search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "crowd"

    • கிராமத்தில் சுமார் 400-க்கும் மேற்பட்டடோர் வசித்து வருகிறார்.
    • அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதிப்பட்டு வருகிறார்கள்.

    சீர்காழி: சீர்காழி அருகே கீழ மாத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட குமாரக்குடி கிராமம் உள்ளது.

    இந்த கிராமத்தில் சுமார் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

    கடந்த 20 வருடங்களுக்கு மேலாக குடிநீர், சாலை உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இந்த கிராமத்திற்கு ஊராட்சி நிர்வாகம் செய்து தர வில்லை என கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    ஒவ்வொரு முறையும் தங்களது பகுதிக்கு வாக்கு சேகரிக்க வரும் வேட்பாளர்கள் தங்களது கிராமத்தில் உள்ள அடிப்படை வசதி களை நிவர்த்தி செய்து தருவதாக வாக்குறுதி அளித்து செல்கின்றனர்.

    ஆனால் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு அவர்கள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றனர்.

    இந்நிலையில் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும், பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது கிராமத்திற்கு வாக்கு சேகரிக்க வரக்கூடாது என போஸ்ட ர்கள் மற்றும் பேனர்கள் அடித்து கிராமப் பகுதியில் ஒட்டி உள்ளனர்.

    இந்நிலையில் குமாரகுடி கிராமத்தில் கிராம மக்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

    அதில் தங்களது கிராமத்திற்கு இது வரையில் எந்த ஒரு அடி ப்படை வசதிகளும் செய்து தராத அரசியல் கட்சி வேட்பாளர்கள் யாரும் தங்களது பகுதியில் வாக்கு சேகரிக்க வரக்கூடாது எனவும், இது தொடர்பாக எந்த ஒரு நடவடிக்கையும் சம்பந்தப்பட்ட துறை அதி காரிகள் நடவடிக்கை எடுக்க வில்லை எனில் வருகிற 14-ம் தேதி தங்களது ஆதார் மற்றும் ரேஷன் கார்டுகளை வட்டாட்சி யரிடம் ஒப்படைக்க போவதாகவும் கிராம மக்கள் கூட்டத்தில் முடிவு செய்துள்ளனர்.

    • புதிய படம் தொடர்பான அறிவிப்புகளும் வெளியாகும்.
    • ரசிகர் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத சூழல்.

    பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சல்மான் கான். ஒவ்வொரு ஆண்டும் ரம்ஜான் பண்டிகை தினத்தில் தனது வீட்டின் முன் கூடும் ரசிகர்களை சந்தித்து அவர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார். மேலும், இவரது புதிய படம் தொடர்பான அறிவிப்புகளும் வெளியாவது வாடிக்கையான விஷயம் தான்.

    அந்த வகையில், ரம்ஜான் பண்டிகை நாளான (ஏப்ரல் 11) இன்று சல்மான் கானுக்கு வாழ்த்து தெரிவிக்க ஏராளமான ரசிகர்கள் மும்பையில் உள்ள அவரது வீட்டின் முன் கூடினர். ஒரே சமயத்தில் ஏராளமான ரசிகர்கள் வீட்டின் முன் ஒன்று கூடியதால், அங்கு காவலர்கள் குவிக்கப்பட்டனர். எனினும், காவலர்களால் ரசிகர் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத சூழல் உருவானதாக தெரிகிறது.

    ஒரு கட்டத்தில் கூட்டம் தொடர்ந்து அதிகரிக்க காவலர்கள் தடியடி நடத்தி ரசிகர்களை அங்கிருந்து கலைந்து போக வலியுறுத்தினர். ரம்ஜான் பண்டிகையை ஒட்டி நடிகருக்கு வாழ்த்து தெரிவிக்க கூடிய ரசிகர்கள் மீது தடியடி நடக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    முன்னதாக ரம்ஜான் பண்டிகையை ஒட்டி சல்மான் கான் நடிக்கும் புதிய படம் தொடர்பான அறிவிப்பு வெளியானது. இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கும் புதிய படத்திற்கு "சிக்கந்தர்" என தலைப்பிடப்பட்டு இருக்கிறது.



    • விவேகானந்தர் மண்டபம் செல்ல படகுத்துறையில் 2 மணி நேரம் காத்திருந்தனர்.
    • குறிப்பாக கேரளா மற்றும் வட மாநில சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.

    கன்னியாகுமரி:

    சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

    சபரிமலை சீசன் முடிந்த நிலையில் சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் குறைந்த வண்ணமாக இருந்தது. இருப்பினும் வாரத்தின் கடைசி நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிக அளவில் காணப்படுகிறது.

    இந்த நிலையில் வார இறுதி விடுமுறை நாளான இன்று (ஞாயிற்றுகிழமை) கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிமாக இருந்தது. குறிப்பாக கேரளா மற்றும் வட மாநில சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.

    கன்னியாகுமரி கடலில் சூரியன் உதயமாகும் காட்சியை முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியிலும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு கிழக்கு பக்கம் உள்ள கிழக்கு வாசல் கடற்கரை பகுதியில் நின்று சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.

    கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்ப்பதற்காக அதிகாலையிலேயே படகுத்துறையில் சுற்றுலா பயணிகள் வந்து காத்து இருந்தனர். காலை 8 மணிக்கு படகுபோக்குவரத்து தொடங்கியது.

    சுமார் 2மணி நேரம் படகு துறையில் சுற்றுலா பயணிகள் காத்திருந்து படகில் பயணம் செய்து விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டு விட்டு திரும்பினர்.

    மேலும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், திருப்பதி வெங்கடாஜலபதி கோவில், கொட்டாரம் ராமர் கோவில், சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில், விவேகானந்த கேந்திர வளாகத்தில் அமைந்துஉள்ள பாரத மாதா கோவில், ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடம், காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், அரசு அருங்காட்சியகம், கலங்கரை விளக்கம், மீன்காட்சி சாலை, அரசு பழத்தோட்டம் சுற்றுச்சூழல் பூங்கா வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. சுற்றுலா பயணிகள் வருகை "திடீர்"என்று அதிகரித்ததால் கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுஇருந்தது. கடலோர பாதுகாப்பு குழுமபோலீசார், சுற்றுலா போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    • பக்தர்களின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் போலீசாரும் உள்ளனர்.
    • தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த பக்தர்கள், சபரிமலைக்கு செல்வதில் உள்ள சிரமங்களை பார்த்துவிட்டு பாதியிலேயே திரும்புகிறார்கள்.

    கடவுளின் தேசம் என்று அழைக்கப்படும் கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது சபரிமலை ஐயப்பன் கோவில். பத்தினம்திட்டா மாவட்டத்தில் கடுமையான வனப்பகுதிக்கு நடுவே, கடல் மட்டத்தை ஒப்பிடுகையில் 914 மீட்டர் உயரத்தில் மலைக்கு உச்சியில் இருக்கிறது சபரி மலை ஐயப்பன் கோவில்.

    இந்த கோவிலுக்கு கேரள மாநிலம் மட்டுமின்றி தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக தமிழகத்திலிருந்து பல லட்சம் பக்தர்கள் ஆண்டுதோறும் மாலை அணிந்து 48 அல்லது 60 நாட்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி சபரிமலைக்கு செல்கிறார்கள்.

    ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் 5 நாட்கள் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படும். அதேபோல் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதத்தில் தொடர்ச்சியாக பல நாட்கள் கோவில் நடை திறந்திருக்கும். இதனால் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வருவது வழக்கம்.

    சபரிமலைக்கு ஒவ்வொரு ஆண்டும் கன்னி சாமியாக (முதன்முறை) ஏராளமானோர் வருகிறார்கள். அது மட்டுமின்றி ஒரு முறை இங்கு வருவார்கள் அடுத்தடுத்த ஆண்டுகளில் தொடர்ச்சியாக வருவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இதனால் சபரிமலைக்கு வரக்கூடிய பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்தபடியே உள்ளது. இதன் காரணமாக மண்டல மற்றும் மகர விளக்கு சீசனில் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் இருக்கும்.

    பக்தர்கள் வருகைக்கு தகுந்தாற்போல் பம்பையில் இருந்து சன்னிதானம் வரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் கூட்டத்தை ஒழுங்குபடுத்தி அனுப்புவார்கள். இருந்த போதிலும் சாமி தரிசனத்திற்கு பக்தர்கள் பல மணி நேரம் காத்திருப்பது தவிர்க்க முடியாத ஒன்றாகும். இருந்தபோதிலும் அந்த காத்திருப்பு பல ஆண்டுகளுக்கு முன்பு வரை பக்தர்களுக்கு பெரிய சிரமமாக தெரிந்ததில்லை.


    ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே சபரி மலைக்கு செல்லும் பக்தர்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகியே சாமி தரிசனம் செய்ய முடிகிறது என்ற கருத்து பரவலாக இருந்து வருகிறது. அதிலும் இந்த ஆண்டு நடந்து வரும் மண்டல மற்றும் மகர விளக்கு சீசனில் கடும் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர்.

    கொரோனா தொற்று பரவலுக்கு பிறகு சபரிமலையில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும் என்ற நடைமுறை கடைபிடிக்கப்படுகிறது. மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலம் மட்டுமின்றி மாதாந்திர பூஜை நடக்கக்கூடிய நேரத்திலும் இந்த ஆன்லைன் முன்பதிவு முறையே கடந்த சில ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    ஆன்லைன் முன்பதிவின்படி ஒரு நாளைக்கு 80 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. மேலும் பக்தர்கள் வசதிக்காக உடனடி முன்பதிவு முறையும் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. ஆண்டுதோறும் சபரிமலைக்கு வந்து அய்யப்பனை தரிசிக்க வேண்டும் என்பதே ஒவ்வொரு ஐயப்ப பக்தரின் விருப்பமாக இருக்கும். இதனால் அய்யப்ப பக்தர்கள் எந்த கட்டுப்பாட்டுக்கும் அஞ்சுவதும் இல்லை, அதனை கடைபிடிக்க தவறுவதும் இல்லை. அதன்படியே ஆன்லைனில் பக்தர்கள் முன்பதிவு செய்து சபரிமலைக்கு வந்தபடி உள்ளனர். இந்நிலையில் தான் நடப்பு ஆண்டு மண்டல பூஜை சீசனில் பக்தர்கள் கடும் சிரமத்தை சந்தித்தனர். ஆன்லைன் முன்பதிவில் ஆயிரக்கணக்கானோர் பதிவு செய்திருந்த நிலையில், உடனடி முன்பதிவு முறையிலும் ஆயிரக்கணக்கானவர்கள் பதிவு செய்து சபரிமலைக்கு வந்தனர். இதனால் பக்தர்கள் வருகை பல மடங்கு அதிகரித்தது. பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக பம்பையிலேயே பக்தர்கள் பல மணி நேரம் தடுத்து நிறுத்தி சபரிமலைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

