என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெற்றி"

    புதுமுக இயக்குநர் சலீம் ஆர். பாட்ஷா இயக்கத்தில் உருவாகியுள்ள மனோவியல் டிராமா படம் "ஈரப்பதம் காற்று மழை"

    புதுமுக இயக்குநர் சலீம் ஆர். பாட்ஷா இயக்கத்தில் உருவாகியுள்ள மனோவியல் டிராமா படம் "ஈரப்பதம் காற்று மழை" (Eerapadham Kaatru Mazhai) படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது.

    வெற்றி இப்படத்தில் சுதர்ஷன் என்ற பாத்திரத்தில், மற்றவர்களின் கழுத்தைப் பார்த்தவுடன் செயின் அறுக்க வேண்டும் என்ற உந்துதலில் வாழக்கூடியவர்.

    கிஷன் தாஸ் – கனி என்ற பாத்திரத்தில், நெடுஞ்சாலைகளில் கொள்ளை அடித்து வாழும் இளைஞர்.

    தீப்தி ஓரின்டேலு – மேதினி என்ற பாத்திரத்தில் வாழ்க்கைக்கு மதிப்பில்லை என்ற எண்ணத்தில் உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல் வாழக்கூடியவள். இவர்களும் மூவரும் ஒருப்புள்ளியில் இணையும் போது என்ன நடக்கும் என்பதே படத்தின் கதையாக உருவாகியுள்ளது.

    தொழில்நுட்பக் குழு:

    அறிமுக இயக்குநரான சலீம் ஆர். பாட்ஷா இப்படத்தை இயக்கியுள்ளார்.

    ஒளிப்பதிவு: அமல் டோமி

    எடிட்டிங்: ஆஷிஷ் ஜோசப்

    தயாரிப்பு: ஐ.பி. கார்த்திகேயன் – பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் நிறுவனம்

    படம் இன்னும் வெளியீட்டு தேதியை அறிவிக்கவில்லை. விரைவில் டீசர் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

    • நடிகர் வெற்று அடுத்ததாக அனிஷ் அஷ்ரஃப் இயக்கத்தில் முதல் பக்கம் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • திரைப்படம் வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி வெளியாகிறது.

    நடிகர் வெற்று அடுத்ததாக அனிஷ் அஷ்ரஃப் இயக்கத்தில் முதல் பக்கம் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் காவல் அதிகாரி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.இந்நிலையில் படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

    ஒரு சீரியல் கில்லரை வெற்றி தொடர்ந்து தேடி வருவது போல் காட்சிகள் அமைந்துள்ளது. இப்படத்தில் ஷில்பா மஞ்சுனாத், தம்பி ராமியா, ரெடின் கிங்ஸ்லி மற்றும் மகேஷ் தாஸ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். திரைப்படம் வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி வெளியாகிறது. மகேஷ்வரன் தேவதாஸ் இப்படத்தை தயாரித்துள்ளார்.

    • ஜெயின் கிரியேஷன்ஸ் தயாரிக்கும் ப்ரொடெக்ஷன் நெம்பர் -2 திரைப்படத்தின் துவக்க விழா இன்று சென்னையில் நடைபெற்றது.
    • தெலுங்கில் பல படங்களில் நடித்த அக்ஷிதா கதாநாயகியாகவும் நடிக்கிறார்.

    ட்ரீம் ஹவுஸ் மற்றும் ஜெயின் கிரியேஷன்ஸ் சார்பில் ஹாரூன் மற்றும் மகேந்திர ஜெயின் இணைந்து தயாரிக்கும் ப்ரொடெக்ஷன் நெம்பர் -2 திரைப்படத்தின் துவக்க விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

    இப்படத்தில் 8 தோட்டாக்கள் புகழ் 'வெற்றி' கதாநாயகனாகவும், தெலுங்கில் பல படங்களில் நடித்த அக்ஷிதா கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். இவர்களுடன் முக்கிய கதாபத்திரத்தில் பாலாஜி சக்திவேல், சிங்கம் புலி, சாந்தினி, கல்கி, கோடாங்கி வடிவேலு, ஜென்சன் மற்றும் பலர் நடிக்க உள்ளனர்.

    'வெப்' மற்றும் '7/ஜி' படங்களை இயக்கிய ஹாரூன் இப்படத்தினை கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்கவுள்ளார்.

