என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "World Cup football"

    • உலகின் முதல் ஸ்கை ஸ்டேடியத்தை சவுதி அரேபியா அறிமுகப்படுத்துகிறது.
    • இந்த ஸ்டேடியம் தளத்திலிருந்து 1150 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது.

    48 அணிகள் பங்கேற்கும் 23-வது உலக கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது.

    இதனையடுத்து அடுத்த உலக கோப்பை தொடர் 2034-ல் நடைபெற உள்ளது. இந்த போட்டியின் போது பயன்படுத்தப்படும் 15 மைதானங்களில் சவுதி அரேபியாயில் உள்ள நியோம் மைதானமும் ஒன்றாகும். இது ஸ்கை ஸ்டேடியம் என்றும் அழைக்கப்படுகிறது. இதன்மூலம் உலகின் முதல் ஸ்கை ஸ்டேடியத்தை சவுதி அரேபியா அறிமுகப்படுத்துகிறது.

    இந்த ஸ்டேடியம் தளத்திலிருந்து 1150 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. மேலும் இது 46,000 பார்வையாளர்கள் வரை இருக்கும் வகையில் கட்டப்படுகிறது. இதன் கட்டுமானப் பணிகள் 2027-ல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் உலகக் கோப்பைக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக 2032-ம் ஆண்டுக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த ஸ்டேடியம் தொடர்பான திட்டம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • நார்வே 5-0 என்ற கோல் கணக்கில் இஸ்ரேலை ஊதித்தள்ளியது.
    • நார்வே அணியில் எர்லிங் ஹாலண்ட் (27-வது, 63-வது மற்றும் 72-வது நிமிடம்) ‘ஹாட்ரிக்’ கோல் அடித்தார்.

    ஆஸ்லோ:

    48 அணிகள் பங்கேற்கும் 23-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது. இதில் போட்டியை நடத்தும் நாடுகளை தவிர மற்ற அணிகள் தகுதி சுற்று மூலமே நுழைய முடியும். இதுவரை 17 அணிகள் தகுதி பெற்றுள்ளன.

    தகுதி சுற்று போட்டிகள் தற்போது கண்டங்கள் வாரியாக நடந்து வருகிறது. இதில் ஐரோப்பிய மண்டலத்துக்கான தகுதி சுற்றில் நார்வே தலைநகர் ஆஸ்லோவில் நடந்த 'ஐ' பிரிவு ஆட்டம் ஒன்றில் நார்வே அணி, இஸ்ரேலை சந்தித்தது. உள்ளூர் ரசிகர்களின் அமோக ஆதரவுடன் களம் புகுந்த நார்வே 5-0 என்ற கோல் கணக்கில் இஸ்ரேலை ஊதித்தள்ளியது.

    நார்வே அணியில் எர்லிங் ஹாலண்ட் (27-வது, 63-வது மற்றும் 72-வது நிமிடம்) 'ஹாட்ரிக்' கோல் அடித்தார். இதையும் சேர்த்து அவரது கோல் எண்ணிக்கை 51-ஆக (46 ஆட்டம்) உயர்ந்தது. இதன் மூலம் சர்வதேச கால்பந்தில் அதிவேகமாக 50 கோல் அடித்த வீரர் என்ற சாதனையை இங்கிலாந்தின் ஹாரி கேனிடம் (71 ஆட்டம்) இருந்து தட்டிப்பறித்தார்.

    'எப்' பிரிவில் போர்ச்சுகல் அணி 1-0 என்ற கோல் கணக்கில் அயர்லாந்தை வீழ்த்தியது. போர்ச்சுகல் அணியின் ரூபன் நெவ்ஸ் கடைசி நிமிடத்தில் பந்தை தலையால் முட்டி கோல் அடித்து வெற்றியை தேடித்தந்தார். முன்னதாக 75-வது நிமிடத்தில் போர்ச்சுகலுக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை அந்த அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ தவறவிட்டார்.

    • 40 வயதான ரொனால்டோ ஒட்டு மொத்தமாக 943 கோல்கள் அடித்துள்ளார்.
    • மெஸ்சி 114 கோல்களுடன் (194 ஆட்டம்) 2-வது இடத்தில் இருக்கிறார்.