    அதுமட்டுமின்றி பம்பையில் இருந்து சன்னிதானத்துக்கு செல்லக்கூடிய மலைப்பாதையிலும் கூட பக்தர்கள் ஆங்காங்கே பல மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டார்கள். இதன் காரணமாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய 15 மணி நேரத்திற்கு மேல் ஆகியது. இந்த காலதாமதம் சபரிமலைக்கு வந்த அனைத்து பக்தர்களையும் சிரமம் அடையச் செய்தது. அதிலும் வயதான பக்தர்கள் மற்றும் சிறுவர்-சிறுமிகள் கூட்ட நெரிசலில் சிக்கி மிகவும் கஷ்டப்பட்டனர்.

    இதனை கண்ட கேரள ஐகோர்ட்டு நேரடியாக தலையிட்டு சபரிமலைக்கு வரக்கூடிய பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர உத்தரவிட்டது. மேலும் நெரிசலை தவிர்க்க பல்வேறு வழிமுறைகளையும் ஐகோர்ட் கூறியது. அதனை தேவசம்போர்டு மற்றும் காவல்துறை கடைபிடித்த போதிலும் சபரிமலையில் கூட்ட நெரிசலை தடுக்க முடியவில்லை. மண்டல பூஜை காலத்தில் ஏற்பட்டது போன்று மகர விளக்கு பூஜை காலத்தில் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரளா அரசு தெரிவித்தது. ஆனால் மகர விளக்கு பூஜை காலத்திலும் அதே நிலை தான் நிலவி வருகிறது.

    தங்களது கஷ்டங்களை போக்கி அருள் புரிய வேண்டும் என்று ஐயப்பனை வேண்டுவதற்காக வரக்கூடிய பக்தர்கள், சாமியை தரிசிக்கவே கடுமையான கஷ்டத்தை அனுபவிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். பம்பை, சன்னிதானம் மற்றும் பதினெட்டாம்படி என அனைத்து இடங்களிலும் நெரிசலில் சிக்கியே பக்தர்கள் சாமியை தரிசிக்க முடிகிறது. இதன் காரணமாக குழந்தைகளுடன் வந்த ஐயப்ப பக்தர்கள் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டுவிட்டனர்.

    பக்தர்களின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் போலீசாரும் உள்ளனர். இதன் காரணமாக பதினெட்டாம் படி மற்றும் சன்னிதானத்தில் பக்தர்களை வேகவேகமாக இழுத்து அனுப்புகிறார்கள். அப்படிப்பட்ட நேரத்தில் சில பக்தரக்ள் கீழே விழுந்து காயமடைகிறார்கள். அந்த நேரத்தில் எதிர்ப்பு தெரிவித்த ஐயப்ப பக்தர்கள் சிலரை போலீசார் தாக்கிய சம்பவங்களும் கடந்த சில நாட்களாக அரங்கேறி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக பக்தர்கள் சிலர் பதினெட்டாம்படி பகுதியில் போலீசாரால் தாக்கப்பட்ட நிலையில், பெங்களூருவை சேர்ந்த பக்தர் ஒருவர் நேற்று தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.


    பக்தர்கள் என்று கூட சிந்திக்காமல் போலீசார் அத்துமீறி வருவதாக குற்றம் சாட்டுகின்றனர். இது போன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் ஐயப்ப பக்தர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இதன் காரணமாக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பம்பை வரை வந்துவிட்டு, சபரிமலைக்கு செல்லாமல் தங்களது ஊருக்கே திரும்பி செல்கிறார்கள்.

    தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த பக்தர்கள், சபரிமலைக்கு செல்வதில் உள்ள சிரமங்களை பார்த்துவிட்டு பாதியிலேயே திரும்புகிறார்கள். அவர்கள் பம்பையில் இரு ந்தே மன துக்குள் ஐயப்பனை நினைத்து வணங்கி விட்டு, தங்களது ஊருக்கு கண்ணீருடன் திரும்புவதை காண முடிகிறது. அவ்வாறு சபரிமலைக்கு செல்லாமல் திரும்பக்கூடிய தமிழக பக்தர்கள், வேறு இடங்களில் உள்ள ஐயப்பன் கோவில்களுக்கு சென்று நெய்யபிஷேகம் செய்கிறார்கள்.

