search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rubbish"

    • கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவுக்கு வந்து கலை நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர்.
    • குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிப்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    தஞ்சாவூர்:

    ரஷ்யா நாட்டை சேர்ந்த கலைஞர்கள் 15 பேர் இந்தியா- ரஷ்யா இடையேயான ஒருமைப்பாட்டை உணர்த்தும் வகையில் இந்தியாவின் பல்வேறு இடங்களில் சுற்று பயணம் செய்து அந்தந்த மாநிலங்களில் உள்ள கலாச்சாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    இந்தியா- ரஷ்யா வர்த்தக சபை அழைப்பின் பேரில் இக்குழுவினர் கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவுக்கு வந்து கலை நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர்.

    அதன்படி ரஷ்ய கலைஞர்கள் குழு தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் கலைநிகழ்ச்சிகளை முடித்து விட்டு தஞ்சாவூருக்கு வந்தனர். தஞ்சை பெரிய கோவிலை சுற்றி பார்த்து விட்டு மாலையில் மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்தனர்.

    அவர்களை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், ஆணையர் சரவணகுமார் மற்றும் அலுவலர்கள் வரவேற்றனர். பின்னர் ரஷ்ய கலைஞர்கள் மாநகராட்சி கூட்டம் நடைபெறும் அரங்கை பார்வையிட்டனர். அவர்களுக்கு கூட்டம் நடைபெறும் விதம் குறித்து மேயரும், ஆணையரும் எடுத்துக் கூறினர்.

    இதையடுத்து மாநகராட்சி அலுவலகம் முன்புள்ள செல்பி பாயிண்ட்டில் அவர்கள் செல்பி எடுத்த மகிழ்ந்தனர்.

    அப்போது தஞ்சாவூர் மாநகராட்சி தூய்மையை பராமரிப்பதில் முன்னோடியாக விளங்குகிறது. மாநகராட்சி சுத்தமாகவும், அழகாகவும் உள்ளது. தூய்மையை பராமரிப்பதில் சிறந்து விளங்குவதாக பாராட்டினர்.

    மேலும் மாநகராட்சி செயல்படும் விதம் குறித்தும் பெருமிதம் கொண்டனர். தொடர்ந்து பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து மஞ்சப்பையின் உபயோகம் குறித்தும், குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிப்பது குறித்தும்
    விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இதனை தொடர்ந்து ரஷ்யா நாட்டின் பாரம்பரிய நடனங்களை ஆடினர். பின்னர்தமிழ் திரைப்பட பாடலுக்கு நடனம் ஆடினர். குறிப்பாக விஜய் நடித்த வாரிசு திரைப்படத்தில் இடம் பிடித்த ரஞ்சிதமே என்ற பாடலுக்கு திரைப்படத்தில் வருவது போன்று நடனம் ஆடியது அனைவரையும் கவர்ந்தது.

    தொடர்ந்து பல்வேறு பாடல்களுக்கு ஆரவாரமாக நடனம் ஆடினர். முடிவில் ரஷ்யா கலைஞர்கள் அனைவருக்கும் மேயர் சண் ராமநாதன், ஆணையர் சரவணகுமார் ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

    • இத்திட்டத்தை பள்ளிகள், உணவகங்கள் அவர்களின் இடத்திலேயே செயல்படுத்த முன்வரவேண்டும்.
    • மக்கும் குப்பைகளை நகராட்சி நுண்ணுரம் தயாரிப்பு மையம் மூலம் இயற்கை முறையில் மக்க வைக்கப்பட்டு சுத்தம் செய்து விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதியில் சிறந்த குப்பை மேலாண்மை செய்யும் வணிக நிறுவனங்கள், பள்ளிகளுக்கு பாராட்டு சான்று வழங்கும் நிகழ்ச்சி ஆணையர் அப்துல் ஹரிஸ் தலைமையில் நடைபெற்றது.

    நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் சான்று வழங்கி பேசும்போது, நகராட்சி பகுதிகளில் தினசரி சேகரிக்கபடும் குப்பைகளில் மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம் பிரித்து குப்பையிலிருந்து செல்வம் என்ற திட்டத்தின் கீழ் மக்கும் குப்பைகளை நகராட்சி நுண்ணுரம் தயாரிப்பு மையம் மூலம் இயற்கை முறையில் மக்க வைக்கப்பட்டு சுத்தம் செய்து விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    மேலும் இத்திட்டத்தை பள்ளிகள், உணவகங்கள் அவர்களின் இடத்திலேயே செயல்படுத்த முன்வரவேண்டும்.

    துப்புரவு பணியாளர்களிடம் குப்பைகளை தரம் பிரித்து வழங்குவதன் மூலம் நகரை தூய்மை நகராக பராமரிக்க முடியும். இதற்கு அனைவரின் ஒத்துழைப்பு தேவை என்றார்.

    நுண்ணுரம் தயாரிப்பு பணியை செய்துவரும் பாலம் தொண்டு நிறுவனத்திற்கான பாராட்டு சான்றினை செயலாளர் செந்தில்குமார் பெற்றுக்கொண்டார்.

    முன்னதாக துப்புரவு பணியாளர்களுக்கு மருத்துவ அலுவலர் டாக்டர் ஆதேஸ் தலைமையில் மருத்துவ முகாம் நடைப்பெற்றது. நிகழ்ச்சியில் சுகாதார மேற்பார்வையாளர்கள், வீரையன், ஈ ஸ்வரன், சுகாதார ஒருங்கிணைப்பாளர் அம்பிகா, சுகாதார பணியாளர்கள், கலந்து க்கொண்டனர்.