    புடாபெஸ்ட்:

    உலக கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு (2026) ஜூன் 11-ந்தேதி முதல் ஜூலை 19-ந்தேதி வரை கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய 3 நாடுகளில் நடக்கிறது. இதில் 48 நாடுகள் பங்கேற்கின்றன. 2022-ம் ஆண்டு போட்டியை விட 16 அணிகள் கூடுதலாகும்.

    போட்டியை நடத்தும் 3 நாடுகள் நேரடியாக விளையாடும். மற்றவை தகுதி சுற்று மூலம் தேர்வாகும். இதுவரை 18 அணிகள் தகுதி பெற்றுள்ளன.

    ஐரோப்பிய கண்டத்துக்கான எப் பிரிவு தகுதி சுற்று ஆட்டம் ஒன்றில் போர்ச்சுக்கல்-அங்கேரி அணிகள் மோதின. இதில் போர்ச்சுக்கல் 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

    இந்த ஆட்டத்தில் போர்ச்சுக்கல் அணியை சேர்ந்த நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஒரு கோல் அடித்தார். 58-வது நிமிடத்தில் பெனால்டி மூலம் இந்த கோலை அடித்தார்.

    இதன்மூலம் உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் அதிக கோல் அடித்த வீரர் என்ற சாதனையை ரொனால்டோ சமன் செய்தார். அவரும், கவுத மாலா நாட்டை சேர்ந்த கார்லோஸ் ரூயிசும் தலா 39 கோல்கள் அடித்துள்ளனர். மற்றொரு நட்சத்திர வீரரான லியோனல் மெஸ்சி (அர்ஜென்டினா) 36 கோல்கள் அடித்துள்ளார்.

    40 வயதான ரொனால்டோ ஒட்டு மொத்தமாக 943 கோல்கள் அடித்துள்ளார். அவர் ஆயிரம் கோல்களை அடிப்பதை இலக்காக கொண்டுள்ளார்.

    போர்ச்சுக்கல் நாட்டுக்காக 223 போட்டியில் 141 கோல்கள் அடித்துள்ளார். சர்வதேச போட்டிகளில் அதிக கோல்கள் அடித்த வீரர்களில் ரொனால்டோ தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார். மெஸ்சி 114 கோல்களுடன் (194 ஆட்டம்) 2-வது இடத்தில் இருக்கிறார்.

    • இங்கிலாந்து அணி முதல் பாதியில் 3 கோல்களை அடித்து வலுவான முன்னிலை பெற்றது.
    • போட்டியை எப்படியாவது டிரா செய்துவிடவேண்டும் என ஈரான் வீரர்கள் தொடர்ந்து போராடினர்.

    தோகா:

    கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரில், இன்று கலிபா சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெற்ற குரூப்-பி முதல் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து-ஈரான் அணிகள் மோதின.

    துவக்கத்தில் இருந்தே ஆட்டத்தை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருந்த இங்கிலாந்து அணி முதல் பாதியில் 3 கோல்களை அடித்து வலுவான முன்னிலை பெற்றது. ஜூட் பெலிங்காம் (35வது நிமிடம்), புகாயோ சகா (43), ரகீம் ஸ்டெர்லிங் (45+1) கோல் அடித்தனர்.

    இரண்டாவது பாதியிலும் இங்கிலாந்து ஆதிக்கம் செலுத்தியது. புகாயோ சகா 62வது நிமிடத்தில் தனது இரண்டாவது கோலை பதிவு செய்தார்.

    இங்கிலாந்து வீரர்களுக்கு பதிலடி கொடுக்க ஈரான் அணியின் வீரர்கள் ஆக்ரோஷமாக முன்னேறினர். போட்டியை எப்படியாவது டிரா செய்துவிடவேண்டும் என தொடர்ந்து போராடினர். 65-வது நிமிடத்தில் அந்த அணியின் மெஹ்தி கோல் அடித்தார்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இங்கிலாந்து வீரர் மார்கஸ் ராஷ்போர்டு 71வது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார். போட்டியின் இறுதிக்கட்டத்தில் ஜேக் கிரீலிஸ் (89வது நிமிடம்) கோல் அடிக்க, இங்கிலாந்து அணி 6-1 முன்னிலை பெற்றது. கூடுதல் நேரத்தில் ஈரான் வீரர் மெஹ்தி மீண்டும் ஒரு கோல் அடித்தார். இறுதியில் இங்கிலாந்து அணி 6-2 என அபார வெற்றி பெற்றது. 

    • முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.
    • 2வது பாதியில் நெதர்லாந்து அணி 2 கோல்களை அடித்து வெற்றி பெற்றது.

    தோகா:

    கத்தாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து தொடரில் இரவு 9.30 மணிக்கு நடைபெற்ற குரூப் ஏ பிரிவுக்கான லீக் ஆட்டத்தில் செனகல், நெதர்லாந்து அணிகள் மோதின.

    தொடக்கத்தில் இருந்தே இரு அணி வீரர்களும் கோல் அடிக்க முயற்சித்தனர். ஆனால் முதல் பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.

    இரண்டாவது பாதியில் நெதர்லாந்து வீரர்கள் போராடினர். ஆட்டத்தின் 84 வது நிமிடத்தில் கோடி கேக்போ ஒரு கோல் அடித்து அசத்தினார்.

    ஆட்டம் முடிந்ததும் கூடுதலாக 10 நிமிடம் அளிக்கப்பட்டது. 99வது நிமிடத்தில் நெதர்லாந்தின் டேவி கிளாசன் ஒரு கோல் அடித்தார்.

    இதன்மூலம் நெதர்லாந்து அணி 2-0 என்ற கோல் கணக்கில் செனகல் அணியை வீழ்த்தியது.

    • அமெரிக்கா,வேல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் டிரா ஆனது.
    • அமெரிக்கா, வேல்ஸ் அணிகள் தலா ஒரு கோல் அடித்தன.

    தோகா:

    கத்தாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து தொடரில் இரவு 9.30 மணிக்கு நடைபெற்ற குரூப் பி பிரிவுக்கான லீக் ஆட்டத்தில் அமெரிக்கா, வேல்ஸ் அணிகள் மோதின.

    தொடக்கம் முதல் சிறப்பாக ஆடியது அமெரிக்க அணி. முதல் பாதியின் 36-வது நிமிடத்தில் அமெரிக்க அணியின் திமுதி வியா ஒரு கோல் அடித்தார். இதனால் முதல் பாதியில் அமெரிக்கா 1-0 என முன்னிலை வகித்தது.

    ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 82-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை வேல்ஸ் வீரர் பாலே அபாரமாக கோலாக மாற்றினார்.

    இறுதியில், இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 1-1 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது.

    • முதல் பாதி முடிவில் 1-0 என அர்ஜென்டினா முன்னிலை வகித்தது.
    • அர்ஜென்டினாவுக்காக 4 உலக கோப்பை தொடரிலும் கோல் அடித்து மெஸ்ஸி சாதனை.

    தோகா:

    22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இன்றைய ஆட்டம் ஒன்றில் அர்ஜென்டினா, சவுதி அரேபியா அணிகள் மோதின. ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய அர்ஜென்டினா அணிக்கு  10 வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதனை சரியாக பயன்படுத்தி அந்த அணி கேப்டன் மெஸ்ஸி கோல் அடித்தார். இதனால் முதல் பாதி முடிவில் 1-0 என அர்ஜென்டினா முன்னிலை வகித்தது.

    எனினும் 2வது பாதியில் சவுதி அரேபிய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 48 வது நிமிடத்தில் அந்த அணி வீரர் சலே அல் ஷெஹ்ரியும், 53 நிமிடத்தில் சலம் அல் தவ்சாரியும் அடுத்தடுத்து தங்கள் அணிக்காக கோல் அடித்தனர். இதை முறியடிக்க முயன்ற அர்ஜென்டினா வீரர்களின் முயற்சி தோல்வி அடைந்தது. இதையடுத்து 2-1 என்ற கோல்கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்திய சவுதி அரேபியா வெற்றி பெற்றது.

    இந்நிலையில் இந்த உலக கோப்பையில் முதலாவது கோலை பதிவு செய்ததன் மூலம் அந்த அர்ஜென்டினா அணிக்காக 4 உலக கோப்பை தொடர்களில் கோல் அடித்த வீரர் என்ற சாதனையை மெஸ்ஸி படைத்துள்ளார்.

    • பலம் வாய்ந்த அர்ஜென்டினாவை வீழ்த்திய முதல் ஆசிய அணி என்ற பெருமையை சவுதி அரேபியா பெற்றது.
    • அனைத்து அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கும் இன்று விடுமுறையாகும்.