    48 மற்றும் 60 நாட்கள் விரதம் இருந்து ஐயப்பனை காண வந்தால், அது அது நடக்கவில்லை என்று அவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர். தேனி மாவட்டம் போடியில் இருந்து வந்திருந்த ஐயப்ப பக்தர் ஒருவர் கூறும்போது, நான் 40 ஆண்டுகளாக சபரிமலைக்கு வருகிறேன். ஆனால் இதுவரை இதுபோன்ற சிரமத்தை நான் சந்திக்கவில்லை. எந்த ஒரு ஐயப்ப பக்தனும் இதுபோன்ற சிரமத்தை சந்திக்கக் கூடாது என்று கூறிவிட்டு கண்ணீர் விட்டு அழுதார்.

    சபரிமலையில் சந்தித்த சிரமங்கள் குறித்து தமிழகத்தை சேர்ந்த சில ஐயப்ப பக்தர்கள் கூறியதாவது:- ஒரு மண்டலம் விரதம் இருந்து சபரிமலைக்கு வரக்கூடிய ஐயப்ப பக்தர்கள் பல இன்னல்களை சந்திக்க வேண்டி உள்ளது. குழந்தைகளுடன் வருபவர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி அவதிப்படுவதை பார்த்தால் கண்ணீர் வருகிறது. போலீசாரிடம் அத்துமீறல் குறித்து கேட்டால் ஏன் இங்கு வருகிறீர்கள் என்று கேட்டு தாக்குகிறார்கள். சபரிமலையில் பக்தர்களுக்கு ஏற்படும் சிரமங்களை போக்க மத்திய அரசு நேரடியாக தலையிட வேண்டும். வரும் காலங்களில் இது போன்று நடப்பதை தடுக்க கட்டாயமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பது தெரிந்தும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை கேரள அரசு, தேவசம்போர்டு மற்றும் போலீசார் எடுக்காததே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து சீசன் தொடங்குவதற்கு முன்பு ஆலோசனை கூட்டங்கள் நடத்தியும், அதனை நிறை வேற்ற முடியாதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

    ஆண்டுதோறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை சீசனில் பக்தர்கள் வருகை மூலம் கேரளா அரசுக்கு பல நூறு கோடி ரூபாய் வருமானமாக கிடைக்கிறது. ஆனால் பக்தர்கள் சிரமப்படாமல் வந்து செல்லவும், கூட்ட நெரிசலில் சிக்காமல் சாமி தரிசனம் செய்யவும் எந்தவித நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை என்பதை சபரிமலைக்கு வரக்கூடிய பக்தர்களின் குற்றச்சாட்டாக உள்ளது. 

    • கூட்ட நெரிசலில் சிக்கும் சிறுவர்களை பாதுகாப்பு படையினரும், தன்னார்வ தொண்டர்களும் மீட்டு எளிதாக சாமி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்கின்றனர்.
    • மகரவிளக்கு பூஜை நெருங்குவதால் மலை ஏறுபவர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்த படியே இருக்கிறது.

    திருவனந்தபுரம்:

    மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்தமாதம் 30-ந்தேதி திறக்கப்பட்டது. நடை திறக்கப்பட்ட நாளில் இருந்தே, சபரிமலைக்கு தினமும் ஆயிரக்கணக்காக பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர்.

    மண்டல பூஜை காலத்தில் இருந்ததைப்போன்றே, தற்போதும் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் இருக்கிறது. பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் இருப்பதற்காக கேரள ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் பல்வேறு நடவடிக்கைகளை தேவசம்போர்டு செய்திருக்கிறது.

    இருந்தபோதிலும் பக்தர்கள் அதிகளவில் வருவதால் சாமி தரிசனத்துக்கு 10மணி நேரத்துக்கும் மேலாக காத்திருக்க வேண்டியிருக்கிறது. பம்பை, மரக்கூட்டம், பதினெட்டாம்படி, நடைப்பந்தல், சன்னிதானம் உள்ளிட்ட இடங்களில் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.

    இதனால் வயதான பக்தர்களும், சிறுவர்-சிறுமிகளும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கூட்ட நெரிசலில் சிக்கும் சிறுவர்களை பாதுகாப்பு படையினரும், தன்னார்வ தொண்டர்களும் மீட்டு எளிதாக சாமி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்கின்றனர்.

    பூஜைக்கு இன்னும் 10 நாட்களே இருப்பதாலும், 10-ந்தேதிக்கு பிறகு உடனடி முன்பதிவு நிறுத்தம் மற்றும் ஆன்லைன் முன்பதிவு எண்ணிக்கை குறைப்பு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமலுக்கு வர இருப்பதால் சபரிமலைக்கு தற்போது அதிகளவில் பக்தர்கள் வருகிறார்கள்.


    இதனால் பம்பையில் இருந்து சன்னிதானம் வரை பக்தர்கள் பல இடங்களில் வெகுநேரம் காத்து நிற்க வேண்டியிருக்கிறது. வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு குடிநீர் மற்றும் பிஸ்கெட்டுகளை தேவசம்போர்டு ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் வழங்குகின்றனர்.

    மகரவிளக்கு பூஜை நெருங்குவதால் மலை ஏறுபவர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்த படியே இருக்கிறது. பம்பையில் இருந்து ஆயிரக்கணக்கானோர் சபரிமலைக்கு நடைபயணத்தை மேற்கொள்ளும் நிலையில், பெருவழிப்பாதை வழியாகவும் அதிகளவில் பக்தர்கள் வருகின்றனர்.

