என் மலர்
செய்திகள்

கிரீஸ் நாட்டின் சுற்றுலா தீவில் 6.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
கிரீஸ் நாட்டின் சுற்றுலா தீவில் இன்று அதிகாலை 6.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. #Earthquake #Greece
ஏதென்ஸ்:
கிரீஸ் நாட்டின் சுற்றுலா தீவான ஜகிந்தோஸ் பகுதியில் இன்று அதிகாலை 4.25 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் சுமார் 6.8 ரிக்டர் அளவுகோலில் பதிவானதாக அமெரிக்க புவியியல் மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

நிலநடுக்கம் காரணமாக அந்தப் பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர்.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் சேதம் மற்றும் பொருள் சேதம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. கிரீஸ் நாட்டில் இந்த அளவு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்படுவது வழக்கமான ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. #Earthquake #Greece
Next Story






