என் மலர்
நீங்கள் தேடியது "ரோஹிங்கியா அகதிகள்"
- பொருளாதார, அரசியல், சுற்றுச்சூழல் காரணங்களால் உலகின் எட்டு பேரில் ஒருவர் தற்போது இடம்பெயர்ந்துள்ளனர்.
- இந்திய அதிகாரிகளால் சுமார் 40 பேர் கண்கள் கட்டப்பட்டு கடலில் விடப்பட்ட செய்தி உலக அளவில் கண்டனத்தை குவித்தது.
உலகளவில் ஆண்டுதோறும் இன்று (ஜூன் 20) அகதிகள் தினம் கொண்டாடப்படுகிறது. உயிர்தப்பி, உடைமைகளை இழந்து, வேறொரு நாட்டுக்கு நிச்சயமில்லாத எதிர்காலத்தை நோக்கி அகதிகள் ஆபத்தான முறையில் புலம்பெயர்ந்த வண்ணம் உள்ளனர்.
கடலில் படகு கவிழ்ந்து நூற்றுக்கணக்கான அகதிகள் உயிரிழப்பு என்ற செய்திகளை அடிக்கொருமுறை பார்க்க நேரிடுகிறது. சட்டவிரோத குடியேறிகள் என்று கூறி அவர்கள் மீண்டும் மரணத்தை பிழைத்து தப்பி வந்த அவர்களின் நாட்டுக்கே திருப்பி நாடுகடத்தப்படும் சம்பவங்களும் அதிகரித்த வண்ணம் உள்ளன.
அகதிகளை ஏலியன்கள் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வரையறுக்கிறார். அவரை பின்பற்றியே இந்தியா உள்ளிட்ட நாடுகளின் செயல்களும் சமீப காலமாக இருந்து வருகின்றன. இதற்கு சமீப காலமாக அசாம், டெல்லி உள்ளிட்ட ஆகிய மாநிலங்களில் நடந்து வரும் போலீஸ் வேட்டைகளே சாட்சி.
வங்கதேசத்தினர் என்ற சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டவர்கள் வங்கதேச எல்லையில் கொண்டு விடப்பட்டதும், பின்னர் அவர்கள் இந்தியர்கள்தான் என நிரூபணமாகி வங்கதேச அதிகாரிகள் அவர்களை மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைத்த சம்பவங்கள் குறித்த செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த மாதம், இந்திய அதிகாரிகள் டெல்லியில் வசிக்கும் டஜன் கணக்கான ரோஹிங்கியா அகதிகளை கைது செய்தனர். அவர்களில் பலர் அகதி அடையாள ஆவணங்களை வைத்திருந்தனர்.
இந்தக் குழுவில் உள்ள சுமார் 40 பேர் கண்கள் கட்டப்பட்டு அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு விமானத்தில் கொண்டு செல்லப்பட்டு, பின்னர் இந்திய கடற்படைக் கப்பலுக்கு மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.
படகு அந்தமான் கடலைக் கடந்த பிறகு, அகதிகளுக்கு லைஃப் ஜாக்கெட்டுகள் வழங்கப்பட்டு, அதிகாரிகள் கடலுக்குள் வலுக்கட்டாயமாக அவர்களை விட்டு வந்ததாக எழுந்த குற்றச்சாட்டு உலகளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
உலகெங்கிலும் அதிகரித்து வரும் தேசியவாதம் மற்றும் பெரும்பான்மைவாதம் காரணமாக, அகதிகளும் புலம்பெயர்ந்தோரும் முன்னெப்போதும் இல்லாத அழுத்தங்களை எதிர்கொள்கின்றனர்.
சமீபத்தில், 'தி லான்செட்' ஆய்விதழ் வெளியிட்ட தகவலின்படி, பொருளாதார, அரசியல், சுற்றுச்சூழல் காரணங்களால் உலகின் எட்டு பேரில் ஒருவர் தற்போது இடம்பெயர்ந்துள்ளனர். இருப்பினும், அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோரின் உரிமைகளும் வாழ்க்கையும் மனிதாபிமானமற்ற அழுத்தங்களுக்கு உள்ளாகி வருகின்றன.
