search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "greece"

    • பிரதமரின் செல்வாக்கை அறிந்து கொள்வதற்காக கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.
    • பிரதமர் கிரியாகோஸ் பொதுத்தேர்தலுக்கு மீண்டும் அழைப்பு விடுத்திருந்தார்.

    ஐரோப்பிய நாடான கிரீசில் புதிய ஜனநாயக கட்சியின் தலைவரான கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இவர் கடந்த 4 ஆண்டுகளாக பிரதமராக பதவி வகித்து வருகிறார்.

    இவரது ஆட்சியின் மீது மக்கள் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தனர். ஆனால் தொலைபேசி உரையாடல் ஒட்டு கேட்பு விவகாரம், பிப்ரவரி மாதம் நடந்த மிகப்பெரிய ரெயில் விபத்து போன்றவற்றால் இவரது ஆட்சி விமர்சனத்துக்குள்ளானது. இதனால் பிரதமரின் செல்வாக்கை அறிந்து கொள்வதற்காக கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதில் இவரது அரசாங்கத்தின் மீது மக்கள் அதிருப்தியில் உள்ளது தெரிய வந்தது.

    இதனையடுத்து பிரதமர் கிரியாகோஸ் பொதுத்தேர்தலுக்கு மீண்டும் அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி கடந்த மே 21-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் வெற்றி பெற 300 தொகுதிகளை கொண்ட அந்த நாட்டில் 151 இடங்களை பெற வேண்டும். ஆனால் எந்தவொரு கட்சியும் பெரும்பான்மை பெறவில்லை. இதனால் கடந்த 5 வாரங்களில் இரண்டாவது முறையாக அங்கு பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில் பிரதமர் கிரியாகோஸ் வெற்றி பெறுவார் என அங்குள்ள கருத்து கணிப்புகள் கூறுகின்றன.

    ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில் இன்று நடைபெற்ற 4வது சுற்றுப் போட்டியில் கிரீஸ் வீரர் டிஸ்டிஸ்பசிடம் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார். #AustralianOpen #RogerFederer
    ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 4வது சுற்றுப் போட்டியில் சுவிட்சர்லாந்தை சேர்ந்த ரோஜர் பெடரர் கிரீஸ் நாட்டை சேர்ந்த டிஸ்டிஸ்பசை எதிர்கொண்டார்.

    இதில், டிஸ்டிஸ்பசிடம் ரோஜர் பெடரர் 7 - 6, 6 - 7, 5 - 7, 6 - 7 என்ற செட் கணக்கில் தோற்று தொடரில் இருந்து வெளியேறினார். இந்த வெற்றியின் மூலம் டிஸ்டிஸ்பஸ் காலிறுதி சுற்றுக்குள் நுழைந்தார். இந்த போட்டி சுமார் மூன்றே முக்கால் மணி நேரம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. #AustralianOpen #RogerFederer
    உலக கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் வாய்ப்பை பெற செர்பியா, கிரீஸ், பல்கேரியா, ருமேனியா ஆகிய நாடுகள் இணைந்து நடத்துவதற்கான உரிமத்தை கோர முடிவு செய்துள்ளது. #WorldCup2030 #Euro2028
    பெல்கிரேடு:

    செர்பியா, கிரீஸ், பல்கேரியா, ருமேனியா ஆகிய நாடுகள் இணைந்து 2028-ம் ஆண்டு ஐரோப்பிய கால்பந்து போட்டியையோ அல்லது 2030-ம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து போட்டியையோ நடத்துவதற்கான உரிமத்தை கோர முடிவு செய்துள்ளது. இதற்கான முயற்சியில் இறங்குவதற்காக ஒவ்வொரு நாட்டின் சார்பில் தலா 4 பிரதிநிதிகள் கொண்ட ஒருங்கிணைப்பு கமிட்டி அமைக்கப்படுகிறது.  #WorldCup2030 #Euro2028
     
    கிரீஸ் நாட்டின் சுற்றுலா தீவில் இன்று அதிகாலை 6.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. #Earthquake #Greece
    ஏதென்ஸ்:

    கிரீஸ் நாட்டின் சுற்றுலா தீவான ஜகிந்தோஸ் பகுதியில் இன்று அதிகாலை 4.25 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் சுமார் 6.8 ரிக்டர் அளவுகோலில் பதிவானதாக அமெரிக்க புவியியல் மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.



    நிலநடுக்கம் காரணமாக அந்தப் பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர்.

    இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் சேதம் மற்றும் பொருள் சேதம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. கிரீஸ் நாட்டில் இந்த அளவு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்படுவது வழக்கமான ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. #Earthquake #Greece
    கிரீஸ் நாட்டில் மூன்று நாட்களாக பற்றி எரிந்த காட்டுத்தீயை மீட்புக்குழுவினர் அணைத்த நிலையில், இதுவரை 80 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. #GreekFires
    ஏதென்ஸ்:

    கிரீஸ் தலைநகர் ஏதென்ஸின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் அமைந்திருக்கும் பைன் மரக்காடுகளில் திங்கள் கிழமை மிகப்பெரிய காட்டுத் தீ ஏற்பட்டது. தீ மளமளவென காட்டுப் பகுதிகளை ஒட்டியுள்ள சுற்றுலாப் பகுதிகள் வரையில் பரவியது. சுற்றுலாப் பகுதிகள், குடியிருப்பு பகுதிகள், கார்கள் தீ பிடித்து எரிந்தது. சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ள கடலுக்குள் குதித்தனர். 

