search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "praise"

    • பதற்றத்தை கட்டுப்படுத்தி மன ஆரோக்கியத்துக்கும் நலம் பயக்கும்.
    • வெள்ளை அணுக்களின் உற்பத்தியும் அதிகரிக்கும்.

    பார்வையாளர்கள் ரசிக்கும் வகையில் மேடைகளில் பேசுபவர்களுக்கு பலத்த கை தட்டல்கள் பாராட்டாக கிடைக்கும். அப்படி கை தட்டுவது கூட ஏராளமான நன்மைகளை வழங்கக்கூடியது. இதற்காக மருத்துவ உலகில் `கிளாப்பிங் தெரபி' என்னும் சிகிச்சை முறையே இருக்கிறது. தினமும் கை தட்டுவதற்கு சில நிமிடங்களை ஒதுக்குமாறு அந்த சிகிச்சை பரிந்துரைக்கிறது. சரி, கை தட்டுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பதை தெரிந்து கொள்வோமா..?

     * இரண்டு உள்ளங்கைகளிலும், 30-க்கும் மேற்பட்ட அக்குபிரசர் புள்ளிகள் உள்ளன. கை தட்டும்போது அவைகள் தூண்டப்பட்டு ஏராளமான நன்மைகளை அளிக்கின்றன.

    * மன அழுத்தம், பதற்றத்தை கட்டுப்படுத்தி மன ஆரோக்கியத்துக்கும் நலம் பயக்கும்.

    * மகிழ்ச்சிக்கான சமிக்ஜைகள் பரவி, மனச்சோர்வை தடுக்க உதவும்.

    * குழுவாக சேர்ந்து கை தட்டும் வழக்கத்தை பின்பற்றுபவர்களிடத்தில் மகிழ்ச்சி அளிக்கும் ஹார்மோனின் அளவு அதிகரித்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

    * ரத்த அழுத்த அளவை ஒழுங்கு படுத்த உதவும். உடல் முழுவதும் ரத்த ஓட்டம் மேம்படுவதற்கும், இதய நோய் அபாயத்தை குறைப்பதற்கும் வித்திடும்.

    * வெள்ளை அணுக்களின் உற்பத்தியும் அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தியும் மேம்படும்.

    * குழந்தைகள் கை தட்டுதல் பயிற்சியை தொடர்ந்து பின்பற்றும்போது அறிவாற்றல் திறன் மேம்படும். ஞாபக சக்தியும் கூடும். கவனச்சிதறலும் கட்டுப்படும்.

    * உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, தூக்கமின்மை, தலைவலி, ஜலதோஷம், கண் சார்ந்த பிரச்சினைகள் போன்றவற்றின் வீரியத்தைகுறைப்பதற்கும் உதவும்.

    * உள்ளங்கைகளில் சிறிதளவு கடுகு எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் தேய்த்தும் கை தட்டலாம். காலைவேளையில் இந்த வழக்கத்தை தொடர்வது நல்ல பலனை கொடுக்கும்.

    • நிதிச்சுமையில் உள்ள லட்சக்கணக்கான பெண்கள் பெரும் பயனடைவார்கள்.
    • மத்திய அரசு மகளிர் முன்னேற்றத்தில் அக்கறை கொண்ட அரசாக செயல்படுவதை வெளிப்படுத்துகிறது.

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பிரதமர் நரேந்திர மோடி மகளிர் தினத்தை ஒட்டி வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையைக் குறைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது, பாராட்டுக்குரியது. குறிப்பாக மத்திய அரசு மகளிர் தினத்தில் வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் ரூ. 100 குறைத்திருப்பதால் நிதிச்சுமையில் உள்ள லட்சக்கணக்கான பெண்கள் பெரும் பயனடைவார்கள். மேலும் பிரதமரின் உஜ்வாலா இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் திட்ட பயனாளிகளுக்கு 2024-25-ம் நிதியாண்டில் சிலிண்டர்களுக்கான மானியத் தொகை ரூ.300 - ஐ தொடர்ந்து வழங்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

    இதன் மூலம் 2024 –ம் ஆண்டில் 10.27 கோடிக்கும் அதிகமானோர் பிரதமரின் இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் திட்டத்தினால் பெரும் பயனடைவார்கள். பிரதமர் மகளிர் தினத்தை ஒட்டி மகளிர் நலன் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் சம்பந்தமான அறிவிப்பை வெளியிட்டிருப்பது மத்திய அரசு மகளிர் முன்னேற்றத்தில் அக்கறை கொண்ட அரசாக செயல்படுவதை வெளிப்படுத்துகிறது. எனவே பிரதமருக்கும், மத்திய அரசுக்கும் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவதன் மூலம் அதிக மதிப்பெண்களை பெற முடியும்.
    • குறிப்பிட்ட நேரம் படிக்கும் வழக்கத்தை பெற்றோர் பின்பற்ற வைக்க வேண்டும்.