பிரிவினை கால அகதிகள் நெருக்கடியால் பாதிக்கப்பட்டிருந்தாலும், இந்தியா 1951 அகதிகள் மாநாடு அல்லது 1967 நெறிமுறை எதிலும் இதுவரை கையெழுத்திடவில்லை. இந்த ஒப்பந்தங்கள், 1948 ஆம் ஆண்டின் மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தின் அடிப்படையில் உருவானவை.
ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்கள் மீறப்படுவதும், அதன் பொதுச் செயலாளரின் எச்சரிக்கைகள் புறக்கணிக்கப்படுவதும், அதன் முகமைகளுக்கான நிதிகள் குறைக்கப்படுவதும் ஐ.நா. அமைப்பை பலவீனப்படுத்தி வருவதாக 'தி லான்செட்' சுட்டிக்காட்டியுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் 'சுகாதாரம் மற்றும் இடம்பெயர்வு திட்டம்' மூடப்படும் அபாயத்தில் உள்ளதாகவும் இது உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான அகதிகளுக்கு பேரழிவு தரும் விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்தியா தற்போது 80,000 க்கும் மேற்பட்ட திபெத்திய அகதிகளுக்கும், அதே அளவு மியான்மர் அகதிகளுக்கும் அடைக்கலம் வழங்கியுள்ளது.
இந்தியா "சட்டவிரோத குடியேறிகள்" என்று அடையாளம் காணப்படுபவர்களை நாடு கடத்தும் அதேவேளையில், அதிக எண்ணிக்கையிலான இந்தியர்களும் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படுகிறார்கள்.
2009 மற்றும் 2024 க்கு இடையில், அமெரிக்காவிலிருந்து மொத்தம் 15,564 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இவை அனைத்தும், உலகப் போருக்குப் பிந்தைய உலக நாடுகளின் அடிப்படையாக இருந்த அன்பு மற்றும் சகோதரத்துவ உணர்வு குறைந்து வரும் ஒரு உலகைச் சுட்டிக்காட்டுகின்றன. 56000 பேரை பலிகொண்ட பாலஸ்தீன போர் பற்றிய உலக நாடுகளின் மௌனம் இதற்கு உதாரணம்.
உலக தலைவர்கள் சர்வதேச மாநாடுகளில் கை குலுக்கி, கட்டி அணைத்துக்கொள்ளும் புகைப்படங்கள் உலா வரும் அதே வேளையில் எதார்த்தம் நேர் எதிராகவே இருந்து வருகிறது.
உலக தலைவர்கள், 'ஒரே உலகம், ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்' என்ற உணர்வில் தங்கள் எல்லைகளுக்கு அப்பால் உள்ளவர்களின் யதார்த்தங்களை கருத்தில் கொள்ள வேண்டும் என்பதே நாடுகள் என்ற வரையறையை கடந்து மனிதநேயத்திற்காக குரல் கொடுப்பவர்களின் கோரிக்கையாக உள்ளது.
- இதுவரை லட்சக்கணக்கான ரோஹிங்கியா மக்கள் அகதிகளாக வங்காளதேசம் சென்றுள்ளனர்
- பசி, பட்டினியால் தவித்த அதிகளை சமுதாய கூடத்தில் இந்தோனேசிய அதிகாரிகள் தங்க வைத்துள்ளனர்.