    • குப்பைகளை அகற்றி நகரை தூய்மையாக வைத்திருக்க முக்கிய பங்கு வகித்தனர்.
    • தூய்மை பணியாளர்களுக்கு சந்தனம் கொடுத்து வரவேற்று அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தீபாவளியை யொட்டி தஞ்சை மாநகரில் சேர்ந்த குப்பைகளை அதிகாலை முதலே தூய்மை பணியாளர்கள் போர்க்கால அடிப்ப டையில் செயல்பட்டு குப்பை களை அகற்றி நகரை தூய்மை யாக வைத்திருக்க முக்கிய பங்கு வகித்தனர்.

    இதனை யொட்டி தூய்மை பணியாளர்களின் பணியை பாராட்டி கவுரவித்து ஊக்கப்படுத்தும் வகையில் தஞ்சை ஜோதி அறக்கட்டளை மற்றும் தஞ்சை மாவட்ட காவல்துறை இணைந்து தஞ்சை மாநகராட்சி 12-வது பிரிவை சேர்ந்த காமராஜர் நகர், ராஜராஜன் நகர், மாதவ்ராவ் நகர், உழவர் சந்தை, முனியாண்டவர் காலனி, அண்ணா நகர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய தூய்மை பணியாளர்களுக்கு சந்தனம் கொடுத்து வரவேற்று அறுசுவை உணவு வழங்கும் நிகழ்ச்சி மாதவ்ராவ் நகரில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா சரவணன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயந்தி ஆகியோர் கலந்துகொண்டு தூய்மை பணியாளர்களுக்கு அறுசுவை உணவு பரிமாறி கவுரவித்தனர்.

    பின்னர், இன்ஸ்பெக்டர் சந்திரா சரவணன் பேசுகையில், தெருக்களை சுத்தமாக வைத்துக்கொண்டு நோய் தொற்றிலிருந்து காப்பாற்று வதால் பொதுமக்களில் ஒருவராக நாங்கள் உங்களுக்கு என்றென்றும் கடன்பட்டிருப்பதாகவும் அதுவும் விழா காலங்களில் சேரும் அதிகப்படியான குப்பைகளை விரைந்து அகற்றி நகரை அழகாக்குவதில் தூய்மை பணியாளர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது என்றார்.

    சப்-இன்ஸ்பெக்டர் ஜெயந்தி பேசுகையில், பண்டிகை காலத்தில் டன் கணக்கில் சேர்ந்த குப்பைகளை அதிகாரிகள் முதல் பணியாளர்கள் வரை ஒற்றுமையுடன் செயல்பட்டு விரைந்து அகற்றி நகரை தூய்மையாக்கியதை வெகுவாக பாராட்டினார்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை ஜோதி அறக்கட்டளை செயலாளர் டாக்டர் பிரபு ராஜ்குமார் மேற்பார்வையில் அறக்கட்டளை மேலாளர் ஞானசுந்தரி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    • கோவிலை சுற்றி குவிந்து கிடக்கும் குப்பைகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
    • இந்த கோவிலானது குரு சாபம் நீக்கப்பட்ட பிரசித்தி பெற்ற தலம் ஆகும்.

    அருப்புக்கோட்டை

    அருப்புக்கோட்டை நகராட்சி பகுதிகளில் 36 வார்டுகள் உள்ளன. இந்த பகுதிகளில் முறையாக குப்பைகளை அள்ளாமலும், சாக்கடைகளை தூர் வாராமலும் இருப்பதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். அருப்புக்கோட்டையில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த மீனாட்சி சொக்கநாதர் கோவில் சொக்கலிங்கபுரம் பகுதியில் அமைந்துள்ளது. இந்த கோவிலானது குரு சாபம் நீக்கப்பட்ட பிரசித்தி பெற்ற தலம் ஆகும். இன்னும் சில தினங்களில் அந்த கோவிலில் ஆனித்திருவிழா நடைபெற உள்ளது.

    கோவிலைச் சுற்றி அந்தப்பகுதி மக்கள் கொட்டிய குப்பைகளை உடனடியாக அகற்றாமல் நகராட்சி நிர்வாகம் அலட்சியத்துடன் செயல்பட்டு வருவதாகவும், வீட்டிற்கு வீடு குப்பைகளை சரிவர வாங்க பணியாளர்கள் வருவதில்லை என்றும் அந்தப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். இது குறித்து நகராட்சி ஆணையாளர், சேர்மன் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • தஞ்சையில் பல நாட்களாக தேங்கி கிடந்த குப்பைகள் அகற்றபட்டது.
    • மாநகராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் என்.கஸ்தூரி தலைமையில் மேற்கண்ட இடங்களில் தூய்மை பணியாளர்கள் சுகாதார பணி மேற்கொண்டனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகராட்சி 34-வது வார்டு சீனிவாசம்பிள்ளை சாலை பகுதியில் ஒரு காம்ப்ளக்ஸ் பின்புறம் சில இடங்களில் குப்பைகள் பல நாட்களாக சூழ்ந்து காணப்பட்டது.

    மேலும் கழிவுநீர் வாய்க்கால் மேல்புறம் செடி கொடிகள் படர்ந்து புதர்போல் காட்சியளித்தது. இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டது.

    இதையடுத்து மாநகராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் என்.கஸ்தூரி தலைமையில் மேற்கண்ட இடங்களில் தூய்மை பணியாளர்கள் சுகாதார பணி மேற்கொண்டனர்.

    செடி, முட்புதர்களை வெட்டி அப்புறப்படுத்தி கழிவுநீர் அதற்குரிய வழிகளில் தடையில்லாமல் ஓட விடப்பட்டது. தேங்கியிருந்த குப்பைகள் அகற்றப்பட்டன. இதனால் தற்போது அந்த இடம் சுத்தமாக காட்சியளிக்கிறது.

    ×