பினர் சேர்க்கை, பூத் கமிட்டி, மகளிரணி, பாசறை அமைத்தல் மற்றும் அடுத்த மாதம் 20-ந்தேதி மதுரையில் நடைபெறும் மாநாடு தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு திருப்பூர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ.வும், ஒன்றிய செயலாளருமான கே.என்.விஜயகுமார் தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட துணை செயலாளர் பூலுவப்பட்டி பாலு, நெருப்பெரிச்சல் பகுதி செயலாளர் பட்டுலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் மாநகர் மாவட்ட செயலாளரும், அ.தி.மு.க. தேர்தல் பிரிவு செயலாளருமான பொள்ளாச்சி வ.ஜெயராமன் கூறியதாவது:-

    தி.மு.க. ஆட்சியில் அரிசி, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும், மின்கட்டணமும், குடிநீர் கட்டணமும் உயர்ந்து விட்டது. மொத்தத்தில் தமிழக மக்களை தி.மு.க. அரசு ஏமாற்றி வருகிறது. எனவே அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவின்படி வரும் 20-ந்தேதி தி.மு.க. அரசை கண்டித்து திருப்பூரில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும். இதேபோல் அடுத்த மாதம் 20-ந்தேதி மதுரையில் நடைபெறும் வரலாற்று சிறப்புமிக்க மாநாட்டிலும் அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட மகளிரணி செயலாளர் சுந்தராம்பாள், பகுதி துணை செயலாளர் மூர்த்தி, வட்ட செயலாளர்கள் கணேசன், இம்மானுவேல், நாச்சிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் கொங்குநகர் பகுதி சார்பில் பகுதி செயலாளர் பி.கே.முத்து முன்னிலையிலும், கோல்டன்நகர் பகுதி சார்பில் பகுதி செயலாளர் ஹரிஹரசுதன் முன்னிலையிலும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் பொள்ளாச்சி வ.ஜெயராமன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் மகளிருக்கு உரிமைதொகை ரூ.1000 வழங்குவதில் தகுதியானவர்களுக்கு என்ற ஒரு புதிய அறிவிப்பை அரசு அறிவித்துள்ளது. தேர்தல் வாக்குறுதியின் போது குடும்பப் பெண்கள் அனைவருக்கும் ரூ.1000 வழங்கப்படும் என்று கூறிவிட்டு, தற்போது அரசே ஒரு தகுதியை நிர்ணயம் செய்துள்ளது. அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் பொங்கலுக்கு 2 கோடியே 10 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2500 வழங்கப்பட்டது.

    அதற்கு முந்தைய ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் கொரோனா நிதியும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்பட்டது. ஆனால் உரிமைத்தொகை தகுதியானவர்களுக்கு மட்டும் என்பது ஒரு கண்ணிலே வெண்ணெய், மற்றொரு கண்ணிலே சுண்ணாம்பு வைப்பது போன்று அரசு மக்களை வஞ்சித்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பணி ஒதுக்கீடு வழங்கும் போது இயன்ற வரையில் இரண்டு கிலோ மீட்டருக்கு மிகாமல் பணி ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
    • விண்ணப்பப் பதிவு பணிக்கு தேவைப்படும் போது இவர்களை விண்ணப்பப்பதிவு தன்னார்வலர்களாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    சென்னை:

    கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் வெளியிடப்பட்டு உள்ளது.

    இதன்படி வருகிற செப் டம்பர் 15-ந் தேதியில் இருந்து மாதம் ரூ.1000 வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற யார்-யார் தகுதியானவர்கள் என்ற விதிமுறைகளையும் அரசு வெளியிட்டிருந்தது. இதைத் தொடர்ந்து ரேஷன் குடும்ப அட்டை வாரியாக ஒவ்வொரு குடும்பத்துக்கும் விண்ணப்பப் படிவம் வழங்கப்பட உள்ளது.

    இந்த பணியை மேற்கொள்ள ரேஷன் கடைக்காரர்களுடன் இணைந்து பணியாற்ற தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

    இதுகுறித்து கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட சிறப்பு பணி அலுவலர் இளம் பகவத் மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்பப் பதிவு தன்னார்வலர் பணிக்கு இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களின் விவரங்களைப் பகிர, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இருந்து கோரிக்கைகள் வரப் பெற்று உள்ளன.

