என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அசாம் நிலநடுக்கம்"

    • நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்ததால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.
    • நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

    பிலிப்பைன்ஸின் மின்டானோவ் நகரில் 7.4 என்ற ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலநடுக்கம் 62 கிமீ (38.53 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்ததால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் உயரமான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

    கடந்த ஒரு வாரத்திற் முன்பு பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள விசாயாஸ் மாகாணம் செபு நகரில் 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் 74 பேர் உயிரிழந்த நிலையில் பலர் காயமடைந்தனர். 

    • தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
    • வடகிழக்கு மாநிலநகளிலும், அண்டை நாடான பூட்டனிலும் நில அதிர்வு ஏற்பட்டது.

    அசாம் மாநிலத்தை இன்று மாலை 4.41 மணிக்கு 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கியது.

    உடல்குரி மாவட்டத்தை மையமாக கொண்டு 26.78 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 92.33 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும்  பூமிக்கு 5 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலநடுக்கத்தால் பல பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் அச்சத்தில் ஆழ்த்தினர். மேலும் இந்த நிலநடுக்கத்தால் வடகிழக்கு மாநிலநகளிலும், அண்டை நாடான பூட்டனிலும் நில அதிர்வு ஏற்பட்டது.

    இந்த நிலநடுக்கத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. 

    • நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.8 புள்ளியாக பதிவாகி இருந்தது.
    • வடகிழக்கு மாநிலங்களில் நில அதிர்வு உணரப்பட்டது.

    கவுகாத்தி:

    அசாம் மாநிலம் கவுகாத்தி பகுதியில் இன்று காலை 10.16 மணிக்கு திடீர் நில நடுக்கம் ஏற்பட்டது. வடகிழக்கு பகுதிகளிலும் நில நடுக்கம் உணரப்பட்டது. இதனால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கியது. பொதுமக்கள் பீதி அடைந்தனர்.

    நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.8 புள்ளியாக பதிவாகி இருந்தது.

    இதேபோல் வடகிழக்கு மாநிலங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டது. அண்டை நாடான வங்காளதேசத்திலும் நில நடுக்கம் ஏற்பட்டது.

    இந்த நில நடுக்கத்தால் உயிர்சேதமோ? பொருட் சேதமோ? எதுவும் ஏற்படவில்லை.

    • துப்ரி மாவட்டத்தில் இன்று திடீர் நில நடுக்கம் ஏற்பட்டது.
    • வீடுகள், கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.

    துப்ரி:

    அசாம் மாநிலம் துப்ரி மாவட்டத்தில் இன்று அதிகாலை 3 மணிக்கு திடீர் நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.

    இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.1 புள்ளிகளாக பதிவானதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இதனால் உயிர் இழப்போ, பொருட்சேதமோ எதுவும் ஏற்படவில்லை.

    ×