என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்கேட்டிங் போட்டி"

    • 22 வயதான ஆனந்த்குமார், சீனியர் ஆண்கள் பிரிவில் 1000 மீட்டர் பிரிவில் விளையாடினார்.
    • இதே சாம்பியன்ஷிப்பில் 500 மீட்டர் ஸ்பிரிண்ட் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார்.

    சீனாவில் நடைபெற்ற ஸ்பீடு ஸ்கேட்டிங் உலக சாம்பியன்ஷிப் போட்டியில், தமிழகத்தை சேர்ந்த இந்திய இளம் வீரர் ஆனந்த்குமார் வேல்குமார் தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்தார்.

    22 வயதான ஆனந்த்குமார், சீனியர் ஆண்கள் பிரிவில் 1000 மீட்டர் ஸ்பிரிண்ட் போட்டியில் 1:24.924 விநாடிகளில் இலக்கை அடைந்து தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.

    இதன் மூலம், ஸ்பீடு ஸ்கேட்டிங் விளையாட்டில் உலக சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

    இதற்கு ஒரு நாள் முன்னதாக அவர், இதே சாம்பியன்ஷிப்பில் 500 மீட்டர் ஸ்பிரிண்ட் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

    வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த வைஷாலிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், ஸ்பீடு ஸ்கேட்டிங் உலக சாம்பியன்ஷிப் போட்டியில், தங்கப் பதக்கம் வென்ற தமிழகவீரர் ஆனந்த்குமார் வேல்குமாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

    இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில், "2025 ஆம் ஆண்டு ஸ்பீடு ஸ்கேட்டிங் உலக சாம்பியன்ஷிப்பில் சீனியர் ஆண்கள் 1000 மீட்டர் ஸ்பிரிண்டில் தங்கம் வென்றதற்காக ஆனந்த்குமார் வேல்குமாரை நினைத்து பெருமைப்படுகிறேன். அவரது மன உறுதி, வேகம் மற்றும் உற்சாகம் அவரை ஸ்கேட்டிங்கில் இந்தியாவின் முதல் உலக சாம்பியனாக்கியுள்ளது. அவரது சாதனை எண்ணற்ற இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும். அவருக்கும் அவரது அனைத்து எதிர்கால முயற்சிகளுக்கும் வாழ்த்துக்கள்" என்று தெரிவித்துள்ளார்.

    • 3 மாணவர்களும், இம்மாதம் கோவையில் நடைபெறும் மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டிகளில் கலந்து கொள்கின்றனர்.
    • குமரி மாவட்ட அளவில் பல்வேறு பள்ளிகள் மற்றும் ஸ்கேட்டிங் கிளப்களில் பயிற்சி பெறும் 120-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் சுங்கான்கடை வின்ஸ் ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் சி.பி.எஸ்.இ. பள்ளியில் தேசிய அளவில் ரோலர் ஸ்கேட்டிங் போட்டிகள் நடத்துவதற்கு தகுதியான 200 மீட்டர் ரோலர் ஸ்கேட்டிங் மைதானம் உள்ளது. இது தென் தமிழகத்தில் மிகப்பெரிய மைதானம் ஆகும். இம்மைதானத்தில் மாநில அளவிலான ஸ்பீடு ஸ்கேட்டிங் போட்டியில் பங்குபெற தகுதியான போட்டியாளர்களை குமரி மாவட்ட அளவில் தேர்வு செய்யும் தகுதி சுற்று நடைபெற்றது.

    சென்னை தமிழ்நாடு ரோலர் ஸ்கேட்டிங் அசோசியேஷன் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட ஸ்கேட்டிங் கிளப் -ம் இணைந்து குமரி மாவட்ட அளவில் 5 பிரிவுகளில் ஸ்கட்டிங் போட்டிகளை நடத்தின. குமரி மாவட்ட அளவில் பல்வேறு பள்ளிகள் மற்றும் ஸ்கேட்டிங் கிளப்களில் பயிற்சி பெறும் 120-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    வின்ஸ் பள்ளி மாணவர்களும் பங்கேற்று மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்றனர். மாணவர்கள் பிபின்குமார், பபின்குமார், ஹாட்ரியல் வின்சென்ட் ஆகியோர் வயது அடிப்படையிலான போட்டிகளில் வெற்றி பெற்றனர்.