பண்டா ஆச்சே:
புத்த மதத்தினர் பெரும்பான்மையாக உள்ள மியான்மரில் கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களுக்கு பதிலடியாக 2017 ஆகஸ்ட் மாதம் முதல் ராணுவம் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ராணுவ நடவடிக்கைகளுக்கு பயந்து ரோஹிங்கியா முஸ்லிம்கள் வங்காளதேசத்தில் உள்ள அகதிகள் முகாம்களுக்குத் தப்பிச் சென்றவண்ணம் உள்ளனர். பாலியல் பலாத்காரம், கொலைகள் மற்றும் ஆயிரக்கணக்கான ரோஹிங்கியாக்களின் வீடுகளை எரித்ததாக மியான்மர் ராணுவத்தினர் மீது குற்றம்சாட்டுகின்றனர்.
இதுவரை லட்சக்கணக்கான ரோஹிங்கியா மக்கள் அகதிகளாக வங்காளதேசம் சென்றுள்ள நிலையில், சமீபத்தில் 117 ரோஹிங்கியா அகதிகள் இந்தோனேசியாவின் ஆச்சே மாகாணத்தின் கடற்கரையோரத்தில் கண்டுபிடிக்கப்பட்டனர். மியான்மரில் இருந்து படகு மூலம் ஒரு ஒரு மாத காலமாக ஆபத்தான கடல் பயணம் மேற்கொண்ட அவர்கள், மலேசியா நாட்டுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். ஆனால் ஆச்சே கடற்பகுதியில் சிக்கித் தவித்த அவர்கள், மெவுனசா பாரோ கிராமத்தில் கரையேறி உள்ளனர்.
பசி, பட்டினியால் தவித்த அவர்களை கடலோர கிராமத்தில் உள்ள சமுதாய கூடத்தில் இந்தோனேசிய அதிகாரிகள் தங்க வைத்துள்ளனர். அகதிகளின் விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன.
இதேபோல் கடந்த மார்ச் மாதம் 114 ரோஹிங்கியா அகதிகள், ஆச்சே மாகாணம் பைலயின் மாவட்ட கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள சுமார் 40 ஆயிரம் ரோஹிங்கியா முஸ்லீம் அகதிகளை நாடு கடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மத்திய அரசின் முடிவை எதிர்த்து இரண்டு ரோஹிங்கியா அகதிகள் சார்பில் பொநல வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு விசாரணையின்போது மத்திய அரசின் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டு, உரிய விளக்கம் அளிக்கப்பட்டது.
இதற்கிடையே, முதற்கட்டமாக 7 ரோஹிங்கியா முஸ்லீம் அகதிகள் நாடு கடத்தப்பட உள்ளனர். கடந்த 2012ம் ஆண்டு சட்டவிரோதமாக வந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 7 ரோஹிங்கியா அகதிகள் நாடு கடத்தப்பட உள்ளனர். அசாமின் சில்சார் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ள அவர்கள் 7 பேரும் மணிப்பூரில் மியான்மர் எல்லைக்கு கொண்டு செல்லப்பட்டு, அந்நாட்டு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

இந்தியாவில் இருந்து மியான்மர் நாட்டிற்கு அதிகாரப்பூர்வமாக அகதிகளை நாடு கடத்துவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. #Rohingyas #MyanmarImmigrants #SupremeCourt
மியான்மர் நாட்டின் உள்நாட்டு போர் மூலம் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் அகதிகளாக ரோஹிங்கியா மக்கள் குடியேறினர். அவர்கள் அகதிகளாக மட்டுமே வாழ இயலுமே தவிர எந்த நாட்டிலும் குடிமக்களாக உரிமை பெற முடியாது.
