search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Uganda"

    • டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • 4 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்தி டிம் சவுதி ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

    டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று காலை நடைபெற்ற 32-வது லீக் போட்டியில் பலம் வாய்ந்த நியூசிலாந்து அணியை உகாண்டா அணி எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களமிறங்கிய உகாண்டா அணி நியூசிலாந்து பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 18.4 ஓவர்களில் 40 ரன்களுக்கு ஆள் அவுட்டானது. உகாண்டா அணியில் 4 வீரர்கள் டக் அவுட்டும் அதில் 3 பேர் கோல்டன் டக் அவுட்டும் ஆனார்கள்.

    41 ரன்கள் என்ற எளிய இலக்கை துரத்திய நியூசிலாந்து ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 5.1 ஓவர்களில் இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது.

    4 ஓவர்கள் பந்துவீசி வெறும் 4 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்திய டிம் சவுதி ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். 

    உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறிய நிலையில், இத்தொடரின் தனது முதல் வெற்றியை நியூசிலாந்து அணி இன்று பதிவு செய்துள்ளது

    • 9-வது லீக் ஆட்டத்தில் சி பிரிவில் உள்ள உகாண்டா-பப்புவா நியூ கினியா அணிகள் மோதின.
    • 7 விக்கெட் இழப்புக்கு 78 ரன் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.

    கயானா:

    9-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் கயானாவில் இன்று நடந்த 9-வது லீக் ஆட்டத்தில் சி பிரிவில் உள்ள உகாண்டா-பப்புவா நியூ கினியா அணிகள் மோதின.

    டாஸ் வென்ற உகாண்டா கேப்டன் பிரையன் மசாபா பந்து வீச்சை தேர்வு செய்தார். உகாண்டா வீரர்களின் அபாரமான பந்துவீச்சால் பப்புவா நியூ கினியா அணி 19.1 ஓவரில் 77 ரன்னில் சுருண்டது.

    அல்பேஷ் ராம்ஜானி, காஸ்மாஸ் , ஜூமா மியாகி, பிராங்க் நசுபுகா தலா 2 விக்கெட் வீழ்த்தினார்கள்.

    பின்னர் விளையாடிய உகாண்டா அணி 78 ரன் இலக்கை 7 விக்கெட்டை இழந்து தான் எடுத்தது. அந்த அணி 18.2 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 78 ரன் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ரியாசத் அலி 33 ரன் எடுத்தார். அலைனோ, நார்மன் தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள்.

    20 ஓவர் உலக கோப்பையில் உகாண்டாவுக்கு கிடைத்த முதல் வெற்றியாகும். அந்த அணி முதல் போட்டியில் ஆப்கானிஸ்தானிடம் 125 ரன் வித்தியாசத்தில் தோற்று இருந்தது.

    உகாண்டா 3-வது போட்டியில் வெஸ்ட் இண்டீசை 9-ந் தேதி எதிர்கொள்கிறது.

    பப்புவா நியூகினியாவுக்கு தொடர்ந்து 2-வது தோல்வி ஏற்பட்டது. முதல் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசிடம் 5 விக்கெட்டில் தோற்று இருந்தது. 3-வது போட்டியில் ஆப்கானிஸ்தானை 14-ந் தேதி சந்திக்கிறது.

    • டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்று வரும் 5-வது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - உகாண்டா அணிகள் விளையாடியது.
    • இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற உகாண்டா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்று வரும் 5-வது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - உகாண்டா அணிகள் விளையாடியது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற உகாண்டா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். அதிரடியாக விளையாடிய தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன குர்பாஸ் 76 ரன்களிலும், இப்ராஹிம் சத்ரான் 70 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதன்பின் களமிறங்கிய வீரர்களில் யாரும் பெரிய அளவில் ரன்களை குவிக்கவில்லை.

    இதன் மூலம் 20 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் 5 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக குர்பாஸ் 76 ரன்கள் குவித்தார். உகாண்டா தரப்பில் அதிகபட்சமாக காஸ்மாஸ் கியூட்டா மற்றும் மாசாபா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

    இதனையடுத்து 184 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற வலுவான இலக்குடன் களமிறங்கிய உகாண்டா 16 ஓவர்களில் 58 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனால் ஆப்கானிஸ்தான் 125 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.



