search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Taiwan earthquake"

    • நிலநடுக்கம் நின்று நிலைமை சீராகும் வரை அந்த கட்டில்கள் மோதாமல் நர்ஸ்கள் தடுக்கும் காட்சிகளும் அதில் உள்ளது.
    • வீடியோ வைரலாகிய நிலையில், பயனர்கள் பலரும் நர்ஸ்களின் துணிச்சலை பாராட்டி வருகின்றனர்.

    தைவானில் கடந்த 3-ந்தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது கட்டிடங்கள் குலுங்கியது தொடர்பான ஏராளமான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி இருந்தன.

    இந்நிலையில் நிலநடுக்கத்தின் போது மருத்துவமனை ஒன்றில் செவிலியர்கள் சிலர் குழந்தைகளை பாதுகாப்பதை காட்டும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

    இந்த காட்சி மருத்துவமனையில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவாகி உள்ளது. எக்ஸ் தளத்தில் வைரலான இந்த வீடியோவில் குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதற்காக நர்ஸ்கள் கட்டிலை ஒன்றாக சேர்த்து பாதுகாக்கும் காட்சிகள் உள்ளது. நிலநடுக்கம் நின்று நிலைமை சீராகும் வரை அந்த கட்டில்கள் மோதாமல் நர்ஸ்கள் தடுக்கும் காட்சிகளும் அதில் உள்ளது.

    இந்த வீடியோ வைரலாகிய நிலையில், பயனர்கள் பலரும் நர்ஸ்களின் துணிச்சலை பாராட்டி வருகின்றனர்.

    • ஒரு பிரபல ஓட்டல் மற்றும் சுரங்கம் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்கள் சரிந்து விழுந்தன.
    • கட்டிட இடிபாடுகளுக்குள் 2 இந்தியர்களும் சிக்கி இருப்பது தெரிய வந்துள்ளது.

    தைபே நகரம்:

    தைவான் தலைநகர் தைபே நகரத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.3 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கம் கடலுக்கு அடியில் சுமார் 32 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு உருவானது.

    இது 25 ஆண்டுகளுக்கு பின்னர் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஆகும். இதற்கு முன்னர் கடந்த 1999-ல் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் காரணமாக சுமார் 2 ஆயிரத்து 400 பேர் பலியாகினர்.

    இந்தநிலையில் தற்போது மீண்டும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நில அதிர்வு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சுமார் 100 முறை அங்கு அதிர்வுகள் ஏற்பட்டன. எனவே மக்கள் தங்களது வீடுகளில் இருந்து வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர்.

    இதில் அங்குள்ள பல கட்டிடங்கள் சீட்டுக்கட்டு போல சரிந்து விழுந்தன. இந்த கட்டிட இடிபாடுகளில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. படுகாயம் அடைந்த 1,000-க்கும் மேற்பட்டோர் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மேலும் அங்குள்ள ஒரு பிரபல ஓட்டல் மற்றும் சுரங்கம் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்கள் சரிந்து விழுந்தன. இதில் 1,000-க்கும் மேற்பட்டோர் சிக்கி கொண்டனர். அவர்களில் பலர் மீட்கப்பட்ட நிலையில் 700-க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளனர்.

    அந்த கட்டிட இடிபாடுகளுக்குள் 2 இந்தியர்களும் சிக்கி இருப்பது தெரிய வந்துள்ளது. எனவே அங்கு சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்கிடையே நிலநடுக்கம் காரணமாக அங்குள்ள ஒரு பிரசவ ஆஸ்பத்திரியில் பச்சிளம் குழந்தைகள் இருந்த தொட்டில்கள் உருண்டு சென்றன. அதனை அங்கிருந்த செவிலியர் இழுத்து பிடித்து அவர்களது உயிரை காப்பாற்றினர். இதுகுறித்த காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது. இதனையடுத்து குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய அந்த நர்சுகளை பலரும் பாராட்டி வருகின்றனர்.

    • தைவானில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் கட்டிடங்கள் இடிந்தன.
    • இந்தியாவை சேர்ந்த ஒரு ஆணும், ஒரு பெண்ணும் நிலநடுக்கம் ஏற்பட்ட மையப்பகுதிக்கு அருகில் உள்ள டாரோகோ பள்ளத்தாக்கில் கடைசியாக இருந்தனர்.