    இதன் காரணமாக பம்பையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.சாமி தரிசனம் முடிந்து பக்தர்கள் அதிகளவில் மலையிறங்கிய போதிலும், சன்னிதான பகுதியில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையிலேயே இருக்கிறது.

    சன்னிதான பகுதியில் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டமாகவே காணப்படுகிறது. அரவணை உள்ளிட்ட பிரசாதம் வழங்கும் கவுண்டர்களில் எப்போது பார்த்தாலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று வாங்கிச் செல்கிறார்கள். எங்கும் கூட்ட நெரிசல ஏற்படாமல் இருக்க அனைத்து இடங்களிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    மண்டல பூஜை காலத்தின் போது நிலக்கல்லில் இருந்து பம்பைக்கு குறைந்த அளவில் பஸ்கள் இயக்கப்பட்டதுகூட்ட நெரிசல் ஏற்பட்டதற்கு ஒரு காரணமாக கூறப்பட்டது. இதனால் சபரிமலைக்கு பக்தர்கள் சிரமமின்றி வருவதற்காக கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    மகரவிளக்கு பூஜைக்காக மாநிலம் முழுவதும் 800 பஸ்கள் இயக்கப்படும் என்று கேரள மாநில போக்குவரத்து துறை மந்திரி கணேஷ்குமார் தெரிவித்துள்ளார். அவர் நிலக்கல் மற்றும் பம்பை உள்ளிட்ட இடங்களுககு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    பக்தர்கள் வருகைக்கு தகுந்தாற்போல் பஸ்களை இயக்க போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

    • ஆம்புலன்ஸ் மூலம் திருப்பதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்தவர் லட்சுமி சாய் சந்தோஷ் (வயது 21). இவருக்கும் ஐதராபாத்தை சேர்ந்த பார்கவ் என்பவருக்கும் கடந்த 23-ந் தேதி திருமணம் நடந்தது.

    இந்நிலையில் 27-ந் தேதி லட்சுமி சாய் சந்தோஷ் தனது கணவர் மற்றும் குடும்பத்தினருடன் ஏழுமலையானை தரிசிக்க வந்தனர்.

    நேற்று முன்தினம் மாலை வரிசையில் சென்றனர். அப்போது கூட்டம் அதிகமாக இருந்தது. ஏழுமலையானை தரிசித்து விட்டு தங்கம் மண்டபம் அருகே புதுமணப் பெண் நடந்து வந்து கொண்டு இருந்தார். அப்போது திடீரென மயங்கி கீழே விழுந்தார்.

    இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் மற்றும் விஜிலென்ஸ் அதிகாரிகள் அவரை ஆம்புலன்ஸ் மூலம் திருப்பதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் லட்சுமி சாய் சந்தோஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து லட்சுமி சாயின் பெற்றோர் கூறுகையில்:-

    அவருக்கு சிறு வயது முதலே சுவாசக் கோளாறு இருந்ததாகவும், கூட்ட நெரிசலில் தரிசனத்திற்கு வந்ததால் மயங்கி விழுந்து இறந்ததாகவும் போலீசாரிடம் தெரிவித்தனர். இதையடுத்து அவர் பிணத்தை அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்நிலையில் புது மணப்பெண் அணிந்து இருந்த தங்க நகைகள் காணாமல் போனதாக அவரது பெற்றோர் போலீசில் புகார் செய்தனர்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 95 சதவீதம் பேர் மீண்டும் பள் ளியில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
    • முடிவில் ஆசிரியர் பயிற்றுனர் ஐசக் ஞானராஜ் நன்றி கூறினார்.

    சீர்காழி:

    கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற மாணவர்களுக்கான வட்டார அளவிலான குழு ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் மஞ்சுளா தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் அருள் மொழி, வட்டார கல்வி அலுவலர்கள் சரஸ்வதி, கோமதி, போலீஸ் இன்ஸ்பெக்டர் அகோர மூர்த்தி, மக்கள் புறத்தொ டர்பு அலுவலர் மங்களதாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பேசிய வட்டார வளமைய மேற்பார்வை யாளர் ஞானபுகழேந்தி, 'கொள்ளிடம் ஒன்றியத்தில் பள்ளி இடைநின்ற மாணவர்களில் 95 சதவீதம் பேர் மீண்டும் பள் ளியில் சேர்க்கப்பட்டு உள்ளனர். மீதமுள்ள 5 சதவீதம் பேரையும் மீண்டும் பள்ளியில் சேர்ப்பதற்கு முயற்சி மேற்கொள் ளப்பட்டு வருகிறது. இதில் ஊராட்சி மன்ற பிரதிநிதிகள், தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும்' என்றார். கூட் டத்தில் வட்டார அளவிலான சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் பயிற்றுனர் ஐசக் ஞானராஜ் நன்றி கூறினார்.