    • அக்டோபர் 7-ஆம் தேதி தொடங்கிய காசா - இஸ்ரேல் போர் தற்போது வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
    • போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணம் அளிக்கும் வகையில், நிலையான தீர்வு தேவைப்படுகிறது.

    இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் உகாண்டா தலைநகர் கம்பாலாவில் நடைபெற்ற 19வது அணிசேரா நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்துகொண்டார்.

    அப்போது அவர் கூறியதாவது, "அக்டோபர் 7-ஆம் தேதி தொடங்கிய காசா - இஸ்ரேல் போர் தற்போது வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. காசாவில் தற்போது நிலவிவரும், மோதல்களைப் பற்றி நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. இந்த போரால் மிகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணம் அளிக்கும் வகையில், நிலையான தீர்வு தேவைப்படுகிறது. பயங்கரவாதத்தையும், பணயக்கைதிகளை பிடித்து வைத்திருப்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது" என்றார்.

    மேலும், அனைத்து நாடுகளும் சர்வதேச மனிதாபிமான சட்டத்தை மதிக்க வேண்டும். பாலஸ்தீன மக்கள் பாதுகாப்பான எல்லைக்குள் வாழவேண்டும். அதே வேளையில், இரு நாடுகளிலும் அமைதி நிலவுவதற்கான தீர்வை நாம் தேட வேண்டும். நமது கூட்டு முயற்சியின் மூலம் சுமூகமான தீர்வு எட்ட வேண்டும்" எனக் கூறினார்.

    • 9-வது டி20 உலகக்கோப்பை தொடர் அடுத்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது.
    • ஜிம்பாப்வே அணி உலகக் கோப்பைக்கு தகுதி பெறாமல் வெளியேறியது.

    9-வது டி20 உலகக்கோப்பை தொடர் அடுத்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. இந்த உலகக்கோப்பை தொடரில் மொத்தம் 20 அணிகள் கலந்து கொள்ள உள்ளன.

    அதில் போட்டியை நடத்தும் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் நேரடியாகவும், 2022 டி20 உலகக்கோப்பையில் முதல் எட்டு இடங்களை பிடித்த ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நெதர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகளும், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகள் டி20 தரவரிசை அடிப்படையிலும் உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற்றுள்ளன.

    மீதமுள்ள 8 அணிகள் தகுதி சுற்று அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. அதனடிப்படையில் ஆப்பிரிக்கா பிராந்திய தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

    தகுதி சுற்று அடிப்படையில் இதுவரை 7 அணிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அவை அயர்லாந்து, ஸ்காட்லாந்து, பப்புவா நியூ கினியா, கனடா, நேபாளம், ஓமன், நமீபியா ஆகிய நாடுகள் ஆகும். மீதமுள்ள 1 இடத்திற்கு ஜிம்பாப்வே, உகாண்டா, கென்யா அணிகளுக்கு இடையே போட்டி நிலவியது.


    இந்நிலையில் உகாண்டா அணி டி20 உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளது. ஜிம்பாப்வே அணி உலகக் கோப்பைக்கு தகுதி பெறாமல் வெளியேறியது. இதன் மூலம் உகாண்டா அணி முதல் முறையாக ஐசிசி தொடர்களில் தகுதி பெற்றுள்ளது. 

    • தீப்பிடித்தபோது அந்த விடுதியில் 21 மாணவிகள் தூங்கிக் கொண்டிருந்தனர்.
    • உயிரிழந்த மாணவிகளின் அடையாளம் கண்டறிய டி.என்.ஏ. சோதனை நடத்த முடிவு.

    முக்கோனோ:

    உகாண்டா நாட்டின் தலைநகர் கம்பாலாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள முக்கோனோ மாவட்டத்தில் பார்வையற்ற மாணவ,மாணவிகளுக்காக தங்கும் விடுதியுடன் கூடிய பள்ளி செயல்பட்டு வருகிறது. செவ்வாய்கிழமை அதிகாலை இங்குள்ள மாணவியர் விடுதியில் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அந்த விடுதியில் 21 மாணவிகள் தங்கியிருந்ததாக மாவட்ட பாதுகாப்பு தலைவர் பாத்திமா இன்டிபசா தெரிவித்துள்ளார்.