    இப்படத்திற்கு இசை ஜான் ராபின்ஸ், ஒளிப்பதிவு - K V கிரண், கலை வேலு S, சண்டை பயிற்சி - டேஞ்சர் மணி.

    இப்படத்தைப் பற்றி இயக்குனர் ஹாரூன் கூறுகையில்;

    இந்த படம் முற்றிலும் மாறுபட்ட ஜனரஞ்சகமான படமாக இருக்கும். இதில் 8 தோட்டாக்களுக்கு பிறகு வெற்றி காவல்துறை அதிகாரியாக நடிக்க உள்ளார். என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆக வருகிறார். இவருக்கு நாயகியாக அக்ஷிதா நடிக்க உள்ளார், மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் பாலாஜி சக்திவேல், சிங்கம் புலி, சாந்தினி, கல்கி, கோடாங்கி வடிவேலு, ஜென்சன் ஆகியோர் நடிக்க உள்ளனர்.

    இப்படத்தின் படப்பிடிப்பு கோயம்புத்தூர், ஏற்காடு, கொடைக்கானல் சேலம் மற்றும் கேரளாவில் நடைபெற உள்ளது..

    இப்படத்தின் கதையை அதிக சஸ்பென்ஸ்களை கொண்டு உருவாக்கியுள்ளோம் என்பதை மட்டும் இப்போது சொல்லிக் கொள்கிறோம் என்றார்.

    • நடிகர் பிரபு மற்றும் வெற்றி கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் ராஜபுத்திரன்.
    • இப்படத்தில் கிருஷ்ண பிரியா கதாநாயகியாக நடித்துள்ளார்.

    நடிகர் பிரபு மற்றும் வெற்றி கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் ராஜபுத்திரன். இப்படத்தை மகா கந்தன் இயக்கியுள்ளார். இப்படத்தில் கிருஷ்ண பிரியா கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தில் பிரபுவுடன் வெற்றி , தங்கதுரை, மன்சூர் அலிகான் மற்றும் இமான் அண்ணாச்சி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    ராஜபுத்திரன் திரைப்படத்தை கிரெசண்ட் சைன் கிரியேஷன்ஸ் தயாரித்துள்ளது. நவ்ஃபால் ராஜா இசையமைக்க ஆலிவர் டெனி ஒளிப்பதிவு மேற்கொள்கிறார். இந்நிலையில் படத்தின் முதல் பாடலான உம்மா பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை மோகன் ராஜன் வரிகளில் டி.ராஜேந்தர் பாடியுள்ளார்.

    பாடல் மிகவும் வைபாக அமைந்துள்ளது. இப்பாடலில் வெற்றி, பிரபு , இமான் அண்ணாச்சி இடம் பெற்றுள்ளனர், திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    • 19 வயதுடையவருக்கான சைக்கிள் போட்டியில் கலந்து கொண்டு மாவட்ட அளவில் முதலிடம்.
    • 17 வயது பிரிவு ஆண்கள் கபடி போட்டியில் மாவட்ட அளவில் இரண்டாமிடம்.

    பேராவூரணி:

    பேராவூரணி அரசு மேல்நிலைப்பள்ளி, 12 ஆம் வகுப்பு மாணவர் இன்பன் கார்த்தி, பாபநாசத்தில் கடந்த 17ஆம் தேதி நடைபெற்ற, 19 வயதுடையவருக்கான சைக்கிள் பந்தயப் போட்டியில் கலந்து கொண்டு, மாவட்ட அளவில் முதலிடத்தை பெற்றார்.

    இதன் மூலம் இவர் மாநில அளவிலான போட்டிக்கு பங்கு பெற தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    இதேபோல் இப்பள்ளியில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள், 17 வயது பிரிவு ஆண்கள் கபடிப் போட்டியில் மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளனர்.

    வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவர்களை, பள்ளித் தலைமை ஆசிரியர் முதல்வன், உடற்கல்வி ஆசிரியர்கள் திருநாவுக்கரசு, சோலை, முத்துராமலிங்கம் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

    • 12-ம் வகுப்பு படித்து முடித்து நீட் தேர்வு எழுதி அதில் வெற்றி பெற்றார்.
    • பள்ளி சார்பிலும், கிராம மக்கள் சார்பிலும் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த ஆந்தக்குடி கிராமத்தைச் சேர்ந்த குமார்- பவானி தம்பதியினர்.

