என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுனாமி எச்சரிக்கை"

    • மின்சாரம் துண்டிக்கப்பட்டு புல்லட் ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
    • ஜப்பான் பிரதமர் சானே தகைச்சி எச்சரித்துள்ளார்.

    ஜப்பான் நாட்டின் வடகிழக்கில் உள்ள பசிபிக் பெருங்கடலில் 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

    நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி மாலை 5:03 மணிக்கு, சான்ரிகு கடற்கரைக்கு அருகில் கடலில் 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டது என்று ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு புல்லட் ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. இதைத்தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

    ஜப்பான் பிரதமர் சானே தகைச்சி தனது எக்ஸ் பக்கத்தில் "சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, எனவே தயவுசெய்து கடற்கரையிலிருந்து உடனடியாக பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்லுங்கள். எதிர்பார்த்ததை விட பெரிய சுனாமி ஏற்படக்கூடும்" என்று அவர் பொதுமக்களை எச்சரித்தார். 

    • நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்ததால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.
    • நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

    பிலிப்பைன்ஸின் மின்டானோவ் நகரில் 7.4 என்ற ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலநடுக்கம் 62 கிமீ (38.53 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்ததால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் உயரமான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

    கடந்த ஒரு வாரத்திற் முன்பு பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள விசாயாஸ் மாகாணம் செபு நகரில் 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் 74 பேர் உயிரிழந்த நிலையில் பலர் காயமடைந்தனர். 

    • இந்த நிலநடுக்கம் பூமிக்கு 10.8 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.
    • சுனாமி அலைகள் எழலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

    தென் அமெரிக்காவின் டிரேக் பாஸேஜ் (Drake Passage) பகுதியில் இன்று அதிகாலை 8 முதல் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் கண்காணிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலநடுக்கம் பூமிக்கு 10.8 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.

    இருப்பினும் அமெரிக்க சுனாமி எச்சரிக்கை சிஸ்டம் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.

    அதேநேரம் பசிபிக் சுமானி எக்காரிகை மையம், டிரேக் பாஸேஜ் நிலநடுக்கத்தால் சிலி நாட்டின் கடற்கரையில் அடுத்த 3 மணி நேரத்தில் சுனாமி அலைகள் எழலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது. 

    • மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது.
    • நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை.

    அமெரிக்காவின் அலாஸ்கா மாகாண கடற்கரையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அம்மாகாண மையப்பகுதி தீவு நகரமான சாண்ட் பாயிண்டிற்கு தெற்கே சுமார் 87 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவானது.

    20 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து, சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்பட்டது.

    இதனால் பீதியடைந்த மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்குப் பிறகு தெற்கு அலாஸ்கா மற்றும் அலாஸ்கா தீப கற்பத்திற்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    இதையடுத்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது. சாண்ட் பாயிண்ட் கடற்கரை பகுதிகளில் அதிகபட்சமாக 6.1 செ.மீ. அளவுக்கு சுனாமி அலைகள் எழுந்தது. இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. பின்னர் 2 மணி நேரங்களுக்குப் பிறகு சுனாமி எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டது.

    ஆனாலும் அலாஸ்கா கடற்கரையோர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை.

    பசுபிக் கடல் பகுதியில் அமைந்துள்ள அலாஸ்கா மாகாணம் நிலநடுக்கங்கள் அடிக்கடி ஏற்படக்கூடிய 'ரிங்க் ஆப் பயர்' என்ற இடத்தில் அமைந்துள்ளது.

    • நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.4 ஆக பதிவாகியுள்ளது.
    • அர்ஜென்டினாவில் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.

    தென் அமெிரக்க நாடான அர்ஜென்டினா அருகே கடலில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

    இது ரிக்டர் அளவில் 7.4 ஆக பதிவாகியுள்ளது.

    நிலநடுக்கத்தின் எதிரொலியால், சிலியின் மாகல்லனேஸின் கடலோர பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மேலும், அர்ஜென்டினாவில் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.

    சக்தி வாய்ந்த நிலநடுக்கம் என்பதால் பேரலைகள் எழுந்திருக்க வாய்ப்பு உள்ளதாக அஞ்சப்படுகிறது.

    • பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ளது பப்புவா நியூ கினியா.
    • இன்று 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    கான்பெர்ரா:

    அடிக்கடி நிலநடுக்கங்களை சந்தித்து வரும் நாடு பப்புவா நியூ கினியா.

    இந்நிலையில், பப்புவா நியூ கினியா நாட்டில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

    இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.9 அலகுகளாக பதிவானதாக அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த தகவல் வெளியாகவில்லை.

    இதற்கிடையே, சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பப்புவா நியூ கினியாவில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. சிறிது நேரத்துக்கு பிறகு சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது.

    • டோங்கா தீவு அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவானது.

    நுகுஅலோபா:

    தென்பசிபிக் பெருங்கடலில் டோங்கா தீவு அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் நேற்று மாலை 5.48 மணியளவில் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவானது என அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்தது.

    10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 20.06 டிகிரி தெற்கு அட்சரேகையிலும், 174.04 டிகிரி மேற்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இதனால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

    இந்நிலையில், சில மணி நேரங்களுக்குப் பிறகு சுனாமி எச்சரிக்கையை டோங்கா தீவு திரும்பப் பெற்றுள்ளது.

    • கடலுக்கடியில் 9.3 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • சுனாமி எச்சரிக்கையைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    அலாஸ்கா தீபகற்ப பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.4 அலகாக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி உருவாக வாய்ப்பு உள்ளது என்று அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இந்த நிலநடுக்கமானது, கடலுக்கடியில் 9.3 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுனாமி எச்சரிக்கையைத் தொடர்ந்து அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    • தைவான் மற்றும் ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • 2.3 மீட்டர் அளவிற்கு சுனாமி அலை ஏற்பட வாய்ப்புள்ளதாக ஜப்பான் எச்சரித்துள்ளது.