    இது தேர்வுக்கான காலகட்டம். மற்ற சமயங்களை விட படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவதன் மூலமே அதிக மதிப்பெண்களை பெற முடியும் என்பதை மாணவர்கள் உணர்ந்து செயல்படுவார்கள். ஒருசில பழக்க வழக்கங்களை தினமும் பின்பற்ற வைப்பதன் மூலம் அவர்களின் கல்வித்திறன் மேம்படுவதோடு வாழ்நாள் மூலம் கற்றல் மீதான நாட்டத்தை மெருகூட்ட செய்யலாம். அதற்கான வழிமுறைகள்...

    தேர்வு சமயங்களை தவிர்த்து தினமும் குறிப்பிட்ட நேரம் படிக்கும் வழக்கத்தை பெற்றோர் பின்பற்ற வைக்க வேண்டும். அந்த சமயத்தில் வேறு எந்த செயலிலும் கவனம் செலுத்த அனுமதிக்கக்கூடாது. `இது படிப்புக்கான நேரம்' என்பது மனதில் ஆழமாக பதிய வேண்டும். அப்படி குறிப்பிட்ட நேரத்தில் தொடர்ந்து படிப்பதன் மூலம் கற்றலை வலுப்படுத்தும் பழக்கத்தை மாணவர்கள் வளர்த்துக் கொள்வார்கள்.

     அமைதியான இடம்

    கவனச்சிதறல்கள் மாணவர்களை தடம் புரளச் செய்யும். எனவே இடையூறு ஏதும் இல்லாமல், படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தக்கூடிய அமைதியான இடத்தை ஒதுக்கிக்கொடுக்க வேண்டும். அமைதியான சூழல் கவனத்தை ஒன்றிணைக்கும் திறனை வலுப்படுத்தும். புரிதலை மேம்படுத்தும்.

    கற்றல் நுட்பங்கள்

    எந்த பாடத்தையும் மனப்பாடம் செய்து படிக்கக்கூடாது. ஒரு பாடத்தை படிப்பதற்கு முன்பு அதில் இடம் பெற்றுள்ள முக்கிய சாராம்சங்களை குறிப்பெடுக்க பழக வேண்டும். பின்பு அந்த குறிப்புகளில் முக்கியமானவற்றை மட்டும் சுருக்கி எழுத வேண்டும்.

    அதில் ஏதேனும் சந்தேகம் எழுந்தால் ஆசிரியரிடமோ, சக மாணவர்களிடமோ கேள்வி எழுப்பி தெளிவு பெற வேண்டும். இத்தகைய செயல்முறை கற்றல் நுட்பங்களை பின்பற்றுவது பாடம் மீது ஆழமான புரிதலை ஏற்படுத்தும். சிந்தனை திறனை வளர்க்கும். திறம்பட தேர்வு எழுதி நல்ல மதிப்பெண் பெறவும் வழிவகுக்கும்.

    சிறிது நேர ஓய்வு

    தினமும் குறிப்பிட்ட நேரத்தை படிப்புக்காக ஒதுக்கி, தொடர்ந்து படிக்கும்போது ஒருவித சோர்வு எட்டிப்பார்க்கும். படிப்புக்கு இடையே 5 முதல் 10 நிமிடங்கள் ஓய்வு எடுக்க வேண்டும். மீண்டும் படிப்பை தொடர்வது மன ரீதியாக புத்துணர்ச்சி பெற உதவும். படிப்பின் மீது முழு கவனத்தையும் திருப்புவதற்கு வித்திடும்.

    ஊட்டச்சத்து உணவு

    நாள் முழுவதும் இடை இடையே போதுமான அளவு தண்ணீர் பருகுவதன் மூலம் உடல் நீரேற்றத்தை தக்க வைத்துக்கொள்ளும். படிப்புக்கு இடையே சத்தான சிற்றுண்டிகளை சாப்பிட வேண்டும். அது அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிறைந்த சமச்சீர் உணவாக அமைய வேண்டும். அவை மூளைக்கு ஊட்டமளித்து அதன் செயல்திறனை மேம்படுத்த உதவும். அறிவாற்றல் செயல்பாட்டையும் அதிகப்படுத்தும்.

    போதுமான தூக்கம்

    நினைவகத்தை ஒருங்கிணைப்பதற்கும், ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கும் ஆழ்ந்த தூக்கம் இன்றியமையாதது. மாணவர்கள் தினமும் போதுமான நேரம் தூங்கி எழ வேண்டும். நன்கு ஓய்வு எடுக்கும் மனம் கற்றல் விஷயங்களை மறக்காமல் நினைவில் தக்கவைத்துக்கொள்ளும்.

    பாராட்டு

    நேர்மறை எண்ணங்கள் ஊக்கத்தையும், விடாமுயற்சியையும் உருவாக்கும். எனவே பிள்ளைகளின் முயற்சிகளை அங்கீகரித்து கொண்டாடுங்கள். அவர்கள் படிப்பில் அடைந்திருக்கும் முன்னேற்றம் எவ்வளவு சிறியதாக இருந்தாலும் அதனை சாதனையாக கருதி பாராட்டுங்கள்.