    விவசாயக் கூலிகளான இவரது மகள் ராஜேஸ்வரி.

    இவர் ஆந்தக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து முடித்து இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதி அதில் வெற்றிப் பெற்றார்.

    அவருக்கு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது.

    அவருக்கு அவர் படித்த பள்ளியின் சார்பாக பாராட்டு விழா நடைப்பெற்றது.

    பள்ளியின் தலைமையாசிரியர் துரைமுருகு தலைமையில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் பள்ளியின் சார்பிலும் கிராம மக்களின் சார்பில் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் மற்றும் கிராம மக்கள் மாணவி ராஜேஸ்வரியை வெகுவாக பாராட்டினர்.

    • 3 மாணவர்களும், இம்மாதம் கோவையில் நடைபெறும் மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டிகளில் கலந்து கொள்கின்றனர்.
    • குமரி மாவட்ட அளவில் பல்வேறு பள்ளிகள் மற்றும் ஸ்கேட்டிங் கிளப்களில் பயிற்சி பெறும் 120-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் சுங்கான்கடை வின்ஸ் ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் சி.பி.எஸ்.இ. பள்ளியில் தேசிய அளவில் ரோலர் ஸ்கேட்டிங் போட்டிகள் நடத்துவதற்கு தகுதியான 200 மீட்டர் ரோலர் ஸ்கேட்டிங் மைதானம் உள்ளது. இது தென் தமிழகத்தில் மிகப்பெரிய மைதானம் ஆகும். இம்மைதானத்தில் மாநில அளவிலான ஸ்பீடு ஸ்கேட்டிங் போட்டியில் பங்குபெற தகுதியான போட்டியாளர்களை குமரி மாவட்ட அளவில் தேர்வு செய்யும் தகுதி சுற்று நடைபெற்றது.

    சென்னை தமிழ்நாடு ரோலர் ஸ்கேட்டிங் அசோசியேஷன் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட ஸ்கேட்டிங் கிளப் -ம் இணைந்து குமரி மாவட்ட அளவில் 5 பிரிவுகளில் ஸ்கட்டிங் போட்டிகளை நடத்தின. குமரி மாவட்ட அளவில் பல்வேறு பள்ளிகள் மற்றும் ஸ்கேட்டிங் கிளப்களில் பயிற்சி பெறும் 120-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    வின்ஸ் பள்ளி மாணவர்களும் பங்கேற்று மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்றனர். மாணவர்கள் பிபின்குமார், பபின்குமார், ஹாட்ரியல் வின்சென்ட் ஆகியோர் வயது அடிப்படையிலான போட்டிகளில் வெற்றி பெற்றனர்.

    3 மாணவர்களும், இம்மாதம் கோவையில் நடைபெறும் மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டிகளில் கலந்து கொள்கின்றனர். பல்வேறு பிரிவுகளில் போட்டியிட்டு வெற்றிபெற்ற மாணவர்களுக்கு வின்ஸ் கல்வி நிறுவனங்களின் தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான நாஞ்சில் வின்சென்ட் கோப்பை, பதக்கம் சான்றிதழ்களையும் வழங்கி கவுரவித்தார். மேலும் அவர்கள் மாநில அளவிலான ஸ்பீடு ஸ்கேட்டிங் போட்டியில் பங்குபெற்று வெற்றி பெற வேண்டும் என வாழ்த்தி ஊக்கப்படுத்தினார்.

    போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கன்னியாகுமரி மாவட்ட ஸ்கேட்டிங் கிளப் செயலாளர் குமார் ஜேசுராஜன் மற்றும் ஸ்கேட்டிங் பயிற்சியாளர்கள் இணைந்து செய்திருந்தனர்.

    • வெற்றிபெற்ற தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்டது
    • நீரினைப்பயன்படுத்துவோர் சங்கத் தேர்தலில்

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகாவிற்கு உட்பட்ட பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் நீர்நிலைகளின் நீரினைப் பயன்படுத்துவோர் 34 சங்கங்களுக்கு தேர்தல் நடைபெறுவதாக அறிவிப்பு வெளியானது.

