search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Peru"

    • பெரு நாட்டில் மிகவும் பிரபலமான திரை நட்சத்திரம் தைனா ஃபீல்ட்ஸ்
    • 24-வது வயதில் மர்மமான முறையில் மரணம் அடைந்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    பெரு நாட்டைச் சேர்ந்த நடிகை தைனா ஃபீல்ட்ஸ். இவர் திரைத் துறையில் பாலியல் அத்துமீறல் நடப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அதில் அவர் சந்தித்த பிரச்சினைகள் குறித்தும், பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளானது குறித்தும் கூறியிருந்தார்.

    பொதுவாக, போர்னோ திரைத் துறைக்குப் பின்னால் நடிகைகள் அனுபவிக்கும் பாலியல் சித்திரவதைகள் பெரும்பாலும் வெளியே தெரிவதில்லை. அதை அம்பலப்படுத்திய இவர், "என்னை அழைப்பவர்களில் பெரும்பாலானவர்கள், என்னை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என நினைப்பார்கள். இதையெல்லாம் கடந்து நான் வீட்டுக்குச் சென்றவுடன் குளித்துவிட்டு, மனமுடைந்து அழுவேன். பல சமயங்களில் எனக்கு அப்படி நடந்திருக்கிறது. இந்தச் சமூகத்தில் ஒரு பெண்ணாக வாழ்வது மிகவும் கஷ்டமானது. அதைவிட அடல்ட் கன்டென்ட் கிரியேட்டராக இந்தச் சமூகத்தில் வாழ்வது என்பது மிகக் கொடுமையானது''என வெளிப்படையாக பேசியது சர்வதேச அளவில் பேசுபொருளானது.

    இந்நிலையில், பெரு நாட்டின் ட்ரூஜில்லோ நகரில் உள்ள வீட்டில் நடிகை தைனா பீல்ட்ஸ் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தற்போது அவரது உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவரது மரணத்துக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நெய்மர் கோல் அடிக்க கூடாது என பெரு நாட்டில் உள்ள மாந்திரீகர்கள் சடங்குகள் செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
    • உலகக்கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் பெருவுக்கு எதிரான ஆட்டத்தில் பிரேசில் வெற்றி பெற்றுள்ளது.

    பிரேசிலியா:

    2026-ம் ஆண்டு நடைபெற உள்ள பிபா உலகக்கோப்பை கால்பந்துக்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பிரேசில் மற்றும் பெரு அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் பிரேசில் அணி 1-0 என்ற கோல் கணக்கில் பெருவை வீழ்த்தி வெற்றி பெற்றது. பிரேசில் வீரர் மார்கினோஸ் வெற்றிக்குரிய கோலை அடித்தார்.

    இந்த ஆட்டத்திற்கு முன்னதாக பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் கோல் அடிக்க கூடாது என பெரு நாட்டில் உள்ள மாந்திரீகர்கள் சடங்குகள் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    பெரு நாட்டு மாந்திரீகர்கள் தங்கள் நாட்டின் வெற்றிக்காக ஆசீர்வாதங்களைக் கோரி, சடங்குகள் செய்து பிரார்த்தனை செய்தனர். இதில் பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மர் ஆட்டத்தை மாற்றும் திறமை கொண்டவர் என்பதால் அவர் கோல் அடிப்பதைத் தடுக்க தனித்துவமான சடங்குகளைச் செய்தனர்.

    நெய்மர் படத்தின் மீது பழுப்பு நிற துணியை போர்த்தி, அவரது இடது காலை கட்டி, வலது காலின் மேல் ஒரு வாளை வைத்து வழிபாடு செய்தனர். எனினும்,பெருவுக்கு எதிரான இந்த ஆட்டத்தில் நெய்மர் கோல் அடிக்கவில்லை என்றாலும் பிரேசில் வெற்றி பெற்றுள்ளது.