    யாரும் நிர்பந்திக்காமலேயே சுயமாக படிப்பின் மீது ஆர்வத்தை வளர்த்தெடுக்க அது உதவும். அவர்களாகவே குறிப்பிட்ட நேரத்தை படிப்புக்கு ஒதுக்கி விடுவார்கள். நன்றாக படித்து அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கு தங்களை தயார்படுத்திக்கொள்வார்கள்.

     பாடங்களை பிரித்தல்

    முழு ஆண்டுத்தேர்வுக்கு பாடப்புத்தகத்தை முழுமையாக படிக்க வேண்டியிருக்கும். ஒவ்வொரு பகுதிகளாக படித்து முடிப்பதை பெரிய பணியாக உணரலாம். அதில் கடினமான பகுதிகளை படிப்பது சிரமமானதாக, சவாலானதாக சில மாணவர்களுக்கு அமையலாம். ஒவ்வொரு பகுதிகளையும் தனித்தனியாக பிரித்து, அதில் எளிமையான பகுதிகளை முதலில் படிப்பதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

    கடினமான பகுதிகளை அதிகாலை வேளையில் படிப்பதற்கு முயற்சிக்க வேண்டும். இப்படி தரம் பிரிப்பதன் மூலம் விருப்பமான பாடங்களை விரைவாக படித்து முடித்துவிட முடியும். அதனால் படிப்பது பெரும் சுமையாக தோன்றாது. இந்த அணுகுமுறை மன அழுத்தத்தையும் தவிர்க்க உதவும். தினமும் படிக்க தொடங்குவதற்கு முன்பு ஏற்கனவே படித்த பகுதிகளை மீண்டும் ஒருமுறை வாசிப்பது நினைவில் ஆழமாக பதிய உதவும். தேர்வை எளிமையாக எழுதுவதற்கு வழிவகுக்கும்.

    • கும்மி அடித்து ஒப்பாரி வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

    பட்டுக்கோட்டை:

    தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக 100 நாள் வேலைத்திட்ட பணியில் ஈடுபடும் 300க்கும் மேற்பட்ட பெண்கள் மூன்று மாத காலமாக நிலுவையில் உள்ள சம்பள தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தி கும்மி அடித்து ஒப்பாரி வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மார்க்ஸ்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் கந்தசாமி தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் செல்வம் மற்றும் நீலமேகம் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

    அதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி தங்களை எதிர்ப்புகளை தெரிவித்தனர்.

    • வி.பி.சிங், நிதிஷ் குமாருக்கு கருணாஸ் புகழாரம் சூட்டினார்.
    • முக்கு லத்தோர் புலிப்படை அவருக்கு மரியாதையோடு வணக்கம் செலுத்துகிறது.

    பரமக்குடி

    முக்குலத்தோர் புலிப்படை தலைவர் சேது.கருணாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    பசும்பொன் முத்துராம லிங்கத்தேவர் ஜெயந்தி விழாவில் வட இந்திய தலைவர்களுக்கு தமிழ்நாட்டிலிருந்து நான் ஏன் மரியாதை செலுத்து கிறேன் என்று பலர் விமர்சனம் செய்யலாம். நன்றியோடு வாழ்வதே தமிழர் அறம்!. அந்த நன்றிக்குரியோர் இருவர். ஒருவர் மறைந்த பிரதமர் வி.பி.சிங், இன்னொருவர் பீகார் முதல்வர் நிதிஷ்குமார்.

    காங்கிரசுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் ஒரு அரசியல் இயக்கத்தை உருவாக்கி அதில் வெற்றியும் கண்டு இந்தியாவில் மாபெ ரும் அரசியல் ஆளுமையாக விளங்கியவர் முன்னாள் பிரதமர் வி.பி.சிங்.

    பிற்படுத்தப்பட்டவர்க ளுக்கு இடஒதுக்கீடு வழங்கும் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை ஏற்று, இடஒதுக்கீட்டை அமல்படுத்தியதும், காவிரி நதி நீரை எந்தெந்த மாநிலங்கள் எவ்வளவு பகிர்ந்து கொள்வது என்று தீர்ப்பளித்த காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டதும், அம்பேத்கருக்கு 'பாரத ரத்னா' பட்டம் கொடுத்ததும், நாடாளுமன்றத்தில் அவரது படத்தை இடம் பெற வைத்ததும், சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் பிரதமராக இருந்த போது தான் நடந்தது. இந்த பெருமை எல்லாம் அவரையே சேரும்.

    பொது வாழ்விலிருந்து விலகிய பின்னரும் ரிலையன்ஸ் நிறுவனம் நிலம் கையகப்படுத்தியதற்கு எதிராக விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டங் களை முன்னெடுத்து வழி நடத்தி வெற்றி கண்டவர் வி.பி. சிங். இப்படி வி.பி.சிங் தமிழ்நாட்டிற்கு, தமிழர் களுக்கு செய்த நன்மைகள் பல.