    தைவான் அருகே இன்று காலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவாகியுள்ள நிலையில் தைவான் மற்றும் ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    ஜப்பானின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள ஒகினாவா தீவை குறிப்பிட்டு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 3 மீட்டர் அளவிற்கு சுனாமி அலை ஏற்பட வாய்ப்புள்ளதாக ஜப்பான் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இந்த கடுமையான நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து உடனடியாக தகவல் ஏதும் வெளியாகவில்லை.

    ஆனால் தைவானில் கட்டடங்கள் இடிந்து சேதம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் தைவானின் தலைநகர் தைபேயிலும் நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த நிலநடுக்கம் ஜப்பான் நாட்டில் உள்ள தீவுகளையும் தாக்கியுள்ளது. ஜப்பான் நாட்டின் மியாகோ மற்றும் யாயியாமா தீவுகளை முதல் அலை தாக்கியதாக நம்பப்படுகிறது.

    • கடந்த 1999-ம் ஆண்டு 7.2 என்ற அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • அதில் 2500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருந்தனர்.

    தைவானை இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. அந்நாட்டின் கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள ஹூவாலியன் நகரத்தில் 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது.

    நிலநடுக்கம் 35 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதனால் கட்டடங்கள் பயங்கரமாக குலுங்கின. ஹூவாலியன் பகுதியில் அடுக்குமாடி கட்டிடங்கள் இடிந்தன. தலைநகர் தைபேயில், பழைய கட்டிடங்கள், புதிய அலுவலகங்கள் சேதம் அடைந்தன.

    பயங்கர நிலநடுக்கத்தால் பீதியடைந்த பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைக்கு ஓடிவந்தனர். பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் பாலங்கள் குலுங்கின. அதில் சென்ற வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்தியபடி நின்றனர்.

    சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் நாடு முழுவதிலும் ரெயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 25 முறை நிலஅதிர்வுகள் பதிவானது. இதனால் தைவான் முழுவதும் பெரும் பதற்றம் நிலவியது. நிலநடுக்கத்தில் 4 பேர் பலியாகி இருப்பதாகவும், 50 பேர் காயம் அடைந்ததாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகி இருக்கிறது.

    ஹூவாலியன் நகரில் இடிந்து விழுந்த இரண்டு கட்டிடங்களில் சிலர் சிக்கி உள்ளதாக தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. அவர்களை மீட்கும் பணிகள் நடந்தது. பயங்கர நிலநடுக்கத்தால் தைவானின் வடக்கு பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் தவிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். 80 ஆயிரம் வீடுகளில் மின்சாரம் இல்லை.

    இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தைவான், ஜப்பான், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. இதில் ஜப்பானின் தெற்கு தீவை சிறிய சுனாமி அலைகள் தாக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஜப்பானின் யோனகுனி கடலோரத்தில் சில அடி உயரத்திற்கு அலைகள் எழும்பின. பிலிப்பைன்சின் டானஸ், ககாயன், இலோ கோஸ் நோர்டே, இசபெலா மாகாணங்களில் உள்ள கடலோரப் பகுதிகளை சுனாமி தாக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    அதே நேரத்தில் சீனாவுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. ஆனால் சீனாவின் ஷாங்காய், புஜோ, ஜியாமென், குவான்சோ, நிங்டே நகரங்களில் அதிர்வு உணரப்பட்டது. தைவான் நிலநடுக்கம் எதிரொலியாக, ஜப்பானின் ஒகிராவில் விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

    தைவானில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது மெட்ரோ ரெயில் குலுங்கியபடி சென்ற வீடியோ சமுக வலைதளங்களில் பரவி வருகிறது.

    தைவானில் 25 ஆண்டுகளில் சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 1999-ம் ஆண்டு 7.2 என்ற அளவில் ஏற்பட்ட நிலநடுக்கமே, தைவானில் அதிகபட்சமாக ஏற்பட்ட நிலநடுக்கமாகும்.

    இந்த நிலநடுக்கத்தில் 2500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருந்தனர். நிலநடுக்கம் அதிகம் ஏற்படும் பசிபிக் "ரிங் ஆப் பயர்" பகுதியில் தைவான் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • இன்று காலை பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டது.
    • நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    தென் அமெரிக்க நாடான பெருவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டரில் இந்த நிலநடுக்கம் 7.2 ஆக பதிவாகி இருக்கிறது. நிலநடுக்கம் காரணமாக அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. இதனால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.


    நிலநடுக்கத்தின் போது பதிவான சிசிடிவி காட்சி அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. வீடியோவில் தெருவில் நிறுத்தி வைக்கப்பட்ட கார் பூமியோடு சேர்ந்து குலுங்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. 


    இதே போன்று வீட்டினுள் இருந்த மின்விளக்குகள் நிலநடுக்கத்தால் குலுங்கின. இது தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது.


    காராவெலியிலே ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக மலையில் இருந்த பாறைகள் சரிந்து பான்-அமெரிக்க நெடுஞ்சாலையில் விழுந்தன. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை.

    ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக அந்நாட்டிற்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. ஜப்பானில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 6.9 ஆக பதிவாகி இருக்கிறது.

    நிலநடுக்கம் காரணமாக ஜப்பானியை தீவுகளான குய்ஷூ மற்றும் ஷிகோகு ஆகிய பகுதிகளை ஒட்டிய கடலோர பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. நிலநடுக்கம் மியாசகியில் இருந்து 20 மைல் தூரத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க நிலநடுக்கவியல் துறை தெரிவித்துள்ளது. 

    ×