    3 மாணவர்களும், இம்மாதம் கோவையில் நடைபெறும் மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டிகளில் கலந்து கொள்கின்றனர். பல்வேறு பிரிவுகளில் போட்டியிட்டு வெற்றிபெற்ற மாணவர்களுக்கு வின்ஸ் கல்வி நிறுவனங்களின் தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான நாஞ்சில் வின்சென்ட் கோப்பை, பதக்கம் சான்றிதழ்களையும் வழங்கி கவுரவித்தார். மேலும் அவர்கள் மாநில அளவிலான ஸ்பீடு ஸ்கேட்டிங் போட்டியில் பங்குபெற்று வெற்றி பெற வேண்டும் என வாழ்த்தி ஊக்கப்படுத்தினார்.

    போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கன்னியாகுமரி மாவட்ட ஸ்கேட்டிங் கிளப் செயலாளர் குமார் ஜேசுராஜன் மற்றும் ஸ்கேட்டிங் பயிற்சியாளர்கள் இணைந்து செய்திருந்தனர்.

    19வயதுக்குட்பட்டோருக்கான ரிங்க்-1 ஸ்கேட்டிங் போட்டியில் கலந்துகொண்டு முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்று பள்ளிக்குப் பெருமைசேர்த்துள்ளார்.

    திருப்பூர்:

    திருப்பூர், காந்திநகர் பகுதியில் அமைந்துள்ள ஏ.வி.பி. டிரஸ்ட் பப்ளிக்சீனியர் செகண்டரி பள்ளியின் 12-ம் வகுப்பு மாணவன் சஞ்சய்ராஜ்குமார் தென்மண்டல சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு இடையிலான 19வயதுக்குட்பட்டோருக்கான ரிங்க்-1 ஸ்கேட்டிங் போட்டியில் கலந்துகொண்டு முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்று பள்ளிக்குப் பெருமைசேர்த்துள்ளார்.

    தேசிய அளவில் சாதித்த மாணவன் சஞ்சய் ராஜ்குமாரைப் பள்ளியின்தாளாளர் கார்த்திகேயன் அருள்ஜோதி, பள்ளியின் முதல்வர் பிரமோதினி, ஒருங்கிணைப்பாளர் மோகனா மற்றும் பள்ளியின்ஆசிரியர்கள் அனைவரும் பாராட்டினர்.

    • ஸ்கேட்டிங் போட்டிகள் அவிநாசி அருகேயுள்ள தனியாா் பள்ளியில் நடைபெற்றன.
    • காவல் ஆணையா் பிரவின்குமாா் அபிநபு தொடங்கி வைத்தாா்.

    திருப்பூர் : 

    திருப்பூா் மாவட்ட ரோலா் ஸ்போா்ட்ஸ் அசோசியேஷன், தமிழ்நாடு ஸ்பீடு ஸ்கேட்டிங் அசோசியேஷன், திருப்பூா் ரோல்ஸ்ப்ரோ அகாதெமி சாா்பில் ஸ்கேட்டிங் போட்டிகள் அவிநாசி அருகேயுள்ள தனியாா் பள்ளியில் நடைபெற்றன. 200 மீட்டா், 400 மீட்டா், 1000 மீட்டா் பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளை திருப்பூா் மாநகர காவல் ஆணையா் பிரவின்குமாா் அபிநபு தொடங்கி வைத்தாா்.இதில் 4 வயது முதல் 19 வயதுக்குள்பட்ட 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

    போட்டிகளை மாவட்ட ரோலா் ஸ்போா்ட்ஸ் அசோசியேஷன் மாவட்டச் செயலாளா் பிரகாஷ், தலைவா் தெய்வராஜ், துணைச்செயலாளா் ஜெயகுமாா் ஆகியோா் ஒருங்கிணைத்தனா்.

    அறக்கட்டளை நிா்வாக இயக்குநா் இந்திரா சுந்தர்ராஜம் கூறுகையில், மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் சென்னையில் விரைவில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளனா் என்றாா்.

    • பல்லடம் அருகே ஊஞ்சபாளையத்தில் திருப்பூர் ஸ்கேட்டிங் அசோசியேன்மற்றும் தனியார் ஸ்கேட்டிங் அகாடமி சார்பில் திருப்பூர் மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டிகள் நடைபெற்றது.
    • 6 வயது முதல் 16 வயது வரையிலான மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே ஊஞ்சபாளையத்தில் திருப்பூர் ஸ்கேட்டிங் அசோசியேன்மற்றும் தனியார் ஸ்கேட்டிங் அகாடமி சார்பில் திருப்பூர் மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டிகள் நடைபெற்றது. இதில் பல்லடம், திருப்பூர், தாராபுரம், காங்கேயம், உடுமலை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் 6 வயது முதல் 16 வயது வரையிலான மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.போட்டியில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பல்லடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் பதக்கங்களை அணிவித்து பாராட்டினார்.

    ×