    நெய்மர் படத்தை வைத்து சடங்குகள் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



    • பெரு நாட்டின் மக்கா பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அதிர்ச்சி.
    • பூமிக்கு அடியில் சுமார் பத்து கிலோமீட்டர் ஆழத்தில் நில அதிர்வு ஏற்பட்டதாக தகவல்.

    பெரு நாட்டின் சான் ஃபெர்ணான்டோவில் இருந்து 36 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மக்கா பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவு கோலில் இந்த நிலநடுக்கம் 5.3 ஆக பதிவாகி இருக்கிறது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

    இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் சுமார் பத்து கிலோமீட்டர்கள் ஆழத்தில் ஏற்பட்டதாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. 

    • அவள் என் அறையில் இருக்கிறாள், அவள் என்னுடன் தூங்குகிறாள்.
    • போலீசார் அவரது வீட்டில் ஒரு பைக்குள் இருந்த 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த மம்மியை பறிமுதல் செய்துள்ளனர்.

    பெரு நாட்டில் மத்திய கடற்கரை பகுதியான லிமா பகுதியில் பல நூறு ஆண்டுகள் பழமைவாய்ந்த மம்மிகள் குறித்து அகழ்வாராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் அங்குள்ள புனோ பகுதியை சேர்ந்த ஜூலியோ சிசர் பெர்மேஜா என்ற 26 வயதான வாலிபர் வீட்டில் மம்மி ஒன்று பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அவரது வீட்டில் ஒரு பைக்குள் இருந்த 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த மம்மியை பறிமுதல் செய்துள்ளனர்.

    இதுகுறித்து ஜூலியோ சிசர் பெர்மேஜாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் அந்த மம்மியை 'ஜூவானிட்டா' என்று பெயர் சொல்லி அழைத்தார். மேலும் ஜூவானிட்டா எனது ஆன்மீக காதலி போன்றவர் என கூறிய அவர், அவள் என் அறையில் இருக்கிறாள், அவள் என்னுடன் தூங்குகிறாள். நான் அவளை கவனித்து கொள்கிறேன் என்றார்.

    மேலும், 30 ஆண்டுகளுக்கு முன்பு தனது தந்தை இந்த மம்மியை வீட்டுக்கு கொண்டு வந்ததாகவும் ஜூலியோ சிசர் பெர்மேஜா கூறினார். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தென்னமெரிக்கா கண்டத்தில் அமைந்துள்ள பெரு நாட்டை இன்று 8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது.
    லிமா:

    தென்னமெரிக்கா கண்டத்தில் அழகிய அமேசான் காடுகள் மற்றும் கண்ணை கவரும் மச்சு பிச்சு மலைத்தொடர்கள் என இயற்கை எழில்சூழ அமைந்துள்ள பெரு நாட்டில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது.

    உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1.11 மணியளவில் அல்ட்டோ அமேசானஸ் மாகாணத்தின் லகுனாஸ் மாவட்டத்தின் தென்கிழக்கே சுமார் 83 கிலோமீட்டர் தூரத்தில் பூமியின் அடியில் சுமார் 105 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கடுக்கத்தின் தாக்கத்தை 8 ரிக்டர்களாக  அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் மதிப்பீடு செய்துள்ளது.



    இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் அருகாமையில் உள்ள பிரேசில், கொலம்பியா மற்றும் ஈக்குவேடார் ஆகிய நாடுகளிலும் உணரப்பட்டதாக செய்திகள் கிடைத்துள்ளன. இன்றைய நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான உடனடி தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. 
    தென்னமெரிக்கா கண்டத்தில் உள்ள இயற்கை எழில் சூழ்ந்த பெரு நாட்டின் புதிய பிரதமராக பிரபல நடிகரும், திரைப்பட இயக்குனருமான சால்வடார் டெல் சோலார் பதவியேற்றார். #SalvadordelSolar #Peruprimeminister
    லிமா:

    தென்னமெரிக்கா கண்டத்தில் அமைந்துள்ள அழகிய நாடுகளில் ஒன்றான பெரு, அமேசான் மழைக்காடுகள் மற்றும் பசுமை நிறைந்த மச்சுபிச்சு மலைத்தொடர்களால் சுற்றுலாவாசிகளின் சொர்க்கப்புரியாக தோற்றமளிக்கிறது. பெரு நாட்டின் அதிபராக மார்ட்டின் விஸ்காரா பதவி வகித்து வருகிறார். 