    தீ விபத்து சம்பவத்தில் 80 பேர் உயிரிழந்து உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 100-க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது, எனவே உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என தெரிவிக்கப்படுகிறது.

    காட்டுப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தினால் பெரும் நாசம் ஏற்பட்டுள்ளது. கிரீஸ் அரசு போராடி தீயை அணைத்துள்ளது. பெரும்பாலான பகுதிகள் சாம்பலாக காணப்படுகிறது.

    இப்போது மாயமானவர்களை தேடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. உயிரை காப்பாற்றிக்கொள்ள கடலுக்குள் குதித்தவர்கள், தப்பி ஓட முயற்சித்தவர்களின் நிலை என்னவென்று தெரியவரவில்லை. அவர்களை தேடும் பணியில் அந்நாட்டு கடலோர காவல்படை தீவிரமாக ஈடுபட்டுள்ளது. படகுகள் மூலம் மீட்பு பணிகள் நடைபெறுகிறது. 1500க்கும் அதிகமான வீடுகள் சேதம் அடைந்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது. 

    கிரீஸ் நாட்டில் 2007-ம் ஆண்டு மிகப்பெரிய தீ விபத்து நேரிட்டது, அப்போது 70 பேர் உயிரிழந்தனர். இப்போது மீண்டும் பயங்கரமான சம்பவம் நடைபெற்றுள்ளது. இப்போது காட்டுப்பகுதியில் சட்டவிரோத செயல்பாடே தீ விபத்துக்கு காரணம் என கூறும் கிரீஸ் அமெரிக்காவிடம் இருந்து கண்காணிப்பு கேமராக்கள் அடங்கிய ட்ரோன்கள் வாங்கப்படும் என தெரிவித்துள்ளது.
    கிரீஸ் நாட்டில் பற்றி எரியும் காட்டுத் தீயில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 74 ஆக அதிகரித்துள்ளது. தீயை கட்டுப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். #GreeceForestFires
    ஏதென்ஸ்:

    கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் நகர் அருகில் உள்ள அட்டிகா பிராந்தியத்தில் நேற்று முன்தினம் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. கடற்கரையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் பற்றிய தீ, மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவத் தொடங்கியது. இதனால் அப்பகுதி முழுவதும் கடும் புகைமூட்டமாக காட்சியளிக்கிறது. 

    தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வேறு இடங்களுக்கு தப்பி ஓடினர். எனினும் பலர் தீயில் சிக்கிக்கொண்டனர்.

    சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயில் கருகி சேதமடைந்தன. வனப்பகுதி வழியாக கார்களில் சென்ற பயணிகளும் தீயில் சிக்கிக்கொண்டர். 

    முதல் கட்டமாக 7 பேர் உயிரிழந்தனர் என்றும், 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் என தகவல் வெளியானது.

    தொடர்ந்து நடைபெற்ற மீட்பு பணிகளில் தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60-ஐ தாண்டியதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்நிலையில், இந்த தீ விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது என அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார். மேலும், தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். #GreeceForestFires
    மகடோனியா நாட்டுடன் செய்த ஒப்பந்தத்துக்கு எதிராக கிரீஸ் நாட்டின் பிரதமர் அலெக்சிஸ் ட்சிப்ராஸ் பதவி விலக பாரளுமன்றத்தில் எதிர்கட்சிகள் கொண்டுவந்த தீர்மானம் தோல்வியில் முடிந்தது.
    ஏதென்ஸ்:

    கிரேக்க நாடு என்றழைக்கப்படும் கிரீஸ் நாட்டுக்கும் அண்டை நாடான மகடோனியாவுக்கும் கடந்த 1991-ம் ஆண்டு முதல் மகடோனியா நாட்டின் பெயர் தொடர்பான சர்ச்சை நிலவி வருகிறது.

    பண்டைக்கால கிரேக்க நாட்டின் வரலாற்று சிறப்பு மிக்க மகடோனியா என்னும் முக்கிய நகரின் பெயரில் மகடோனியா நாட்டின் பெயரும் அமைந்துள்ளதற்கு கிரீஸ் நாட்டு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், அந்நாட்டின் பெயரை மகடோனியா குடியரசு என்று மாற்றிகொண்டால் ஐரோப்பிய யூனியனில் இடம் பெறவும், நாட்டோ கூட்டு ராணுவப்படையில் சேர்த்து கொள்வதற்கும் ஆதரவு தருவதாக தற்போதையை கிரீஸ் பிரதமர் அலெக்சிஸ் ட்சிப்ராஸ் மகடோனியாவுடன் சமீபத்தில் உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்தியுள்ளார்.


    இந்த உடன்படிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மகடோனியாவுக்கு கிரீஸ் பிரதமர் ஏராளமான சலுகைகளை அளித்துள்ளதாகவும் கிரீஸ் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


    இதற்கிடையில், அலெக்சிஸ் ட்சிப்ராஸ் பதவி விலக வேண்டும் என கிரீஸ் பாராளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன. இந்த தீர்மானத்தின் மீது நடைபெற்ற ஓட்டெடுப்பில் 127 பேர் ஆதரவாகவும், 153 பேர் எதிராகவும் வாக்களித்தனர். இதனால், எதிர்கட்சிகள் கொண்டுவந்த தீர்மானம் தோல்வியில் முடிந்தது. #GreekPM #no-confidence #Greekparliament
    ×