    இந்திய விடுதலை போராட்ட தியாகியாக மட்டுமின்றி சமூக விடுதலை நோக்கி வாழ்ந்த பசும்பொன் தேவர் ஜெயந்தி விழாவில் இடஒதுக்கீடு நாயகரை, சமூகநீதி காவலரை முக்குலத்தோர் புலிப்படை இயக்கம் நினைவு கூறி வணக்கம் செலுத்துகிறது. இந்திய விடுதலைக்கு பின்னர் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி முன்னோடியாக திகழும் முதல்வர் நிதிஷ்குமார். ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெ டுப்பு நடத்தி அதன் புள்ளி விவரங்களை வெளியிட்ட பெருமையைக்குரியவர் அவர். இதற்கு முன்பு 1931-ம் ஆண்டு தான் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெ டுப்பு நடந்தது.

    அதை சாத்தியப்படுத்தி இந்திய மாநிலங்களுக்கு பலர் வைக்கும் கோரிக்கை களுக்கு முன்னுதாரணமாக இருப்பவர் பீகார் முதல்வர் நிதிஷ்குமார். சாதி ரீதியான, மத ரீதியான மக்கள் தொகை கணக்கெடுப்புகளை நடத்தி அனைவருக்குமான இட ஒதுக்கீடு- சமூக நீதிக்கு வாசல் திறந்து விட்ட நீதியாளர்களாக நிதிஷ் குமார் திகழ்கிறார்கள். இவ்வேளையில், முக்கு லத்தோர் புலிப்படை அவருக்கு மரியாதையோடு வணக்கம் செலுத்துகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • செந்தில்குமாரை எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட தலைவர் முகமத் ரபி தலைமையிலான நிர்வாகிகள் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
    • குல்ஜார்ஷா மற்றும் இப்ராஹிம் ஷா ஆகியோர் உடன் இருந்தனர்.

    கள்ளக்குறிச்சி :

    சிறையில் உள்ள சிறுபான்மையினரை விடுவிக்க அ.தி.மு.க. சார்பில் சட்டமன்றத்தில் பேசிய கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ., செந்தில்குமாரை எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட தலைவர் முகமத் ரபி தலைமையிலான நிர்வாகிகள் சந்தித்து நன்றி தெரிவித்தனர். அப்போது மாவட்ட துணைத் தலைவர் ஷபி, கல்வியாளர் அணி மாநில தலைவர் மாலிக் பாஷா, மாவட்ட பொருளாளர் தாஹிர் அலி, தொகுதி தலைவர் சல்மான், செயற்குழு உறுப்பினர் அசாருதீன், நகர தலைவர் சலிம் பாஷா, நகர பொருளாளர் அப்துல் ரஹீம், ஊடக அணி பொறுப்பாளர் குல்ஜார்ஷா மற்றும் இப்ராஹிம் ஷா ஆகியோர் உடன் இருந்தனர்.

    • சிவபெருமான் அபிஷேகப் பிரியர்.
    • சிவனை வழிபட்டால் சகல தோஷங்களும் விலகும்.

    சாதாரண பிரதோஷ வேளைகளில் சிவாலயம் சென்று வழிபட்டால், ஒரு வருடம் ஆலயம் சென்று இறைவழிபாடு செய்த பலன் கிடைக்கும்.

    சிவபெருமான் அபிஷேகப் பிரியர். அவருக்கு பிரதோஷத்தன்று கறந்த பசும்பால் கொண்டு அபிஷேகம் செய்து வழிபட்டால் சிறப்பான பலனைப் பெறலாம். இல்லையென்றால் இளநீர் அபிஷேகம் செய்வது நல்லது. இறைவன் இயற்கையை விரும்பக் கூடியவன். எனவே இயற்கையான வில்வ இலை அர்ச்சனையும் சிவபெருமானை மகிழ்ச்சிப்படுத்தும். இது தவிர தும்பைப் பூ மாலை அணிவித்து பிரதோஷம் அன்று, சிவனை வழிபட்டால் சகல தோஷங்களும் விலகும்.

    பிரதோஷ தினத்தில் அதிகாலையில் நீராடி திருநீறணிந்து சிவ நாமம் ஆன நமசிவாய ஓதி உபவாசம் இருக்க வேண்டும். அன்று காலை முதல் பிரதோஷம் முடியும் வரை உணவு தவிர்த்து பிரதோஷ தரிசனம் முடித்து பிரசாதம் உண்டு விரதம் முடிக்க வேண்டும். பின்னர் இரவு உணவு சாப்பிடலாம். இப்படி பதினோறு பிரதோஷங்கள் விரதம் இருந்து சிவனை வழிபட்டால் சிவனருள் கிடைக்கும்.