    தைபே:

    தைவானில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் கட்டிடங்கள் இடிந்தன. இதில் 9 பேர் பலியானார்கள். 1000-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அங்கு மீட்புப் பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் நிலநடுக்கத்தில் சிக்கி 2 இந்தியர்கள் மாயமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்தியாவை சேர்ந்த ஒரு ஆணும், ஒரு பெண்ணும் நிலநடுக்கம் ஏற்பட்ட மையப்பகுதிக்கு அருகில் உள்ள டாரோகோ பள்ளத்தாக்கில் கடைசியாக இருந்தனர். அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. இதற்கிடையே நிலநடுக்கத்தில் ஓட்டல் ஊழியர்கள் 42 பேர் மாயமாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தைவான் நாட்டில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.

    புதுடெல்லி:

    தைவான் நாட்டின் தலைநகரான தைப்பேவில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகி இருந்தது.

    இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. 730 பேர் காயமடைந்துள்ளனர். இந்நிலநடுக்கம் சீனா, ஹாங்காங், ஜப்பான், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளிலும் உணரப்பட்டது.

    இந்நிலையில், தைவானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானோருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தைவானில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பலர் உயிரிழந்துள்ளது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் வேண்டுகிறேன் என பதிவிட்டுள்ளார்.

    • கடந்த 1999-ம் ஆண்டு 7.2 என்ற அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • அதில் 2500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருந்தனர்.

    தைவானை இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. அந்நாட்டின் கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள ஹூவாலியன் நகரத்தில் 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது.

    நிலநடுக்கம் 35 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதனால் கட்டடங்கள் பயங்கரமாக குலுங்கின. ஹூவாலியன் பகுதியில் அடுக்குமாடி கட்டிடங்கள் இடிந்தன. தலைநகர் தைபேயில், பழைய கட்டிடங்கள், புதிய அலுவலகங்கள் சேதம் அடைந்தன.

    பயங்கர நிலநடுக்கத்தால் பீதியடைந்த பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைக்கு ஓடிவந்தனர். பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் பாலங்கள் குலுங்கின. அதில் சென்ற வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்தியபடி நின்றனர்.

    சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் நாடு முழுவதிலும் ரெயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 25 முறை நிலஅதிர்வுகள் பதிவானது. இதனால் தைவான் முழுவதும் பெரும் பதற்றம் நிலவியது. நிலநடுக்கத்தில் 4 பேர் பலியாகி இருப்பதாகவும், 50 பேர் காயம் அடைந்ததாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகி இருக்கிறது.

    ஹூவாலியன் நகரில் இடிந்து விழுந்த இரண்டு கட்டிடங்களில் சிலர் சிக்கி உள்ளதாக தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. அவர்களை மீட்கும் பணிகள் நடந்தது. பயங்கர நிலநடுக்கத்தால் தைவானின் வடக்கு பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் தவிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். 80 ஆயிரம் வீடுகளில் மின்சாரம் இல்லை.

    இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தைவான், ஜப்பான், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. இதில் ஜப்பானின் தெற்கு தீவை சிறிய சுனாமி அலைகள் தாக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஜப்பானின் யோனகுனி கடலோரத்தில் சில அடி உயரத்திற்கு அலைகள் எழும்பின. பிலிப்பைன்சின் டானஸ், ககாயன், இலோ கோஸ் நோர்டே, இசபெலா மாகாணங்களில் உள்ள கடலோரப் பகுதிகளை சுனாமி தாக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    அதே நேரத்தில் சீனாவுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. ஆனால் சீனாவின் ஷாங்காய், புஜோ, ஜியாமென், குவான்சோ, நிங்டே நகரங்களில் அதிர்வு உணரப்பட்டது. தைவான் நிலநடுக்கம் எதிரொலியாக, ஜப்பானின் ஒகிராவில் விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

    தைவானில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது மெட்ரோ ரெயில் குலுங்கியபடி சென்ற வீடியோ சமுக வலைதளங்களில் பரவி வருகிறது.

