என் மலர்
நீங்கள் தேடியது "skating race"
- 22 வயதான ஆனந்த்குமார், சீனியர் ஆண்கள் பிரிவில் 1000 மீட்டர் பிரிவில் விளையாடினார்.
- இதே சாம்பியன்ஷிப்பில் 500 மீட்டர் ஸ்பிரிண்ட் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
சீனாவில் நடைபெற்ற ஸ்பீடு ஸ்கேட்டிங் உலக சாம்பியன்ஷிப் போட்டியில், தமிழகத்தை சேர்ந்த இந்திய இளம் வீரர் ஆனந்த்குமார் வேல்குமார் தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்தார்.
22 வயதான ஆனந்த்குமார், சீனியர் ஆண்கள் பிரிவில் 1000 மீட்டர் ஸ்பிரிண்ட் போட்டியில் 1:24.924 விநாடிகளில் இலக்கை அடைந்து தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
இதன் மூலம், ஸ்பீடு ஸ்கேட்டிங் விளையாட்டில் உலக சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
இதற்கு ஒரு நாள் முன்னதாக அவர், இதே சாம்பியன்ஷிப்பில் 500 மீட்டர் ஸ்பிரிண்ட் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த வைஷாலிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், ஸ்பீடு ஸ்கேட்டிங் உலக சாம்பியன்ஷிப் போட்டியில், தங்கப் பதக்கம் வென்ற தமிழகவீரர் ஆனந்த்குமார் வேல்குமாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில், "2025 ஆம் ஆண்டு ஸ்பீடு ஸ்கேட்டிங் உலக சாம்பியன்ஷிப்பில் சீனியர் ஆண்கள் 1000 மீட்டர் ஸ்பிரிண்டில் தங்கம் வென்றதற்காக ஆனந்த்குமார் வேல்குமாரை நினைத்து பெருமைப்படுகிறேன். அவரது மன உறுதி, வேகம் மற்றும் உற்சாகம் அவரை ஸ்கேட்டிங்கில் இந்தியாவின் முதல் உலக சாம்பியனாக்கியுள்ளது. அவரது சாதனை எண்ணற்ற இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும். அவருக்கும் அவரது அனைத்து எதிர்கால முயற்சிகளுக்கும் வாழ்த்துக்கள்" என்று தெரிவித்துள்ளார்.
- கீழக்கரை இஸ்லாமியா பள்ளி மாணவர்கள் ஸ்கேட்டிங் ரேஸ் போட்டிகளில் சாதனை படைத்தனர்.
- மெனு ஸ்போர்ட்ஸ் அகாடமி நாமக்கலுக்கு அழைத்துச் சென்று போட்டியில் பங்கேற்க செய்தனர்.
கீழக்கரை
தமிழ்நாடு ரோலர் ஸ்போர்ட்ஸ் பெடரேசன் மற்றும் நவோதயா அகாடமி இணைந்து நாமக்கல் நவோதயா அகடாமி மைதானத்தில் தேசிய அளவிலான போட்டிக்கான தேர்வு செய்வதற்கான ஸ்கேட்டிங் ரேஸ் போட்டி நடந்தது.
முன்னதாக ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் தகுதி வாய்ந்த மாணவர்களை தேர்ந்தெடுத்து ஸ்கேட்டிங் ரேஸ் நடத்தி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசாக தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கம் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கீழக்கரையில் இஸ்லாமியா மெட்ரிகுலேசன் பள்ளி உள்பட 3 பள்ளி மாணவர்களில் தகுதி உள்ளவர்களை தேர்ந்தெடுத்து ராமநாதபுரம் மெனு ஸ்போர்ட்ஸ் அகாடமி நாமக்கலுக்கு அழைத்துச் சென்று போட்டியில் பங்கேற்க செய்தனர்.
பல்வேறு பிரிவுகளில் நடந்த இந்த போட்டியில் கீழக்கரை இஸ்லாமிய பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்தனர். இஸ்லாமியா மெட்ரிகுலேசன் பள்ளி மாணவர்கள் முஹம்மது பஹத் (9-ம் வகுப்பு), முஹம்மது முஆத் (5-ம் வகுப்பு) ஆகியோர் 2-வது இடமும், முஹம்மது அஹ்ஷன் (9-ம் வகுப்பு) 3-வது மற்றும் 5-வது இடமும், மோஹித் ராஜ் (2-ம் வகுப்பு) முதல் மற்றும் 2-வது இடமும் பிடித்து சாதனை படைத்தனர்.
அவர்களை பள்ளியின் தாளாளர் எம்.எம்.கே. முகைதீன் இப்ராஹிம், கல்விக்குழு நிர்வாகிகள், முதல்வர் மேபல் ஜஸ்டஸ், மற்றும் உடற்கல்வி இயக்குநர்கள், ஆசிரியர்கள் பாராட்டினர்.