    பிரதோஷ காலம் என்பது சூரியன் அஸ்தமனத்திற்கு முன் மூன்றே முக்கால் நாழிகையும் சூரியன் அஸ்தமனத்திற்கு பின் மூன்றே முக்கால் நாழிகையும் ஆகும். ஒருநாழிகை என்பது 24 நிமிடங்கள். ஒரு மணிக்கு இரண்டரை நாழிகைகள். ஆக சராசரியாக மாலை 4 மணியில் இருந்து இரவு 7.30 வரை பிரதோஷ காலம் உண்டு. சௌகரியத்திற்காக மாலை 4.30 முதல் 6.00வரை என சொல்லப்படுகிறது.

    பிரதோஷ விரதம் மேற்கொண்டால் திருமணம் கைகூடும், பிள்ளை பாக்கியம் கிடைக்கும், வறுமைவிலகும், நோய்கள் நீங்கும், சகல காரியங்களில் வெற்றிகிடைக்கும், சகல சௌபாக்கியங்களையும் தரக்கூடியது பிரதோஷ விரதம்.

    • தஞ்சை கிழக்கு போலீஸ் நிலையத்தில் 42 கிராம் தங்க நகைகளை ஒப்படைத்தார்.
    • விலை மதிக்க முடியாத பொருட்கள் கிடந்தாலும் போலீசிடம்ன ஒப்படைக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை சிராஜ்பூர் பகுதியை சேர்ந்தவர் பிரபாகர் (வயது 45).

    இவர் தான் அடகு வைத்திருந்த 42 கிராம் (5 பவுன் ) நகைகளை மீட்டு பாக்கெட்டில் வைத்தார்.

    பின்னர் தஞ்சை காந்திஜி சாலையில் உள்ள ஒரு டீக்கடையில் டீ குடித்துவிட்டு பாக்கெட்டை பார்த்தபோது நகைகளை காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உடனடியாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரித்தார்.

    அப்போது தஞ்சை மானம்புச்சாவடியை சேர்ந்த மெக்கானிக் காதர் (45) என்பவர் கீழே கிடந்த நகையை எடுத்தார்.

    இது யாருடைய நகை என விசாரித்தார்.

    அந்த நேரத்தில் அங்கு வந்த பிரபாகர் இது என்னுடைய நகை எனக் கூறினார்.

    இருந்தாலும் நான் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து விடுகிறேன்.

    நீங்கள் உரிய ஆவணங்களை காண்பித்து நகைகளைப் பெற்றுச் செல்லுங்கள் என காதர் கூறினார்.

    அதன் பேரில் காதர் தஞ்சை கிழக்கு போலீஸ் நிலையத்தில் 42 கிராம் தங்க நகைகளை ஒப்படைத்தார்.

    பிரபாகர் உரிய ஆவணங்களை காண்பித்தார்.

    தொடர்ந்து காதர் முன்னிலையில் பிரபாகரிடம் போலீசார் 42 கிராம் தங்க நகைகளை ஒப்படைத்து கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள் என அறிவுறுத்தினர்.

    கீழே கிடந்த நகையை பத்திரமாக எடுத்து அதனை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்த மெக்கானிக் காதருக்கு சால்வை அணிவித்து போலீசார் பாராட்டினர்.

    இது குறித்து காதர் கூறும்போது, அடுத்தவர்கள் பொருட்களுக்கு நாம் ஆசைப்படக்கூடாது.

    கீழே நகை, பணம் என எந்த விலை மதிக்க முடியாத பொருட்கள் கிடந்தாலும் உடனடியாக போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும்.

    நேர்மையாக இருக்க வேண்டும்.

    அப்படி இருந்தாலே மனதிற்கு மன நிம்மதிதான் என்றார்.

    காத்ரின் இந்த மனித நேயமிக்க செயலை போலீசார் மட்டுமின்றி அனைவரும் மனதார பாராட்டினர்.

    • சோம்பேறியாக இருந்தால் முன்னேற்றமே இருக்காது.
    • ஓய்வுக்கும், சோம்பேறித்தனத்திற்கும் வேறுபாடு உள்ளது.

    சோம்பேறித்தனத்தில் இருந்து நாம் எப்படி வெளியே வருவது என்பதை நாம் கொஞ்சம் சோம்பேறித்தனத்தை தவிர்த்துவிட்டு ஒருசில எளிய வழிகளை பார்க்கலாம்.

    சோம்பேறியாக இருந்தால் முன்னேற்றமே இருக்காது. இந்த சோம்பேறித்தனம் நம்மகிட்ட ஏற்படுவதற்கு முதலில் என்ன காரணம் என்று பார்த்தால் நாம் எடுக்கும் ஓய்வுக்கும், சோம்பேறித்தனம் என்பதற்கும் வேறுபாடு உள்ளது. வேலைநிறைய செய்துவிட்டு அத்தகைய வேலைப்பளுவின் காரணமாக எடுப்பது தான் ஓய்வு.

