என் மலர்
நீங்கள் தேடியது "Uganda"
- தீப்பிடித்தபோது அந்த விடுதியில் 21 மாணவிகள் தூங்கிக் கொண்டிருந்தனர்.
- உயிரிழந்த மாணவிகளின் அடையாளம் கண்டறிய டி.என்.ஏ. சோதனை நடத்த முடிவு.
முக்கோனோ:
உகாண்டா நாட்டின் தலைநகர் கம்பாலாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள முக்கோனோ மாவட்டத்தில் பார்வையற்ற மாணவ,மாணவிகளுக்காக தங்கும் விடுதியுடன் கூடிய பள்ளி செயல்பட்டு வருகிறது. செவ்வாய்கிழமை அதிகாலை இங்குள்ள மாணவியர் விடுதியில் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அந்த விடுதியில் 21 மாணவிகள் தங்கியிருந்ததாக மாவட்ட பாதுகாப்பு தலைவர் பாத்திமா இன்டிபசா தெரிவித்துள்ளார்.
தீயில் சிக்கி 11 மாணவிகள் உயிரிழந்து விட்டதாகவும், 6 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 3 பேர் மட்டுமே உயிர் தப்பியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். உயிரிழந்த பார்வையற்ற மாணவிகள் அடையாளம் காண முடியாத அளவுக்கு தீயில் எரிந்து விட்டதாகவும், அவர்களை அடையாளம் கண்டறிய டி.என்.ஏ. சோதனை நடத்த உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தீ விபத்து நடந்த போது பள்ளி தலைமை ஆசிரியர் பிரான்சிஸ் கிருபே, மாணவிகளின் விடுதிக்கு அடுத்த அறையில் தூங்கிக் கொண்டிருந்தார். அந்த விடுதியில் ஜன்னல்கள் திறக்க முடியாத அளவிற்கு வலுவாக அமைக்கப்பட்டிருந்தததாக இதனால் மாணவிகள் தீயில் இருந்து தப்பிக்க முடியாமல் உயிரிழந்ததாக அமைச்சர் ஹெலன் கிரேஸ் அசாமோ தெரிவித்துள்ளார்.





மேலும், ராணுவ ஒத்துழைப்பு, விசா நீட்டிப்பு, கலாசார பரிவர்த்தனை தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் ஏற்படுத்தப்பட்டன.

உகாண்டா பாராளுமன்றத்தில் சிறப்புரையாற்றும் மோடிக்கு எண்ட்டெபி நகரில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் மோடிக்கு உகாண்டா அதிபர் யோவேரி முசெவேனி விருந்து அளிக்கிறார். உகாண்டாவில் இருந்து விடைபெற்று செல்லும் மோடி நாளை ஜோகனஸ்பர்க் நகரில் நடைபெறும் ‘பிரிக்ஸ்’ உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். #IndiatogiftUganda #ModiinUganda
தென்னாப்பிரிக்கா தலைநகர் ஜோகனஸ்பர்க் நகரில் நாளை நடைபெறும் ‘பிரிக்ஸ்’ உச்சி மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் நரேந்திர மோடி, முன்னதாக ருவாண்டா நாட்டில் நேற்றும், இன்றும் சுற்றுப்பயணம் செய்தார். ருவாண்டா பயணத்தை நிறைவுசெய்த மோடி இன்று மாலை உகாண்டா வந்தடைந்தார்.
உகாண்டா நாட்டின் மத்திய பகுதியில் உள்ள கடற்கரை நகரமான எண்ட்டெபே நகர விமான நிலையத்தில் உகாண்டா அதிபர் யோவேரி முசெவேனி தலைமையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு முப்படையினர் அணிவகுப்புடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
எண்ட்டேபி நகரில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் மோடிக்கு உகாண்டா அதிபர் யோவேரி முசெவேனி விருந்து அளிக்கிறார். உகாண்டா பாராளுமன்றத்தில் சிறப்புரையாற்றும் மோடி முன்னிலையில் இந்தியா - உகாண்டா இடையில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையொப்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. #Modiinuganda
