search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mudslide"

    • சேலம் மாவட்டத்தில் நேற்று இரவு பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.
    • பொக்லைன் உதவியுடன் மண் சரிவு சரி செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டத்தில் நேற்று இரவு பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. விடிய விடிய பலத்தமழை கொட்டி தீர்த்தது. அவ்வப்போது இடி மின்னலுடன் சூறைக்காற்றும் வீசியதால் பல இடங்களில் மரங்கள் சாய்ந்தன.

    சேலம் மாவட்டம் ஏற்காட்டிலும் கன மழை பெய்தது. கனமழையினால் ஏற்காடு பகுதியில் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. சில இடங்களில் மின் கம்பிகளும் சேதம் அடைந்தன. இதனிடையே ஏற்காட்டுக்கு செல்லும் குப்பனூர் மலைச்சாலையில் திடீரென மண் சரிவு ஏற்பட்டது.

    ஏற்காட்டில் இருந்து கொட்டசேடு வழியாக சேலம் செல்லும் சாலையில் ஆத்துபாலம் என்ற இடத்தில் மன்சரிவு ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து அந்த வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மண் சரிவை சீரமைக்கும் படியில் ஈடுபட்டு வருகின்றனர். பொக்லைன் உதவியுடன் மண் சரிவு சரி செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    மேலும் மழையினால் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க ஏற்காடு மலைச்சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஊழியர்கள் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.

    பெருநாட்டில் ஓட்டலின் மீது மண் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் திருமண கோஷ்டியினர் 15 பேர் பலியானார்கள். #Peru #Mudslide #Hotel
    லீமா:

    தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பெருவின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள அப்ரிமாக் பிராந்தியத்தின் அன்டியன் நகரில் மலை அடிவாரத்தில் ஒரு ஓட்டல் அமைந்துள்ளது.

    இந்த ஓட்டலில் ஒரு திருமண நிகழ்ச்சிக்காக விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதையொட்டி மணமக்களின் உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டிருந்தனர்.

    அவர்கள் ஆடல், பாடலுடன் மகிழ்ச்சியில் திளைத்திருந்தனர். அப்போது சற்றும் எதிர்பாரத விதமாக அந்த பகுதியில் திடீர் மண் சரிவு ஏற்பட்டது. ஓட்டலின் மீது மண் சரிந்து விழுந்ததில் அதன் மேற்கூரை இடிந்து விழுந்தது. திருமண கோஷ்டியினர் இதில் சிக்கிக்கொண்டனர்.

    இதையடுத்து, அங்கு மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. எனினும் 15 பேரை பிணமாகத்தான் மீட்க முடிந்தது. படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 29 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். #Peru #Mudslide #Hotel 
    உகாண்டா நாட்டில் பெய்து வரும் கனமழையால் அங்கு ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் சிக்கி இதுவரை 34 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #UgandaMudslides
    கம்பாலா: 

    உகாண்டா நாட்டில் தற்போது கனமழை பெய்து வருகிறது. உகாண்டாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள புடுடா மாவட்டத்தில் பலத்த மழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    கனமழையை தொடர்ந்து அங்கு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 34 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர்.



    மேலும், வெள்ளப் பெருக்கால் அங்குள்ள மூன்றுக்கு மேம்பட்ட கிராமங்கள் முழுவதும் மூழ்கியுள்ளன. அங்குள்ள வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளன.

    இதுதொடர்பாக மீட்புக்குழு அதிகாரிகள் கூறுகையில், நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் பலர் புதைந்துள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும். ஆற்றங்கரையோரம் உள்ள மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர் என மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர். #UgandaMudslides
    திருவண்ணாமலை அருகே கிணறு தூர்வாரும்போது மண் சரிந்து விழுந்ததில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் பொலக்குணம் கிராமத்தில் கிணறு தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இன்று பிற்பகல் வழக்கம்போல் தொழிலாளர்கள் கிணற்றுக்குள் இறங்கி மண்ணை அள்ளி வெளியேற்றிக்கொண்டிருந்தனர். அப்போது கிணற்றின் ஒரு கரையில் இருந்து திடீரென மண் சரிந்து விழுந்து தொழிலாளர்களை அமுக்கியது.

    இதில் 3 தொழிலாளர்கள் மண்ணில் புதைந்து உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. #TNMudslide

    ×