பனையூர் தவெக தலைமை அலுவலகத்தில் போராட்டம் நடத்திய தொண்டர்கள்!

திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர் மணிகண்டன் பணம் வாங்கி ஏமாற்றியதாக குற்றச்சாட்டு வட்டச் செயலாளர் பிரதீப் என்பவரை நீக்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
பனையூர் தவெக தலைமை அலுவலகத்தில் போராட்டம் நடத்திய தொண்டர்கள்!
Published on

திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர் மணிகண்டன் பணம் வாங்கி ஏமாற்றியதாகவும், ஆதவ் அர்ஜுனா புகைப்படத்தை பேனரில் பயன்படுத்திய வட்டச் செயலாளர் பிரதீப் என்பவரை நீக்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

தவெக தொடங்கப்பட்ட நாள் முதலே பதவிகளுக்கு பணம் வாங்குவதாக குற்றச்சாட்டுகள் வலம் வந்து கொண்டே இருக்கிறது.

இந்நிலையில் பணத்திற்காக பதவிகள் விற்கப்படுவதாக பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தின் உள்ளேயே தவெகவினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கட்சியில் பதவி தருவதாக பலரிடம் பணம் வாங்கி ஏமாற்றியுள்ளதாக அவர்கள் கோஷம் எழுப்பியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

X

Maalai Malar
www.maalaimalar.com