என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    குளச்சல் பகுதியில் மழை - காற்று : கரை திரும்பிய மீனவர்கள்
    X

    குளச்சல் பகுதியில் மழை - காற்று : கரை திரும்பிய மீனவர்கள்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கட்டுமரங்கள் மீன் பிடிக்க செல்லவில்லை
    • 7 விசைப்படகுகள் இன்று காலை கரை திரும்பின.அவற்றுள் குறைவான கணவாய் மீன்களே கிடைத்தன.

    குளச்சல் :

    குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300 விசைப்படகு களும், 1000 க்கும் மேற்பட்ட பைபர் வள்ளம், கட்டு மரங்களும் மீன்பிடித் தொழில் செய்து வரு கின்றன.விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதிவரை சென்று 7 முதல் 10 நாட்கள்வரை தங்கி மீன்பிடித்து விட்டு கரை திரும்புவது வழக்கம். இந்நிலையில் நேற்று முதல் குளச்சல் சுற்று வட்டார பகுதியில் லேசான மழை பெய்து வருகிறது.இன்று காலையிலும் மழை பெய்தது.9 மணிவரை மழை நீடித்தது.தொடர்ந்து மேக மூட்டமாக இருந்து வருகிறது.

    காற்றின் வேகமும் அதிக மாக உள்ளது. இதனால் வள்ளம், கட்டுமரங்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வில்லை.ஒரு சில கட்டுமரங்களே மீன் பிடிக்க சென்றன.

    இதனால் மீன் வரத்து குறைந்தது.இதற்கிடையே ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற 7 விசைப்படகுகள் இன்று காலை கரை திரும்பின.அவற்றுள் குறைவான கணவாய் மீன்களே கிடைத்தன.

    Next Story
    ×