    தீயில் சிக்கி 11 மாணவிகள் உயிரிழந்து விட்டதாகவும், 6 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 3 பேர் மட்டுமே உயிர் தப்பியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். உயிரிழந்த பார்வையற்ற மாணவிகள் அடையாளம் காண முடியாத அளவுக்கு தீயில் எரிந்து விட்டதாகவும், அவர்களை அடையாளம் கண்டறிய டி.என்.ஏ. சோதனை நடத்த உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    தீ விபத்து நடந்த போது பள்ளி தலைமை ஆசிரியர் பிரான்சிஸ் கிருபே, மாணவிகளின் விடுதிக்கு அடுத்த அறையில் தூங்கிக் கொண்டிருந்தார். அந்த விடுதியில் ஜன்னல்கள் திறக்க முடியாத அளவிற்கு வலுவாக அமைக்கப்பட்டிருந்தததாக இதனால் மாணவிகள் தீயில் இருந்து தப்பிக்க முடியாமல் உயிரிழந்ததாக அமைச்சர் ஹெலன் கிரேஸ் அசாமோ தெரிவித்துள்ளார்.

    உகாண்டா நாட்டின் கப்ச்சோர்வா மாவட்டத்தில் மலைப்பாதை வழியே சென்ற பஸ் நிலைதடுமாறி கவிழ்ந்த விபத்தில் 19 பேர் உயிரிழந்தனர். #UgandaBusAccident
    கம்பாலா:

    உகாண்டா நாட்டில் சரியான சாலைகள் இல்லாததாலும், வாகனங்கள் முறையாக பராமரிக்கப்படாததாலும் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், உகாண்டா நாட்டின் கப்ச்சோர்வா மாவட்டத்தில் உள்ள கப்ச்சோர்வா - பேல் நெடுஞ்சாலை அருகிலுள்ள மலைப்பாதை வழியே பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென நிலைதடுமாறிய பஸ் மலைமுகட்டில் கவிழ்ந்து விழுந்தது.



    இந்த விபத்தில் பஸ்சில் பயணித்த 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த 6 பேர் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என போலீசார் தெரிவித்தனர். #UgandaBusAccident
    உகாண்டா நாட்டின் விக்டோரியா ஏரியில் ஆடல், பாடல், மது விருந்துடன் சென்ற படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த 29 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளது. #Ugandaboat #Ugandaboatsinks #Ugandaboatcapsize
    கம்பாலா:

    உகாண்டா நாட்டின் தலைநகரான கம்பாலாவின் அருகாமையில் உள்ள முக்கோனோ மாவட்டத்தை ஒட்டியுள்ள விக்டோரியா ஏரியில் நேற்று சுமார் 100 பேருடன் ஒரு உல்லாசப் படகு சென்று கொண்டிருந்தது.

    வார இறுதிநாள் என்பதால் அந்த படகில் இருந்த அனைவரும் மது போதையில் பாடல் இசைக்கேற்ப நடனடமாடியபடி உல்லாசத்தில் மூழ்கி இருந்தனர்.

    அப்போது, எதிர்பாராத விதமாக பலத்த காற்று வீசியதால் அந்தப் படகு நிலைதடுமாறி, ஏரியில் கவிழ்ந்தது. படகில் இருந்த அனைவரும் போதையில் செய்வதறியாது தத்தளித்தனர்.



    தகவல் அறிந்து விரைந்துவந்த மீட்பு படையினர் சிலரை உயிருடன் மீட்டனர். இந்த விபத்தில் உயிரிழந்த 29 பிரேதங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், காணாமல்போன சிலரை தேடும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன.

