search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "shelters"

    • மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அன்சூல் மிஸ்ரா தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
    • திட்டப்பணிகள் குறித்தும் அதன் முன்னேற்றம் குறித்தும் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் மற்றும் பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் கலெக்டர் அருண் தம்புராஜ் முன்னிலையில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அன்சூல் மிஸ்ரா தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூலம் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக புயல் பாதுகாப்பு மையங்கள், தற்காலிக தங்குமிடங்கள் மற்றும் தேவையான பேரிடர் மீட்பு உபகரணங்கள் தயார்நிலையில் வைக்க அறிவுறுத்தப்பட்டது. மேலும், மாநகராட்சி, நகராட்சிகள், பேருராட்சிகள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, வேளாண்மைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்படும் திட்டப்பணிகள் குறித்தும் அதன் முன்னேற்றம் குறித்தும் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன் மற்றும் அனைத்து துறைசார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    இரண்டு நாட்களாக வங்கதேசத்தில் பெய்து வரும் கனமழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் பல ஆயிரம் ரோஹிங்கியா அகதிகள் தங்கள் இருப்பிடத்தை இழந்து தவித்து வருகின்றனர். #Rohingyarefugee
    டாக்கா:

    மியான்மர் நாட்டில் ஏற்பட்ட உள்நாட்டு பிரச்சனையில் ரோஹிங்கியா என்ற இஸ்லாமிய இன மக்கள் பல லட்சம் பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து அங்கிருந்து ரோஹிங்கியா மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு அகதிகளாக சென்றனர். பெரும்பாலான அகதிகள் வங்கதேசத்திற்கு சென்றனர். சுமார் 10 லட்சம் ரோஹிங்கியா மக்கள் அகதிகளாக வங்கதேசம் நாட்டில் குடியேறி உள்ளனர்.

    இந்நிலையில், வங்கதேசத்தில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக ரோஹிங்கியா அகதிகள் அதிகம் வாழும் பகுதியான தென்கிழக்கு வங்கதேசத்தில் வெள்ளப்பெருக்கும், நிலச்சரிவும் ஏற்பட்டது.

    இதனால் ரோஹிங்கியா மக்கள் வாழ்ந்து வந்த சுமார் 30 ஆயிரம் கூடாரங்கள் வெள்ளத்தாலும், மண் சரிவினாலும் அழிக்கப்பட்டன.  9 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மழை தொடர்ந்து நீடித்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. #Rohingyarefugee
    ×