    கடந்த 2016-ம் ஆண்டில் பெரு நாட்டு பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் அதிகமான எம்.பி.க்களின் ஆதரவை பெற்ற சீசர் வில்லனுயேவா பிரதமராக பதவியேற்றார். 

    இவரது மந்திரிசபையில் கலாச்சாரத்துறை மந்திரியாக பதவி வகித்த சால்வடார் டெல் சோலார், மனித உரிமை மீறலில் ஈடுபட்ட முன்னாள் அதிபர் ஆல்பர்ட்டோ பியூஜிமோரி-க்கு பொது மன்னிப்பு அளிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனது பதவியை 2017-ம் ஆண்டில் ராஜினாமா செய்தார். 
     


    பெரு நாட்டின் பிரபல வழக்கறிஞரும், நடிகரும் திரைப்பட இயக்குனருமான சால்வடார் டெல் சோலாரின் கோரிக்கைக்கு ஏற்ப முன்னாள் அதிபருக்கு அளிக்கப்பட்ட பொதுமன்னிப்பு ரத்து செய்யப்பட்டது.

    இதற்கிடையில், அந்நாட்டின் அதிபர் பதவிக்கு கடந்த 2018-ம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்ற மார்ட்டின் விஸ்காரா 23-3-2018 அன்று பதவியேற்றார். நாட்டில் அதிபர் மாற்றம் ஏற்பட்டதுடன் தனது பதவிக்காலத்தில் மனநிறைவு கொள்வதாக அறிவித்த பிரதமர் சீசர் வில்லனுயேவா கடந்த வாரம் ராஜினாமா செய்தார்.

    இதைதொடர்ந்து, பிரபல நடிகரும், திரைப்பட இயக்குனருமான சால்வடார் டெல் சோலார்(48) புதிய பிரதமராக நேற்று பதவியேற்றார். #SalvadordelSolar #Peruprimeminister
    பெருநாட்டில் ஓட்டலின் மீது மண் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் திருமண கோஷ்டியினர் 15 பேர் பலியானார்கள். #Peru #Mudslide #Hotel
    லீமா:

    தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பெருவின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள அப்ரிமாக் பிராந்தியத்தின் அன்டியன் நகரில் மலை அடிவாரத்தில் ஒரு ஓட்டல் அமைந்துள்ளது.

    இந்த ஓட்டலில் ஒரு திருமண நிகழ்ச்சிக்காக விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதையொட்டி மணமக்களின் உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டிருந்தனர்.

    அவர்கள் ஆடல், பாடலுடன் மகிழ்ச்சியில் திளைத்திருந்தனர். அப்போது சற்றும் எதிர்பாரத விதமாக அந்த பகுதியில் திடீர் மண் சரிவு ஏற்பட்டது. ஓட்டலின் மீது மண் சரிந்து விழுந்ததில் அதன் மேற்கூரை இடிந்து விழுந்தது. திருமண கோஷ்டியினர் இதில் சிக்கிக்கொண்டனர்.

    இதையடுத்து, அங்கு மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. எனினும் 15 பேரை பிணமாகத்தான் மீட்க முடிந்தது. படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 29 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். #Peru #Mudslide #Hotel 
    பெரு நாட்டில் பயணிகள் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது. #PeruAccident
    லிமா:

    பெரு நாட்டில் புனோ பகுதியில் டிடிகாகா ஏரி அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பயணிகள் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த பகுதியில் வந்த லாரி பேருந்து மீது வேகமாக மோதியது.

    இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் ஒரு குழந்தை மற்றும் 12 பெண்களும் அடங்குவர். மேலும் 39 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் போக்குவரத்தை சரிசெய்தனர். விபத்து தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டனர். பயணிகள் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 18 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #PeruAccident
    தென் அமெரிக்காவில் உள்ள பெரு நாட்டில் போதை மருந்து கடத்தலை தடுக்க 60 நாள் அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது. #Drugsmuggling

    லிமா:

    தென் அமெரிக்காவில் உள்ள பெரு நாட்டில் போதை பொருள் கடத்தல் அதிகரித்துள்ளது. அண்டை நாடான கொலம்பியாவில் இருந்து பலர் எல்லை தாண்டி இங்கு நுழைகின்றனர். அவர்கள் மூலம் இவை கடத்தப்படுவதால் நாட்டில் பெரிய அளவில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

    நாட்டின் பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே அதை தடுக்க பெரு நாட்டில் கொலம்பியா எல்லையில் புதுமேயோ பகுதியில் உள்ள அமேஷோனியன் மாகாணத்தில் அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது 60 நாட்கள் அமலில் இருக்கும். அதற்கான உத்தரவை பெரு நாட்டின் அதிபர் மார்டின் விஷ்காரா பிறப்பித்துள்ளார். அதை தொடர்ந்து எல்லையில் போதை பொருள் கடத்தல் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    ராணுவ வீரர்கள் உதவியுடன் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு கொலம்பியாவின் ராணுவமும், போலீசும் உதவி வருகிறது. போதை பொருள் கடத்தல்காரர்கள் ஊடுருவலை கண்காணிக்க 5 ஹெலிகாப்டர்கள், 3 விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

    அவர்கள் போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 50 பேரை கைது செய்தனர். அவர்களில் பெரும்பாலானோர் கொலம்பியாவை சேர்ந்தவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. #Drugsmuggling

    உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ‘சி’ பிரிவில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டென்மார்க் அணி 1-0 என்ற கோல் கணக்கில் பெரு அணியை வீழ்த்தியது. #FIFA2018 #WolrdCup2018 #PERDEN

    உலக கோப்பை கால்பந்து போட்டியில் மாலை 9.30 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் ‘சி’ பிரிவில் இடம்பிடித்துள்ள டென்மார்க், பெரு அணிகள் மோதின. பெரு அணி 36 ஆண்டுகளுக்கு பின் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் களமிறங்கியுள்ளது. இதனால் அந்த அணியின் ரசிகர்கள் அதிக அளவில் மைதானத்துக்கு வந்திருந்தனர்.

    முதல் பாதிநேர ஆட்டத்தில் இரு அணியினரும் எந்த கோலும் அடிக்காததால் ஆட்டம் 0-0 என சமனில் இருந்தது. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தின் 59-வது நிமிடம் டென்மார்க் அணியின் யூசுப் யுராரி கோல் அடித்தார். இதனால் டென்மார்க் அணி 1-0 என முன்னிலை பெற்றது.



    இதையடுத்து, ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இறுதியில், டென்மார்க் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

    அடுத்ததாக நடைபெற உள்ள இன்றைய நான்காவது ஆட்டத்தில் குரோசியா - நைஜீரியா அணிகள் பலப்பரிட்சை செய்கின்றன. #FIFA2018 #WolrdCup2018 #PERDEN
    பெரு நாட்டின் திருஜிலோ என்ற நகரில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் பலிகொடுக்கப்பட்ட 56 குழந்தைகளின் எலும்புகூடுகளை கண்டறிந்துள்ளனர். #Perumasschildsacrifice #masschildsacrifice
     
    லிமா:

    தென் அமெரிக்க நாடான பெரு நாட்டில், கடந்த ஏப்ரல் மாதம் தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் 140 குழந்தைகள் நரபலி கொடுக்கப்பட்டதையும், அவர்களது உடல்கள் புதைக்கப்பட்டு இருந்ததையும் கண்டுபிடித்தனர்.