    சில மாவட்டங்களில் தன்னார்வலர்களின் விவரங்கள் பகிரப்பட்டுள்ளன.

    இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் எந்தெந்த நியாய விலை கடைப் பகுதி யில் வசிக்கிறார்கள். என்ற விவரங்கள் இணைக்கப்பட்ட தொகுப்பு விரைவில் மாநில அலுவலகத்தில் இருந்து மாவட்டங்களுக்குப் பகிரப்படும். இப்பொழுது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் இருந்து பெறப்படும் தகவல்களைக் கொண்டு எவ்வித பணி ஒதுக்கீடுகளும் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது. மாநில அலுவலகத்திலிருந்து தகவல்கள் பகிரப்படும் பொழுது கீழ்க்கண்ட நடைமுறைகளைப் பின்பற்றி தன்னார்வலர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    வட்டார ஆசிரிய ஒருங்கிணைப்பாளர் செய்ய வேண்டிய பணிகள்:

    மாநில அலுவலகத்தில் இருந்து பகிரப்படும் தகவல் தொகுப்பில் ஒவ்வொரு நியாய விலை கடைப்பகுதியில் வசிக்கும் தன்னார்வலர்களின் விவரங்கள் இடம் பெற்று இருக்கும் சில நியாய விலை கடைப்பகுதிகளில் தேவைக்கு அதிகமான தன்னார்வலர்கள் தகவல் தரவு பதிவுப் பணிக்கு விருப்பம் தெரிவித்து பதிவு செய்துள்ளனர். சில நியாய விலை கடை பகுதிகளில் போதிய தன்னார்வலர்கள் விருப்பம் தெரிவிக்கவில்லை.

    இவர்களுக்கான பணி ஒதுக்கீடு வழங்கும் போது இயன்ற வரையில் இரண்டு கிலோ மீட்டருக்கு மிகாமல் பணி ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

    ஒருவேளை இரண்டு கிலோ மீட்டருக்கும் மேற்பட்ட தொலைவில் பயணிக்க தன்னார்வலர் சம்மதம் தெரிவித்தால் அவர்களுக்கு இரண்டு கிலோ மீட்டருக்கு அப்பால் பணி வழங்கலாம்.

    தகவல் உள்ளீடு பணிகளுக்கும் கள ஆய்வுப் பணிகளுக்கும் விருப்பம் தெரிவித்த தன்னார்வலர்களை தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டு அவர்களுக்கு பணியின் முக்கியத்துவத்தை விளக்கி அவர்களது சம்மதத்தைப் பெற்று பணியில் அமர்த்துதல் வேண்டும். சில தன்னார்வலர்கள் தற்போது இந்தப் பணி செய்ய விருப்பம் இல்லை என்று தெரிவித்தால் அவர்களைக் கட்டாயப் படுத்தக்கூடாது.

    இது தொடர்பாக தகவல் பதிவை கூகுள் சீட்டில் பதிவு செய்ய வேண்டும். ஆசிரிய ஒருங்கிணைப்பாளர்கள் ஒவ்வொரு வருவாய் வட்டத்திலும் உள்ள வட்டாட்சியருடன் இணைந்து தன்னார்வலர்களுக்குப் பணி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

    வருவாய் வட்டாட்சியர்கள் செய்ய வேண்டிகள் பணிகள்-

    தன்னார்வலர்களின் தகவல் விவரம் கிடைக்கப் பெற்றவுடன் புதிய தன்னார்வலர்கள் இல்லாத நியாய விலை கடைப் பகுதிகளுக்கு புதிய தன்னார்வலர்களை கண்டறிய வேண்டும். குறிப்பாக நகரப் பகுதிகளில் போதிய இல்லம் தேடி கல்வித் தன்னார்வலர்கள் இல்லை. இப்பகுதிகளில் சுய உதவி குழு உறுப்பினர்கள், வேறு பகுதியில் உள்ள இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களை ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் மூலமாக அடையாளம் கண்டு நியமிக்கலாம்.

    வட்டார ஆசிரிய ஒருங்கிணைப்பாளர்களைக் கலந்து ஆலோசிக்காமல் பணி ஒதுக்கீடுகள் எதுவும் செய்ய வேண்டாம் என் அறிவுறுத்தப்படுகிறது.