    ஆனால் வேலையே செய்யாமல் வேலைசெய்தமாதிரி ஓய்வு எடுத்துக்கொள்வது தான் சோம்பேறித்தனம். அது ஏன் நமக்கு ஏற்படுகிறது என்றால் பலவகையான காரணங்கள் உள்ளது. அதைவிட்டுவிட்டு சோம்பேறித்தனத்தை எப்படி தவிர்ப்பது என்பதை பார்க்கலாம்.

    முதல்வழி என்னவென்றால் நாம் நம்மை ஆராய்ந்து பார்த்து தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும். அதிகமாக வேலை செய்வதால் இந்த சோம்பேறித்தனமா அல்லது நீண்டதூரத்துக்கு பயணம் செய்வதால் சோம்பேறித்தனம் வருகிறதா? ரத்த சோகையால் சோம்பேறித்தனமா, ஹார்மோன் இம்பேலன்ஸ்டு என்னும் நோயால் சோம்பேறித்தனம் உள்ளதா, இந்த சோம்பேறித்தனம் ஏன் என்று நமக்கு ஏற்படுகிறது என்று பார்க்க வேண்டும். அதற்கு நம்மை நாமே ஆராய்ந்து பார்த்து தெளிவுபடுத்தி அட்டவணைப்படுத்த வேண்டும்.

    இரண்டாவதாக சோம்பேறித்தனம் நம்மை விட்டு அகலவேண்டும் என்றால் நாம் நம்முடைய செயலை அப்புறம் பார்த்துக்கொள்ளலாம். நம் வேலையை பிறகு செய்துகொள்ளலாம் என்னும் வார்த்தையை சொல்லவே கூடாது. ஒரு விஷயம் சொல்வார்கள் நன்றே செய். அந்த நன்றும் அன்றே செய். நாம சொல்லக்கூடிய நல்ல விஷயங்களை இன்றே செய்ய வேண்டும். அதுவும் அன்றே செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம் என்றால் கண்டிப்பாக சோம்பேறித்தனம் அண்டவே அண்டாது.

    மூன்றாவதாக ஓய்வே இல்லாமல் இருப்பது, சரியான தூக்கம் இல்லாமல் இருப்பது போன்ற விஷயங்கள் நமக்கு ஒருவித சோம்பேறித்தனத்தை ஏற்படுத்தும். நாம் ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் தூங்க வேண்டுமோ அதே அளவுக்கு தூக்கம் நமது உடலுக்கு மிகவும் முக்கியம். இரவில் நன்றாக உறங்கினால் மட்டுமே பகலில் சோம்பேறித்தனம் நமக்கு வரவே வராது. ஆனால் நாம் தற்போது நமது உடலுக்கு தேவையான உறக்கத்தை கொடுப்பதில்லை. அதற்கு பதிலாக ஸ்மார்ட் போனை கையில் வைத்துக்கொண்டு நீண்டநேரம் செல்போனிலேயே பொழுதை கழிக்கிறோம். அதுவும் ஒரு காரணம்.

    நாம் செல்போனில் பொழுதை கழிப்பதில் ஒரு வரைமுறை வைத்துக்கொண்டு செயல்பட வேண்டும். இல்லையென்றால் நேரம் விரையமாகுமே தவிர எந்த பலனும் இருக்காது. சோம்பேறித்தனம் தான் மிஞ்சும்.

    நான்காவதாக ஒரு செயலை செய்கின்றபோது அதனால் நமக்கு என்ன நன்மை கிடைகிறது என்பதை ஆராய்ச்சி செய்ய வேண்டும். உதாரணத்துக்கு உடற்பயிற்சி செய்வதால் நமக்கு உடல் இளைக்கும், பார்ப்பவர்கள் நம்மை பாராட்டுவார்கள், ஆரோக்கியமாக இருக்கலாம். ஆனால் அதைவிடுத்து உடற்பயிற்சி எடுக்கவில்லை என்றால் உடல் கெட்டுவிடும், உடல் எடை அதிகரிக்கும், பார்ப்பவர்கள் எல்லோரும் கேட்பார்கள். அது நமக்கு பலவீனத்தை கொடுக்கும்.

    ஒரு செயலை நாம் எப்போது சிறப்பாக செய்யும் போது அதனால் கிடைக்கும் பலன்களும் அதிகமாக இருக்கும். ஒரு செயலை செய்யாமல் இருந்தால் அதனால் ஏற்படும் இழப்புகளையும் நாம் யோசித்து செயல்பட்டால் சிறப்பாக செயல்பட ஏதுவாக இருக்கும்.

    ஐந்தாவதாக நாம் நம்மை முதலில் உற்சாகப்படுத்திக்கொள்ள வேண்டும். நான் சரியாக தான் செய்கிறேன். என்னுடையை வேலையை நான் சிறப்பாக செய்துள்ளேன். என்னால இந்த செயலை செய்ய முடியும். என்னால் வெற்றிபெற முடியும் என்று நம்மை நாமே உற்சாகப்படுத்திக்கொண்டால் சோம்பேறித்தனத்தில் இருந்து வெளியே வரலாம்.

