search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "buried"

    இங்கிலாந்தில் புற்றுநோயால் மரணம் அடைந்த தலைமை ஆசிரியை இறுதிச்சடங்கில், மாணவர்கள் தீட்டிய ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்ட சவப்பெட்டியில் தலைமை ஆசிரியை உடல் அடக்கம் செய்யப்பட்டது. #SueEast #Cancer #SchoolHeadteacher
    லண்டன்:

    இங்கிலாந்து நாட்டில் பாத் என்ற இடத்தில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வந்தவர் சூ ஈஸ்ட் (வயது 58). இவர் மாணவ, மாணவிகளுக்கு அவர்கள் விரும்பும் பாணியில் பாடங்கள் கற்றுத்தந்து அவர்களின் அன்பை அமோகமாக பெற்றார்.

    இந்த நிலையில் சற்றும் எதிர்பாராத நிலையில் அவரைப் புற்றுநோய் தாக்கியது. அதிலிருந்து மீள்வதற்கு அவர் போராடினார். ஆனால் அந்தப் போராட்டம் வெற்றி பெறவில்லை.



    உயிருக்காக போராடியபோது அவர் தனது மாணவ, மாணவிகளுக்கு நெஞ்சை உருக்கும் கடிதம் ஒன்றை எழுதினார். அந்தக் கடிதத்தில் அவர், தான் புற்றுநோயால் அவதியுற்று வருவதையும், தான் விரைவில் மரணம் அடையப்போவதையும் வேதனையுடன் தெரிவித்திருந்தார்.

    1952-ம் ஆண்டு சி.எஸ். லெவிஸ் எழுதி வெளியான ‘தி வாயேஜ் ஆப் தி டான் ட்ரீடர்’ நாவலில் குறிப்பிட்டிருந்தபடி, “மரணம் என்பது ஒரு சிறிய சுற்றுப்படகில் அடிவானத்தில் பயணம் செய்வதற்கு சமமானது” என சுட்டிக்காட்டி இருந்தார்.



    இந்த நிலையில் அவர் கடந்த சில தினங்களுக்கு முன் மரணம் அடைந்தார். அவரது இறுதிச்சடங்கில் அவரிடம் படித்த, படித்துக்கொண்டிருந்த சுமார் 700 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

    அத்துடன் தங்களுக்கு பிரியமான ஆசிரியை நிரந்தரமாக ஓய்வு எடுப்பதற்கான சவப்பெட்டியின் மீது அலங்கரிப்பதற்கு அவர்கள் வண்ண ஓவியங்களை தீட்டி, அந்த தாள்களை எடுத்து வந்திருந்தனர். அந்த தாள்கள், சவப்பெட்டியின் மீது ஒட்டி அலங்கரிக்கப்பட்டன.

    அதைத் தொடர்ந்து தேவாலயத்தில் பிரார்த்தனையும், உடல் நல்லடக்கமும் நடந்தது. அதில் மாணவ, மாணவிகள், சக ஆசிரியைகள் பெருந்திரளாக வந்து கலந்து கொண்டனர். #SueEast #Cancer #SchoolHeadteacher
    இடுக்கி அருகே, கனமழையால் வீடுகளை இழந்து நிவாரண முகாமில் தங்கியிருந்தபோது இறந்த இந்து மதத்தை சேர்ந்த முதியவரின் உடல் கிறிஸ்தவ ஆலய வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. #KeralaFlood
    இடுக்கி:

    இடுக்கி அருகே, கனமழையால் வீடுகளை இழந்து நிவாரண முகாமில் தங்கியிருந்தபோது இறந்த இந்து மதத்தை சேர்ந்த முதியவரின் உடல் கிறிஸ்தவ ஆலய வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. மதங்களை கடந்து மனிதநேயம் மலர்ந்த இந்த சம்பவம் அந்த பகுதியினரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    கேரள மாநிலத்தில் சில வாரங்களாக வரலாறு காணாத அளவிற்கு கனமழை பெய்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தால் ஏராளமானோர் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.



    அந்த வகையில் இடுக்கி மாவட்டம் சித்திராபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமிலும் ஏராளமானோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த முகாமில் தங்கியிருந்த மூணாறு அருகே 2-ம் மைல் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் (வயது 65) என்பவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இறந்தார். இவர் இந்து மதத்தை சேர்ந்தவர் ஆவார். மழைவெள்ளம் காரணமாக அவரது உடலை புதைக்க இடம் கிடைக்காமல் அவருடைய உறவினர்கள் தவித்தனர்.

    இந்தநிலையில் நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை பார்ப்பதற்காக கிறிஸ்தவ தேவாலய பாதிரியார் ஷின்டோ என்பவர் வந்தார்.

    அப்போது சுப்பிரமணியனுக்கு இறுதி சடங்கு நடத்தவும், உடலை அடக்கம் செய்யவும் நடவடிக்கை எடுக்குமாறு உறவினர்கள் அவரிடம் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து ஷின்டோ விஜயபுரம் கிறிஸ்தவ ஆலய உயர் குழுவிடம் தெரிவித்தார். இதையொட்டி சுப்பிரமணியனின் உடலை இறுதி சடங்கு செய்து அந்த ஆலய வளாகத்தில் புதைக்க இடம் ஒதுக்க அனுமதி கிடைத்தது.

    இதையடுத்து சுப்பிரமணியனின் உடல் கிறிஸ்தவ ஆலயத்துக்கு கொண்டு செல்லப்பட்டு இறுதி சடங்குகள் நடந்தது. பின்னர் ஆலய வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இந்து மதத்தை சேர்ந்த சுப்பிரமணியனுக்கு கிறிஸ்தவ ஆலயத்தில் இறுதி சடங்கு நடத்தி அங்கேயே உடல் அடக்கம் செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியினரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  #KeralaFlood #Tamilnews 
    திருவண்ணாமலை அருகே கிணறு தூர்வாரும்போது மண் சரிந்து விழுந்ததில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் பொலக்குணம் கிராமத்தில் கிணறு தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இன்று பிற்பகல் வழக்கம்போல் தொழிலாளர்கள் கிணற்றுக்குள் இறங்கி மண்ணை அள்ளி வெளியேற்றிக்கொண்டிருந்தனர். அப்போது கிணற்றின் ஒரு கரையில் இருந்து திடீரென மண் சரிந்து விழுந்து தொழிலாளர்களை அமுக்கியது.

    இதில் 3 தொழிலாளர்கள் மண்ணில் புதைந்து உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. #TNMudslide

    ×