இந்தியாவில் ஐதராபாத் நகரில் மட்டும் சுமார் 4 ஆயிரம் ரோஹிங்கியா அகதிகள் வசித்து வருகின்றனர். அவர்களில் சில அகதிகள் குடியுரிமை போலி ஆவணங்களை பயன்படுத்தி ஆதார், பாஸ்போர்ட் போன்ற அடையாள அட்டைகளை அகதிகள் பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், ஐதராபாத் நகரில் ஒரு பெண் உட்பட 4 ரோஹிங்கியா அகதிகள் போலி ஆவணங்களை பயன்படுத்தி ஆதார், வாக்காளர் அடையாள அட்டையை பெற்றதாக கைது செய்யப்பட்டுள்ளனர். அப்பகுதியில் வாழும் இருவரது உதவியுடன் இவர்கள் போலி ஆவணங்களை சமர்ப்பித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். அதையடுத்து, போலி ஆவணங்களை பெற உதவியதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர்களிடம் இருந்து ஆதார் போன்ற அடையாள அட்டைகளை பறிமுதல் செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்தியுள்ளனர். #Rohingyas #Hyderabad
மியான்மரின் வடக்குப் பகுதியான ரக்கினே மாநிலத்தில் சிறுபான்மை ரோஹிங்கியா இன முஸ்லிம்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து ஆட்சியாளர்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் ஆயிரக்கணக்கான ரோஹிங்கியா முஸ்லிம்கள் ராணுவத்தினரின் தாக்குதலால் உயிருக்கு பயந்து வங்காளதேசத்திற்கு தப்பிச் செல்கின்றனர்.
வங்காளதேசத்தில் தஞ்சம் அடைந்துள்ள 7 லட்சத்திற்கும் அதிகமான ரோஹிங்கியா இன மக்கள் அங்குள்ள அகதிகள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், நோஹிங்கியா அகதிகளை பதிவு செய்யும் பணியை ஐ.நா. வின் அகதிகள் உயர்மட்டக் குழுவுடன் இணைந்து வங்காளதேச அரசு இந்த வாரம் தொடங்கியுள்ளது. இது வங்காளதேச முகாம்களில் உள்ள அகதிகளின் தகவல்களை சேகரித்து வைப்பதற்காக இந்த பணி தொடங்கப்பட்டுள்ளது.
இந்த தகவல்கள் நவம்பர் மாதத்துக்குள் பதிவு செய்து முடிக்கப்படும். இந்த தகவல்களில், அகதிகளின் குடும்பம், பிறப்பு குறித்த தகவல்கள் அடங்கியிருக்கும். இது நாடு திரும்புவதற்கு உதவியாக இருக்கும். இதற்காக அகதிகளின் கைரேகை, கண் விழிகள் மற்றும் மற்ற தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. தகவல்கள் கொடுத்த அகதிகளுக்கு ஐ.நா. மற்றும் வங்காளதேச அரசின் லோகோ அடங்கிய அட்டை கொடுக்கப்பட்டுள்ளது. இவை அகதிகளை பல பிரச்சனைகளிலிருந்து பாதுகாக்க உதவியாக இருக்கும். #Rohingyarefugees
மியான்மர் நாட்டில் ஏற்பட்ட உள்நாட்டு பிரச்சனையில் ரோஹிங்கியா என்ற இஸ்லாமிய இன மக்கள் பல லட்சம் பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து அங்கிருந்து ரோஹிங்கியா மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு அகதிகளாக சென்றனர். பெரும்பாலான அகதிகள் வங்கதேசத்திற்கு சென்றனர். சுமார் 10 லட்சம் ரோஹிங்கியா மக்கள் அகதிகளாக வங்கதேசம் நாட்டில் குடியேறி உள்ளனர்.
இந்நிலையில், வங்கதேசத்தில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக ரோஹிங்கியா அகதிகள் அதிகம் வாழும் பகுதியான தென்கிழக்கு வங்கதேசத்தில் வெள்ளப்பெருக்கும், நிலச்சரிவும் ஏற்பட்டது.