    ரியாத்:

    ஆசிய கண்டத்தில் உள்ள அரபு நாடான சவுதி அரேபியா உலக கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டி னாவை அதிர்ச்சிகரமாக வீழ்த்தியது.

    பலம் வாய்ந்த அர்ஜென்டினாவை வீழ்த்திய முதல் ஆசிய அணி என்ற பெருமையை சவுதி அரேபியா பெற்றது. ஆசிய அணிகளின் 5-வது முயற்சியில் இது சாத்தியமாகி உள்ளது.

    36 ஆட்டங்களில் தோல்வியை சந்திக்காமல் வலம் வந்த அர்ஜென்டினாவின் வெற்றிக்கு சவுதி அரேபியா முட்டுக்கட்டை போட்டது. தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள அர்ஜென்டினாவை 51-வது வரிசையில் உள்ள சவுதி அரேபியா வீழ்த்தியது யாருமே எதிர்பார்க்காத ஒன்றாகும்.

    6-வது முறையாக உலக கோப்பையில் ஆடும் சவுதி அரேபியாவுக்கு கிடைத்த 4-வது வெற்றி இதுவாகும். இதற்கு முன்பு 1994-ல் மொராக் கோவை 2-1 என்ற கணக்கிலும், பெல்ஜியத்தை 1-0 என்ற கணக்கிலும், கடந்த உலக கோப்பை யில் எகிப்தை 2-1 என்ற கோல் கணக்கிலும் வீழ்த்தி இருந்தது.

    அர்ஜென்டினாவை வீழ்த்திய மகிழ்ச்சியை சவுதி அரேபிய மக்கள் கொண்டாடினார்கள். நாடு முழுவதும் வெற்றி கொண்டாட்டம் இருந்தது. தலைநகர் ரியாத் முழுவதும் ரசிகர்கள் வெற்றியை கொண்டாடினார்கள்.


    நடனமாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கார்களில் சென்றவர்கள் கதவுகளை திறந்து சவுதி அரேபியா கொடியை பறக்க விட்டு உற்சாகமாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அர்ஜென்டினாவுக்கு எதிராக பெற்ற இந்த வெற்றி காரணமாக சவுதி அரேபியாவுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது. சவுதி அரேபிய மன்னர் சல்மான் இதை நேற்று தெரிவித்தார்.

    அனைத்து அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கும் இன்று விடுமுறையாகும். மேலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இறுதி தேர்வு நடைபெற்று கொண்டு இருக்கும் நிலையில் பள்ளிகள் இன்று மூடப்பட்டு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. வேறு தேதியில் பள்ளி தேர்வு நடத்தப்படுகிறது.

    மேலும் பொதுபோக்கு மையங்களுக்கும் நேற்று நுழைவு கட்டணம் தள்ளுபடி செய்யப்பட்டது.

    • முதல் பாதியில் நெதர்லாந்து வீரர் ஒரு கோல் அடித்தார்.
    • 2வது பாதியில் ஈக்வடார் வீரர் கோல் அடித்து சமன் செய்தார்.

    கத்தாரில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் நேற்று இரவு 9.30 மணிக்கு தொடங்கிய குரூப்-ஏ லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து-ஈக்வடார் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் 6வது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் கோடி காக்போ கோல் அடித்து தமது அணியை முன்னிலை பெறச் செய்தார்.

    இதன் மூலம் முதல் பாதி ஆட்ட முடிவில் நெதர்லாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது. 2வது பாதி ஆட்டத்தில் பதில் கோடி அடிக்க ஈக்வடார் வீரர்கள் கடும் முயற்சியில் ஈடுபட்டனர். 49வது நிமிடத்தில் ஈக்வடார் வீரர் அன்னர் வலென்சியா ஒரு கோல் அடித்தார். இதையடுத்து இந்த போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. இதையடுத்து இரு அணிகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

    • ரோல்ஸ் ராய்ஸ் காரின் விலை ரூ.8.99 கோடி முதல் 10.48 கோடி வரையில் விற்கப்படுகிறது.
    • இது மாதிரியான விலை உயர்ந்த பரிசு வீரர்களுக்கு வழங்கப்படுவது இது முதல் முறையல்ல.

    ரியாத்:

    உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஆசிய கண்டத்தில் உள்ள சவுதி அரேபியா யாருமே எதிர் பார்க்காத வகையில் 2 முறை சாம்பியனான அர்ஜென்டினாவை அதிர்ச்சிகரமாக தோற்கடித்தது.