    பெரு நாட்டின் வட பகுதியில் அமைந்து உள்ள கடலோரப் பகுதியில் இந்த குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. நரபலி கொடுக்கப்பட்ட குழந்தைகள், 5-14 வயதுக்கு இடைப்பட்டவர்கள். இவர்கள் 550 ஆண்டுகளுக்கு முன்பு நரபலி கொடுக்கப்பட்டு இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.

    முற்கால சிமு பேரரசு காலத்தில் இந்த சம்பவம் நடந்து இருக்க வேண்டும் என்றும் தகவல்கள் கூறுகின்றன. ஒரே நேரத்தில் இத்தனை பேர் நரபலி கொடுக்கப்பட்டு இருப்பது வரலாற்றில் இதுவே முதல் முறையாக இருக்கும் என கூறப்பட்டது. 



    இந்நிலையில், அந்த இடத்திற்கு அருகில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் மேலும் 56 குழந்தைகள் மற்றுமின்றி 200 ஓட்டக இன மிருகங்கள் பலி கொடுக்கபட்டு புதைக்கபட்டு இருந்தது தெரியவந்துள்ளது. அந்த சமயத்தில், அந்த பகுதியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 
     
    இந்த வெள்ளபெருக்கால், அந்த ஊரே அழியும் நிலை ஏற்பட்டது. இதனால் வெள்ளப்பெருக்கை தடுக்க கடவுள் நம்பிக்கை என்ற பெயரில், குழந்தைகள் பலி கொடுக்கப்பட்டு கடல் இருக்கும் திசை அருகில் மண்ணில் புதைப்பட்டுள்ளனர். அதோடு 200 ஓட்டக இன மிருகங்களும் புதைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. கொல்லப்பட்ட குழந்தைகளின் வயது 6-ல் இருந்து 14 வரை இருக்கும் என தெரியவந்துள்ளது. இந்த சமபவ அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #Perumasschildsacrifice #masschildsacrifice
    பெரு நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மகாத்மா காந்தி சிலைக்கு அஞ்சலி செலுத்தினார். #VenkaiahNaidu #VicePresidentofIndia #Peru
    லிமா:

    துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின்னர் வெங்கையா நாயுடு முதல் முறையாக கவுதமாலா, பனாமா, பெரு ஆகிய மூன்று வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார்.

    முதல் கட்டமாக கவுதமாலா நாட்டுக்கு சென்ற நாயுடு, கவுதமாலா ஜனாதிபதி ஜிம்மி மொரலெஸ், துணை ஜனாதிபதி ஜாபத் கேப்ரெரா மற்றும் பாராளுமன்ற சபாநாயகர் அல்வரோ அர்சு எஸ்கோபார் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அதைத்தொடர்ந்து, இரண்டாவது கட்டமாக பனாமா நாட்டுக்கு சென்ற வெங்கையா நாயுடு, பனாமா ஜனாதிபதி ஜுவான் கார்லோஸ் வரேலா, துணை ஜனாதிபதி மற்றும் வெளியுறவு மந்திரி இசபெல் செயிண்ட் மாலோ ஆகியோரை சந்தித்தார். அப்போது பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.



    இந்நிலையில், துணை ஜனாதிபதி மூன்றாவது கட்ட பயணமாக பெரு நாட்டுக்கு சென்றார். தலைநகர் லிமாவில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு அஞ்சலி செலுத்தினார். அதன்பின்னர், அங்குள்ள தேசிய அருங்காட்சியகத்துக்கு சென்று சுற்றிப் பார்த்தார். #VenkaiahNaidu #VicePresidentofIndia #Peru
    ×