என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அர்ஜென்டினா"

    • டிசம்பர் 13-ம் தேதி ஐதராபாத் வருகிறார் மெஸ்சி
    • அரசு பள்ளி மாணவர்களுடன் மெஸ்சி கால்பந்து விளையாடவுள்ளார்.

    உலகின் தலைசிறந்த கால்பந்து வீரராக திகழ்பவர் லியோனல் மெஸ்சி. இவர் அர்ஜென்டினா அணியின் கேப்டனாகத் திகழ்கிறார். இவரது தலைமையில் அர்ஜென்டினா அணி உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது.

    இதற்கிடையே, மெஸ்சியின் அர்ஜென்டினா-ஆஸ்திரேலியா இடையிலான காட்சி கால்பந்து போட்டி நவம்பர் 17-ம் தேதி கொச்சியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

    ஆனால் அர்ஜென்டினா கால்பந்து அணி மற்றும் அதன் நட்சத்திர வீரர் மெஸ்சியின் கேரள சுற்றுப்பயணம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது என போட்டியை ஸ்பான்சர் செய்யும் தனியார் நிறுவனம் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டது. இதனால் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

    இந்நிலையில், இந்த மாதம் மெஸ்சி ஐதராபாத் வருகிறார் என தெலுங்கானா முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக ரேவந்த் ரெட்டி வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள செய்தியில், லியோனல் மெஸ்சி டிசம்பர் 13-ம் தேதி ஐதராபாத் வருகிறார். அரசு பள்ளி மாணவர்களுடன் கால்பந்து விளையாடுகிறார். மெஸ்சியை வரவேற்க தெலுங்கானா தயாராக உள்ளது என தெரிவித்தார்..

    இந்நிலையில் மெஸ்சி உடன் 'Friendly Match' விளையாடுவதற்காக தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி இரவுநேரப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

    • மெஸ்சி தலைமையில் அர்ஜென்டினா அணி உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது.
    • மெஸ்சி டிசம்பர் 13-ம் தேதி ஐதராபாத் வருவதாக தெரிவித்துள்ளார்.

    ஐதராபாத்:

    உலகின் தலைசிறந்த கால்பந்து வீரராக திகழ்பவர் லியோனல் மெஸ்சி. இவர் அர்ஜென்டினா அணியின் கேப்டனாகத் திகழ்கிறார். இவரது தலைமையில் அர்ஜென்டினா அணி உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது.

    இதற்கிடையே, மெஸ்சியின் அர்ஜென்டினா-ஆஸ்திரேலியா இடையிலான காட்சி கால்பந்து போட்டி நவம்பர் 17-ம் தேதி கொச்சியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

    ஆனால் அர்ஜென்டினா கால்பந்து அணி மற்றும் அதன் நட்சத்திர வீரர் மெஸ்சியின் கேரள சுற்றுப்பயணம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது என போட்டியை ஸ்பான்சர் செய்யும் தனியார் நிறுவனம் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டது. இதனால் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

    இந்நிலையில், அடுத்த மாதம் மெஸ்சி ஐதராபாத் வருகிறார் என தெலுங்கானா முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக ரேவந்த் ரெட்டி வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள செய்தியில், லியோனல் மெஸ்சி டிசம்பர் 13-ம் தேதி ஐதராபாத் வருகிறார். அரசு பள்ளி மாணவர்களுடன் கால்பந்து விளையாடுகிறார். மெஸ்சியை வரவேற்க தெலுங்கானா தயாராக உள்ளது என பதிவிட்டுள்ளார்.

    • போதைக்கும்பல் கடத்திச் சென்று சித்ரவதை செய்துள்ளது.
    • அவர்களை கொலை செய்து, இன்ஸ்டாவில் வீடியோ வெளியிட்டுள்ளது.