    கிழக்காப்பிரிக்க கண்டத்தில் உள்ள உகாண்டா, கென்யா மற்றும் தான்சானியா நாடுகளை இணைக்கும் வகையில் உள்ள விக்டோரியா ஏரி சுமார் 70 ஆயிரம் சதுர கிலோமீட்டரில் அமைந்துள்ளது. இந்த ஏரியில் அடிக்கடி படகு விபத்துகள் நடப்பதுண்டு. நேற்று நடந்த இந்த விபத்தில் சிக்கிய படகு வாரந்தோறும் மது விருந்துக்கு என்று வாடகைக்கு விடப்படும் படகு என தெரியவந்துள்ளது. #29dead #Ugandaboat #Ugandaboatsinks #Ugandaboatcapsize
    உகாண்டா நாட்டில் பெய்து வரும் கனமழையால் அங்கு ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் சிக்கி இதுவரை 34 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #UgandaMudslides
    கம்பாலா: 

    உகாண்டா நாட்டில் தற்போது கனமழை பெய்து வருகிறது. உகாண்டாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள புடுடா மாவட்டத்தில் பலத்த மழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    கனமழையை தொடர்ந்து அங்கு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 34 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர்.



    மேலும், வெள்ளப் பெருக்கால் அங்குள்ள மூன்றுக்கு மேம்பட்ட கிராமங்கள் முழுவதும் மூழ்கியுள்ளன. அங்குள்ள வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளன.

    இதுதொடர்பாக மீட்புக்குழு அதிகாரிகள் கூறுகையில், நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் பலர் புதைந்துள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும். ஆற்றங்கரையோரம் உள்ள மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர் என மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர். #UgandaMudslides
    தென் ஆப்பிரிக்காவில் பிரிக்ஸ் மாநாட்டை முடித்துக் கொண்டு புறபட்ட பிரதமர் மோடி இன்று அதிகாலை இந்தியா வந்தடைந்தார். #PMModi #BRICSSummit
    புதுடெல்லி:

    ஆப்பிரிக்க நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, உகாண்டா, ருவாண்டா நாடுகளின் தலைவர்களை சந்தித்து இந்தியாவுடனான நல்லுறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார். 

    இந்த ஆலோசனையின் போது இந்தியாவுக்கும் மேற்கண்ட இருநாடுகளுக்கும் இடையே பல்வேறு புதிய ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன.

    தொடர்ந்து, தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பெர்க் நகரில் நடந்த பிரிக்ஸ் நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்துகொண்டார். பிரிக்ஸ் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பிரேசில், ரஷியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்க நாட்டு தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர். மாநாடு முடிந்த பின்னர், இந்த நாடுகளின் தலைவர்களை மோடி தனித்தனியாக சந்தித்து பேசினார்.

    தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா, சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷிய அதிபர் புதின், அர்ஜெண்டினா அதிபர் மவுரிசியோ மாக்ரி ஆகியோரை மோடி சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இறுதியாக, நேற்று மாலை துருக்கி அதிபர் ரெசெப் எர்டோகன்-ஐ சந்தித்த பிரதமர் மோடி இரண்டாவது முறையாக அதிபராக தேர்வு செய்யப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்தார். பின்னர், தனி விமானம் மூலம் ஜோகன்னஸ்பெர்க் நகரில் இருந்து புதுடெல்லி நோக்கி புறப்பட்டார்.

    இந்நிலையில், தென் ஆப்பிரிக்கா உள்பட மூன்று நாடுகளின் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு, இன்று அதிகாலை டெல்லி விமான நிலையத்தை வந்தடைந்தார் பிரதமர் மோடி.

    விமான நிலையத்தில் வந்திறங்கிய மோடியை, வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் மலர்க் கொத்து கொடுத்து வரவேற்றார். #PMModi #BRICSSummit #Johannesburg
    உகாண்டா நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, அங்கு சர்தார் வல்லபாய் படேலின் மார்பளவு சிலையை திறந்து வைத்தார். #ModiinUganda
    கம்பாலா:

    அரசுமுறை பயணமாக நேற்று உகாண்டா வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டின் மத்திய பகுதியில் உள்ள கடற்கரை நகரமான எண்ட்டெபே நகர விமான நிலையத்தில் உகாண்டா அதிபர் யோவேரி முசெவேனி தலைமையில் முப்படை அணிவகுப்புடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பின்னர் இருநாடுகளின் உறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக மோடி - யோவேரி முசெவேனி பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இந்தியா - உகாண்டா இடையில் 4 புதிய ஒப்பந்தங்கள் கையொப்பமாகின. ராணுவ ஒத்துழைப்பு, விசா நீட்டிப்பு, கலாசார பரிவர்த்தனை தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் ஏற்படுத்தப்பட்டன.