    ஆறாவதாக நாம நமக்கு ஒரு லட்சியத்தை தேர்வு செய்துகொள்ள வேண்டும். எடுக்கும் லட்சியத்தை சிறிய விஷயத்தில் எடுக்க வேண்டும். ஒருவேளை பெரிய லட்சியத்தை எடுத்து அதை சாதிக்க முடியாமல் சென்றால் அதை இந்த சமூகம் கேளிக்கூத்தாகத் தான் பார்க்கும். எனவே நம்மை இன்னும் சோம்பேறித்தனத்திற்குள் தள்ளிவிடும். நாம் நம் முயற்சியை கைவிட்டுவிடுவோம். அதனால் சிறிய சிறிய லட்சியங்களை தேர்வு செய்து வெற்றிபெறலாம். நமக்கு அது ஒரு உற்சாகத்தை கொடுக்கும். எனவே படிப்படியாக வாழ்த்துகளையும், மற்றவர்களின் பாராட்டுகளையும் எடுத்துக்கொண்டு மகிழ்ச்சியுடன் அடுத்தக்கட்டத்திற்கு செல்ல முடியும். சோம்பேறித்தனம் நம்மை அண்டவே அண்டாது என்பதை தெளிவாக நாம் புரிந்துகொள்ளலாம்.

    • பெங்களூரு, பி.இ.எல். நிறுவனத்தில் தொழில் பயிற்சி முடித்து டி.ஆர்.டி.ஓ. மேல் பட்டயபடிப்பில் தேர்ச்சி பெற்று இஸ்ரோவில் சேர்ந்தார்.
    • காமேஸ்குருவுக்கு அவரது கிராம மக்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    ஒட்டன்சத்திரம்:

    சந்திரயான்-3 வெற்றித் திட்டத்தில் பங்காற்றிய ஒட்டன்சத்திரம் மற்றும் திண்டுக்கல்லைச் சேர்ந்த விஞ்ஞானிகளுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சத்திரப்பட்டி வேலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் அதே ஊரில் அரசு தொடக்கப்பள்ளியில் 5ம் வகுப்பு வரை படித்து பின்னர் அரசு உயர்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு வரை பயின்றார்.

    பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் என்ஜினீயரிங் பட்டயபடிப்பு படித்தார். அதன் பின் பெங்களூரு, பி.இ.எல். நிறுவனத்தில் தொழில் பயிற்சி முடித்து டி.ஆர்.டி.ஓ. மேல் பட்டயபடிப்பில் தேர்ச்சி பெற்று இஸ்ரோவில் சேர்ந்தார்.

    பணியில் இருந்தபடியே பி.இ. மற்றும் எம்.இ. பட்டம் முடித்தார். இஸ்ரோவில் 35 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றி தற்போது பெங்களூருவில் ஜியோ கமாண்டட் எலக்ட்ரானிக்ஸ் சிஸ்டம் துறை தலைவராக பணிபுரிந்து வருகிறார். இவரது ஆராய்ச்சி கட்டுரைகளை இந்தியா, வெளிநாடு, பல்கலைக்கழகங்கள் பரிந்துரை செய்துள்ளன.

    சிறிய கிராமத்தில் பிறந்து இஸ்ரோ விஞ்ஞானியாக பணிபுரிந்து சந்திரயான்-3 திட்டத்தில் பங்கேற்றிய ரவிச்சந்திரனுக்கு உள்ளூர் கிராம மக்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

    இதே போல் திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள கம்பிளியம்பட்டியைச் சேர்ந்தவர் காமேஸ்குரு. இவர் அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு வரை படித்தவர். பின்னர் எம்.எஸ்.பி. பள்ளியில் பிளஸ்-2 வரை படித்தார். அதனைத் தொடர்ந்து திருச்சி அரியமங்கலம் தொழில்நுட்ப நிறுவனத்தில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் முடித்து டிப்ளமோ பட்டதாரியானார். என்.ஐ.டி.டி.யில் இருந்து எம்.எஸ். (நான்டிஸ்ட்ரக்டிவ் டெஸ்டிங்) முடித்தவர். அதன் பின் இஸ்ரோ விஞ்ஞானியாக 12 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வருகிறார். சந்திரயான்-3 பணியில் ஏவுகணை வாகனம், செயற்கைகோள் உந்து விசை அமைப்புகளில் தனது பங்களிப்பை வழங்கியுள்ளார். செயற்கை கோள் திரவ என்ஜின் தரக்கட்டுப்பட்டில் என்ஜினீயராக உள்ளார்.