    இந்தநிலையில் பல கட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு, மொத்தமுள்ள 34 தலைவர் இதில் 8 தலைவர்கள் தவிர, மற்ற 26 தலைவர் பதவிகள் மற்றும் 91 உறுப்பினர்கள் பதவிகளுக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

    மீதமுள்ள 8 தலைவர்கள் மற்றும் 10 உறுப்பினர்கள் பதவிகளுக்கு நேற்று காலை முதல் வாக்குப்பதிவு விறு, விறுப்பாக நடைபெற்றது. இதில் கல்லாலங்குடி தலைவர் பதவிக்கு நடைபெற்ற தேர்தல் கடும் பரபரப்புக்கு இடையே இரண்டு மணி நேரம் தாமதமாக தொடங்கியது.

    அனைத்து வாக்குச்சாவடிகளில் இருந்தும் வாக்குப் பெட்டிகள் ஆலங்குடி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டு, மாலை நான்கு மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.வாக்குகள் என்னப்பட்டு மாலை 6 மணிக்கு மேல் தலைவர்கள் 8 பேர் வெற்றி பெற்றதாக அறிவித்தனர்.

    வெற்றி பெற்ற தலைவர்களான விஜயரெகுநாதபுரம் செல்வராசு, குளவாய்பட்டி பானுமதி, மேலாத்தூ ர் குமார், கல்லாலங்குடி பாண்டியன், கொத்தமங்கலம் முத்துத்துரை, மாங்காடு பாலசுப்பிரமணியன், வல்லாத்திராக்கோட்டை, வாண்டாக்கோட்டை, பூவரசகுடி, மணியம்பலம் இவைகளுக்கு கருப்பையா, நம்புகுழி முத்து ஆகிய 8 தலைவர்களாகவும் மற்றும் பத்து உறுப்பினர்கள் என வெற்றி பெற்றவர்கள் அறிவிக்கப்பட்டனர்.

    பின்னர் தேர்தல் நடத்தும் அலுவலரும், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியருமான முருகேசன் மற்றும் ஆலங்குடி தாசில்தார் செந்தில் நாயகி ஆகியோர் வெற்றி பெற்ற தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினர்.

    • கோடியக்காடு ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்மணி சுகாதார ஓட்டத்தை தொடங்கி வைத்தார்.
    • வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாட குறிப்பேடு மற்றும் எழுதுபொருட்கள் வழங்கல்.

    வேதாரண்யம்:

    தூய்மை பாரத இயக்கம் சார்பில் வேதாரண்யம் அடுத்த கோடியக்காடு ஊராட்சியில் உலக கழிவறை தின சுகாதார ஓட்டம் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு கோடியக்காடு ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்மணி தலைமை வகித்து சுகாதார ஒட்டத்தை துவக்கிவைத்தார்.

    நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சரவணன், ஊராட்சியின் வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி செயலாளர் சுபா, கிராம நிர்வாக அலுவலர் இளங்கோவன், அஞ்சலக அலுவலர், மகளிர் குழுக்கள், தூய்மை பணியாளர்கள், சுந்தரம் அரசு உதவி தொடக்கப் பள்ளியின் தலைமையாசிரியர் நீலமேகம் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து விழிப்புணர்வு உறுதிமொழியும், எடுத்துக்கொண்டனர்.

    உலக கழிவறை தினம் நிகழ்வில் கலந்து கொண்ட பள்ளி மாணவர்களுக்கும், வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்மணி பாட குறிப்பேடு மற்றும் எழுதுபொருட்களை வழங்கினர்.

    • தென்காசி வ.உ.சி.வட்டார நூலகத்தில் 55-வது தேசிய நூலக வாரவிழா கொண்டாடப்பட்டது.
    • மாணவ-மாணவிகளுக்கு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் பரிசு வழங்கினார்.

    தென்காசி:

    தென்காசி வ.உ.சி.வட்டார நூலகத்தில் 55-வது தேசிய நூலக வாரவிழா கொண்டாடப்பட்டது. தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன், பழனிநாடார் எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமை தாங்கினர்.

    தனுஷ்குமார் எம்.பி. முன்னிலை வகித்தார். வட்டார நூலகர் பிரமநாயகம் வரவேற்றார்.