    • வருகிற 20-ந் தேதி நாகை தொழிலாளர் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெறும்.
    • கூட்டமைப்பு துணைத் தலைவர் அம்பேத்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    நாகப்பட்டினம்:

    நாகையில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் அவசர ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டமைப்பு தலைவர் ஜெயராமன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர்கள் செந்தில்குமார், நீலமேகம், சிவன ருட்செல்வம், மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த கூட்டத்தில், டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை பணியா ளர்கள் திரும்ப வாங்கும் திட்டத்தை கைவிட வேண்டும். டாஸ்மாக் பணியாளர்களை காலி பாட்டில்கள் சேகரிக்க நிர்பந்திக்க கூடாது. காலி பாட்டில்களை சேகரிக்க நிர்பந்திக்கும் டாஸ்மாக் நிர்வாகத்தை கண்டித்து வரும் 20-ந் தேதி நாகை தொழிலாளர் துறை அலுவலகத்தை முற்றுகை யிட்டு போராட்டம் நடைபெறும் என்று முடிவு செய்யப்பட்டது. இதில் கூட்டமைப்பு துணைத் தலைவர் அம்பேத்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தீபாவளி பண்டிகை நிறைவடைந்ததை தொடர்ந்து திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் 2-வது நாளாக மக்கள் கூட்டம் அலை மோதியது
    • சென்னை, கோவைக்கு கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது

    திருச்சி,

    சென்னை, கோவை போன்ற மாநகரில் வேலை மற்றும் கல்வி உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக தங்கி இருந்த திருச்சி மற்றும் பிற மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தங்களது சொந்த ஊர்களுக்கு கடந்த வாரம் இறுதியில் வந்தனர். பின்னர் விடுமுறை முடிந்து கொண்டாட்டம் நிறைவடைந்து நேற்று மாலை முதல் அந்த மக்கள் சென்னை, கோவை போன்ற பெரு நகரங்களுக்கு புறப்பட்டனர்.

    இதைத் தொடர்ந்து மக்களின் வசதிக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு ரயில் மற்றும் பஸ்கள் இயக்கப்பட்டது. நேற்று ஒரே நாளில் லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்ததால் பஸ்கள் மற்றும் ரயில்களில் கூட்டம் அலைமோதியது.

    தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக திருச்சி மண்டலம் சார்பில் திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து நேற்று மாலை முதல் சென்னைக்கு 162 சிறப்பு பஸ்களும், விழுப்புரம் மண்டலம் சார்பில் 60 பஸ்களும் இயக்கப்பட்டது. அதேபோன்று திருச்சியில் இருந்து கோவைக்கு 112 சிறப்பு பஸ்கள் நேற்று முதல் விடிய விடிய இயக்கப்பட்டது.

    அதேபோன்று திருச்சி மண்டலம் சார்பில் ஜெயங்கொண்டம், அரியலூர், பெரம்பலூர் பகுதிகளில் இருந்து சென்னைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பொதுவாக தீபாவளி பண்டிகை நிறைவடையும்போது தென் மாவட்டங்களுக்கு சென்றிருக்கும் மக்கள் மீண்டும் வேலை நிமித்தமாக திருச்சி மற்றும் சென்னை போன்ற நகருக்கு புறப்பட்டு வருவார்கள்.

    ஆனால் நேற்று வழக்கத்துக்கு மாறாக திருச்சியில் இருந்து நிறைய பேர் மதுரை நோக்கி புறப்பட்டு சென்றனர். இன்று அதிகாலை 2 மணி அளவில் மதுரைக்கு பஸ்களுக்காக மக்கள் காத்திருந்தனர்.

    இதனால் திருச்சியில் இருந்து மதுரைக்கு 35 சிறப்பு பஸ்கள் நேற்று இயக்கப்பட்டதாக திருச்சி மண்டல போக்குவரத்து கழக பொது மேலாளர் தெரிவித்தார். மேலும் அவர் கூறும் போது, நேற்று சென்னைக்கு எதிர்பார்த்த கூட்டம் இல்லை. தாமதம் இல்லாமல் தங்கள் விரும்பிய ஊர்களுக்கு புறப்பட்டு செல்ல பஸ் வசதி செய்து தரப்பட்டது என்றார்.

    • அம்மாபேட்டையில் அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • 40 தொகுதிகளையும் நாம் கைபற்ற தொண்டர்கள் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை வடக்கு, தெற்கு ஒன்றிய அதிமுக இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயல்வீரர்கள் மற்றும் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் சாலியமங்களம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது கூட்டத்திற்கு அம்மாபேட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், தெற்கு ஒன்றிய செயலாளர் ஏவி.சூரி நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் தஞ்சை மாவட்ட செயலாளர் ரெத்தினசாமி .

    அம்மாபேரவை மாவட்ட செயலாளர் துரை சண்முகபிரபு, முன்னாள் அமைச்சர் சிவபதி, கலந்து கொண்டு பேசினர்.

    பின்னர் தொண்டர்களுக்கு ஆலோசனை வழங்கி பேசிய முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் எம்.எல்.ஏ, பேசும் போது வரும் பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளையும் நாம் கைபற்ற தொண்டர்கள் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என கேட்டு கொண்டார்.