    அர்ஜென்டினாவில் 3 பெண்களை சித்ரவதை செய்து கொலை செய்ய போதைக்கும்பல்: நடவடிக்கை எடுக்கக்கோரி வெடித்தது பேராட்டம்/ Outrage in Argentina after 3 women tortured, killed on Instagram live stream by drug gang

    கடந்த 19-ந்தேதி விருந்திற்கு அழைத்துச் செல்வதாகக் கூறி பிரெண்டா டெல் காஸ்டிலோ (20), அவரது உறவினரான மோரேனா வெர்டி (20) மற்றும் லாரா குட்டிரெஸ் (15) ஆகிய 3 இளம்பெண்களை பியூனஸ் அயர்ஸ் நகரின் புறநகர்ப் பகுதியான புளோரன்சியோ வரேலாவில் உள்ள வீட்டிற்கு ஒரு கும்பல் வேனில் கடத்திச் சென்றது.

    அங்கு அவர்கள் மூவரும் கொடூரமாக சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்டனர். இதனை வீடியோ எடுத்து பெரு நாட்டைச் சேர்ந்த போதைப்பொருள் கும்பலின் தலைவன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேரலையாக ஒளிபரப்பினான்.

    போதைப் பொருட்களை திருடினால் இதுதான் கதி என மற்றவர்களை எச்சரிக்கும் வகையில் அவன் இதைச் செய்ததாகக் கூறப்படுகிறது. இதைதொடர்ந்து 5 நாட்களுக்குப் பிறகு 3 பெண்களின் உடல்களும் புதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டன. இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக 3 ஆண்கள், 2 பெண்கள் என 5 பேர் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளியான போதைப் பொருள் கும்பலின் தலைவனை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

    இந்த நிலையில் பியூனஸ் அயர்ஸ் நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் சாலைகளில் திரண்டு கொலையாளி களுக்குக் கடுமையான தண்டனை வழங்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் பதாகைகளை ஏந்தி கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பொதுமக்களுடன் சேர்ந்து பேரணியாக நாடாளுமன்றத்தை நோக்கி சென்றனர்.

    படுகொலை செய்யப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், பாலின அடிப்படையிலான வன்முறையை தடுக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். இதன்காரணமாக நாடு முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • அர்ஜென்டினா கால்பந்து அணி கேரளாவுக்கு வருகை தருவதாக இருந்தது.
    • ஒப்பந்தத்தை கேரள அரசு மீறியதாக அந்த அணி தெரிவித்து, வருகையை ரத்து செய்துள்ளது.

    மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா கால்பந்து அணி இந்த ஆண்டு அக்டோபர்- நவம்பர் மாதத்தில் கேரளா வருகை தந்து விளையாட இருந்தது. ஆனால், ஒப்பந்தத்தை கேரள அரசு மீறியதாக குற்றம்சாட்டிய அர்ஜென்டினா கால்பந்து சங்கம், வருகையை ரத்து செய்துள்ளது.

    இந்த நிலையில் இது தொடர்பாக இடது சாரி கட்சி விளக்கம் அளிக்க வேண்டும் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

    இது தொடர்பாக கேரள மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் அப்துரஹிமான் கூறுகையில் "கேரள மாநில அரசு இந்த வருடத்தில் அர்ஜென்டினா அணி கேரளா வருவதை மட்டுமே ஆர்வம் காட்டுகிறது. ஸ்பான்சர்களுக்கும், அணிக்கும் இடையில்தான் ஒப்பந்தம் கையெழுத்தானது. அரசு இதில் ஒரு பகுதியாக இருக்கவில்லை.

    அக்டோபர்- நவம்பரில் கேரளாவில் விளையாட பணம் கொடுத்துள்ளோம். இது நடைபெறவில்லை என்றால் குட்பை சொல்ல வேண்டியதுதான். மற்றபடி என்ன செய்ய முடியும்?. இந்த வருடம் அவர்கள் விளையாடவில்லை, மற்றபடி எங்களுக்கு விருப்பம் இல்லை" என்றார்.

