என் மலர்
இந்தியா

அசாமில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவு
- நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.8 புள்ளியாக பதிவாகி இருந்தது.
- வடகிழக்கு மாநிலங்களில் நில அதிர்வு உணரப்பட்டது.
கவுகாத்தி:
அசாம் மாநிலம் கவுகாத்தி பகுதியில் இன்று காலை 10.16 மணிக்கு திடீர் நில நடுக்கம் ஏற்பட்டது. வடகிழக்கு பகுதிகளிலும் நில நடுக்கம் உணரப்பட்டது. இதனால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கியது. பொதுமக்கள் பீதி அடைந்தனர்.
நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.8 புள்ளியாக பதிவாகி இருந்தது.
இதேபோல் வடகிழக்கு மாநிலங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டது. அண்டை நாடான வங்காளதேசத்திலும் நில நடுக்கம் ஏற்பட்டது.
இந்த நில நடுக்கத்தால் உயிர்சேதமோ? பொருட் சேதமோ? எதுவும் ஏற்படவில்லை.
Next Story