    மாவட்ட பொருளாளர் ராம்குமார், இளைஞர் இளம்பெண் பாசறை மாவட்ட துணை தலைவர் திருமாவளவன், மெலட்டூர் நகர செயலர் சின்னதுரை, ஓன்றிய இணை செயலாளர் சுமத்ராமோகன் உள்பட மாவட்ட, ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • நெல்லையில் புத்தாடைகள், பட்டாசுகள் வாங்குவதற்காக கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
    • டவுன் ரதவீதிகளில் வாகனங்கள் செல்வதற்கு வழி இல்லாமல் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

    நெல்லை:

    தீபாவளி பண்டிகை நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. பொதுவாக தீபாவளி தினத்தன்று அதிகாலையிலே அனைவரும் எழுந்து எண்ணை தேய்த்து குளித்து புத்தாடைகள் அணிந்த பின்னர் பட்டாசுகள் வெடித்து கொண்டாடி மகிழ்வார்கள். பின்னர் வீடுகளில் பாரம்பரிய பலகாரங்கள் செய்து குடும்பத்துடன் சாப்பிடுவார்கள்

    இதனால் நெல்லையில் புத்தாடைகள், இனிப்புகள், பட்டாசுகள் வாங்குவதற்காக கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை கடைகளிலும் விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. இன்று தீபாவளிக்கான இறுதி நாள் விற்பனை என்பதால் நெல்லையில் தீபாவளி பொருட்கள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    டவுன் ரதவீதிகளில் வாகனங்கள் செல்வதற்கு வழி இல்லாமல் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக வடக்கு ரதவீதியில் உள்ள ஜவுளிகடைகளில் புத்தாடைகள் வாங்க பெரும்பாலானோர் குடும்பத்துடன் வந்து செல்கின்றனர். மேலும் அங்கு சாலையின் இருபுறமும் உள்ள பிளாட்பார கடைகளில் பொதுமக்கள் ஆடைகள் எடுப்பதற்கு அதிக அளவில் குவிந்து வருகின்றனர். இதனால் வாகன போக்குவரத்து நெரிசலும் அதிகரித்துள்ளது. வண்ணார்பேட்டையிலும் இதே நிலைதான் நீடிக்கிறது. பிரதான சாலைகளில் நீண்ட வரிசைகளில் வாகனங்கள் அணிவகுத்து ஊர்ந்து செல்கின்றன. நெல்லை சந்திப்பில் இருந்து வண்ணார்பேட்டைக்கு வாகனங்களில் செல்வதற்கு சுமார் அரை மணி நேரமாகிறது.

    இதேபோன்று பாளை சமாதானபுரம் உள்ளிட்ட இடங்களிலும், மார்க்கெட் பகுதிகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அங்கு பாரம்பரிய பலகாரங்கள் தயாரித்து விற்பனை செய்யும் கடைகளில் பொதுமக்கள் சென்று சீடை, முறுக்கு, அதிரசம், முந்திரி கொத்து உள்ளிட்ட பலகாரங்களை வாங்குவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    இதுதவிர வீட்டு உபயோக பொருட்களான டி.வி., பிரிட்ஜ், வாஷிங் மிஷன் உள்ளிட்டவைகள் வாங்குவதற்கும் பாளை முருகன்குறிச்சி பகுதியில் உள்ள கடைகளில் பொதுமக்கள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். இதனால் வண்ணார்பேட்டை சாலையில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

    இதற்கிடையே கூட்ட நெரிசலில் நகை, பணம் திருடு போவதை தடுக்கும் வகையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் மகேஸ்வரி உத்தரவின்பேரில், துணை கமிஷனர்கள் ஆதார்ஷ் பசேரா, அனிதா, சரவணகுமார் ஆகியோரின் மேற்பார்வையில், உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மாநகரில் 600 போலீசார் மற்றும் பட்டாலியன் போலீசார், ஊர்க்காவல் படையினர் என மொத்தம் 1,000 போலீசாரும், வள்ளியூர், களக்காடு, அம்பை, திசையன்விளை உள்ளிட்ட புறநகர் மாவட்ட பகுதிகளில் போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் மேற்பார்வையில் 1,500 போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    நெல்லை டவுன் ரதவீதிகள், வண்ணார்பேட்டை செல்லப்பாண்டியன் மேம்பா லம், முருகன்குறிச்சி சாலை, சமாதானபுரம் மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் ரோந்து ஜீப்புகள், மோட்டார் சைக்கிள்களிலும் போலீசார் ரோந்து சென்று வருகின்றனர். மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளான டவுன் ரதவீதி, வண்ணார்பேட்டை செல்லபாண்டியன் மேம்பாலம் ஆகிய இடங்களில் தற்காலிக உயர்கோபுரம் அமைத்து, அதில் இருந்து போலீசார் பைனாகுலர் மூலம் கண்காணித்து வருகிறார்கள்.

    டவுன் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு காமிராக்கள் அமைத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பழைய குற்றவாளிகளை எளிதில் அடையாளம் காணும் நவீன தொழில்நுட்பங்கள் கொண்ட காமிராக்களும் அமைக்கப்பட்டு கண்காணித்து வருகின்றனர்.