    முன்னதாக, கேரள மாநில காங்கிரஸ் தலைவர் சன்னி ஜோஷப், காங்கிரஸ் மக்களவை எம்.பி. ஷஃபி பரம்பில் ஆகியோர் "அர்ஜென்டினா அணி கேரள மாநில அரசு மீது குற்றம்சாட்டியதால், மாநில அரசு கட்டாயம் பதில் அளிக்க வேண்டம். லட்சக்கணக்கான பணம் செலவழிக்கப்பட்டுள்ளது. தற்போது, அர்ஜென்டினா அணி, இது தொடர்பாக விளக்கமாக தெரிவித்துவிட்டது. மாநில மக்களுக்கு உண்மை தெரிந்தாக வேண்டும்.

    அர்ஜென்டினா கால்பந்து அணியை கொண்டு வந்து மாநில அரசு ஆதாயம் தேட முயற்சித்தது. அவர்கள் மக்களை ஏமாற்றிவிட்டனர். மாநில அரசு ஒப்பந்த விதிமுறையை மீறி விட்டதாக அர்ஜென்டினா கால்பந்து சங்கம் தெரிவித்துவிட்டது" எனத் தெரிவித்தனர்.

    • நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.4 ஆக பதிவாகியுள்ளது.
    • அர்ஜென்டினாவில் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.

    தென் அமெிரக்க நாடான அர்ஜென்டினா அருகே கடலில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

    இது ரிக்டர் அளவில் 7.4 ஆக பதிவாகியுள்ளது.

    நிலநடுக்கத்தின் எதிரொலியால், சிலியின் மாகல்லனேஸின் கடலோர பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மேலும், அர்ஜென்டினாவில் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.

    சக்தி வாய்ந்த நிலநடுக்கம் என்பதால் பேரலைகள் எழுந்திருக்க வாய்ப்பு உள்ளதாக அஞ்சப்படுகிறது.

    • முதல் பாதி நேரத்தில் அர்ஜென்டினா 3-1 என முன்னிலைப் பெற்றிருந்தது.
    • 2-வது பாதி நேர ஆட்டத்தில் அர்ஜென்டினா மேலும் ஒரு கோல் அடிக்க 4-1 என வெற்றி பெற்றது.

    உலகக்கோப்பை கால்பந்து தொடரில் பங்கேற்பதற்கான தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடைபெற்ற போட்டியில் அர்ஜென்டினா- பிரேசில் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. காயம் காரணமாக அர்ஜென்டினா அணியில் மெஸ்சி இடம்பெறவில்லை.

    ஆட்டம் தொடங்கிய 4-வது நிமிடத்தில் அர்ஜென்டினா வீரர் ஜூலியன் அல்வாரஸ் முதல் கோலை பதிவு செய்தார். 17-வது நிமிடத்தில் அர்ஜென்டினா மேலும் ஒரு கோல் அடித்தது. இந்த கோலை என்ஜோ பெர்னாண்டஸ் அடித்தார். 26-வது நிமிடத்தில் பிரேசில் அணியின் மேத்யூஸ் குன்ஹா கோல் அடித்தார். இதனால் அர்ஜென்டினா 2-1 என முன்னிலைப் பெற்றிருந்தது.

    37-வது நிமிடத்தில் அலெக்சிஸ் மெக் அலிஸ்டர் கோல் அடிக்க முதல் பாதி நேர ஆட்டத்தில் அர்ஜென்டினா 3-0 என முன்னிலைப் பெற்றது.

    2-வது பாதி நேர ஆட்டத்திலும் அர்ஜென்டினா அணிதான் ஆதிக்கம் செலுத்தியது. 71-வது நிமிடத்தில் கியுலியானோ சிமியோன் கோல் அடிக்க அர்ஜென்டினா 4-1 என முன்னிலைப் பெற்றது. பின்னர் ஆட்ட நேரம் முடியும் வரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால் அர்ஜென்டினா 4-1 என வெற்றி பெற்றது.