    சந்திரயான்-3 வெற்றியில் மட்டுமின்றி சந்திரயான்-2 மற்றும் ஆதித்யா செயற்கைகோள் திட்டங்களிலும் பணிபுரிந்து பெரும் பங்கு வகித்துள்ளார். காமேஸ்குருவுக்கு அவரது கிராம மக்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    • பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்து க்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    • செஞ்சி நகர செயலாளர் கார்த்திக் நன்றி கூறினார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க. அவசர செயற்குழு ஆலோசனை கூட்டம் செஞ்சி திருவண்ணாமலை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் டாக்டர் சேகர் தலைமை தாங்கினார். செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் வரவேற்றார். நிகழ்ச்சியில் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலா ளரும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சருமான செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு சிறப்புரை யாற்றினார். கூட்டத்தில் இஸ்ரோ திட்ட இயக்கு னராக செயலாற்றி இந்திய நாட்டிற்கும், தமிழ்நாட்டி ற்கும் பெருமை சேர்த்த நமது விழுப்புரம் மாவட்டம் வீரமுத்து வேலுக்கு பாராட்டு களையும் வாழ்த்துகளையும் தெரிவித்தும், உலக செஸ் விளையாட்டு போட்டியில் 2-வது இடத்தில் வெற்றி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த இளம் வயது வீரர் பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்து க்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் செந்தமி ழ்ச்செல்வன், மாசிலாமணி, சேதுநாதன், சீதாபதி சொக்கலிங்கம், மாநில தீர்மானகுழு உறுப்பினர் செஞ்சி சிவா, மாவட்ட விவசாய அணி அஞ்சாஞ்சேரி கணேசன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த், பொதக்குழு உறுப்பினர் மணிவண்ணன், ஒன்றிய செயலாளர் பச்சையப்பன், அண்ணாதுரை, துரை, இளம்வழுதி, மணிமாறன், திண்டிவனம் நகர மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன், செஞ்சி ஒன்றிய குழு துணை தலைவர் ஜெயபாலன், மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். செஞ்சி நகர செயலாளர் கார்த்திக் நன்றி கூறினார்.

    • கர்ப்பிணிகளை தொடர்பு கொண்டு தொடர் பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப் படுகிறது.
    • 1,090 கர்ப்பிணிகளில் 600 கர்ப்பிணிகள் அதிக கவனம் தேவைப்படும் கர்ப்பிணிகளாக கண்டறியப்பட்டுள்ளனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகராட்சிக்குட்பட்ட கல்லுக்குளம், கரந்தை, மானம்புச்சாவடி மற்றும் சீனிவாசபுரம் ஆகிய 4 இடங்களில் உள்ள நகர்புற சுகாதார நிலையங்களில் தற்போது கர்ப்பகால பரிசோதனைகள் செய்து வரும் 1,090 கர்ப்பிணிகளில் 600 கர்ப்பிணிகள் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், ரத்த சோகை, தைராய்டு மற்றும் முந்தைய பிரசவ அறுவை சிகிச்சை போன்ற அதிக கவனம் தேவைப்படும் கர்ப்பிணிகளாக கண்டறியப்பட்டுள்ளனர்.

    இவர்கள் அனைவரும் கடந்த மார்ச் மாதம் முதல் தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் சிறப்பாக இயங்கி வரும் தாய்சேய் நல கண்காணிப்பு மையத்தின் வழியாக கண்காணி க்கப்பட்டு வருகின்றனர்.

    மேலும் நகர்புற ஆரம்ப சுகாதார செவிலியர்களுக்கு சிவப்பு நிறத்தில் குறிக்கப்பட்டிருந்த கர்ப்பிணிகளை தொடர்பு கொண்டு தொடர் பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு, அவர்களை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரவழைத்து உரிய பரிசோதனைகள் மேற்கொண்டு சிவப்பு நிறத்தை பச்சை நிறமாக மாற்றிய விவரங்கள் மீண்டும் தாய்சேய் நல கண்காணிப்பு மையத்திற்கு அனுப்பி கண்காணிக்கப்படுகிறது.

    இந்தநிலையில் தாய்சேய் நல கண்காணிப்பு மையத்திற்கு மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மை செயலாளர் ககன்தீப் சிங்பேடி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது இந்த தாய்சேய் நல கண்காணிப்பு மையத்தின் செயல்பாடுகளை பாராட்டினார்.

    ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப், மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், தஞ்சை மருத்துவக்கல்லூரி முதல்வர் பாலாஜிநாதன், இணை இயக்குநர் (சுகாதார பணிகள்) திலகம், துணை இயக்குநர் கலைவாணி ஆகியோர் உடன் இருந்தனர். மாநகர்நல அலுவலர் சுபாஷ் காந்தி, தாய்சேய் நல கண்காணிப்பு மைய செயல்பாடுகளை விளக்கி கூறினார்.

    முன்னதாக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி, ராசாமிராசுதார் அரசு ஆஸ்பத்திரி, கல்லுக்கு ளம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தையும் அரசு முதன்மை செயலாளர் ஆய்வு மேற்கொண்டார்.

    ×