    2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இருந்தது. இந்த வெற்றியால் சவுதி அரேபியாவில் மகிழ்ச்சி அலைக் கடல் பொங்கியது. அந்நாட்டு மன்னர் மறுநாள் பொது விடுமுறை அறிவித்தார்.

    இந்த நிலையில் அர்ஜென்டினாவை வீழ்த்தி வரலாற்று வெற்றியை பெற்ற சவுதி அரேபிய கால்பந்து வீரர்கள் ஒவ்வொருவருக்கும் ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசாக வழங்கப்படும் என்று அந்நாட்டு இளவரசர் முகமது பின் சல்மான் அல் சவுத் அறிவித்துள்ளார்.

    இந்தியாவில் ரோல்ஸ் ராய்ஸ் காரின் விலை ரூ.8.99 கோடி முதல் 10.48 கோடி வரையில் விற்கப்படுகிறது. இது மாதிரியான விலை உயர்ந்த பரிசு வீரர்களுக்கு வழங்கப்படுவது இது முதல் முறையல்ல. 1994-ல் பெல்ஜியத்தை வீழ்த்திய போது இது மாதிரியே கார் பரிசு வழங்கப்பட்டது.

    சவுதி அரேபியா இன்றைய 2-வது போட்டியில் போலந்தை எதிர் கொள்ளும் இந்த ஆட்டத்திலும் வெற்றி பெற்றால் வீரர்கள் மேலும் பரிசு மழையில் நனைவார்கள். அந்த நாடும் கால்பந்து வீரர்களை வெகுவாக பாராட்டும்.

    • முதல் பாதிவரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.
    • மெஸ்சி முதல் கோல் அடித்து அணியை முன்னிலை பெற செய்தார்.

    கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் குரூப் சி பிரிவில் நடைபெற்ற போட்டியில் அர்ஜென்டினா அணி மெக்சிகோவை எதிர்கொண்டது. லுசைல் ஐகானிக் மைதானத்தில் நள்ளிரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதல் கோல் அடிக்க இரு அணிகளும் தீவிரம் காட்டிய போதும், முதல் பாதி வரை எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.

    இரண்டாவது பாதியின் 64 வது நிமிடத்தில் அர்ஜென்டினா கேப்டன் லியோனல் மெஸ்சி தமக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கோல் அடித்து அந்நாட்டு ரசிகர்களை மகிழ்வித்தார். தொடர்ந்து 87வது நிமிடத்தில் பெர்னான்டஸ் மேலும் ஒரு கோல் அடித்து அர்ஜென்டினாவின் வெற்றியை உறுதி செய்தார். கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்ட போதும் மெக்சிகோ அணியால் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. இறுதியில்  2-0 என்ற கோல் கணக்கில் தனது முதல் வெற்றியை அர்ஜென்டினா பதிவு செய்தது.

    • முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.
    • இரண்டாவது பாதியில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்தன.

    உலகக் கோப்பை கால்பந்து தொடரில் 'இ' பிரிவில் நேற்று நள்ளிரவு நடந்த ஆட்டத்தில் ஸ்பெயின் - ஜெர்மனி அணிகள் மோதின. ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கும் முயற்சிகள் தோல்வியடைந்தன. இரண்டாவது பாதி ஆட்டத்தின் 62-வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் அல்வாரோ மொராடா தனது அணிக்கான முதல் கோலை அடித்தார்.

    இதற்கு பதிலடியாக 83வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் நிக்லாஸ் புல்க்ரக் கோல் அடித்தார். தொடர்ந்து ஆட்ட நேரம் முடியும் வரை இரு அணிகளும் கோல் ஏதும் அடிக்கவில்லை. இதன்மூலம் 1-1 என்ற கணக்கில் ஆட்டம் டிரா ஆனது.

    போட்டியின் முடிவில் 'இ' பிரிவில் ஸ்பெயின் நான்கு புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. அந்த அணி அடுத்து சுற்றுக்கு முன்னேற ஜப்பானுக்கு எதிரான ஆட்டத்தில் டிரா செய்தால் போதும். ஜப்பானுக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் 2-1 என்ற கணக்கில் தோல்வியடைந்த ஜெர்மனி, ஒரு புள்ளியுடன் கடைசி இடத்தில் உள்ளது. 

    ×