    தென்அமெரிக்கா கண்டத்தில் உள்ள அணிகள் தகுதிச்சுற்றில் விளையாடி வருகிறது. இதன் புள்ளிகள் பட்டியலில் அர்ஜென்டினா 14 போட்டிகளில் 10-ல் வெற்றி, ஒரு டிரா, 3 தோல்வியுடன் 31 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது. பிரேசில் 6 வெற்றி, 3 டிரா, 5 தோல்வியுடன் 21 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது.

    • சிறிய காயம் காரணமாக ஓய்வு தேவைப்படுகிறது. அதனால் என்னால் விளையாட முடியாது.
    • மற்ற ரசிசகர்கள் போல் அணிக்கு ஆதரவு அளிப்பதுடன், அணியை உற்சாகப்படுத்துவேன்- மெஸ்சி

    உலகக் கோப்பைக்கான கால்பந்து தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அர்ஜென்டினா அடுத்த இரண்டு போட்டிகளில் உருகுவே, பிரேசில் அணிகளை சந்திக்க இருக்கிறது. இந்த இரண்டு போட்டிகளிலும் அர்ஜென்டினா அணிக்காக மெஸ்சி விளையாட இருந்தார்.

    இந்த நிலையில் "உருகுவே, பிரேசில் ஆகிய இரண்டு அணிகளுக்கு எதிரான முக்கிய போட்டியில் விளையாட முடியாமல் போனது வருத்தம் அளிக்கிறது. உண்மையிலேயே இரண்டு போட்டிகளிலும் விளையாட விரும்பினேன். சிறிய காயம் காரணமாக ஓய்வு தேவைப்படுகிறது. அதனால் என்னால் விளையாட முடியாது. மற்ற ரசிசகர்கள் போல் அணிக்கு ஆதரவு அளிப்பதுடன், அணியை உற்சாகப்படுத்துவேன்" என மெஸ்சி தெரிவித்துள்ளார்.

    அர்ஜென்டினா வருகிற 22-ந்தேதி உருகுவே அணியையும், 26-ந்தேதி பிரேசில் அணியையும் எதிர்கொள்கிறது. இந்த ஆட்டங்கள் இந்திய நேரப்படி காலை 5 மணிக்கு தொடங்கும்.

    • முதல் பாதி முடிவில் 1-0 என அர்ஜென்டினா முன்னிலை வகித்தது.
    • அர்ஜென்டினாவுக்காக 4 உலக கோப்பை தொடரிலும் கோல் அடித்து மெஸ்ஸி சாதனை.

    தோகா:

    22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இன்றைய ஆட்டம் ஒன்றில் அர்ஜென்டினா, சவுதி அரேபியா அணிகள் மோதின. ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய அர்ஜென்டினா அணிக்கு  10 வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதனை சரியாக பயன்படுத்தி அந்த அணி கேப்டன் மெஸ்ஸி கோல் அடித்தார். இதனால் முதல் பாதி முடிவில் 1-0 என அர்ஜென்டினா முன்னிலை வகித்தது.

    எனினும் 2வது பாதியில் சவுதி அரேபிய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 48 வது நிமிடத்தில் அந்த அணி வீரர் சலே அல் ஷெஹ்ரியும், 53 நிமிடத்தில் சலம் அல் தவ்சாரியும் அடுத்தடுத்து தங்கள் அணிக்காக கோல் அடித்தனர். இதை முறியடிக்க முயன்ற அர்ஜென்டினா வீரர்களின் முயற்சி தோல்வி அடைந்தது. இதையடுத்து 2-1 என்ற கோல்கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்திய சவுதி அரேபியா வெற்றி பெற்றது.

    இந்நிலையில் இந்த உலக கோப்பையில் முதலாவது கோலை பதிவு செய்ததன் மூலம் அந்த அர்ஜென்டினா அணிக்காக 4 உலக கோப்பை தொடர்களில் கோல் அடித்த வீரர் என்ற சாதனையை மெஸ்ஸி படைத்துள்ளார்.

