என் மலர்
நீங்கள் தேடியது "மழை - காற்று"
புதுமுக இயக்குநர் சலீம் ஆர். பாட்ஷா இயக்கத்தில் உருவாகியுள்ள மனோவியல் டிராமா படம் "ஈரப்பதம் காற்று மழை" (Eerapadham Kaatru Mazhai) படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது.
வெற்றி இப்படத்தில் சுதர்ஷன் என்ற பாத்திரத்தில், மற்றவர்களின் கழுத்தைப் பார்த்தவுடன் செயின் அறுக்க வேண்டும் என்ற உந்துதலில் வாழக்கூடியவர்.
கிஷன் தாஸ் – கனி என்ற பாத்திரத்தில், நெடுஞ்சாலைகளில் கொள்ளை அடித்து வாழும் இளைஞர்.
தீப்தி ஓரின்டேலு – மேதினி என்ற பாத்திரத்தில் வாழ்க்கைக்கு மதிப்பில்லை என்ற எண்ணத்தில் உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல் வாழக்கூடியவள். இவர்களும் மூவரும் ஒருப்புள்ளியில் இணையும் போது என்ன நடக்கும் என்பதே படத்தின் கதையாக உருவாகியுள்ளது.
தொழில்நுட்பக் குழு:
அறிமுக இயக்குநரான சலீம் ஆர். பாட்ஷா இப்படத்தை இயக்கியுள்ளார்.
ஒளிப்பதிவு: அமல் டோமி
எடிட்டிங்: ஆஷிஷ் ஜோசப்
தயாரிப்பு: ஐ.பி. கார்த்திகேயன் – பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் நிறுவனம்
படம் இன்னும் வெளியீட்டு தேதியை அறிவிக்கவில்லை. விரைவில் டீசர் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.
- கட்டுமரங்கள் மீன் பிடிக்க செல்லவில்லை
- 7 விசைப்படகுகள் இன்று காலை கரை திரும்பின.அவற்றுள் குறைவான கணவாய் மீன்களே கிடைத்தன.
குளச்சல் :
குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300 விசைப்படகு களும், 1000 க்கும் மேற்பட்ட பைபர் வள்ளம், கட்டு மரங்களும் மீன்பிடித் தொழில் செய்து வரு கின்றன.விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதிவரை சென்று 7 முதல் 10 நாட்கள்வரை தங்கி மீன்பிடித்து விட்டு கரை திரும்புவது வழக்கம். இந்நிலையில் நேற்று முதல் குளச்சல் சுற்று வட்டார பகுதியில் லேசான மழை பெய்து வருகிறது.இன்று காலையிலும் மழை பெய்தது.9 மணிவரை மழை நீடித்தது.தொடர்ந்து மேக மூட்டமாக இருந்து வருகிறது.
காற்றின் வேகமும் அதிக மாக உள்ளது. இதனால் வள்ளம், கட்டுமரங்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வில்லை.ஒரு சில கட்டுமரங்களே மீன் பிடிக்க சென்றன.
இதனால் மீன் வரத்து குறைந்தது.இதற்கிடையே ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற 7 விசைப்படகுகள் இன்று காலை கரை திரும்பின.அவற்றுள் குறைவான கணவாய் மீன்களே கிடைத்தன.