    நகர்மன்ற உறுப்பினர் காதர் மைதீன், ஆகாஷ் பிரண்ட்ஸ் ஐ.ஏ.எஸ். அகாடமி இயக்குநர் மாரியப்பன், தென்காசி கேன்சர் சென்டர் இயக்குநர் பாரதிராஜா, நிலா ஸ்வீட்ஸ் உரிமையாளர் பிரபுதேவகுமார், வட்டார கல்வி அலுவலர் இளமுருகன், வாசகர் வட்ட துணைத்தலைவர் மைதீன், ஆசிரியர் ஆறுமுகம், ஓவிய பயிற்சியாளர் ஜெயசிங், அரவிந்த் யோகாலயா பாலசுப்ரமணியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    விழாவில் தி.மு.க. மாவட்ட பொருளாளர் ஷெரீப், செயற்குழு உறுப்பினர் ஆறுமுகசாமி, செங்கோட்டை நகரச்செ யலாளர் வெங்கடேஷ், கோமதி நாயகம், சமீம், இஸ்மாயில், ஜெகதீசன், பொதுக்குழு உறுப்பினர் தமிழ்செல்வி, வக்கீல் கண்ணன், மாரியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் பரிசு வழங்கினார்.

    கிளை நூலகர் சுந்தர் நன்றி தெரிவித்தார்.விழா ஏற்பாடுகளை நூலகர்கள் ஜீலியா ராஜசெல்வி, நிஹ்மத்துன்னிஸா, அம்பை நூலகர் சதீஷ், வாசகர் வட்ட நிர்வாகிகள் குழந்தை ஜேசு, முருகேசன் செய்திருந்தனர்.

    • மனோரா சுற்றுலாத்தலம் 2-ம் சரபோஜி மன்னரால் கட்டப்பட்ட 300 ஆண்டுகளை கடந்த பொக்கிஷம்.
    • மாவீரன் நெப்போலியன் ஆங்கிலேய படையினரிடம் தோல்வி அடைந்தார்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே சரபேந்திரராஜன்பட்டினம் ஊராட்சி, மனோரா சுற்றுலாத்தலத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பில் உலக மரபு வாரவிழா நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு தஞ்சை தொல்லியல் துறை அலுவலர் தங்கதுரை தலைமை தாங்கி பேசியதாவது:-

    தமிழக அரசின் தொல்லியல் துறை சார்பில் நவம்பர் 19-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை உலக மரபு வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

    இதையொட்டி மரபுச் சின்னங்களை கட்டணம் இன்றி பொதுமக்கள், மாணவர்கள் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

    மேலும், மாணவர்களுக்கு ஓவியப்போட்டி, கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது.

    மனோரா சுற்றுலாத்தலம் 2-ம் சரபோஜி மன்னரால் கட்டப்பட்ட 300 ஆண்டுகளை கடந்த பொக்கிஷம். வாட்டலூர் என்ற இடத்தில் நடைபெற்ற போரில், மாவீரன் நெப்போலியன் ஆங்கிலேயப் படையினரிடம் தோல்வி அடைந்தார்.

    நெப்போலியன் தோல்வியை வெளியுலகுக்கு தெரிவிக்கவும், ஆங்கிலேயரின் வெற்றியை கொண்டாடியும், 2-ம் சரபோஜி மன்னரால் உருவாக்கப்பட்டது தான் இந்த மனோரா என்னும் நினைவுச்சின்னம். மாணவர்கள் நினைவுச் சின்னங்களை பாதுகாப்பதில் அக்கறை செலுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.நிகழ்வில் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் சத்தியநாதன், சாரண ஆசிரியர் முத்துச்சாமி, காரைக்குடி பட்டாலியன் ஹவில்தார் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து, பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்டம், சாரண இயக்க மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் மனோராவில் தூய்மை பணிகளை மேற்கொண்டனர்.

    • 150-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்று விளையாடினர்.
    • வெற்றி பெற்ற 60 மாணவர்கள் மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டியில் பங்கேற்பர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டிகள் நடைபெற்று வருகிறது.

    சீர்காழி பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற போட்டியில் 36 பள்ளிகளைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

    14, 17, 19 ஆகிய வயதுக்கு உட்பட்டோர் என 3 பிரிவுகளின் கீழ் டேக்வாண்டோ போட்டிகள் நடைபெற்று வருகிறது. பெஸ்ட் கல்வி நிறுவனங்களின் தாளாளர் ராஜ்கமல் தலைமையில் நடைபெறும் போட்டிகளை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் காந்திமதி தொடங்கி வைத்தார்.

    மேலும் மாவட்ட அளவில் நடைபெறும் இப்போட்டியில் வெற்றி பெறும் மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்படுவதுடன். போட்டியில் வெற்றி பெற்று 60 மாணவ-மாணவிகள், மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றனர்.

    ×