    • அர்ஜென்டினா இந்த ஆட்டத்தில் தோற்றால் போட்டியில் இருந்து வெளியேற்றப்படும்.
    • உலகின் தலைசிறந்த வீரரான அவருக்கு இது கடைசி உலக கோப்பை என்பதால் நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டும்.

    லுசாயில்:

    உலக கோப்பை கால்பந்து போட்டியில் 2 முறை சாம்பியனான அர்ஜென்டினா தொடக்க ஆட்டத்தில் சவுதி அரேபியாவிடம் 1-2 ('சி' பிரிவு ) என்ற கோல் கணக்கில் அதிர்ச்சிகரமாக தோற்றது.

    லியோனல் மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா அணி 2-வது போட்டியில் மெக்சிகோவை இன்று எதிர் கொள்கிறது . இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு லுசாயில் ஸ்டேடியத்தில் இந்தப் போட்டி நடக்கிறது.

    இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி அர்ஜென்டினாவுக்கு உள்ளது. தோற்றால் போட்டியில் இருந்து வெளியேற்றப்படும். இதனால் அந்த அணி வீரர்கள் முழு திறமையை பயன்படுத்தி கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும்.

    மெஸ்சிக்கு மிகவும் கடினமான சோதனயாகும். உலகின் தலைசிறந்த வீரரான அவருக்கு இது கடைசி உலக கோப்பை என்பதால் நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டும். மெக்சிகோ முதல் ஆட்டத்தில் போலந்துடன் கோல் எதுவுமின்றி டிரா செய்தது.

    இரு அணிகளும் 35 ஆட்டத்தில் மோதி உள்ளன. இதில் அர்ஜென்டினா 16-ல், மெக்சிகோ 5-ல் வெற்றி பெற்றன. 14 போட்டி டிரா ஆனது.

    இதே பிரிவில் நடைபெறும் மற்றொரு போட்டியில் போலந்து-சவுதி அரேபியா அணிகள் (மாலை 6.30) மோதுகின்றன.

    சவுதி அரேபியா முதல் ஆட்டத்தில் அர்ஜென்டினாவை வீழ்த்தி இருந்ததால் நம்பிக்கையுடன் விளையாடும். அந்த அணி இன்றும் வெற்றி பெற்றால் 2-வது சுற்றில் நுழைவதற்கான வாய்ப்பை பெறும். போலந்து முதல் ஆட்டத்தில் டிரா செய்ததால் சவுதி அணியை வீழ்த்த முயற்சிக்கும்.

    குரூப்-டி பிரிவில் இன்று நடைபெறும் ஆட்டங்களில் துனிசியா-ஆஸ்திரேலியா (மாலை 3.30), பிரான்ஸ்-டென்மார்க் (இரவு 9.30) அணிகள் மோதுகின்றன.

    துனிசியா முதல் போட்டியில் கோல் எதுவுமின்றி டென்மார்க்குடன் டிரா செய்தது. ஆஸ்திரேலியா 1-4 என்ற கோல் கணக்கில் பிரான்சிடம் தோற்றது. இதனால் இரு அணிகளும் முதல் வெற்றிக்காக காத்திருக்கின்றன.

    நடப்பு சாம்பியன் பிரான்ஸ் அணி டென்மார்க்கை வீழ்த்தி 2-வது வெற்றியுடன் நாக் அவுட் சுற்றுக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளது. டென்மார்க் முதல் வெற்றி வேட்கையில் உள்ளது.

    • முதல் பாதிவரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.
    • மெஸ்சி முதல் கோல் அடித்து அணியை முன்னிலை பெற செய்தார்.

    கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் குரூப் சி பிரிவில் நடைபெற்ற போட்டியில் அர்ஜென்டினா அணி மெக்சிகோவை எதிர்கொண்டது. லுசைல் ஐகானிக் மைதானத்தில் நள்ளிரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதல் கோல் அடிக்க இரு அணிகளும் தீவிரம் காட்டிய போதும், முதல் பாதி வரை எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.