    20 சதவீதம் கூடுதல் தன்னார்வலர்களைப் பதிலி தன்னார்வர்களாக பயன்படுத்துவதற்காக அடையாளம் கண்டு வைத்திருக்க வேண்டும். இவர்களுக்கு உதவி மையத் தன்னார்வலர்கள் பொறுப்பு வழங்கலாம்.

    விண்ணப்பப் பதிவு பணிக்கு தேவைப்படும் போது இவர்களை விண்ணப்பப்பதிவு தன்னார்வலர்களாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    நியாய விலைக் கடை அளவிலான பணி ஒதுக்கீடுகளை வருவாய் வட்ட அளவில் செய்ய வேண்டும். மேற்கண்ட தகவல்களை அனைத்து கள அலுவலர்களுக்கும் தெரியப்படுத்துமாறு மாவட்ட கலெக்டர்களையும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களையும் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 3பேருக்கு அடையாள அட்டை மற்றும் நூல்கள் எடுத்துச் செல்லும் பை வழங்கப்பட்டது
    • தன்னார்வலர்கள் நூலகத்திற்கு நேரடியாக வர இயலாதவர்களுக்கு நூல்களை வழங்குவர்.

    உடுமலை:

    உடுமலை அருகே உள்ள மலையாண்டிபட்டினம் ஊர் புற நூலகத்தில் நூலக நண்பர்கள் திட்டத்தில் தன்னார்வலர்கள் 3பேருக்கு அடையாள அட்டை மற்றும் நூல்கள் எடுத்துச் செல்லும் பை வழங்கப்பட்டது. நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் நடந்த அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சிக்கு நூலக வாசகர் வட்ட தலைவர் சிவராஜ் தலைமை வகித்தார். துணைத்தலைவர் மளிகை செல்வம், வாசகர் வட்ட உறுப்பினர் லட்சுமிபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நூலகர் மலர்க்கொடி வரவேற்றார்.

    தன்னார்வலர்கள் நூலகத்திற்கு நேரடியாக வர இயலாதவர்களுக்கு நூல்களை வழங்குவர். இவர்கள் தங்கள் பகுதியில் உள்ள மக்களை தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நூலகங்களில் உறுப்பினராக சேர்க்கவும் ஒரு முறை அதிகபட்சமாக 25 நூல்கள் வரை எடுத்துச் சென்று நூலக உறுப்பினர்களின் இல்லங்களுக்கு நேரடியாக வழங்கி வரும் இந்த திட்டத்தில் பத்மாவதி, கற்பகம், ராமராஜன் ஆகியோர் தன்னார்வலர்களாக இணைந்துள்ளனர். அவர்களுக்கு அடையாள அட்டை மற்றும் நூல் எடுத்து செல்லும் பை வழங்கப்பட்டது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கிச்சைக்காக வரும் நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிகள் வெயிலில் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது.
    • பொதுமக்கள் வார்டு உறுப்பினர் முத்துகுமாரசாமியிடம் புகார் தெரிவித்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள ஆறுமுத்தாம்பாளையம் கிராமத்தில் அரசு துணை சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் சுகாதார நிலையம் முன்பு பந்தல் எதுவும் அமைக்கப்படாததால் சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் மற்றும் இங்கு தடுப்பூசி செலுத்த வரும் கர்ப்பிணிகள் வெயிலில் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. இது குறித்து பொதுமக்கள் வார்டு உறுப்பினர் முத்துகுமாரசாமியிடம் புகார் தெரிவித்தனர். அவர் அந்தப்பகுதியில் உள்ள தன்னார்வலர்களிடம் இரும்பு பந்தல் அமைக்க உதவி கேட்டுள்ளார். அவர்களும் இரும்பு பந்தல் அமைக்க ஆர்வமுடன் முன் வந்தனர்.இதையடுத்து நேற்று அரசு துணை சுகாதார நிலையம் முன்பு இரும்பு பந்தல் அமைக்கப்பட்டது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • எழுதிக் கொடுப்பதற்காக இரண்டு பெண் தன்னார்வ லர்களை நியமித்துள்ளார்.
    • அவர்கள் பொது மக்களுக்கு இலவசமாக மனுக்களை எழுதிக் கொடுக்கின்றனர்.