    தைவானில் 25 ஆண்டுகளில் சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 1999-ம் ஆண்டு 7.2 என்ற அளவில் ஏற்பட்ட நிலநடுக்கமே, தைவானில் அதிகபட்சமாக ஏற்பட்ட நிலநடுக்கமாகும்.

    இந்த நிலநடுக்கத்தில் 2500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருந்தனர். நிலநடுக்கம் அதிகம் ஏற்படும் பசிபிக் "ரிங் ஆப் பயர்" பகுதியில் தைவான் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • தைவான் மற்றும் ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • 2.3 மீட்டர் அளவிற்கு சுனாமி அலை ஏற்பட வாய்ப்புள்ளதாக ஜப்பான் எச்சரித்துள்ளது.

    தைவான் அருகே இன்று காலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவாகியுள்ள நிலையில் தைவான் மற்றும் ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    ஜப்பானின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள ஒகினாவா தீவை குறிப்பிட்டு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 3 மீட்டர் அளவிற்கு சுனாமி அலை ஏற்பட வாய்ப்புள்ளதாக ஜப்பான் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இந்த கடுமையான நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து உடனடியாக தகவல் ஏதும் வெளியாகவில்லை.

    ஆனால் தைவானில் கட்டடங்கள் இடிந்து சேதம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் தைவானின் தலைநகர் தைபேயிலும் நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த நிலநடுக்கம் ஜப்பான் நாட்டில் உள்ள தீவுகளையும் தாக்கியுள்ளது. ஜப்பான் நாட்டின் மியாகோ மற்றும் யாயியாமா தீவுகளை முதல் அலை தாக்கியதாக நம்பப்படுகிறது.

    தைவானில் இன்று உள்ளூர் நேரடிப்படி மதியம் 1 மணிக்கு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் தலைநகர் தைபே மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் அதிர்ந்தன. #TaiwanEarthquake
    தைபே:

    தைவானில் இன்று உள்ளூர் நேரடிப்படி மதியம் 1 மணிக்கு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் தலைநகர் தைபே மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் அதிர்ந்தன. வீடு கள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர்.

    ஹுயாலியன் நகரில் இருந்து 10 கி.மீ. தூரத்தில் பூமிக்கு அடியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. இதனால் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியாகவில்லை. #TaiwanEarthquake
    தைவான் நாட்டில் இன்று 6.0 ரிக்டர் அளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டதால் பல்வேறு பகுதிகளில் கட்டிடங்கள் குலுங்கின. #TaiwanEarthquake #Taiwan
    தைபே:

    பயங்கர எரிமலைகள் கொண்ட பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் தொடர்ந்து எரிமலை வெடிப்புகள் மற்றும் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. அவ்வகையில், பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் உள்ள தைவான் நாட்டில் இன்று மதியம் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

    ஹூவாலியன் கவுண்டி ஹாலில் இருந்து 104.2 கிமீ கிழக்கில் பூமிக்கடியில் 31.3 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. ரிக்டர் அளவுகோலில் இது 6.0 ஆக பதிவாகியிருந்தது.



    இந்த நிலநடுக்கம் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உணரப்பட்டது. கட்டிடங்கள் கடுமையாக குலுங்கின. எனினும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டதாகவோ, காயம் மற்றும் உயிரிழப்பு ஏற்பட்டதாகவோ தகவல் வெளியாகவில்லை. தைவான் அதிவேக ரெயில் சேவை மற்றும் தைவான் ரெயில்வே நிர்வாக ரெயில் சேவையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ரெயில்கள் வழக்கம்போல் இயங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

    பூமிக்கடியில் நகரும் தன்மையுடைய இரண்டு டெக்டோனிக் தட்டுகள் சந்திக்கும் இடத்திற்கு அருகாமையில் தைவான் உள்ளது. எனவே, டெக்டோனிக் தட்டுகள் உராயும்போது ஏற்படும் நிலநடுக்கத்தின்போது தைவான் கடுமையாக பாதிக்கப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாதம் இதே ஹூவாலியன் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போது 17 பேர் உயிரிழந்தனர். 1999ல் 7.6 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு 2400 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது. #TaiwanEarthquake #Taiwan
    ×