    இரண்டாவது பாதியின் 64 வது நிமிடத்தில் அர்ஜென்டினா கேப்டன் லியோனல் மெஸ்சி தமக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கோல் அடித்து அந்நாட்டு ரசிகர்களை மகிழ்வித்தார். தொடர்ந்து 87வது நிமிடத்தில் பெர்னான்டஸ் மேலும் ஒரு கோல் அடித்து அர்ஜென்டினாவின் வெற்றியை உறுதி செய்தார். கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்ட போதும் மெக்சிகோ அணியால் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. இறுதியில்  2-0 என்ற கோல் கணக்கில் தனது முதல் வெற்றியை அர்ஜென்டினா பதிவு செய்தது.

    • அர்ஜென்டினா கால் இறுதியில் நெதர்லாந்தை பெனால்டி ஷூட் அவுட்டில் வீழ்த்தியது.
    • உலக தர வரிசையில் 12-வது இடத்தில் உள்ள குரோஷியா இந்த தொடரில் தோல்வி எதையும் சந்திக்கவில்லை.

    லுசைல்:

    கத்தாரில் நடைபெற்று வரும் 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி தற்போது இறுதிக் கட்டத்தை நெருங்கி விட்டது.

    2 நாள் ஓய்வுக்கு பிறகு அரைஇறுதி போட்டி நாளை (13-ந்தேதி) தொடங்குகிறது. நடப்பு சாம்பியன் பிரான்ஸ் , 2 முறை உலக கோப்பையை வென்ற அர்ஜென்டினா, கடந்த முறை 2-வது இடத்தை பிடித்த குரோஷியா , ஆப்பிரிக்க கண்டத்தை சேர்ந்த மொராக்கோ ஆகிய 4 நாடுகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

    நாளை நள்ளிரவு 12.30 மணிக்கு முதல் அரை இறுதி ஆட்டம் லுசைல் ஸ்டேடியத்தில் நடக்கிறது. இதில் அர்ஜென்டினா- குரோஷியா அணிகள் மோதுகின்றன.

    லியோனல் மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா அணி லீக் சுற்றில் முதல் போட்டியில் சவுதி அரேபியாவிடம் 1-2 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சிகரமாக தோற்றது. அதைத் தொடர்ந்து மெக்சிகோவை 2-0 என்ற கணக்கிலும், போலந்தை 2-0 என்ற கணக்கிலும் வீழ்த்தியது. 2-வது சுற்றில் ஆஸ்திரேலியாவை. 2-1 என்ற கணக்கில் தோற்கடித்தது.

    அர்ஜென்டினா கால் இறுதியில் நெதர்லாந்தை பெனால்டி ஷூட் அவுட்டில் வீழ்த்தியது. அந்த அணி 9 கோல் போட்டுள்ளது. 5 கோல் வாங்கியுள்ளது.

    உலக தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள அர்ஜென்டினா 6-வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை அரைஇறுதியில் அந்த அணி தோற்றது கிடையாது.

    குரோஷியா பலம் வாய்ந்தது. அந்த அணியை சமாளிப்பது அர்ஜென்டினாவுக்கு சவாலானது. முன்களத்தில் வலுவாக இருக்கும் அந்த அணி பினகளத்தில் பலவீனமாக காணப்படுகிறது. நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இதை காண முடிந்தது. கடைசி நிமிடங்களில் 2 கோல் வாங்கி இருந்தது. இதனால் பின் களத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

    நட்சத்திர வீரர் மெஸ்சி தான் அர்ஜென்டினாவின் பலம். அவர் 4 கோல்கள் அடித்துள்ளார். முக்கியமான அரைஇறுதியில் அவர் வீரர்களை ஒருங்கிணைப்பது அவசியமானதாகும்.