    ஈரோடு, 

    ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வரு கிறது. கலெக்டர் தலைமை யில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வரும் நூற்றுக்கணக்கான மக்கள் தங்களது பிரச்சினைகள் குறித்து மனுவாக எழுதி அதை கலெக்டரிடம் வழங்குவார்கள்.

    கலெக்டர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அந்த மனுவை கொடுத்து நட வடிக்கை எடுக்க உத்தர விடுவார். இந்நிலையில் கலெக்டர் அலுவலகத்துக்கு வரும் பொதுமக்கள் தங்களது பிரச்சினைகள் குறித்து மனு எழுத கலெக்டர் அலுவலக வெளி நுழைவுவாயில் 7-க்கும் மேற்பட்டவர்கள் இருப்பார்கள் அவர்களிடம் சென்று எழுதிக் கொடுக்க சொல்வார்கள்.

    அவர்களும் சம்பந்த ப்பட்ட பொது மக்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு அவர்கள் கூறி யவாறு மனுக்களை எழுதி கொடுப்பார்கள். இதில் பல்வேறு பிரச்சனை கள் ஏற்படுவதாக புகார்கள் வந்தன.

    இதனை அடுத்து கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தீர்வு காணும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டார்.

    அதன்படி இன்று முதல் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வரும் பொது மக்கள் தங்களது பிரச்சி னைகள் குறித்து மனுவாக எழுதிக் கொடுப்பதற்காக இரண்டு பெண் தன்னார்வ லர்களை நியமித்துள்ளார். அவர்கள் பொதுமக்கள் சொல்லும் கோரிக்கைகளை மனுவாக அவர்களுக்கு ஏற்றவாறு எழுதி கொடுக்கின்றனர். இதற்காக தன்னார்வலர்கள் பேப்பர் பேனா வைத்து ள்ளனர். அவர்கள் பொது மக்களுக்கு இலவசமாக மனுக்களை எழுதிக் கொடுக்கின்றனர். கலெக்டரின் இந்த நடவடிக்கைக்கு பொது மக்கள் மத்தியில் வரவேற்பு ஏற்பட்டுள்ளது.

    தன்னார்வலர்கள் தங்களிடம் வரும் பொது மக்களிடம் நிறுத்தி நிதான மாக என்ன பிரச்சனை என்று கேட்டு அவர்களுக்கு ஏற்றவாறு தெளிவாக மனுவில் எழுதிக் கொடுக்கின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வானவில் மன்றம் கடந்தாண்டு தொடங்கப்பட்டது.
    • அரசுபள்ளி மாணவர்களின் ஈடுபாடு அதிகம் இருந்தது.

    தாராபுரம் :

    அரசு பள்ளிகளில் மாணவர்களின் கண்டுபிடிப்பு திறனை ஊக்குவிக்க வானவில் மன்றம் கடந்தாண்டு தொடங்கப்பட்டது. இந்த மன்றத்தின் முக்கிய செயல்பாடாக அறிவியல், தொழில்நுட்பம், என்ஜினீயரிங், கணித கருத்துகளை செயல்வழியில் விளக்க ஸ்டெம் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.இந்த திட்டத்தின் செயல்பாடுகளை அரசுப்பள்ளி மாணவர்களுக்கு விளக்க தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டனர்.வானவில் மன்றத்தின் நோக்கம் மாணவர்களை சென்றடைந்ததை உறுதி செய்ய, மாநில அளவில் போட்டிகள் நடத்தப்பட்டன.

    இதில் அரசுபள்ளி மாணவர்களின் ஈடுபாடு அதிகம் இருந்ததால் அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.இதுகுறித்து ஸ்டெம் திட்ட தன்னார்வலர்கள் கூறுகையில், பள்ளிக்கல்வித்துறை இந்தத் திட்டத்தை அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் செயல்படுத்தினால் அனைத்து தரப்பு மாணவர்களும் பலனடைவர் என்றனர். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தி.மு.க.வுக்கு துணை போகிறவர்களை அ.தி.மு.க. தொண்டர்கள் ஒருபோதும் ஏற்று கொள்ளமாட்டார்கள்.
    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும், அமைச்சர் செந்தில்பாலாஜியும் பதவி விலக வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் தொடரும் ஊழல் முறைகேடுகள், கள்ளச்சாராயம், போலி மதுபானங்களால் இறப்பு உள்ளிட்ட சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகளை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க. அரசை கண்டித்து தஞ்சை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தஞ்சை ரெயிலடியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இதற்கு அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான காமராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட அவைத் தலைவர் திருஞானசம்பந்தம், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை.திருஞானம், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் ராமச்சந்திரன், மாவட்ட பால்வளத் தலைவர் காந்தி, மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் சி.வி.சேகர், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் ராஜமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிக்கல்சன் கூட்டுறவு வங்கி தலைவர் சரவணன் வரவேற்றார்.