    மேலும், உகாண்டா தலைநகர் கம்பாலாவில் உள்ள புற்றுநோய் சிகிச்சை மையத்துக்கு இந்தியாவின் அன்பளிப்பாக புற்றுநோய் சிகிச்சைக்கான அதிநவீன கருவிகள் வழங்கப்படும் என்றார்.

    இந்நிலையில், தலைநகர் கம்பாலாவில் அமைக்கப்பட்ட சர்தார் வல்லபாய் படேலின் மார்பளவு சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.



    அதன்பின்னர், கம்பாலாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் இடையே பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, அடுத்த ஆண்டு இந்தியாவின் அலகாபாத் நகரில் நடைபெறவுள்ள கும்பமேளா நிகழ்ச்சி மற்றும் வாரணாசியில் நடைபெறும் பிரவாசி பாரதீய திவாஸ் நிகழ்ச்சியில் நீங்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். அந்த விழாவுக்கு உங்களை அழைக்கவே நான் இங்கு வந்துள்ளேன்.

    உகாண்டாவில் அடுத்த தடவை நீங்கள் வாங்கும் ஸ்மார்ட்போன்களில் ஒன்று இந்தியாவில் தயாரிக்கப்பட்டதாக இருக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

    உகாண்டா பாராளுமன்றத்தில் சிறப்புரையாற்றும் பிரதமர் மோடிக்கு எண்ட்டெபி நகரில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் அதிபர் யோவேரி முசெவேனி விருந்து அளிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #ModiinUganda
    உகாண்டா மக்களுக்கு இந்தியாவின் அன்பளிப்பாக புற்றுநோய் சிகிச்சைக்கான அதிநவீன கருவி வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். #IndiatogiftUganda #ModiinUganda
    கம்பாலா:

    உகாண்டா மக்களுக்கு இந்தியாவின் அன்பளிப்பாக புற்றுநோய் சிகிச்சைக்கான அதிநவீன கருவி வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

    அரசுமுறை பயணமாக இன்று உகாண்டா வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டின் மத்திய பகுதியில் உள்ள கடற்கரை நகரமான எண்ட்டெபே நகர விமான நிலையத்தில் உகாண்டா அதிபர் யோவேரி முசெவேனி தலைமையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு முப்படையினர் அணிவகுப்புடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


    பின்னர் இருநாடுகளின் உறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக மோடி - யோவேரி முசெவேனி பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இந்தியா - உகாண்டா இடையில் 4 புதிய ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.

    மேலும், ராணுவ ஒத்துழைப்பு, விசா நீட்டிப்பு, கலாசார பரிவர்த்தனை தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் ஏற்படுத்தப்பட்டன.

    உகாண்டாவுக்கு நீண்டகால கடனாக 20 கோடி அமெரிக்க டாலர்களும், ராணுவத்தினர் மற்றும் பொது மக்களின் பயன்பாட்டுக்காக ஆம்புலன்ஸ் மற்றும் இதர வாகனங்கள் அளிக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.


    மேலும், உகாண்டா தலைநகர் கம்பாலாவில் உள்ள புற்றுநோய் சிகிச்சை மையத்துக்கு இந்தியாவின் அன்பளிப்பாக புற்றுநோய் சிகிச்சைக்கான அதிநவீன கருவி அன்பளிப்பாக வழங்கப்படும். இதன் மூலம் கிழக்காப்பிரிக்காவில் உள்ள இதர நாட்டு மக்களும் பயனடைவார்கள் என அவர் குறிப்பிட்டார்.
     
    உகாண்டா பாராளுமன்றத்தில் சிறப்புரையாற்றும் மோடிக்கு எண்ட்டெபி நகரில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் மோடிக்கு உகாண்டா அதிபர் யோவேரி முசெவேனி விருந்து அளிக்கிறார். உகாண்டாவில் இருந்து விடைபெற்று செல்லும் மோடி நாளை ஜோகனஸ்பர்க் நகரில் நடைபெறும் ‘பிரிக்ஸ்’ உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். #IndiatogiftUganda #ModiinUganda
    ×