    ஜூலியன் அல்வாரெஸ், என்சோ பெர்னாண்டஸ் , மார்டினஸ் , மொலினா போன்ற முன்னணி வீரர்களும் அந்த அணியில் உள்ளனர். கோல்கீப்பர் மார்ட்டினஸ் மிகவும் நல்ல நிலையில் உள்ளார். நடுகள வீரர் அகுனா மஞ்சள் அட்டை பெற்றதால் இந்த ஆட்டத்தில் விளையாட முடியாது.

    உலக தர வரிசையில் 12-வது இடத்தில் உள்ள குரோஷியா இந்த தொடரில் தோல்வி எதையும் சந்திக்கவில்லை. அந்த அணி கனடாவை 4-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது.

    மொராக்கோ, பெல்ஜியத்துடன் கோல் எதுவுமின்றி டிரா செய்தது. 2-வது சுற்றில் ஜப்பானையும் , கால் இறுதியில் பிரேசிலையும் பெனால்டி ஷூட் அவுட்டில் வீழ்த்தியது. அந்த அணி 6 கோல் போட்டுள்ளது. 3கோல் வாங்கியுள்ளது.

    சிறந்த வீரர்களை கொண்ட குரோஷியா தொடர்ந்து 2-வது முறையாக இறுதி ஆட்டத்துக்கு நுழையும் வேட்கையில் உள்ளது. 2018-ம் ஆண்டு ரஷியாவில் நடந்த உலக கோப்பையில் அந்த அணி அரைஇறுதியில் இங்கிலாந்தை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி இருந்தது. இறுதிப் போட்டியில் பிரான்சிடம் தோற்று கோப்பையை இழந்தது.

    குரோஷியா அணியில் கேப்டன் மாட்ரிச் , கிராமரிச், பெரிசிச் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர். நடுகளம், பின்களத்தில் அந்த அணி மிகவும் வலுவாக இருக்கிறது.

    இரு அணிகளும் 5 முறை மோதியுள்ளன. அர்ஜென்டினா 2 ஆட்டத்திலும், குரோஷியா 2 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் டிரா ஆனது.

    உலக கோப்பையில் மோதிய 2 போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றன. 1998 உலக கோப்பையில் அர்ஜென்டினா 1-0 என்ற கணக்கிலும் , கடந்த உலக கோப்பையில் குரோஷியா 3-0 என்ற கணக்கிலும் வெற்றி பெற்றன. இதற்கு அர்ஜென்டினா நாளை பழிவாங்குமா? என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது.

    அர்ஜென்டினாவும், குரோஷியாவும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற கடுமையாக போராடும் என்பதால் இந்த ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

    நாளை மறுநாள் (14-ந் தேதி) நடைபெறும் 2-வது அரைஇறுதியில் பிரான்ஸ்-மொராக்கோ அணிகள் மோதுகின்றன.

    • முதல் பாதியில் அர்ஜென்டினா 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
    • 2வது பாதியில் பிரான்ஸ் 2 கோல்கள் அடிக்க ஆட்டம் சமனிலை அடைந்தது.

    கத்தார்:

    உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் கத்தாரில் நடைபெற்றது. இதில் அர்ஜென்டினா, பிரான்ஸ் அணிகள் மோதின.

    முதல் பாதியில் அர்ஜென் டினா 2-0 என முன்னிலை பெற்றது. 2வது பாதியில் பிரான்ஸ் அணி 2 கோல் அடித்ததால் ஆட்டம் சமனில் முடிந்தது.

    கூடுதல் நேரத்தில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்ததால் 3-3 என சமனிலை பெற்றன. இதையடுத்து பெனால்டி ஷூட் அவுட் முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணி பிரான்சை வீழ்த்தி உலக கோப்பையை 3வது முறையாக கைப்பற்றியது.

    இந்நிலையில், உலக கோப்பை கால்பந்து சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றிய அர்ஜென்டினா அணிக்கு ரூ.342 கோடி பரிசு வழங்கப்படுகிறது.

    இரண்டாவது இடம் பிடித்த பிரான்ஸ் அணிக்கு ரூ.244 கோடி பரிசாக அளிக்கப்படுகிறது.

    ×