    யாராலும் வீழ்த்த முடியாது

    ஆர்ப்பாட்டத்தில் அமைப்பு செயலாளர் காமராஜ் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வை அழிக்க பலர் நினைத்தனர். அ.தி.மு.க.வை வழிநடத்தக்கூடிய தகுதியோடு எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக ஆகி இருக்கிறார். எடப்பாடி பழனிசாமியையும், அ.தி.மு.க.வையும் வீழ்த்த முடியாது.

    தி.மு.க.வுக்கு துணை போகிறவர்களை அ.தி.மு.க. தொண்டர்கள் ஒருபோதும் ஏற்று கொள்ளமாட்டார்கள். அதனால் தான் ஓ.பன்னீர்செல்வம் போன்றவர்கள் வெளியேற்றப்பட்டார்கள்.

    தமிழகத்தில் கள்ளச்சாராயம் குடித்து 25 பேர் பலியாகி இருக்கிறார்கள். சாராய சாவுக்கு பொறுப்பு ஏற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும், அமைச்சர் செந்தில்பாலாஜியும் பதவி விலக வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    கலந்து கொண்டவர்கள்

    இதில் ஒரத்தநாடு பேரூராட்சி தலைவர் மா.சேகர், மாவட்ட இணைச் செயலாளர் சாவித்திரி கோபால், மாவட்ட துணைச் செயலாளர் பொன்.முத்துவேல், மாவட்ட பொருளாளர் மகாலிங்கம், ஒன்றிய செயலாளர்கள் மதியழகன், துரை.செந்தில், துரைமாணிக்கம், தண்டாயுதபாணி, கல்யாணசுந்தரம், கோவி.இளங்கோ, மலை.முருகேசன், முருகானந்தம், அருணாச்சலம், சாமிவேல், கலியமூர்த்தி, முன்னாள் கோட்டை பகுதி செயலாளர் புண்ணியமூர்த்தி, முன்னாள் நகர செயலாளர் பஞ்சாபிகேசன், ஜெயலலிதா பேரவை மாவட்ட துணைத் தலைவர் பாலைரவி, 51-வது வட்ட செயலாளர் மனோகர், முன்னாள் விளார்ஊராட்சி மன்ற தலைவர் தம்பி என்ற சோமரத்தின சுந்தரம், கவுன்சிலர்கள் கோபால், தட்சிணாமூர்த்தி, கேசவன், கலைவாணி, காந்திமதி, எம்.ஜி.ஆர் மன்ற மாவட்ட ஒன்றிய பொருளாளர் தம்பிதுரை, அண்ணா தொழிற்சங்க கும்பகோணம்அரசு போக்குவரத்து கழக மண்டல செயலாளர் திரு நீலகண்டன் , அதிமுக பிரதிநிதிகள் ஏடி சண்முகசுந்தரம், நடராஜன்,மோகன் ,தங்க கண்ணன், முன்னாள் கவுன்சிலர் ஹேமா பூபதி, மாணவரணி முருகேசன், மாநில மருத்துவ அணி இணைச் செயலாளர் துறை கோ. கருணாநிதி, ஒன்றிய செயலாளர்கள் கோவிதனபால், ஆசைத்தம்பி, முன்னாள் ஒன்றிய செயலாளர் சிவ.ராஜேஷ் கண்ணன், விவசாய அணி துணை செயலாளர் சிவராமன், தொண்டராம்பட்டு முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் ஆசைத்தம்பி, பேரூராட்சி துணை தலைவர் மகேந்திரன் , தெலுங்கன் குடிக்காடு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பஞ்சு, ராமச்சந்திரன், மாவட்ட பொருளாளர் மனோகரன், முன்னாள் நகரச் செயலாளர் செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளர் நாகராஜன் நன்றி கூறினார்.