இதனால் ரோஹிங்கியா மக்கள் வாழ்ந்து வந்த சுமார் 30 ஆயிரம் கூடாரங்கள் வெள்ளத்தாலும், மண் சரிவினாலும் அழிக்கப்பட்டன. 9 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மழை தொடர்ந்து நீடித்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. #Rohingyarefugee
மியான்மரில் ராணுவ அடக்குமுறைக்கு பயந்து வெளியேறிய ரோஹிங்கியா முஸ்லிம்கள் இந்தியாவின் ஜம்மு, ஐதராபாத், அரியானா, உத்தரப்பிரதேசம், டெல்லி மற்றும் ராஜஸ்தானில் அகதிகள் முகாம்களில் தங்கியுள்ளனர். இவர்களில் பலர் பயங்கரவாத இயங்களுடன் தொடர்பில் இருப்பதாகவும், இதனால் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து என தெரிவித்த மத்திய அரசு, சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களை வெளியேற்ற தனிக்குழுவை அமைத்தது.
மத்திய அரசின் இந்த முடிவை எதிர்த்து ஐக்கிய நாடுகள் அகதிகள் முகமையில் பதிவுசெய்து இந்தியாவில் தங்கியுள்ள ரோஹிங்கியா அகதிகளான முஹம்மது சலிமுல்லா, முஹம்மது ஷாகிர் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். சர்வதேச அகதிகள் பாதுகாப்பு சட்டம் மற்றும் மனித உரிமை சட்டங்களை மீறிய வகையில், அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ள தங்களை மீண்டும் மியான்மருக்கு திருப்பி அனுப்ப கூடாது என அவர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் கவில்ன்கர், சந்திரசூட் அமர்வு விசாரித்து வருகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் 9-ம் தேதி இந்த வழக்கின் மறுவிசாரணையின்போது, தமிழகத்தில் இலங்கை அகதிகளுக்கு வழங்கப்படும் கல்வி, மருத்துவம் போன்ற வசதிகளை மற்ற மாநிலங்களும் ரோஹிங்கியா அகதிகளுக்கு அளிக்க உத்தரவிட வேண்டும் என மனுதாரர்கள் புதிய கோரிக்கை விடுத்திருந்தனர்.
மனுதாரர்களின் கோரிக்கையை விசாரித்த நீதிபதிகள், இடைக்கால உத்தரவு ஏதும் பிறப்பிக்கவில்லை. எனினும், டெல்லி மற்றும் அரியானாவில் உள்ள ரோஹிங்கியா அகதிகள் முகாமில் அரசு சார்பில் வழங்கப்பட்ட அடிப்படை வசதிகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை மே மாதம் 9-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள ரோஹிங்கியா அகதிகளுக்கு பாரபட்சம் காட்டாமல் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு இன்று சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
இதுதொடர்பாக, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் சார்பில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த அறிக்கையில், ’சுப்ரீம் கோர்ட் கடந்த மாதம் 9-ம் தேதி அறிவுறுத்தியதை தொடர்ந்து அரியானாவில் உள்ள மேவாட் ரோஹிங்கியா அகதிகள் முகாம் மற்றும் டெல்லி கலின்டி கஞ்ச் பகுதியில் உள்ள அகதிகள் முகாம் ஆகியவற்றில் கடந்த 23,24 தேதிகளில் அதிகாரிகள் குழு ஆய்வு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின்போது, இந்தியாவின் பிறபகுதிகளில் உள்ள குடிசைப்பகுதிகளில் வாழும் நம் நாட்டு மக்களுக்கு வழங்கப்படும் சுகாதாரம், குடிநீர், கழிப்பறை, மருத்துவம், கல்வி ஆகிய அடிப்படை வசதிகள் அங்குள்ள ரோஹிங்கியா அகதிகளுக்கும் அளிக்கப்படுவதை அதிகாரிகள் குழு கண்டறிந்து அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
சில கட்டுப்பாடுகளை தவிர, ரோஹிங்கியா அகதிகள் விவகாரத்தில் மத்திய அரசு எவ்வித பாரபட்சமும் காட்டவில்லை’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதை பரிசீலனைக்கு ஏற்றுகொண்ட சுப்ரீம் கோர்ட் இவ்வழக்கின் மறுவிசாரணையை வரும் 11-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. #RohingyaRefugees #SC