    தீபாவளி பண்டிகையை யொட்டி கடந்த சில நாட்களாக இயக்கப்படும் சிறப்பு ரெயில்கள் மூலம் வெளியூர்களில் இருந்து ஏராள மானவர்கள் நெல்லைக்கு வந்தனர். இன்று காலையிலும் ஏராளமான பயணிகள் குடும்ப த்தினருடன் வந்திறங்கினர். அவர்களுக்கு விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ரெயில்க ளில் பட்டாசு கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால், ரெயில்வே போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இதேபோன்று சென்னை, கோவை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த சிறப்பு பஸ்கள் மூலமாக ஏராளமானவர்கள் நெல்லை புதிய பஸ் நிலையத்துக்கு வந்து சேர்ந்தனர். அவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக தூத்துக்குடி, தென்காசி, பாவூர்சத்திரம், சங்கரன்கோவில், ராதாபுரம், திசையன்விளை உள்ளிட்ட பகுதிகளுக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டன. சிலர் வாடகை கார், ஆட்டோ போன்றவற்றிலும் சொந்த ஊர்களுக்கு சென்றனர். இதேபோன்று தென்காசி, ஆலங்குளம், சங்கரன்கோவில், பாவூர்சத்திரத்திலும் தீபாவளி பொருட்கள் வாங்குவதற்காக மக்கள் கூட்டம் அலைமோதியது.

    • திருட்டு சம்பவங்கள் நடக்க வாய்ப்பிருப்பதால், கடைவீதிகளில் 3 ஆயிரம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
    • போலீசார் ஆங்காங்கே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, போக்குவரத்து நெரிசலை சரி செய்து வாகனங்களை அனுப்பி வைத்தனர்.

    கோவை,

    நாடு முழுவதும் நாளை (12-ந் தேதி) தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாட பொதுமக்கள் தயாராகி வருகிறார்கள். இறுதிக்கட்டமாக இன்று புத்தாடைகள், இனிப்புகள், பட்டாசுகள் வாங்குவதற்கு பொதுமக்கள் கடைவீதிகளில் குவிந்தனர்.

    கோவை ஒப்பணக்கார வீதி, கிராஸ்கட் ரோடு, 100 அடி ரோடு, டவுன்ஹால் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவிலான ஜவுளிக் கடைகள், வீட்டு உபயோக பொருட்கள் வாங்கும் கடைகள் செயல்பட்டு வருகின்றன.

    கடந்த சில நாட்களாகவே கோவையில் உள்ள அனைத்து கடைவீதிகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. இன்றும் ஏராளமான பொதுமக்கள் கடைவீதி களில் திரண்டு புத்தாடைகளை வாங்கினர். காலை முதலே கடைகளில் மக்கள் குவியத் தொடங்கினர்.

    இதனால் ஜவுளிக்கடை கள், இனிப்பு, பட்டாசு, நகைக்கடைகள் முன் கூட்டியே திறக்கப்பட்டு விற்பனையை தொடங்கின. ஒப்பணக்கார வீதி, கிராஸ்கட் ரோடு உள்ளிட்ட அனைத்து கடை வீதிகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. குறிப்பாக ஜவுளிக்கடைகளில் கூட்டம் அலைமோதியது. அங்கு அவர்கள் ஆடைகளை ஒவ்வொன்றாக பார்வையிட்டு, தங்களுக்கு பிடித்தமானவற்றை தேர்வு செய்து வாங்கி சென்றனர்.

    இதனால் கடைவீதிகளில் எங்கு திரும்பினாலும் மக்கள் கூட்டமாகவே காட்சியளித்தது. மக்கள் கூட்டத்தை பயன்படுத்தி திருட்டு சம்பவங்கள் நடக்க வாய்ப்பிருப்பதால், கடைவீதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இதற்காக ஒப்பணக்கார வீதி, ராஜவீதி சந்திப்பு, டவுன்ஹால், கிராஸ்கட் ரோடு உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பு கோபுரங்களும் அமைக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு கோபுரத்தில் நின்று கொண்டு பொதுமக்களிடம் தங்கள் உடமைகளை பத்திரமாக வைத்து கொள்ள அறிவுறுத்துவதுடன், கவனமாக இருக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    மேலும் போலீசார் சாதாரண உடை அணிந்து ரோந்து பணியிலும் ஈடுபட்டனர். கூட்டத்தை பயன்படுத்தி திருட்டு சம்பவங்கள் நடக்கும் என்பதால் அனைத்து கடை வீதிகளிலும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கண்காணிப்பு காமிரா மூலம் கடைவீதிகள் கண்காணிக்கப்படுகின்றன.

    இதுதவிர கடைவீதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு காமிராக்கள் மூலம் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித்திரியும் நபர்கள் கண்காணிக்கப்பட்டனர். கோவையில் தீபாவளி பண்டிகையொ ட்டி 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மக்கள் அதிகம் கூடும் இடங்களான ரெயில் நிலையம், பஸ் நிலையங்கள், கடைவீதிகள் மற்றும் அனைத்து பகுதிகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    கடைவீதிகளில் ஜவுளி எடுக்க மக்கள் குவிந்துள்ளதால், மாநகரின் பல இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஊர்ந்தபடியே செல்ல வேண்டிய நிலை காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதியடைந்தனர்.

    போலீசார் ஆங்காங்கே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, போக்குவரத்து நெரிசலை சரி செய்து வாகனங்களை அனுப்பி வைத்தனர்.

    ×